எனும் இயக்கத்திலிருந்து பிரிந்து யுகாந்தர் எனும் இயக்கத்தை நிறுவி செயல்பட்டார். மேடம் பிகாஜி ருஸ்தம் காமா, எம். பி. டி. ஆச்சார்யா மற்றும் பலர் பாரிஸ் இந்தியர் சங்கத்தில் செயல்பட்டுக் கொண்டிருந்தனர். சாவர்க்கர், வ. வே. சு. ஐயர், எருக்கூர் நீலகண்ட பிரம்மச்சாரி மற்றும் வ. உ. சிதம்பரம்பிள்ளை ஆகியோர் அபினவ் பாரத் சமீதி எனும் இயக்கத்தின் கீழ் செயல்பட்டனர். எருக்கூர் நீலகண்ட பிரம்மச்சாரி, தர்மராஜய்யர், வாஞ்சிநாதன், சாவடி அருணாசலம் பிள்ளை மற்றும் பலர் பாரத மாதா சங்கம் எனும் அமைப்பினை உருவாக்கிச் செயல்பட்டு வந்தனர். தென்காசியில் தொடங்கப்பட்ட பாரத மாதா சங்கமே தென்தமிழ்நாட்டில் தொடங்கப்பட்ட முதலும் கடைசியுமான புரட்சிகர ….விடுதலை இயக்கம் ஆகும்.
Category: இதழ்-230
நீண்ட நேர உண்ணாமை
எலிகள் கிடைக்கும் மொத்த உணவையுமே நான்கு மணி நேரத்துக்குக்குள் உண்டுவிடும். மீதி 20 மணி நேரத்திற்கு எதையுமே உண்ணாது என்பதுதான். இதைத்தான் இப்போது “நீண்ட நேர உண்ணாமை“ என்று கூறுகிறோம். இது பல வகைப்பட்டது. அதைப் பிறகு பார்க்கலாம். இதனால் கிடைக்கும் உடல்நலப் பயன்கள் உடற்பளுக் குறைவினாலோ, பிராணவாயு அணுக்களின் தாக்கக் குறைவினாலோ அல்ல. ஆதி கால மனிதர்கள் நம்மைப்போல் 3 வேளை உண்டு வாழ்ந்தவர்கள் அல்லர். உணவு கிடைக்கும் நேரத்தைவிட உண்ணாமலிருந்த நேரமே அதிகம். அதனால் உயிரணுக்களிலும் அதன் மூலம் மற்ற உறுப்புகளிலும் ஏற்பட்ட மாற்றங்களின் பரிணாமத் தொடர்ச்சியே தற்கால மனிதர்களிடையே நீண்டநேர உண்ணாமையின் பயன்களுக்குக் காரணம் எனலாம்.
பாசுரங்களில் கசியும் வாழ்க்கை
நானும் இப்பாசுரங்களைப் படிக்கும்போது, திருமங்கையாழ்வாரின் திருமொழி வரிசையில் தமிழ் நனைந்த உவமைகளாக ஆற்றங்கரைவாழ் மரம்போல (2022), காற்றத்திடைப்பட்ட கலவர் மனம்போல (2023), பாம்போ டொருகூரையிலே பயின்றாற்போல் (2024), இருபா டெரிகொள்ளியினுள் எறும்பேபோல் (2025), வெள்ளத் திடைப்பட்ட நரியினம் போலே (2026) ஆகியவற்றைக் கண்டு ஆச்சர்யமாக இருந்தது. இவற்றுள் பல உவமைகள் தற்போது வழக்கில் இல்லாமல் தமிழுக்கே சம்பந்தமில்லாத வாய்ச்சொற்கள் நிரம்பி வழியும் வழக்கத்தைக் கொண்டு பாசுரங்களின் தமிழ்மீது ஆர்வம் குறைவது வருத்தத்துக்குரியது.
