ஆப்பிரிக்க –அமெரிக்கரான கேத்ரின் ஜான்ஸன், விண்வெளிப் பயணங்களுக்குக் கணிதம் மூலம் துணை நின்றவர். …1953-ல் நேஷனல் அட்வைசரி கமிட்டி ஃபார் எரோனாடிக்ஸ்சில் (NACA) இவர் பணி என்ன தெரியுமா? தன் மேலாளர்களான வெள்ளை ஆண்கள் செய்யும் வேலைகளை, இயந்திரக் கணக்குக் கருவி மூலம் ஆராய்ந்து தவறுகளை நீக்கிச் சரி செய்து கொடுப்பது. அந்த வேலை’கம்ப்யூட்டர் ‘ என்று அழைக்கப்பட்டது. …விண்வெளி வீரர்களை வானில் அனுப்பவும், பின்னர் நிலவிற்கு அனுப்பவும் இவர் எழுதிய கணிதக் கோட்பாடுகள் உதவின. சுருங்கச் சொன்னால் மனிதனின் விண்வெளி பயணத்தின் மையம் இவர் கணிதத்தில் இருந்து பிறந்ததுதான்.
Category: இதழ்-218
சீதா
மாமா,“கல்லாவில பணம் எண்றவங்க வேணாம்ன்னா நமக்கு மாப்பிள்ளை அமையுமா? நம்ம ஆளுக சிறுசிலருந்து எல்லாம் கடையில வளந்ததுக,” என்றார்.
சீதா குறுக்கே புகுந்து, “அவங்க கீழ எல்லாம் என்னால இருக்க முடியாது. . ” என்றாள்.
வேகமாய் நின்றாய் காளி- 4
இதில் வேதனைக்குரிய விஷயம் என்னவென்றால், உலகின் மொத்த மின் கழிவில், வெறும் 16 சதவீதமே மீட்கப்படுகிறது. … இன்றைய கணிப்புபடி வருடம் ஒன்றுக்கு 40-50 மில்லியன் டன்கள் மின் கழிவை உலகம் முழுவதும் உருவாக்கி வருகிறோம். இதை வேறுவிதமாகச் சொல்லப்போனால் ஒவ்வொரு நொடியும், 800 மடிக்கணினிகளைத் தூக்கி எறிவதற்குச் சமமானது.
ஸ்லாட்டர்ராக் போர்க்களத்தில் முதல் வருடாந்திர ஆற்றுகைக் கலை விழா-1
“ஆனா அது நார்த் கரோலினா. இதுவோ நியூ யார்க். நகரத்துலேந்து ரெண்டு பஸ்சுங்கள நிரப்பற அளவுக்கு விமர்சகர்கள் வரப் போறாங்க. கொடியெரிப்பெல்லாம் அந்தக் கூட்டத்துக்கு ஒரு பிரச்சனையே அல்ல. இங்க லிபெரல்கள் அதிகம், அவங்களுக்கு இம்மாதிரியான அத்துமீறல்கள் வெல்லக்கட்டி போல. முதல் சட்டத் திருத்தமோ, இரண்டாவதோ இரண்டில் ஏதொவொன்று அளிக்கும் உரிமையை அமல்படுத்திக் கொள்வதாக அவங்க இத அர்த்தப்படுத்திக்குவாங்க. மேலும் மீள்-நிகழ்த்தல்களுக்கும் இவை பொருத்தமா இருக்கும். சொல்லப் போனால், பாம்புகளைக் காட்டிலும் பொருத்தமா இருக்கும். இந்தப் போரில் இந்தியர்களே ஜெயித்தார்கள்.
வைரம் பாய்ந்த மரம்
விறகாக எரியும் போது முனகும் ஒலி
காட்டில் உள்ள
எல்லா மரங்களையும் குழப்புகிறது
விதை
தெளிவு
மாமியின் பேச்சில் பொதுவாக ஒரு ஐம்பதைந்து வயதான , மேல் மத்திய தரக் குடும்பப் பெண்மணியிடம் நாம் எதிர்பார்க்கிற மனமுதிர்ச்சி, பக்குவம், நிதானம் இவை எதுவும் இருப்பதில்லை. மனதில் தோன்றியதை தோன்றியவுடன் பேசுகிற சுதந்திரமான, விளையாட்டுத்தனமான மனநிலையில் இருப்பவர்போலத்தான் அவர் பேசுகிறபோது தோன்றும். சில சமயம் அவரின் கேள்விகள் இருட்டு அறைக்குள் , தெருவில் வருகிற காரின் தலை விளக்கு வெளிச்சம் ஒரு க்ஷணம் சடக்கென்று எதிர்பாராத வெளிச்சத்தைத் தருவது போல இருக்கும்.
