வெவ்வேறு சட்டகக் கதையாடல்கள், கதைக்குள் கதைகள், அறச் சிக்கல்கள், வம்ச விருத்தி… இனி வருவதை எப்படி வாசிக்க வேண்டும் என்பதற்கான சாத்தியங்களை வழிகாட்டும் (அல்லது கட்டுப்படுத்தும்), கதையாடல் உத்திகள் நாவலின் துவக்கத்திலேயே, அதன் அரங்கேற்ற வேளையிலேயே, அணிவகுத்து நிறுத்தப்படுகின்றன.
Category: இதழ்-222
புதர் மண்டியிருந்த மன வீடு
‘அவனுக்கென அமைஞ்ச ஒரு உறவை ஆதரிக்கிறதுக்குப் பதிலாக புழுங்குறனே, தாயெண்ட உறவையும் மேவின ஆதங்கம்தானே இது,’ அவளுக்குத் தன்மேல் பச்சாதாபமும் கோபமும் ஒரே சமயத்தில் ஏற்பட்டன. ‘என்ரை விதி இப்படியானதுக்காண்டி, என்ரை பிள்ளையும் காயுறதே?’ அவள் நினைவுகள் சங்கிலியாகத் தொடர்ந்தன.
ஆனந்த நிலையம்
“கெழவனும் கெழவியும் இருக்கறவரைக்கும் யாரும் எதுவும் பேசல. ரெண்டு பேரும் மண்டய போட்டதும், எல்லாருக்கும் சொத்து ஞாபகம் வந்துட்டுது…”
“சாகறதுக்கு முன்னால யாருக்கு என்ன உண்டோ அத பெரியவரே சுமுகமா பிரிச்சி குடுத்திருக்கலாம்ல?”
“அதான் பெரியவங்க செஞ்ச பெரிய தப்பு. கடசி மூச்சு இருக்கறவரைக்கும் அவரும் அத செய்யல. இவரும் அத பத்தி ஒரு வார்த்த கூட வாயத் தெறந்து கேக்கல. கேளுங்க கேளுங்கன்னு இவருகிட்ட தலபாடா அடிச்சிகிட்டன். நீ சும்மா இரும்மா, என் கூட பொறந்தவங்கள்ளாம் அப்பிடி இல்லம்மா. எல்லாருமே சொக்கத்தங்கம். எதுவும் கேக்கமாட்டாங்க. எல்லாருமே அந்த நாட்டுல ஊடு பங்களானு இருக்கறவங்க, இதுக்கு போயி பங்குக்கு வரப்போறாங்களான்னு மெதப்புலயே காலத்த தள்ளிட்டாரு. இப்ப என்ன சொல்றாங்க தெரியுமா?”
சுவீடன் ஒரு சோஷலிச நாடா?
இதனால் நாட்டின் பொருளாதாரம் முன்னேறியது. செல்வமும் பெருகியது. இதைச் சீரழிக்காமல் விநியோகிப்பதிலும் அக்கறையுள்ளவர்களாக இருந்ததால், நாட்டின் செல்வம் மேலும் கூடியது. உள்நாட்டு வர்த்தகங்களும், மற்றைய நாடுகளோடு மோத வேண்டியிருந்ததால், தக்க சீரமைப்புகளிலும், புதிய கண்டுபிடிப்புகளிலும் ஆர்வம் காட்டியதால், தோளோடு தோள் நின்றன. தொழிற்சங்கங்களும், விவசாயம், கப்பல் கட்டுதல், துணி நெய்தல் போன்ற வெள்ளை யானைகளை மூட்டை கட்ட அனுமதித்தன. மிகவும் ஏழை நாடாயிருந்த சுவீடன், கிரிப்பேன்ஸ்டெட் ஏற்படுத்திய இம்மாற்றங்களால், அவர் அரசாங்கத்திலிருந்து விலகிய நூறு வருடங்களுக்குப்பின் மிகப் பணக்கார நாடாகவும், சுதந்திர நாடாகவும் மாறியது.