வண்ணநிலவனின் நாவல்களை முன்வைத்து:பாகம்-1
வண்ணநிலவனின் தந்தைகள் எப்போதுமே பிரியத்திற்குரியவர்கள். பெண் பிள்ளைகளுக்கான அவர்களின் வாஞ்சை ஒளி பொருந்தியது. தாவணி அணிந்த மகளைக் கல்லூரி விடுதிக்கு அழைத்துப்போய், மனம் கலங்கி விட்டுவிட்டு வரும்போதும், கல்யாணம் செய்துவைக்கத் தெம்பில்லாத தந்தையைவிட்டு, விருப்பமானவனுடன் வீட்டைவிட்டுக் கிளம்பிப்போகும் மகளுக்கு, பேருந்து நிலையத்தில்தான் இன்னும் இருப்பாள் என்று தான் விருப்பமாய் வாங்கி வந்த காதணிகளை மகனிடம் கொடுத்துவிடும் தந்தை… என அவரின் தந்தை மனத்தின் அபூர்வ அன்பைச் சொல்லிக் கொண்டிருக்கலாம். பெண் குழந்தைகளின் மீதான கூடுதல் பிரியமென்றோ, வழமையான அன்பென்றோ வண்ணநிலவனின் தந்தையன்பைக் கடந்து போய்விட முடியாது. பெண்மையை ஆராதித்த ஆதித் தந்தைமையின் தூய்மையை அந்த அன்பிற்குள் பார்க்கலாம்.
அமெரிக்க ஜனநாயகக் கட்சி மாநாடு-2020
மூன்றாம் நாள் மாநாட்டில் முன்னாள் அதிபர் வேட்பாளர் ஹில்லரி கிளிண்டன், சபாநாயகர் நான்சி பெலோசி, செனட்டர் எலிசபெத் வாரன், முன்னாள் காங்கிரஸ் உறுப்பினர் கேபி கிப்பர்ட்ஸ், துணை அதிபர் வேட்பாளர் கமலா ஹாரிஸ் எனப் பெண்களின் குரலே ஓங்கி ஒலித்தது.
அன்றைய தினம் அனைவரும் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்தது முன்னாள் அதிபர் ஒபாமாவின் பேச்சுதான்……கடந்த நான்கு வருடங்களில் அதிபர் ட்ரம்ப் மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்தியதோடு, தன்னுடைய முதிர்ச்சியற்ற, அடாவடித்தனமான பல அரசியல் நிர்வாக முடிவுகளினால் நாடு பலவகையிலும் தன் மதிப்பை இழந்து எல்லாத்தரப்பிலும் பாதிக்கப்பட்ட, அமைதியற்ற ஒரு தேசமாக மாறியிருப்பதாகக் குற்றம் சாட்டினார். இந்த அவலத்தில் இருந்து அடுத்த நான்கு ஆண்டுகளில் நாட்டை மீட்டெடுக்க, அனைவரையும் அரவணைத்துச் செல்லக்கூடிய பண்பான, மனிதநேயம்கொண்ட பைடனே பொறுத்தமான நபராக இருப்பார் – என்பதாகப் பேசினார் ஒபாமா.
வெள்ளை
அவ்வப்போது வரும் தங்கச்சி மகனும் அதனோடு விளையாட வெள்ளையும் பதிலுக்குத் தலையை உலுப்பி ஆட்டும். தங்கச்சி வீட்டுக்காரர் மட்டும் விதிவிலக்கு, ஆள் அசைவ வெறியர். அவர்க்கு மட்டும் அது சாப்பிடும் பொருளாகவே தெரிந்தது. சமயம் கிடைக்கும் போதெல்லாம், ஆட்டை அறுப்பதைப் பற்றியே பேசுவார். தளவாய் கோபத்தை அவரிடம் காட்டாமல் மனைவியிடம் காட்டுவான். “விளங்காத பயலுக்குக் கட்டி வச்சு, எழவு நானும்லா சீரழிய வேண்டி கிடக்கு. கொடவண்டிக்கு இப்போ ஆடு கேக்கு. சவத்துப் பய, தங்கச்சி மாப்ளனு பொத்திட்டு இருக்கேன். இல்ல அவன் வாய்க்கு, தொண்டைக்குழிய பிச்சிருப்பேன்,”
தரிசனம்
“அப்பா என்ன பண்றாரு?”
