அறிவிப்பு: ரொபெர்டோ பொலான்யோ சிறப்பிதழ்

சொல்வனம் இதழ்-225, “ரொபெர்டோ பொலான்யோ” சிறப்பிதழாக வரவிருக்கிறது. பொலான்யோ-வின் படைப்புகளைப் பற்றிய கட்டுரைகளை வரவேற்கிறோம். ஆர்வமுள்ள வாசகர்கள், தங்கள் கட்டுரைகளை ஜூன் 10 தேதிக்குள் அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம்.

உயர்ந்த உள்ளம்

This entry is part 24 of 48 in the series நூறு நூல்கள்

பிரசவத்துக்குக் காத்திருக்கும் மனைவியைப் பார்க்கவும் அவளோடு வாழவும் வேலையைத் துறந்து செல்லும் அவனுக்கு உள்ளூர உதவவேண்டும் என்பதுதான் ஜெனரலின் விருப்பம். ஒருவேளை தான் மரணமடைந்து, வேறொரு ஜெனரலின் கட்டுப்பாட்டுக்கு அவன் சென்றுவிட்டால் விடுவிப்பில் சிக்கல் நேரிடலாம் என்னும் முன்யோசனையாலேயே அவர் அக்குறிப்பை எழுதி அனுப்பியிருக்கிறார். உயிருக்குப் போராடும் நேரத்திலும் இன்னொரு உயிருக்காக இரக்கப்படும் உயர்ந்த உள்ளத்துக்கு மட்டுமே அது சாத்தியம். அதுவரை உயர்ந்த சிகரத்தைப்பற்றிய கதையாக இருந்த விவரணைகள் எல்லாமே உயர்ந்த உள்ளத்தைப்பற்றியதாக மாற்றம் பெற்றுவிடுகிறது.

நவம்

“தெய்வங்க மண்ணுக்கு எறங்கி வரணும். மனுசங்கள போலவே எட்டு திசைக்கும் அவங்க கட்டுப்பட்டாகணும். எட்டு திசை தெய்வங்களுக்கு கட்டுப்பட்டாகணும். கிழக்குல இந்திரன், தென்கிழக்குல அக்னி, தெற்குல யமன், தென்மேற்கு ல நிருதி, மேற்குல வருணன், வடமேற்கு ல வாயு, வடக்குல குபேரன், வடகிழக்குல ஈசானன்” என்று ஒவ்வொன்றாக புள்ளிவைத்து, “மொத்தம் ஒன்பது கட்டங்க.

கண்காட்சி

நான் பிறந்தபோது ஆக்ஸிஜனை சுவாசித்தேன். இப்போதோ நான் கார்பன் டை ஆக்ஸைடை சுவாசிக்கிறேன். நான் என் எஞ்சிய வாழ்வை வெறும் ஒரு தாவரமாகவே கழிக்கக் கூட நேரலாம். என் வாழ்வின் எத்தனை சதவிகித நோக்கத்தை நான் விலங்காக இருந்து நிறைவேற்றினேன்? எத்தனை சதவிகித நோக்கத்தை நான் இனி தாவரமாக இருந்தபடி நிறைவேற்றுவேன்? நான் விலங்கிலிருந்து தாவரமானது இந்த பிரபஞ்சமென்னும் பாரிய ஒழுங்கின் எந்தப் புள்ளியை முழுமையடையச்செய்ய இருக்கிறது?

புத்தக அறிமுகம்: கடலெனும் வசீகர மீன்தொட்டி

This entry is part 11 of 48 in the series நூறு நூல்கள்

பிறத்தலுக்கும், இறத்தலுக்குமான இடைவெளிகளை எப்பொழுதும் நீளப்படுத்திக் கொள்ள ஆசைப்படுகின்றோம். அதை எவ்வளவு நீட்டிக்க முடியும் என்பதில் இயற்கையோடு நமக்கான பிணக்கு இன்னும் தீர்க்கப்படாமலே இருக்கிறது. ஆயினும் எதார்த்த மனநிலையில் கடந்து செல்ல இயலாத அதைரியத்தின் அவலத்தை அழுகையாய், ஒப்பாரியாய் வெளிக்காட்டிக் கொள்கின்றோம்.