கைச்சிட்டா – 2
அமெரிக்காவில் பாதகமான விஷயங்களைச் சொல்வதற்கு முன் இரண்டு நல்ல நடவடிக்கைகளைச் சொல்லிவிடுவார்கள்; அதன்பின் மாற்றம் தேவைப்படும் விஷயத்தை நாசூக்காக முன் வைப்பார்கள்; அதன் பின் முத்தாய்ப்பாக “நன்றாக வேலை செய்கிறாய்!” என்னும் சம்பிரதாயச் சொற்றொடரோடு பேச்சை முடிப்பார்கள். இதற்கு பர்கர் அணுகுமுறை எனப் பெயர் வைத்திருக்கிறார்கள். இரண்டு ரொட்டிக்கு நடுவே கோழிக்கறி அடைபட்டிருப்பது போல் இரண்டு பக்கமும் அசத்தல் குணநலன்களைச் சொல்லி, நடுவில் குற்றங்களைச் சொல்லுதல் மாண்பு. பிரான்ஸில் இப்படி எல்லாம் சுற்றி வளைக்காமல் நேரடியாகக் கோழிக்கறியில் இறங்குகிறார்கள். “இது உன்னிடம் சரியில்ல! இப்படி நடந்தால் வேலை போயிடும்!” எனச் சொல்லிவிட்டுச் சென்றுவிடுகிறார்கள்.
நோயாளி எண் பூஜ்யம்- 2
தேசத்தந்தை, உயிரிகள் பாதுகாப்பு அமைச்சகத்தை உருவாக்கிய பிறகு, தேசக் கணக்கெடுப்பில் பதிவு செய்து கொள்ள இதயமின்பதிவுத் தொழில்நுட்பம் தேவை. யாரும் கார்பன் உணர்விகளைத் தம் உடலில் பொதிந்து கொள்ள அச்சப்படவில்லை, அவை இதயத்தின் மின் அதிர்வுகளை வரைபடமாகக் கொடுத்து அவற்றைத் தகவல் மையங்களுக்கும் ஒலிபரப்பின. அவற்றை உடலில் பொருத்துவது சுலபம், ஆனால் மூளைப் புரணிகள் அவற்றை அவ்வளவுத் திறமையாக ஏற்றுக் கொண்டு விடுவதால், அகற்றுவது கடினமாகி விடுகிறது. என்னுடைய அந்த நுண்கருவிகளை அகற்ற வேண்டும் என்று எனக்குத் தோன்றியே இருக்காது. ஃபாங்கின் இருப்பிடத்தில் இருந்த ‘ஸ்டோன் ஆஃப் மேட்னெஸ்’ ஓவியம் என் நினைவில் எழும்பியது, அந்த ஓவியம் இப்போது எனக்கு சதி வேலையாகத் தெரிந்தது.
ரசவாதம்…
மலையில பெய்யுற மழை ஓடி வரப்போ அதோட மண்ணு, மரஞ்செடி இதுல இருக்குற சத்தெல்லாம் அள்ளிட்டு வந்துரும். அது பாறைகளோட இடுக்கு, குழி இதுல தேங்கி நிக்கும். இப்படி தேங்கி நிக்குற தண்ணியோட சக்தி சொல்லி மாளாது. உங்களுக்குப் புரியற மாதிரி சொன்னா, இதுவரை சயின்ஸ் கண்டுபிடிக்காத பவர்புல் கெமிக்கல் அது. நினைச்ச நேரத்துல அதை எடுத்துற முடியாது. ஒவ்வொரு மலைக்கும், அதுல உள்ள ஒவ்வொரு பாறைக்கும், ஒவ்வொரு பாறையில உள்ள ஒவ்வொரு குழிக்கும் தனித்தனி இயல்பு இருக்கு. அதப்பொறுத்தும் கால நேரத்தைப் பொறுத்தும் எடுத்தாத்தான் வேலை செய்யும்.
பேரழிவின் நுகத்தடி
இறந்தவர்களின் வார்த்தைகளோடு உயிரோடிருப்பவரின் சொற்கள் ஒன்றாகக் கலக்கின்றன. தங்கள் முன்னோர்களின் மொழியை சற்றேனும் அகழ்ந்து எடுத்து கவிஞர்கள் கவிதைகளை எழுதுகிறார்கள். கசிந்தோ, கலந்தோ, அவர்களின் மொழியுடன் தன் மொழி இணைவதை அவர் இவ்வாறு சொல்கிறார் : “வண்டுகள், பூச்சிகள், கிருமிகள், களைகள் அறியா வண்ணம் நுழைந்து தங்கள் வேலையைத் தொடர்வது போல் என் மொழி அமைந்துவிடுகிறது.”