“அப்பா இல்லைங்க மேடம்”
“உயிரோட இல்லயா?”
ஒரு கணம் தயங்கி “எங்களோடு இல்ல மேடம். எனக்கு எட்டு வயசு இருக்கும்போதே அவர் அம்மாவ விட்டுட்டு வேற ஒரு பொண்ணுகூட ஊரவிட்டே போயிட்டாரு.”
“கூடப் பொறந்தவங்க?”
“ரெண்டு தங்கச்சிங்க இருக்காங்க”
“படிக்கறாங்களா?”
“பெரிய தங்கச்சி சரஸ்வதி. கடைசி வருஷம் இஞ்சினீரிங் படிக்கறா. சின்ன தங்கச்சி லட்சுமி. பாரதிதாசன்ல பிகாம் படிக்கறா”
“நீதான் படிக்க வைக்கறியா?”
“ஆமாம் மேடம். ரெண்டு பேரும் சூப்பரா படிப்பாங்க. இங்க்லீஷ்ல நல்லா வெளுத்துக் கட்டுவாங்க.”
மயில்தோகை
இந்த சசி எதையாவது சொல்வா. மெல்லமாத்தான் புரியும்.
“மனுசருக்கு எதுவும் நிச்சயமில்லம்மா. . நாப்பதுக்கு மேல நம்ம ஒடம்பே நம்ம பேச்ச கேக்காது. எந்த மனுசாளானாலும் ரொம்ப சாராணமானவா தான். . யாரும் அப்படிஒன்னும் ரொம்ப ஒசந்து போயிடல. கடுகத்தினி வேத்தும தான் அலைபாயற மனசுக்கு மலையத்தினியா ரூபமெடுக்கும். . லகான இழுத்துப் பிடிம்மா.”
புத்திசாலித்தனம் ஒரு சேவையாக..
நான் கல்லூரியில் படித்த காலத்தில் கணினித் திரையில் ஆரஞ்சு அல்லது பச்சை கலர் எழுத்துக்கள் மட்டும் தெரியும். பேராசிரியர்கள் உபயோகிக்கும் திரை ஒரு மாதிரி திருச்சி மைகேல் ஐஸ்கிரிம் வண்ணத்தில் கண்களுக்குக் குளிர்ச்சியாக இருக்கும். கலர் கம்யூட்டர் ஆர்.இ.சி போன்ற கல்லூரிகளில் பார்த்திருக்கிறேன். கல்லூரியில் செயற்கை அறிவாற்றல் ( Artificial Intelligence ) மீது ஒரு எனக்கு ஒரு மோகம் இருந்தது.
நூல் அறிமுகங்கள்
டேனியல் டென்னெட். மதிக்கக் கூடிய சிந்தனையாளர். அவர் இந்த மதிப்புரையில் கவனமாக கருத்தியல் சிதைப்புகளையும், திரிப்புகளையும் தாண்டி மானுடவியல், வரலாற்றியல், உளவியல், மதவியல், சமூகவியல் போன்றன இயங்கக் கற்க வேண்டும் என்று சுட்டுகிறார். அதற்குப் புள்ளியியல் ஒன்றே வழி என்று நினைப்பதும் மடமை என்றும் சுட்டுகிறார். ஆனால் புள்ளியியலின் உதவி தேவை, அதன் எல்லைகளும், அதன் வழிமுறைகளில் உள்ள புதைகுழிகளையும் பற்றிய தீர்க்கமான கவனம் தேவை என்று சொல்கிறார்.
அறிவுசார் மனிதர்கள்: மனிதகுலத்தின் சுருக்கமான வரலாறு
மூன்று புரட்சிகளின் வாயிலாக மனிதர்களின் வரலாற்றை அறிவியல் முறையில் அறிவுசார் மனிதர்கள் (‘ஹோமோ சேபியன்ஸ்’) பார்க்கிறது. யுவால் நொவா ஹராரி எழுபதாயிரம் ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த அறிவாற்றல் புரட்சியிடமிருந்து தன் நூலைத் தொடங்குகிறார். பிறகு 12,000 வருடங்களுக்குமுன் நிகழ்ந்த விவசாயப் புரட்சி பற்றிச் சொல்கிறார். இறுதியாக 500 ஆண்டுகளுக்குமுன் நிகழ்ந்த விஞ்ஞானப் புரட்சியை, உருவரைக் கோடுகளின் மூலம் காட்டுகிறார். இன்றைய மனிதர்களையும், நம்முடைய கோளையும், இன்றைய நிலையில் உருவாக்கியவை இந்த மூன்று புரட்சிகள்.
