சுமார் பத்து ஆண்டுகள் முன்பு இந்தியாவில் சற்றேறக்குறைய 32,000 பெண்கள் மகப்பேற்றின்போது ஓர் ஆண்டில் இறந்தார்கள். முதன்மை தாய் சேய் நல மருத்துவமனையும் 2018-ல் அரசாங்கம் கொண்டுவந்த 18 மாத மருத்துவச்சிப் பயிற்சியும் இந்த நிலையைச் சற்று மாற்றி இறப்பைக் குறைத்தன. இருந்தும் போக வேண்டியதென்னவோ வெகு தூரம்.
Category: இதழ்-232
அனாதை
”…சூரியனைச் சுற்றிய ஒன்பது கிரகங்களின் விசைகள் தங்களுக்குள் சமரசம் செய்துகொண்டு, சமன்படும் இடங்களில்தான் ஒவ்வொரு கிரகத்தின் இருப்பும் சாத்தியமாகிறதா? சமன்படுதலும், சமரசமும்தான் குடும்பமென்கிற ஒருங்கிணைப்பின் மையமா?” சிந்தனையில் ஆழ்ந்திருந்த ப்ரீத்தியின் முகம் சட்டென ஒளிர்ந்தது.
போர்வை
“சேப்பா இருக்கா இல்லை?” என்றான் அண்ணா.
“ஆமா! கிழிச்சா! வாயைத் திறந்தா அசடு வழியறது”
“நீ சொல்றது சரியா , தப்பான்னு நான் டிஸைட் பண்றேன்”
“உன் கிட்ட சொன்னேன் பாரு! நீ என்ன பெரிய ஜட்ஜா, தீர்ப்பு சொல்றதுக்கு”
அடித்தொண்டையில் இவ்வளவும் சொல்லி முடிப்பதற்குள் அவள் வந்தாள்.
“உனக்கு ஒரு அண்ணாவும், தம்பியும்னயே? ரண்டு பேரும் தம்பி மாதிரி இருக்காளே?”
அண்ணாவை சரியாக அவனுடைய பலவீனமான இடத்தில் தாக்கிவிட்டாள். அந்த ஒரு வார்த்தையில் அவனுடைய பரம எதிரியாகி விட்டாள்! எனக்கு சந்தோஷமாக இருந்தது!
ஃப்ளோரிடா மாநிலத்தில் வாக்காளர் பிரச்சனை
1960-1970களில் ‘ஜிம் க்ரோ சட்டங்கள்’ நீக்கப்பட்ட பிறகு, குற்றம் புரிந்தவர்களாக அறியப்படுபவர்கள், தண்டனைக் காலம் முடிவடைந்தவுடன் , பல மாநிலங்களில் வாக்களிக்க அனுமதிக்கும்போது, ஃப்ளோரிடாவும் வேறு சில மாநிலங்களும் அந்த தடையை மாற்றிக் கொள்ளவே இல்லை. மேலும் இம்மாநிலங்களில் போதை மருந்து குற்றங்களுக்காக அதிக அளவில் கறுப்பர்கள் சிறைத் தண்டனை பெறுகிறார்கள். இதனால் ஐந்தில் ஒரு கறுப்பர் வாக்களிக்கும் உரிமையை இழக்கிறார்.
எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் தெளிவான குரல்
‘நான் சங்கீதத்தை முறையாகப் படிக்கவில்லை’ என்பது எஸ்.பி.பி.யின் பணிவின் அடையாளமாக மட்டுமல்லாமல் சங்கீதத்தை இலக்கணமாகப் பார்க்காதவர்களின் பிரகடனமாகவும் வெளிப்பட்டது. ஒரு கலை வடிவத்தை இலக்கணத்துக்குள் அடைக்கக்கூடாது என்பதற்குக் காரணம் இலக்கணத்துக்குள் அடைக்கப்படும்போது அதன் படைப்பாற்றலின் சக்தி குறைபட்டுப் போகக்கூடும் என்பதுதான்.