யாத்திரை
பஸ் நின்றது. ஒரு இளைஞன் ஏறிக்கொண்டான். இருபத்தைந்து வயதிருக்கும். சுமாரான உயரம் முகத்தில் ஒரு சிறுவனுக்குரிய விஷமமும் விளையாட்டுத்தனமும் தெரிந்தது. கழுத்துக்கு இருபுறமும் இரு நேர்க்கோடுகள் போட்டாற் போல் தோள்கள் தோளில் குறுக்காக ஒரு ஜோல்னாப் பையைத் தொங்கவிட்டிருந்தான். முதுகுப்புறம் ஒரு கருப்பு ஜர்னி பேக். பயங்கர கனம் போலும். முதுகை வளைத்து நின்றான். காம்பேட் யூனிபார்ம் அணிந்திருந்தான்…
கரி
தூங்கறப்போ அவ பின்னாடி நின்னதும் பின் அவளைப் பார்த்து பயந்ததும் அவனை சீண்டிருச்சின்னு நினைக்கிறேன். ஒண்ணை மறைக்க இன்ணொண்ணு.. அதை மறைக்க வேறொண்ணுன்னு போயிட்டே இருக்கான். நாம என்னைக்கும் ஒரு கோடுபோட்டு அதுக்குள்ளதான் வாழறோம். அதுக்கு மேலயோ கீழயோ போறதில்ல. ஆனா இவனைப்பாரு.. அஞ்சு வருஷத்துக்கு ஒரு கெட்டப்புன்னு இப்ப இந்த இடத்துல வந்து நிக்கிறான்..”
இரா. கவியரசு- கவிதைகள்
நினைவுகளற்ற காற்றிடம்
வீட்டைப் பற்றியும்
குழந்தைகளைப் பற்றியும்
சொல்லிக் கொண்டேதான் இருக்கிறான்
நிறுத்துவதே இல்லை
அது ஒரு வியாதி
சொல்லுதல்தானே வாழ்வு
புஷ்பால ஜெயக்குமார்- கவிதைகள்
எழுதப்படுவதும் எல்லாமும் ஒன்றொன்றாக
மீதி என் கேள்விகள் தேவைகள் விருப்பங்களென
நான் தேடுகிறேன் குப்பைகள் பறக்கும் என் மனதில்
காத்திருக்கிறேன் காரியம் கைகூடுமென
வரிந்து கட்டிக்கொண்டு ஆழ்மனத்திலிருந்து
வந்து விழுகிறது நம்பிக்கை தரும் கனமான சொல்லொன்று
அதுவே இதுகாறும் பிறப்பித்த விதையின் விருட்சம்
கெவுரவம்
“மக்கா..அதுல ஒரு மேட்டரு இருக்கு…ஒனக்கு அதெல்லாம் புரியாது…விடு மக்கா.. லைஃப நல்லா என்ஜாய் பண்ணுவோம் மக்கா..நம்மூரு மீங்கறி US-ல கெடைக்குமா சொல்லு….எங்களுக்குல்லாம் அவியலா, லட்சம் ரூவாயான்னு கேட்டா அவியல்னு தா சொல்லுவோம்…விடு டே..ஒனக்குப் புரியாது..”
சகுனியின் சொக்கட்டான்
P4 என்பது மிகவும் அதிகமான மக்களைக் கொல்லக்கூடிய நோய்க் கிருமிகளைப் பற்றி ஆராய்ச்சி செய்யும் மையம். இந்த ஆராய்ச்சி மையத்தில்தான் 2015ஆம் ஆண்டு சைபீரியாவில் இருந்து எடுத்து வரப்பட்ட மண்ணின் மாதிரி ஆராய்ச்சி செய்யப்பட்டது. அதனால் வைரஸ் இங்கிருந்துதான் வெளியே போயிருக்க வேண்டும் என்று ஒரு சாரார் நம்புகின்றனர்.
மகரந்தம்
மனிதனை பற்றிப் பொதுவாக எதுவும் சொல்லச் சொன்னால் “மனிதன் மகத்தான சல்லிப் பயல்”என்றுதான் சொல்வேன் – இந்த எதிர்மறை வார்த்தைகளை உதிர்த்தவர் ஜி. நாகராஜன் (1929-1981) என்னும் தமிழ் எழுத்தாளர். மெத்தப் படித்த மேதைகள் சிலரும்கூட மனிதனைப் பற்றிய எதிர்மறைக் கருத்துக் கொண்டவர்கள்தாம்.
குளக்கரை
ஃப்ளோரிடா வழக்கம்போல் இந்த ஆண்டும் குளிர்கால காய்கறி சாகுபடியில் முதலிடம் பிடித்தது. மார்ச் – 2020 கொரோனா தாக்குதலைத் தொடர்ந்த லாக்-டவுனின் முதல் பலியும் அதுவே. உணவு விடுதிகள், உல்லாசக் கப்பல் பயணம், பள்ளிக்கூட சிற்றுண்டிச்சாலைகள், விமான நிறுவனங்கள், தீம் பார்க்குகள் அனைத்தும் மூடப்பட்டதால் உற்பத்தியாளர்கள், “கடை விரித்தேன்; கொள்வாரில்லை” என்ற ராமலிங்க வள்ளலாரின் நிலைக்கு வந்துவிட்டார்கள்.