உள்வாங்கும் அலை
நாகராஜன், எங்கோ பிறந்திருக்க வேண்டிய பிள்ளை அது. நாகராஜனுக்கு ஊர் பிடிக்கவில்லை. நன்றாகப் படித்தான் நாகராஜன். படிப்பில் அவன் ஆர்வம் அவருக்குப் பிடித்திருந்தது. “ஏல நீ மனம் போனபடி வாசி. எத்தனை ஆங்கிலம் படித்தாலும் தமிழை மறந்திறப்டாது கேட்டியா?” என்பார். சிலமந்தி அலமந்து… திருவையாறு பத்தி ஞானசம்பந்தர். அடாடா. அடாடா. அவர் ஐந்தாவது வரை படித்தவர். ஆங்கிலம் எழுத்துக்கூட்டி வாசிப்பார். கடைபோர்டு பார்த்தால் வாசிக்கத் தெரியும். கடிதத்தில் முகவரி வாசிப்பார். செய்தித்தாள் ஆங்கிலத்தில் வாசிக்கத் தெரியாது. போதாததற்கு பொடிப்பொடி எழுத்துகள். அவ்வளவுக்கு, இத்தனை பக்கத்துக்கு நாட்டில் என்னென்னவோ நடக்கிறது, என்பதே ஆச்சர்யம். மேட்டுப்பட்டியில் காலை விடியல், அந்தியில் அஸ்தமனம், அவ்ளதான் நியூஸ். அட அதுகூட ஒரு நியூசா? இதைப் பேப்பரில் தினசரி போடறதா?
யு.ஆர்.அனந்தமூர்த்தி பற்றி
தனது படைப்புக்களில் பகுத்தறிவு சார்ந்த கருத்துகளை வெளிப்படுத்திய அனந்தமூர்த்தி மக்களின் மரபு சார்ந்த வழிபாட்டு முறைகளைப் பற்றிய விஷயத்தில் வேறொரு நிலைப்பாட்டை எடுத்தார். ஷிமோகா மாவட்டம் சந்திரகுத்தி என்னும் கிராமத்திலுள்ள ரேணுகாம்பா தேவியை வழிபடுபவர்கள் (எல்லா வயதிலுமுள்ள ஆண்களும் பெண்களும்) வருடா வருடம் மார்ச் மாதம் நடக்கும் திருவிழாவில் தங்களுடைய நேர்த்திக்கடனை நிறைவேற்றுவதற்காக நிர்வாண வழிபாடு செய்வார்கள். ….பகுத்தறிவாளர்களின் கோரிக்கைக்கும், போராட்டத்திற்கும் பிறகு அரசாங்கம் இதைத் தடைசெய்தது. அப்போது மூடநம்பிக்கை, ஆன்மீகம், பகுத்தறிவு பற்றிய பெரும் விவாதம் எழுந்தது. இந்த நிர்வாண வழிபாட்டை அனந்தமூர்த்தி ஆதரித்தார். ஆழ்ந்த இறையுணர்வில் ஒரு மறைபொருள் அனுபவத்தைத் தரும் நம்பிக்கை சார்ந்த இந்தப் பழக்கம் தனிப்பட்டவரின் உரிமை சார்ந்தது. இதில் பகுத்தறிவுக்கு இடமில்லை என்றார்.
யார் யாரை ஆய்வு செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள்?