கொரோனா – இன்னொரு பிணி நுண்ணி
அமெரிக்காவோடு ஒப்பிடுகையில் இந்தியாவின் மருத்துவ கட்டமைப்புகள் மோசமான நிலையில் இருப்பது மிகவும் வருத்தமான நிதர்சனம். இந்தியாவில் எந்த மூலையில் ஒருவர் பாதிப்புக்குள்ளானாலும் அதை உறுதி செய்யும் பரிசோதனையைப் பூனாவில் இருக்கும் ஓர் ஆய்வகத்தில்தான் செய்ய முடியும் என்கிறார்கள். மத்திய அரசும், மாநில அரசுகளும் நிலமையைச் சமாளிக்க முழுவீச்சில் தயாராகிக் கொண்டிருப்பதாக கூறிக் கொண்டிருக்கின்றனர்.
ஃபிப்ரவரிக்கு 29 நாட்கள்
அவன் ஆரம்பங்கள் அனைத்துமே இப்படித்தான். நாள் நேரம் தேதி பொழுது அனைத்தும் துல்லியமாக இருக்கும். மனதில் அவை இன்னும் முழுமையான உயிர்ப்புடன் இருக்கின்றன. மறதி இன்னும் தீண்டவேயில்லை. அந்தக் கணங்கள் அந்த பொழுதுகள் அடர்த்தி குறைய வேண்டும். அவற்றின் இடத்தில் வேறேதாவது வந்து அமர வேண்டும். படைத்த தெய்வங்கள் கருணை வைத்தால்தான் உண்டு. கடவுள் சில விஷயங்களை ஒரு துளி மட்டுமே கொடுக்கச் செய்கிறான்.
தற்கொலை பற்றிய ஆய்வு முடிவுகள்
உலகளவில் 40% கயிற்றையும் 20% பூச்சிக்கொல்லி மருந்தைக் குடித்தும் தற்கொலை செய்து கொள்கிறார்கள். மிக அபாயகரமான பூச்சிக்கொல்லி மருந்துகளைத் தடை செய்ததினால் ஸ்ரீலங்காவில் தற்கொலை எண்ணிக்கை குறைந்துள்ளது. உயரத்திலிருந்து குதித்தும், சிலமருந்துகளை அளவுக்கு மீறி உட்கொண்டும் தற்கொலை செய்துகொள்ளும் நபர்களும் அதிகமாயுள்ளனர். உயரமான கட்டமைப்புகளைச் சுற்றிப் பெரியதடுப்புகளை அமைப்பதின் மூலம் இவ்வழி பயன்படுவதைக் குறைக்கலாம்.
திருமண ஏசல் பாடல்கள்
மரபு வழிப்பட்ட நிலவுடைமை சார்ந்த குடும்ப அமைப்பில் மகளிர்க்கு உரிய பங்கு வரையறுக்கப்பட்டிருந்தது. இல்லத்தரசியர் என்ற பாத்திரத்தை வகிக்கின்ற மகளிரே குடும்ப கௌரவம் குலப்பெருமிதம் போன்றவற்றின் பாதுகாவலராகக் கருதப்பட்டனர். மேலும் குலம், கோத்திரம் பார்த்து நிச்சயம் செய்யப்படுகிற திருமணங்களில் மணமகனும் மணமகளும் முதல் முறையாகச் சந்தித்து விரைவில் அவர்களுக்குள் நெருக்கமான உறவு ஏற்படவேண்டுமெனில் அவர்களுக்கு இடையில் உள்ள மனத் தடைகள் நீங்கினால்தான் அது சாத்தியம். அத்தகைய மனத் தடைகள் நீங்கி இயல்பாகவும் தயக்கமின்றியும் அவர்கள் அந்நியோந்நிய உணர்வை அடைவதற்கு இத்தகைய குழுப்பாடல்கள் உதவிகரமாக இருந்தன.