விஞ்ஞானத் திரித்தல் – தார் மண்ணிலிருந்து பெட்ரோல்
ரவி நடராஜன் கனடாவின் மிகப் பெரிய தொழில் எது? கோதுமை, கனோலா எண்ணெய் ஏற்றுமதி மரங்கள் மற்றும் காட்டுப் பொருட்கள் (forestry products) கனிமப் பொருளகள் (minerals) மாட்டிறைச்சி (beef) திராட்சை மது (wine) எஃகு (steel) இதில் எதுவுமே கனடாவின் மிகப் பெரிய தொழில் அன்று. இவை “விஞ்ஞானத் திரித்தல் – தார் மண்ணிலிருந்து பெட்ரோல்”
தொடுதிரை
நூறாண்டு நின்று செழித்துப் படர்ந்த வேம்புதான் சாமி. கிழக்கே உதித்து மேலேறும் சித்திரை மாத முழுநிலா, வானம் குழந்தை முகம்போல தெளிந்து ஒளிர்ந்தது, செவ்வந்திப் பூக்கள் சிரித்திருக்கும் வயல், குலதெய்வம் வேம்புக்கு முன்னால் சக்கரைப் பொங்கல், வெற்றிலை பாக்கு, பூ பழம், பொறிகடலை படையல், மண் அகல் விளக்கில் தீபம் ஏற்றிவைக்கும் அம்மா, ஆற்றுநீரில் தெரியும் மணல்போன்ற அம்மாவின் வண்ணம். இலைவழி வழியும் நிலவு அம்மாவின்மேல் பொன்பொழியும் கணம். இடுப்பு வேட்டியில் இறுக்கிக்கட்டிய துண்டோடு, திறந்த மார்போடு, கற்பூரதீபம் ஏற்ற பனை மரம்போல் நிற்கும் அப்பா.
மனித இனம்:ஒரு நம்பிக்கையூட்டும் வரலாறு
இதற்கு முந்திய நூலையும் – Utopia for Realists – இதே அளவுக்கு திட நம்பிக்கையைக் கொடுக்கும் வகையில் எழுதியிருக்கும் பிரெக்மேன், கோட்பாட்டளவான அறிக்கைகளை அலசிப் பார்ப்பதிலும் இடைநிகழ்வுத் துணுக்கு மணிகளைக் கண்டுபிடிப்பதிலும் மால்கம் க்ளாட்வெல்லைப்போல் அபாரத் திறமை பெற்றவர்.
சிசு, அப்போது, நெடும் பயணி
அதனால் என்ன?
வளையாத வானத்தில்
ஒரு வளைந்த வானவில்லும்
வளைந்த வில்லில்
ஒரு வளையாத அம்பும்
அத்தனை ஆச்சரியம்
ஒன்றுமில்லை காண்!
செங்கோட்டை நாராயணன் கசமுத்து சட்டநாதன் கரையாளர்
நா.க.ச. லெட்சுமணன் கரையாளர் அவர்களின் மகனான லெ. சட்டநாதன் (L.S.) கரையாளர் அவர்கள் 25-01-1910-இல் பிறந்தார். சட்டம் பயின்ற இவர் காந்தியின் தலைமையை ஏற்று இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டார். 1940 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நான்காம் தேதி, காலை பத்தரை மணிக்கு சங்கரன் கோவிலில் வெள்ளையருக்கு எதிராக அறவழியிலான போராட்டத்தை முன்னெடுத்தார். இதன்காரணமாக 14-12-1940 முதல் 23-05-1941 வரை வேலூர் மற்றும் திருச்சி ஆகிய சிறைகளில் ஐந்து மாதகால கடுங்காவல் தண்டனையை அனுபவித்தார். தன்னுடைய சிறை அனுபவங்களை “1941 – திருச்சி சிறை” எனும் தலைப்பில் புத்தகமாக வெளியிட்டார்.
இடிபாடுகளைக் களைதல்- லெபனானின் எதிர்காலம்
1998-ல் புதிய கல்விப் பாடத்திட்டம் அறிமுகம் செய்யப்பட்டாலும், வரலாறு என்னவோ 1943-ல் நின்றுவிட்டது. மாற்றங்களில், அராபிய இலக்கியங்களின் இடத்தை மோசமாக மொழிபெயர்ப்பு செய்யப்பட்ட உலக இலக்கியங்கள் எடுத்துக்கொண்டன; புதிய தத்துவப் புத்தகம், ‘செய்ய வேண்டும்’ என்ற வார்த்தகளோடு (ஒரு முழு அத்தியாயம் புனிதப்படுத்தும் ஆசைகளைக் கைக்கொள்ள அறிவுறுத்தி) மேலும் குடிமைப் பண்புகள் என்று ஒரு புதுப் பாடத் திட்டமும் இடம் பெற்றன. வரலாறு, உள்நாட்டுப் போர்களுக்கு முந்தைய காலகட்டத்துடன் நின்றதென்றால், மகிழ்வான எதிர்காலத்திற்குக் குதித்தோடியது குடிமைக் கல்வி.
ஆல மரத்தமர்ந்தவர்
“பெரிய ஆளா ஆனப்பறம் எந்த வாத்தியாரப் பிடிக்கும்னு கேட்டா பயலுவல்லாம் அறிவியல் வாத்தியாரப் புடிக்கும், கணக்கு வாத்தியாரப் புடிக்கும்னு சொல்லுவானுங்க. எழுத்தையும் எண்ணையும் கத்துக் கொடுத்தவன யாரும் சொன்னதில்ல. அவங்க மேல தப்பில்ல. ஏன்னா, சின்ன வயசுல்ல. நினைவுல தங்கறதில்ல. ஆனா… அதப்பத்தி எனக்கேதும் வருத்தமில்ல.”