பைபர்ன் மற்றும் வில்க் கூற்றுப்படி, யு.எஸ் ஸில் பயிற்றுவிக்கப்பட்ட பெரும்பாலான
வெளிநாட்டு மானுடவியல் பட்டதாரி மாணவர்கள் களப்பணியாற்றத் தம் நாட்டுக்குப் போகவேண்டுமென்று எதிர்பார்க்கப்படுகிறது, ஆனால் பெரும்பாலும் யு.எஸ் மாணவர்கள் அமெரிக்க பண்பாட்டு ஆய்வு மேற்கொள்வது தடுக்கப்பட்டே வருகிறது.
“மானுடவியல் எவ்வளவோ முன்னேறி வந்திருக்கிறது, ஆயினும் நாம் தொடர்ந்து காலனிய விடுவிப்பு (decolonizing) திட்டத்தை நடத்திக்கொண்டே இருக்க வேண்டும். ஏனெனில் நாம் இன்னும் நாற்றம் வீசும் பல மூட்டை முடிச்சுகளை வைத்திருக்கிறோம்” என்கிறார் வில்க்.
மாற்று
பால பருவத்தில் ஆர்வமும் நம்பிக்கையும் இருக்கிறது. ஆசிர்வதிக்கப்பட்டவர்களுக்கு அது வாழ்க்கை முழுவதும் தொடர்கிறது. எங்கள் பாட்டனார் ஒருவர் நாங்கள் அடி விளையாட்டு ஆடிக் கொண்டிருந்தபோது என்னடா மெனக்கெட்டு செய்றீங்க என்றார். சொந்தக்காரர்கள் வீட்டு தூரத்தை அளக்கிறோம் என்றோம். பூமியும் வானமும் நமக்கு சொந்தம்; அதை உங்களால முழுசா அளக்க முடியுமா என்று வேடிக்கையாகக் கேட்டார்.
இமையம் எழுதிய ‘எங் கதெ’ நாவல் பற்றி
கமலாவிற்கு தான் செய்வது குறித்து ஒரு தெளிவு இருக்கிறது.தன் தேவைகளை தான் விதிக்கும் விதிகளுக்கு உட்பட்டு தீர்த்துக் கொள்கிறாள்.விநாயகத்தின் ஏமாளித்தனத்திற்கு அவளா பொறுப்பு. அல்லது முடிவெடுக்க இயலாதவனை அவள் என்ன செய்ய முடியும் .
தமிழே துணை
“அங்கெல்லாம் போலீஸ் கார் உன் காருக்கு பின்னால வந்து லைட் போட்டு காமிச்சா நீ உன் வண்டிய ரோட்ல ஓரமா நிறுத்தி ஜன்னல இறக்கிட்டு ரெண்டு கையையும் ஸ்டேரிங்ல வச்சு சீட்லயே உட்காந்து இருக்கணுமாம். அவன் உன் வண்டிகிட்ட வந்து உன் டைல் லேம்ப தொட்டுட்டு, பின்னாடி கதவுக்கிட்ட நின்னு தலைய மட்டும் நீட்டி உள்ள எட்டி பார்த்துட்டு நீ சரியான பொசிசன்ல உட்கார்ந்து இருந்தா மட்டும்தான் உன் கிட்ட வந்து பேசுவாங்களாம்.”
கற்றளி
“ஒரு பெரிய ஆளுமை எப்பவுமே தன்னை உலகறியச் செய்ய ஒரு புது உத்தியைக் கையாளும். உடனே, அடுத்த பெரிய ஆளுமையும் ‘தன்னைத்தான் இந்த உலகம் பெரியவனாக ஏத்துக்கிட்டுக் கொண்டாட வேண்டும்னு’ நினைக்கத் தொடங்கிடும். அங்கதான் பெரிய சிக்கலே தொடங்குது” என்றார்.
…“ஒரு பெரிய விஷயம் செஞ்சு முடிச்ச அந்தப் பெரிய ஆளுமையைவிட விஞ்சி நிற்குறதுக்காக அடுத்த ஆளுமை அந்தப் பெரிய விஷயத்தை அழிச்சுட்டு வேறு ஒன்றை அதைவிடப் பெரியதாகச் செய்ய நினைக்கும். அல்லது அந்தப் பெரிய விஷயத்தை அழிக்காமலேயே அதைவிடப் பல மடங்கு பெரிசா செய்யத் தொடங்கும். அதனால இந்த இரண்டு ஆளுமைகளுக்கும் இடையே ‘நீயா? நானா?’ போட்டி ஆரம்பமாகும்” என்றார் தாத்தா.
