பரோபகாரம் – கொடுக்கும் வழக்கு

This entry is part 1 of 5 in the series பரோபகாரம்

சுமார் 32 வருடங்களுக்கு முன், 1988 வாக்கில் மும்பையில் இருந்து சென்னை (அன்றைய வழக்கில் பம்பாயிலிருந்து மெட்ராஸ்) வருவதற்கான ரயிலைப் பிடிக்க விக்டோரியா டெர்மினஸ் பிளாட்பாரத்தில் நின்று கொண்டிருந்தேன். நல்ல உடை, ஷூ அணிந்து தலை வாரி, ஷேவ் செய்து கொண்டு பார்க்க டீசண்ட்டாக இருந்த ஓர் இளைஞர் “பரோபகாரம் – கொடுக்கும் வழக்கு”

பேராசிரியர் சு. பசுபதி – பேட்டி

1. உங்களைப் பற்றி அறிமுகக் குறிப்பு தர முடியுமா? என் அப்பாவுக்குச் சொந்த ஊர் கரூருக்கு அருகில் உள்ள வாங்கல் கிராமம்.  என் அம்மா பிறந்தது வெங்கரையில். நான் பிறந்து, வளர்ந்தது சென்னையில். பள்ளிப் படிப்பு தி.நகரில்  உள்ள ராமகிருஷ்ணா மிஷன் பள்ளி (வடகிளை)யில். பிறகு கல்வி லயோலா “பேராசிரியர் சு. பசுபதி – பேட்டி”

பியர்: கசக்கும் உண்மைகள்

பியரின் கசப்புச் சுவை சர்வதேசக் கசப்பு அலகில் IBU (International Bittering Units) அளவிடப்படும். வெவ்வேறு வகையான பியர்களின் கசப்புச் சுவையை அளவிட்டு விளம்பரப்படுதுகின்றன பல பியர் தயரிப்பு நிறுவனங்கள். IBU அலகின் வரம்பு 0 – 1,000 ஆகும், ஆனால் மனிதச் சுவை ஏற்பிகள் அதிகபட்சமாக 120 IBU கசப்பை மட்டுமே ஏற்க முடியும்.

ராமகிருஷ்ணர் பல மதங்களைக் கையாண்டவரா?

பிற மத ஸ்தாபகர்களைப்போல் இயேசுவும் தம்மைத் தீர்க்கதரிசியாகவும் கடவுளின் வாக்குறுதியை மக்களுக்கு அறிவிப்பவராகவும் நினைத்தவர். நான் மறுபடியும் உங்கள் ஆயுட்காலம் முடிவதற்குள்ளேயே இறந்துபின் திரும்புவேன் என பலமுறை கேட்போரிடம் கூறியுள்ளார். நடந்தது என்ன? 2000 வருடங்கள் கழிந்தபின்னும் திரும்பிவரவில்லை.

இந்திய கிரிக்கெட்டிற்கு இரட்டைத் தலைமை சரியானதா?

50, 20-ஓவர்களென ஒரு நாளைக்குள் கதை முடிந்துவிடும் வகையான வெள்ளைப்பந்து கிரிக்கெட் ஆட்டங்கள் உலகில் பிரபலமாகிவிட்ட காலமிது. லட்சோபலட்சம் ரசிகர்களின் கவனம் பெரிதும் இந்தப்பக்கம் இருப்பதால், கிரிக்கெட்டின் மூலமும் பணம்பார்க்க ஆசைப்படும் கார்ப்பரேட் ஸ்பான்சர்களின் பார்வையும் இங்கேதான். வருமானமின்றி கடை ஓட்ட முடியுமா என்ன? கிரிக்கெட்டின் சர்வதேசத் தலைமை “இந்திய கிரிக்கெட்டிற்கு இரட்டைத் தலைமை சரியானதா?”

தேடியபின் பறப்பது

கல்லூரிக்கு வெளியே நடைசெல்லத் தொடங்கியிருந்தேன். கல்லூரிக்குள் நடைசெல்வது அபத்தம். பின் கேட்டின் வழியாக வெளிவந்து இடது பக்கம் திரும்பியபோதுதான் கவனித்தேன், சூரியன் வலது பக்கம் இறங்கிக்கொண்டிருக்கிறது. மேற்கு நோக்கி நடந்தால் நகரத்திற்குள் சிறிய வானம் மட்டும் மிஞ்சும். கிழக்கில் இன்னும் கொஞ்சம் நகரம் மீதி இருந்தாலும் விரிந்த வானம் “தேடியபின் பறப்பது”

ஒன்றே வேறே

சருகுகள் சரசரத்திருந்த தரையை நிர்மலமற்ற வெண்மையாக்குவேன் எனக் கங்கணம் கட்டிக்கொண்டதுபோலத் தொடர்ந்து பனி கொட்டிக்கொண்டிருந்தது. உண்மையிலேயே இப்படிப் பனியில் நனைந்திருந்தால், “புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது, இந்தக் கொள்ளை நிலா உடல் நனைகின்றது, இங்கு சொல்லாத இடம்கூடக் குளிர்கின்றது,” எனச் சந்தோஷமாக அரவிந்தசாமியும் மதுபாலாவும் ஆடிப்பாடியிருக்க முடியுமா? “ஒன்றே வேறே”

சௌவாலிகா

நான் ஒரு கவிஞனாகவோ இசைக் கலைஞனாகவோ இருந்திருக்கலாம். ஒயினும் பெண்களும் அரட்டையுமாக எவ்வளவு மகிழ்ச்சியாக இருந்திருக்கலாம்! வீரம், நாட்டுக்கான சேவை என்றெல்லாம் என்னை நானே ஏமாற்றிக் கொண்டிருந்திருக்கிறேன். என்னைப் போலவே இருக்கும் இன்னொரு மனிதன் எப்படி என் எதிரியாகிறான்? அவனது மனைவியைத் தொட எப்படி என்னால் முடிந்தது?