கூடு, அதிகாலை & (அ)சாத்தியம்
தானே ’புன்னகையாய்’
’புன்னகை’ அதற்கு அதுவே புன்னகைப்பதில்லையாய்ப்
புதிராய்ப் புன்னகைக்கிறார்
இது
போதும்—
ஆசையில் வறண்ட என்
அகங் குளிர
நிறைவாய்ப்
புன்னகைக்கிறார்
இந்தோநேசியக் கவிஞர்-சபார்டி ஜோகோ தமனோ
பருவகாலங்கள் என்னுடைய கண் இமைகளில்
சாம்பலாகப் படிகின்றன
வானத்தின் குறுக்கே முடிவில்லாத
அலைகளின் தெறிப்பைக் கேட்கிறேன்
இங்குதான் தீராத இச்சையும்
ஒளிவு மறைவற்ற உணர்வுகளும் இருக்கின்றன
நட்சத்திரங்கள் ஓய்ச்சலின்றித் தழைக்கின்றன
மரப்படிகள்
என்னுடைய கார் கிராமத்துக்குள் நுழைந்து, மணியக்காரரின் வீட்டுவாசல் நின்றது. நானும் அம்மாவும் இறங்கினோம். மணியக்காரர் சுவர்களைப் பிடித்துப் பிடித்து தள்ளாடியபடியே நடந்து வந்து, எங்களை வரவேற்றார். மணியக்காரரின் பேத்தி எங்களுக்கு மோர் கொடுத்தார். பருகினோம். அவர் அந்த அரண்மனை வீட்டின் சாவியை எடுத்து அம்மாவிடம் கொடுத்தார். சித்திர வேலைப்பாடுகள் நிறைந்த அந்த வெங்கலச் சாவியை அம்மா ஒரு குழந்தையை ஏந்துவதுபோல தன்னிரு கைகளிலும் வைத்துக்கொண்டார்.
இடம், தபால்காரன் & மனதின் பாதை
ஒரு நினைவில் தப்பிய மனிதனாகிய நான்
வீணாய் எனது உடலின் சுமையைச் சுமப்பவன்
வழுவாத சலிக்கும் பாதையில் நடப்பவன்
பேசி தீர்த்துக் கொள்வதற்கு
மொழி இல்லாதவன்
நான் எல்லோரையும்
சமாதானம் செய்து கொள்கிறேன்
மூன்று நாய்கள்
இப்படியாகத்தான் அந்தத் தெருவை நாய்கள் ஆக்கிரமிக்க ஆரம்பித்தன. அவற்றின் ஆளுகைக்கு கீழ் தெருவின் ஒழுங்கு கொண்டுவரப்பட்டது. சீரில்லாமல் இருந்த நிர்வாகத்தைச் சரிசெய்ய முற்பட்டு, பல்வேறு முன்னேற்றச் சரத்துகளைத் தயாரித்து வைத்திருந்ததை இப்பொழுது வசதியாக மறந்தன. நேரக்கட்டுப்பாடு விதித்தன, இரவு நாய்களுக்கும், காலை மனிதனுக்கும் என பிரிக்கப்பட்டது.
ஒளி மனிதன் & காசநோய்க்கு ஒரு பாடல்
(நித்ய சைதன்ய யதியின் “நோயை எதிர்கொள்ளல்” கட்டுரைக்கு)
என் வேர்கள் பலவீனமானவை
சந்தோஷத்தை சரியாக உறிஞ்சக்கூட தெரியாதவை
அறுபது சதவீதம் மாலைநேர உளைச்சல்களாலும்
நாற்பது சதவீதம் கூரையை முட்டும் இருமல் ஒலிகளாலும் ஆன
ஒரு பேருந்து நிறுத்தத்திற்கு
மறுபடியும் வந்து நிற்கிறது இந்த உடல்
கற்பனாவாத யுகத்தின் செல்லக் குழந்தையே இவை உன் கைங்கர்யம்தானா
செவ்வாய் கோளில் குடியேறலுக்கான கட்டுமானப் பொருட்கள்
ஒரு மில்லியன் குடியிருப்புகளை உருவாக்கத் தேவையான கட்டுமானப் பொருட்களை புவியில் இருந்து எடுத்துச் செய்வதற்குப் பெருஞ்செலவு செய்யவேண்டியிருக்கும். அது இயலாத காரியம். உள்ளூரில் கிடைக்கும் மண், ஜல்லிகளை கட்டுமானப் பொருட்களாக உபயோகித்துக் கட்டடம் எழுப்பும் தொழில்நுட்பம் அங்கே உருவாக வேண்டும். இதற்காக நாசா முப்பரிமாண அச்சு உறையுள் பரிசுப் போட்டியை (3-D printed Habitat Challenge) அறிவித்திருக்கிறது.