பழம்பெரும் மரம்
“இப்படி பயணிகளுக்கு வழிகாட்ட வேண்டாம். “
“அவர்கள் விழிப்புணர்வோடுதான் உள்ளார்கள். சந்தேகிக்கவேண்டாம்.”
“பாலம் எதற்கு கட்டப்பட்டிருக்கு? ”
“பாலத்தால் சிரமம், அது பயணிகளை விழிப்புணர்வு அற்றவர்களாக ஆக்கிவிடுகிறது.“
பனிப் புகைப் பிரச்சினை- பாகம் 1
உலகின் மிக மோசமான காற்றுத்தரம் உள்ள நகரங்களில் ஒன்று டில்லி. பல ஆண்டுகளாக, டில்லி அரசாங்கம் டீசல் பஸ்களை இயற்கை எரிவாயுவைப் பயன்படுத்தி, காற்று மாசைக் குறைக்க முற்பட்டு வெற்றி பெறவில்லை. டில்லியின் மெட்ரோ ரயில் இந்த முயற்சியின் ஒரு பங்கு. டில்லியைப்போல இந்திய நகரங்களான மும்பை, கொல்கத்தா, பெங்களூரு மற்றும் சென்னையின் நிலையும் இதேதான். ஆனால், டில்லியின் முக்கிய தோல்விக்கான காரணம் குளிர்காலத்தில், சுற்றியுள்ள வயல்கள் எரிக்கும் 500 மில்லியன் டன் பயிர்த்தூர்.
1965ல் ஒரு பஸ் பயணம்
இப்போ நிலைமை எப்பிடின்னு தெரியலை. அந்த நாட்களிலே டிரைவரோட வேலை வண்டி ஓட்டுறது மட்டும் இல்லை. அவர் ஒரு ஆடிட்டராகவும் மாத்து ஜோலி பார்ப்பார். கண்டக்டருக்கு ஒரு கவுண்டர்-பாலன்ஸ் மாதிரி. இது ஒரு பிரமாதமான, தனித்துவமான செயல்முறை எல்லாரையும் நேர்மையாய் வைத்திருப்பதற்கு. தூத்துக்குடி பஸ் ஸ்டாண்டைவிட்டு வெளியே வந்து, ஏறக்குறைய மூணாம் மைல் பக்கம் முதல் நிர்வாக நிறுத்தம் செய்யப்படும், டிரைவரும் கண்டக்டரும் கலந்து தீவிர ஆலோசனை செய்தபிறகு. இந்தச் சின்ன தூரத்தில் ஒரு நாலு தடவை அண்ணாச்சிகள், பாட்டையாக்கள், ஆச்சிகள், குஞ்சுகள், குளுவான்கள் பஸ்ஸை இஷ்டப்படி நட்ட நடு ரோட்டில் நிறுத்தி, தங்கள் மூட்டை முடிச்சுகளுடன் சாகவசமாக ஏறுவார்கள். அப்படி என்ன அவசரம் என்ற தங்கள் வாழ்க்கைக்கு ஏற்ற நோக்கைக் கடைப்பிடிப்பவர்கள் என்பதை எல்லோருக்கும் நிதர்சனமாகத் தெரியப்படுத்திவிடுவார்கள்.