வான்பார்த்தல்

அவள் ஐந்தாம் வகுப்பு படித்தாள். ‘அவளைவிட எனக்கு அறிவு மிகுதி’ என்று உணர்ந்திருந்தேன். ‘அவளைவிட எனக்கு அழகு மிகுதி’ என்று நினைத்திருந்தேன். ‘அவளைவிட எனக்கு வலிமை மிகுதி’ என்று உறுதியாக நம்பியிருந்தேன்.  ஆனால், அஞ்சனா தன்னுடைய அறிவையும் அழகையும் வலிமையையும் மறைத்து வைத்திருந்தாள். இந்த விஷயம் எனக்கு அவளுடன் பழக பழகத்தான் சிறுக சிறுகத் தெரிய வந்தது. ‘பெரும்பான்மையான பெண்கள் இப்படித்தான் இருக்கிறார்கள்’ என்பது, எனக்குப் பல ஆண்டுகளுக்குப் பின்னர்தான் புரிந்தது.

சிகரெட் மற்றும் புகையிலை சர்ச்சைகள்

This entry is part 15 of 30 in the series விஞ்ஞான திரித்தல்

சிகரெட் தொழிலுக்கு, அதன் தயாரிப்பில் மனிதர்கள் அடிமையாவது மிக முக்கியம். ஒரு நாளைக்குப் 12 பாக்கெட் சிகரெட் பிடிப்பேன் என்று பெருமைப்பட்டுக்கொள்ளும் மனிதர்கள் அதற்கு மிகத் தேவை.

கற்றலொன்று பொய்க்கிலாய்

இளைய பாரதத்தை வரவேற்றுப் பாரதி ‘கற்றலொன்று பொய்க்கிலாய்’ எனப் பாடுகிறார். புகழ்பெற்ற, இந்தியாவிலுள்ள அல்லது வெளிநாட்டில் பணி செய்யும் இந்திய அறிவியலாளர்கள், மனித வள மேம்பாட்டுத்துறை வல்லுனர்கள் போன்றவர்களை இன்ஃபோசிஸ் கௌரவித்திருக்கிறது. டிசம்பர் 2, 2020 அன்று  நிகழ்நிலை நிகழ்வின்மூலம் அறுவருக்கும் தங்கப்பதக்கம், விருது மற்றும் பணமுடிப்பு $100,000  “கற்றலொன்று பொய்க்கிலாய்”

சூர்ய சக்தி வேதியியல்

மனித நலத்திற்கும் அவனது சுகத்திற்கும் தேவையான வேதிப் பொருட்களை உற்பத்தி செய்கையில், தொல்லெச்ச எரிபொருள் பயன்படுத்தப்படுவதால், பிரித்தெடுக்கும் செயல்முறைகளும் கரி உமிழ்வும் சூழல் கேடுகளும் ஏற்படுகின்றன. வீணாகும் கரிவளியை, சூர்ய சக்தியை உபயோகித்துத் தேவையான வேதிப் பொருட்களை உருவாக்கும் ஒரு புதிய அறிவியல் முறை கண்டறியப்பட்டுள்ளது.

சூரிய ஒளியால் தோலில் நச்சுத்தன்மை ஏற்படுத்தும் மருந்துகள்

சூரிய ஒளியின் புற ஊதாக் கதிர்கள், குறிப்பாக (320-400) நானோ மீட்டர் அலைநீளம் கொண்ட புற ஊதாக் கதிர்கள்-A (UVA) தோல் செல்களில் உள்ள மூலக்கூறுகளால் உறிஞ்சப்படும்போது நச்சு வினைகளைத் தோல் செல்களில் உண்டாக்குகின்றன.

கடலும் காடும்

அலைகளிடமிருந்து
அதுகாறும் காத்துநின்ற
தன் மணல் கோபுரத்தை
பச்சை வண்ண வாளியில்
பெயர்த்தெடுத்து வந்து
தங்கமீன்கள் வளரும்
தொட்டியில் பரப்பி
என் கடல் என்றான்

தேகயாத்திரை

Soul – Movie Review வாழ விருப்பமில்லாத ஆன்மாவும் சாக விருப்பமில்லாத உயிரும் சந்தித்துக் கொண்டால்? இறுவாய் குறித்த செவ்விந்தியர்களின் கர்ண பரம்பரைக் கதைகள் எல்லாமே இருவரின் உரையாடலாக அமைந்திருக்கும். அவர்கள் இருவருக்கும் நடுவே வாக்குவாதம் நடக்கும். அதன் வழியே இறுவாயின் எழுபவத்தைச் சொல்வார்கள். கீழே வரும் சம்பவம் “தேகயாத்திரை”