இசைபட வாழ்வோம்

This entry is part 1 of 2 in the series இசைபட வாழ்வோம்

“எம்.எஸ்.வி. காலத்தில் ஆங்காங்கே பெரிய குழுவிசை, அதாவது orchestra அதிகமாகப் பயன்படுத்தப்பட்டாலும், ராஜா காலத்தில், விஸ்வரூபம் எடுத்து, ஸ்டூடியோக்கள் நிரம்பி வழிந்தன. இன்று, வாத்திய இசை என்பது திரையிசையில் மிகவும் குறைந்து போய்விட்டது. ராஜாவும் ரஹ்மானும் மேற்கத்திய வாத்தியக் குழுக்களுடன் உறவு வைத்திருந்தாலும், இந்தியத் திரையிசையில் அதிக வாய்ப்புகள் இல்லை என்றாகிவிட்டது”

பொன்னின் பெருந்தக்க யாவுள !

பிட்டுக்கு மண் சுமந்த மதுரைச் சொக்கேசன் மீது, அரிமர்த்தன பாண்டியன் வீசிய பொற்பிரம்பும் அறிந்திருக்கலாம். பொற்பிரம்பின் வீச்சையும் வலியையும் அனுபவிக்க எமதாசான் புதுமைப்பித்தனின் ‘ அன்று இரவு’ வாசிக்க வேண்டும். வாசிக்க நேர்ந்தவர் நற்பேற்றாளர். புதுமைப்பித்தனிலும் சாதி தேடிய மார்க்சீய, அம்பேத்காரிய, பெரியாரிய ‘அறிஞர்’ கூட்டம் உண்டு. ‘அரிசிப் புழு தின்னாதவனும் இல்லை, அவுசாரி கையில் உண்ணாதவனும் இல்லை’ என்பது சொல்வடை.

ஒளி

பிரிசில்லாவின் உடலில் இருந்த இயல்பான சமன்பாடு ஃபிலோமினாவில் என்றுமே தோன்றியதில்லை. பாந்தமில்லாமல் பருமனாக இருந்தாள். சுழலும் பரிசலைப்போல் நடந்தாள். என்னேரமும் ஏதோ ஒரு பக்கத்திலிருந்து ஒரு பறவைக்கூட்டம் படபடபடவென்று வெடித்துவெளிவரும் என்பதுபோல் அவள் உடலில் ஒரு ததும்பல் இருந்துகொண்டே இருந்தது. உடலில் குடிகொண்ட அந்த சமனின்மை முகத்தில் இன்னும் கூர்மையாக வெளிப்பட்டது. களைகளைப்போல் பிசுறுபிசுறாக வடிவமற்ற புருவங்கள். சற்றே ஒற்றைக்கண் பார்வை. இடதுபக்க யானைக்காது.

விமர்சனத்தின் நிலைத்த தரிசனம்: ஹெரால்ட் ப்ளூம்

This entry is part 1 of 4 in the series ஹெரால்ட் ப்ளூம்

ஐந்தாறு வயது குழந்தைக்கு உரித்தான வகையில், ஹார்வர்டிலோ யேலிலோ கவிதை பேராசிரியராகப் போகிறேன் என்று பதிலளித்தேன். இதில் என்ன வேடிக்கை என்றால் மூன்று வருடங்களுக்கு முன் ஒரே சமயத்தில் ஹார்வர்டில் சார்ல்ஸ் எலியட் நார்ட்டன் கவிதை பேராசிரியராகவும் யேலில் மனித கலைகளுக்கான ஸ்டெர்லிங் பேராசிரியராகவும் பணியாற்றினேன் என்பதுதான். இந்தக் கண்ணோட்டத்தில் பார்த்தால் என் துறை பெருமளவில் முன்கூட்டியே நிர்ணயிக்கப்பட்ட ஒன்றாகவே இருந்திருக்கிறது.

செக் நாட்டு கவிதைகள்- ஹோலுப், ப்ரிலட்ஸ்கி

அருமை மூக்கு
கால் கட்டை விரலுக்கிடையில்
திணிக்கப்பட்டிருந்தால்
உன் காலையல்லவா
நீ முகரவேண்டும்!