தையல் சாமியார்
சைலண்ட் மோடில் போட்டு வைத்திருந்த செல் விர் விர்ரென்று அதிர்ந்தது. அப்போதுதான் வரத் தொடங்கியிருந்த தூக்கத்தைக் கலைத்துக் கொண்டு போனை கையிலெடுத்தேன். ஞாயிறு மதியம் இரண்டரை மணிக்கு போன் செய்து கூப்பிடுபவர்கள் யார் என்ற எரிச்சலுடன் எடுத்துப் பார்த்ததும் சகல புலன்களும் உடனடியாக சுறுசுறுப்படைந்தன. ஏனென்றால் அழைப்பு ராமநாதனிடமிருந்து. “தையல் சாமியார்”
ஆகாரசமிதை
ஹரன்பிரசன்னாவின் மாயப் பெரு நதி நாவலை முன்வைத்து: முதல் பாகத்தை மின்சார ரயில் பகுதி எனலாம். தெரிந்த விஷயங்கள். அதே குப்பை நாற்றங்கள். பழகிய முகங்கள். இருப்பிடம் வந்தாலும் நாளையும் இதே பயணம் என்னும் எதிர்பார்ப்பில்லாத திக்கில் முடிவு. அடுத்த பகுதி சென்னை முதல் டெல்லி செல்லும் ராஜதானி வண்டி. அவசரகதியில் எக்ஸ்பிரெஸ் ரயிலாக சேரிடத்தில் முடிந்தாலும், அந்தப் பயணம் சுவாரசியம் மிக்கது. தெரியாத, புதிய விஷயங்களை உணர்த்துவது. தூங்கி எழுந்தவுடன் கடைசி ஸ்டேஷன் வந்து விடுவது போல் …
பாகீரதியின் மதியம் – விமர்சனம்
நாவலின் நடை தாண்டவராயன் கதையைப்போலவே, நீண்ட நீண்ட வாக்கியங்கள் வழி பயணப்படுகிறது. வாசிக்கத் துவங்குகையில் முதலில் கொஞ்சம் தடுமாறி, இழுத்துப் பற்றுகையில், கடற்கரை குதிரைச் சவாரி போன்று மிதமான வேகத்தில் சென்றபடி துவங்கிய இடத்திற்கே திரும்பவந்து, மீண்டும் வெவ்வேறுப் பாதைகள் பற்றி முற்றிலும் புதியதோர் கனவினைக் கண்டு நீண்டுக்கொண்டே சென்ற ஒரு முடிவில்லாதப் பயணம்.
வலி
அம்மாவின் அழுகை முகம் மறைந்து சிரிப்பு முகத்தைப் பார்த்ததும் நொடிப்பொழுதில் தன் இயல்புக்குத் திரும்பிய அக்குழந்தையின் குணம் சிறுவயதில் தனக்கு எப்போதாவது நேர்ந்திருக்கிறதா என்று யோசித்தாள். சிறு வயதில் வலியை உணரத் தன்னைத்தானே பரிசோதனைக்கு உட்படுத்தி அவளாகவே ஏற்படுத்திக்கொண்ட காயங்களின் வடுக்கள் அவள் உடல் முழுவதும் நிரம்பி இருந்தன. அவ்வடுக்கள் பிறரின் வலியை உணர்ந்து அவர்களுக்காகப் பரிதவிக்கும் தருணம் எப்போதும் நிகழ்ந்ததில்லை என்று மட்டும் அவளுக்குள் சாட்சியம் சொல்லியது.
புஷ்பால ஜெயக்குமார் கவிதைகள்
மீண்டும் உயிர் வாழ்வது
பிணம் பிழைத்த கதை தான்
நாளடைவில் அது அடையாளமாக
தோல்வியுற்ற நான்
ஆடும் ஆட்டத்திலிருந்து
தள்ளி நின்றேன்
இடைவெளி என்பது மரணம்
வ. அதியமான் கவிதைகள்
கனிந்த கரும்பாறை
கரைந்துருகிய விழிநீர்
தரை தொடும் முன்னமே
தன்னில் முளைத்துவிட்ட
சிறகினை
வியப்பில்லாது விரித்து
வானில் எழுகிறது
நூறு நூறு குருவிகளாய்.
ராஜா நடேசன் கவிதைகள்
மண்ணில் இருந்து வந்தது
மண்ணுக்கே செல்கிறது
அன்னமிட்ட மண்
எடுத்துக்கொள்கிறது கொடுத்ததனைத்தையும்
உயிர்ப்பிக்க வரும் தேவன்
எடுத்துச்செல்ல ஒன்றும் இல்லை
இறைஞ்சி நிற்கும் கடவுளிடம்
கையளிக்கிறது மண்