நிவிக்குட்டியின் டெடிபேர்
கரடிபொம்மையின் முகத்துக்கு நேரே கீழே இறங்கி, சேர்ந்திணைந்து பொம்மையைக் கவ்வியது. நிவிக்குட்டியின் முகத்தில் மகிழ்ச்சி பொங்கியது. கைகளை விரித்துக்கொண்டு குதித்தாள். “அப்பா தேங்க்ஸ்ப்பா” என்று கத்தினாள். பொம்மையைக் கவ்விய கைப்பிடி, மேலே உயர்ந்தபோது பொம்மையை நழுவவிட்டு, கம்பி மட்டும் மேலே போனது.
என்ன பொருத்தம்!
பொதுமக்கள் நலத்தில் எம்.எஸ். பட்டம் வாங்கி வெவ்வேறு இடங்களில் வேலை தேடியபோதுதான். பெரிய மருந்து நிறுவனம் ஒன்றில் சேர்ந்து மக்களில் இத்தனை பேருக்கு ஒவ்வொரு ஆண்டும் இன்னின்ன நோய்கள், அவற்றுக்கு என்னென்ன மருந்துகள் விற்கலாம் என்று கணக்குக்காட்டுவது அவன் வேலைத்திட்டம். அதற்கு எதிராக அரசாங்க அலுவலகத்தில் நுழைந்து மருந்துகளின் துணையில்லாமல் மக்களின் உடல்நலத்தை உயர்த்த அவள் முயற்சித்தது விரிசலுக்குக் காரணம். …. டாலரை எண்ணியெண்ணி செலவழிக்கும் சில்லறை மனிதர்களுடன் பழகும் அவளுக்கும், அஷ்வின் டயானா போல பணத்தை எப்படியெல்லாம் வாரியிறைக்கலாம் என்று யோசிக்கும் குடும்பங்களைக் குறிவைக்கும் ராகுலுக்கும் ஒத்துப்போகுமா?
இசைக்கலைஞன்
அங்கு கிடந்த தேவதாருகளின் பெரிய வேர்கள் அசைந்து தன்னை அச்சுறுத்துகின்றனவோ என்ற மாயம் அவனுக்குத் தோன்றியது. “ஜாக்கிரதை, நீர் தேவனை விட நீ திறமையானவன் என்று உன்னை நினைக்கிறாயா!” என்று அவை சொல்லவருவது போல இருந்தது.
சர்வதேச தமிழ்ச் சிறுகதைப் போட்டி
கதைகள் ஏதேனும் ஒரு சங்க இலக்கியப் பாடலின் செய்தியை மையக் கருத்தாகக் கொண்டு சமகால வாழ்வைச் சித்தரிக்கும் கதைகளாக இருக்க வேண்டும்.
லண்டனில் ஒரு தமிழ் புத்தகக் கண்காட்சி
12 மார்ச் 20 (வியாழன்)
மாலை 4 மணி முதல் – மாலை 9 மணி வரை
Kerala House Hall
(Near the manor park Library )
671,Romford Road
Manor Park
E12 5AD
(Near the train Stations- Manor Park, Eastham, Stratford )
மகரந்தம்
உலகின் ஜனத்தொகையில் 17% கொண்டுள்ள நம் நாட்டிலுள்ள புதுப்பிக்கக் கூடிய நீர் வளங்கள் உலகில் உள்ளதில் வெறும் 4 விழுக்காடு. இங்கே ஒரு புதிரான முரண்பாட்டையும் சொல்லியாகவேண்டும். உண்மையில் இந்தியா நீர்ப்பிரச்னை இருக்கக் கூடாத நீர்-மிகை நாடு. இங்கே தேவைக்கு மேல் மழை பெய்கிறது. மத்திய நீர் ஆணையத் தகவல்படி, நம் தேவை ஆண்டுக்கு 3000 பில்லியன் கன மீட்டர் மழை ; ஆனால் தேவையை விட 1000 பில்லியன் கன மீட்டர் அதிகமாக (அதாவது ஆண்டுக்கு 4000 பில்லியன் கன மீட்டர் ) மழை பெய்கிறது . ஆனால் இதில் 8% மட்டுமே நேரடி உபயோகத்துக்குக் கிடைக்கிறது. மீதி நிலத்தடிக்கும் கடலுக்கும் ஓடி விடுகிறது.