சின்ன உயிர் நோகாதா

சொல்கிறேன் டாக்டர்! அவன் ரொம்ப சுயநலக்காரன். எங்களுக்குத் திருமணமாகி மூன்று வருடம் ஆகிறது. இரண்டு பேரும் சாப்ட்வேரில் பணிபுரிகிறோம். அவர்கள் வீட்டில் ஆண்கள் வீட்டு வேலை செய்ய மாட்டார்களாம். அப்படியே வளர்ந்து விட்டான். எப்போது பார்த்தாலும் தன் வேலை, தன் சம்பளம், தன் பொழுதுபோக்கு, தன் நண்பர்கள்… அவ்வளவுதான்! அவனுடைய தேவைக்காக நான்! வீட்டு வேலை எதிலும் பொறுப்பெடுத்துக் கொள்ள மாட்டான்…

கொடிப்பூ மாலை

அவன் ஆசிரியர் அருள்தாஸ் கூறியது நினைவுக்கு வரும். “கணக்குங்கிறது வெறும் நம்பர்களைப் படிக்கிறது இல்ல. கணக்குத் தெரிஞ்சவன் வாழ்க்கைய சரியா வரையறுக்குறான். ஏன்னா இங்க நம்மள சுத்தியிருக்குற எல்லாத்தயும் எண்களோட மொகமா மாத்திறலாம். பட்டினி என்பது மாசம் ஐநூறு ரூபாய் இல்லாததுதான். அடிமைத்தனத்திலிருது மாசம் ரெண்டாயிரம் சம்பாரிக்க தெரியிறது மூலமா வெளியில வந்துறலாம்.” நேர்முகமாக் குனிந்து அவன் கண்களை நோக்கி கூறினார்.

மிகப்பெரிய அதிசயம்

This entry is part 12 of 17 in the series 20xx கதைகள்

“நிகழ்காலம் பிடிக்காவிட்டால் எதிர்காலத்தை மாற்றி அமைக்க திட்டம் தீட்டுகிறோம்.”
“முன்னேற்றம் என்று நாம் சொல்லும் அத்தனைக்கும் அது காரணம்.”
“எதார்த்தத்தை மறுத்து நமக்குப்பிடித்தமான கற்பனையை நிஜம் என நம்புகிறோம். அளவுக்கு மிஞ்சிய சத்தில்லாத உணவும் சோம்பல் வாழ்க்கையும் மற்றவர்களுக்கு மட்டுமே நோய் நமக்கு இல்லை என நினைக்கிறோம். நிறுவப்பட்ட அறிவியல் கொள்கைகளில் பெரும்பாலோருக்கு அநாவசிய சந்தேகம்.”

20xx- கதைகள்: முன்னுரை

This entry is part 1 of 17 in the series 20xx கதைகள்

நிலக்கரி சக்தியில் ஐரோப்பியர்கள் வராது இருந்தால், நிலையான கிராம வாழ்க்கையும் அரசாட்சிகளின் ஏற்ற இறக்கங்களும் இன்னும் பல நூற்றாண்டுகள் தொடர்ந்திருக்கும். இது ஒரு ஆதரிச சமுதாயமா? இல்லை. இரண்டாயிரம் காலரி உணவு எல்லாருக்கும் நிச்சயம் இல்லை. அவ்வப்போது ‘ஓர் தட்டிலே பொன்னும் ஓர் தட்டிலே நெல்லும் ஒக்க விற்கும் கார்தட்டிய பஞ்சகால’ங்கள். பயிர்விளைவிப்பதின் பெரும்பளுவைப் பள்ளர்கள் சுமந்தார்கள். எழுத்தறிவு மக்களில் ஐந்துசதம் பேருக்கு இருந்தால் அதிகம். அவர்களில் உயர்குடியைச்சேர்ந்த ஒருசில பெண்கள். விதிக்கப்பட்ட வாழ்க்கைப்பாதையில் இருந்து விடுபடுதல் அரிதான செயல். ஆனால், இன்றைய மத்தியக்கிழக்கு மற்றும் வட ஆப்பிரிக்க பகுதியின் பல நாடுகளில் மக்கள் படும் அவதியுடன் ஒப்பிட்டால் அந்தத்தமிழகம் ஒரு சொர்க்கம். முக்கிய காரணம், வறுமையிலும் மனிதாபிமானம் அழிந்துவிடாமல் பாதுகாத்த கொள்கைவீரர்கள்.

நண்பன்

என்னைக் கேட்டால் அலெக்ஸியேவிச் வகை அ-புனைவு படிப்பதற்கு புனைவு அளவுக்கே நன்றாக இருக்கும் படைப்புகளைத் தருகிறதா இல்லையா என்பதுதான் கேள்வி. உண்மையைக் கண்டடைய கற்பனை நன்கு உதவி செய்கிறது என்று நினைத்த டோரிஸ் லெஸ்ஸிங் போன்றவர்கள் சொல்வதுதான் என்னளவில் சம்மதமாக இருக்கிறது. யதார்த்தத்தை விவரிக்கும் சக்தி புனைவுக்கு இல்லாமல் போய் விட்டது என்று சொல்வதை நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன்.

நண்பனா, வாதையா?

தேய்வழக்காகப் போயிருக்க வேண்டிய ஒரு கதையை இப்படித் தடம் மாற்றி, ஆனால் இதே போன்ற கதைகளின் பல அம்சங்களைக் கைவிடாமல் கதையில் நுழைத்து, சாமர்த்தியமாக நயாகரா மீது கட்டிய கயிற்றின் மேல் நடந்திருக்கிறார் ஸிக்ரிட் நூன்யெஸ். நாய் என்பது கயிற்றில் நடப்பவருக்கு மிக உதவியாக இருக்கும் விரித்த குடை, அல்லது கையில் நிலைப்பைக் கொடுக்க வைத்திருக்கும் நீண்ட கம்பு. சோகத்தில் இவர் மூழ்காமல் இருக்க உதவும் மிதவை அந்த நாய். நாவலின் விசித்திரம் என்னவென்றால் ஒரு சாவின் சோகத்திலிருந்து மீள்பவர் சாகத் தயாராகும் இன்னொரு ஜீவனால் தேறி வருவதுதான்.

கண்ணீரின் குருதியின் சுவை

1770 ல் முதல் வங்கப்பஞ்சம். கம்பெனி உழியர்கள் அரிசிச் சந்தையையும் வளைத்துபோட்டனர். அதிகப் பணம் கொடுப்பவர்களுக்கு அரிசியை விற்றனர். குறிப்பிட்டவிலை நிர்ணயமெல்லாம் இல்லை. அந்தநிலையிலும் உப்புவரி முழுமையாக வசூலிக்கப்பட்டது. மக்களில் மூன்றில் ஒருபங்கு ஆட்கள் உணவில்லாமல் மரித்தனர்.

முறைப்படியான ஒரு பதில்: பாகம்-2

கான்லன், நாங்கள் எல்லாரும் ரகசியமாக சான் ஃப்ரான்ஸிஸ்கோவுக்குப் போய் விடலாம், அவர் மட்டும் தனியே அந்த ஊரில் இருந்து விமானச் செலவுக்குப் பணத்துக்குத் திண்டாடி எப்படியாவது வரட்டும் என்று யோசனை சொன்னார். அப்படி ஏதும் எங்களால் செய்ய முடியவில்லை. அவர் செத்துப் போயிருந்தால் கூட, அவருடைய சாம்பலை நாங்கள் திரும்ப எடுத்து வர வேண்டி இருந்திருக்கும்; ஏனெனில் அவர் அமெரிக்காவில் பின்னே தங்கினால் அவர் அமெரிக்காவிற்குத் தாவி விட்டார் [3] என்று சீன அரசு கருதும், அவருடைய உள்நோக்கங்களைக் கணிக்காததற்கும், அவருக்கு இந்தப் பயணம் இப்படித் தாவ வாய்ப்பளிக்கும் என்பதை அறியாததற்கும் எங்களைக் கண்டிக்கும்.

நுண்கிருமியிடம் தோற்ற உலக ஏகாதிபத்திய வெறி

மாற்று வேலைகள் கிட்ட வாய்ப்பில்லாத நிலையில் ஏராளமான அமெரிக்கத் தொழிலாளர்கள் வேலையில்லாத காலத்தில் கிட்டும் உதவித் தொகையைக் கோரி விண்ணப்பிக்க வரிசையில் நிற்கிறார்கள். மிகச் சமீபத்துக் குத்து மதிப்பில் 1 கோடி அமெரிக்கர்கள் இந்த உதவித் தொகைக்கு விண்ணப்பித்திருக்கின்றனர். அதாவது அமெரிக்கத் தொழிலாளர்களில் சுமார் 13% பேர்கள் வேலையில்லாமல் இருப்பதாக நியூயார்க் டைம்ஸ் சொல்கிறது.

உ.வே.சாமிநாதையரின் சங்கடங்கள்

மூன்றாவதாக சென்னை திருவேட்டீஸ்வரத்தில் (திருவல்லிக்கேணி) தான் கட்டிய வீட்டிற்கு ‘தியாகராச விலாசம்’ என்று பெயர் சூட்டுகிறார். ஐயரின் ஒரே வருத்தம் இதையெல்லாம் செட்டியார் உயிரோடு இருக்கும்போது செய்யவில்லையே என்பதுதான். சில வருடங்களுக்கு முன் நூறு வருடப் பழமையான அந்தத் ‘தியாகராச விலாசம்’ இடித்துத் தள்ளப்பட்டது. வேறொரு நாடாக இருந்திருந்தால் அரிய பல பழந்தமிழ் நூல்களைப் பதிப்பித்த அந்தப் பெருந்தகையின் நினைவாக அந்த வீட்டை அறிவுத்திருக்கோயிலாக ஆக்கியிருப்பார்கள்.

நீ உன்னை அறிந்தால்

டியர்ட்ர பாரெட்((Deirdre Barrett), ஹார்வர்ட் மருத்துவப் பள்ளியில் உளவியலாளராகப் பணியாற்றுகிறார். அவர் சொல்வது: ‘கனவுகளுக்குக் குறிகள் கிடையாது. கனவை பகுத்துச் சொல்பவரோ, அகராதிகளோ, கனவுகள் உணர்த்தும் செய்தி என்ன என்று சொல்ல முடியாது.’

சுனிதா ஜெயின் -இரு கவிதைகள்

கோடை முடிகையில்
அப்பறவைகள் இணங்கியோ பிரிந்தோ
பறக்கும் வலிமை பெற்ற இளங்குஞ்சுகள் சூழ
பறந்து போயின .

இரா. கவியரசு – இரு கவிதைகள்

ரேகைகள் கலக்கும் போது
தொலைகின்றன நதிகள்
விட்டுவிடக் கூடாது என்பதற்காக
இன்னும் இறுக்கமாக
பற்றிக் கொள்கிறோம்

மகரந்தம்

நெடிய பாரம்பரியம் கொண்ட பறை (drum), தாளம் (Cymbal) வகை வாத்தியங்கள் பண்டைய கலாச்சாரங்கள் அனைத்திலும் இருந்தன . அவற்றை உள்வாங்கி, ஒருவரே பறையடித்து தாளமிடும் வகையில் அமெரிக்காவில் உருவானது டிரம் செட் (Drum செட்).

குளக்கரை

கடந்த 40 ஆண்டுகளில் மறுசுழற்சியில் தயாரிக்கப் பட்ட பிளாஸ்டிக்கின் அளவு 10% க்கும் குறைவானது .
….அமெரிக்க நெகிழிக் கழிவுகளை பெருமளவில் இறக்குமதி செய்துகொண்டிருந்த சீனா , தற்போது அதற்கு கட்டுப்பாடு விதித்துள்ளது . சீனத்தைத் தொடர்ந்து மலேசியா, தாய்லாந்து, வியட்நாம் மற்றும் தைவான் நாடுகளும் கட்டுப்பாடுகள் விதித்தன. இறக்குமதி அனுமதிகள் புதுப்பிக்கப்படாததால் அமெரிக்க நெகிழிக் கழிவுகள் இந்தியா வரவும் வாய்ப்பில்லை . இதனால் மறுசுழற்சி வேலைகள் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் குடியேறின. அங்கே பல மில்லியன் டன் நெகிழிக்கழிவுகளின் மறுசுழற்சிக்குத் தேவையான ஆதார கட்டமைப்புகள் இல்லாததால் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.