2084: 1984+100

This entry is part 3 of 17 in the series 20xx கதைகள்

“மாயப் பணம் பெருகியது, மக்கள் தொகை வளர்ந்தது, எங்கு பார்த்தாலும் குப்பை. ஒருமுறை பயன்படுத்திவிட்டுத் தூக்கியெறிந்த பொருட்கள். சீர்ப்படுத்த முடியாதபடி பழுதுபட்ட அல்லது நல்ல நிலையில் இருந்தாலும் காலவதியான இயந்திரங்கள்.
இயற்கை சுருங்கியது.
உடல்நிலை, மகிழ்ச்சி, சமுதாய உணர்வு குறைந்தது.

காணாமல் போனவர்கள்

உரல் இடிக்க, முறுக்கு சுத்த, அதிரசம் சுட என்று பண்டிகைகளின் போது அம்மாக்களுக்கு உதவ வரும் பெண்கள் அத்தைகளாகவும், ஆச்சிகளாகவும் மாறி இருக்கின்றனர். எங்கள் வீட்டில் சுத்து வேலை பார்க்கும் அத்தையிடம் வீட்டையே ஒப்படைத்து விட்டு நாங்கள் நாள்கணக்கில் ஊருக்குச் சென்று இருக்கிறோம். அப்போது பெரிய விஷயமாகத் தெரியாதது, இப்போது வியப்பின் உச்சிக்கே கொண்டு செல்கிறது.

காதறுந்த கதை & சுயம்வரம்

பொய்த்த கனவுகளை
நினைத்து வருந்தும் ஒரு நேரம்
எல்லோர்க்கும் வரும்.
அப்போது மேலே பார்த்தால்
வெர்டிகோ வரும்.

குருதி வழி

ஆனால் காலம் என்னைச் சோதிக்கிறது. சுகப் பிரசவம் ஆக எத்தனை எத்தனை பிரயத்தனங்கள். யோகா முதல் மாலை நடை வரை விதவிதமான தயாரிப்புகள். இதோ இப்போது அனைத்தையும் தாண்டி இந்த அறுவை சிகிச்சை. எனக்கு நன்றாகத் தெரியும் கத்தி பட்ட உடம்பு மீண்டும் பழைய நிலைக்கு வருவது கடினம். தெரிந்தே இன்னொரு முறை இது நடக்க வேண்டாம். எதுவாயினும் மற்றொரு குழந்தை எனக்கு வேண்டாம். என் மனைவியே ஆசைப்பட்டாலும் சரி.

Poomani

வெக்கையும் ஈரமும்

ஊருக்குள் இருந்தவரை மனத்தில் நிறைந்திருக்கும் கசப்பு, ஆங்காரம், ஏமாற்றம், பழி,வெற்றி, தோல்வி போன்ற சமூகக் கட்டமைப்பிற்குள் உருவாக்கப்பட்டவை அனைத்தும் கரிசல் காட்டுக்குள் நுழைந்ததும் அழிந்துபோய், உயிர் வாழ்தலுக்கான அடிப்படைப் பிரச்சனைகளான பசியும் எதிரிகளிடமிருந்து உயிர் தப்புதலும் மட்டுமே அன்றாடங்களை நிரப்பி ஆதிமனிதனாக்கிவிடும் நிலையை அப்பட்டமாகச் சொல்லும் கதை.

வெயில் நிழல் மணல் இலை & ஒளியுடன் பேசுதல்

பஞ்சுமிட்டாயின்
நுண்ணிய இளஞ்சிவப்பில்
ததும்பி அலையும் ஒளி
இருளை அணைத்துக் கொண்டு
தன் கதையைச்
சொல்லத் தொடங்குகையில்

Jocelyn Bell Burnell describes how she discovered pulsars

குளக்கரை

கேம்ப்ரிட்ஜ் பல்கலையில் இயற்பியல் ஆய்வு மாணவியாக இருந்த ஜாஸலின் பெல் பர்னல் வான்வெளியில் காணப்படும் நட்சத்திரங்கள் போன்றவற்றை ‘வானொலி தொலைநோக்கி’யின் உதவி கொண்டு கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களின் இடையேயான பொறிச்சிதறல் வரிசைகளைக் கவனித்து வந்தார். அதற்கு அவர் பயன்படுத்தியது ஐந்துகி மீ நீளமுள்ள வரைபட பதிவேடுதான். இன்றைய நாட்களைப் போல் கணிணி பயன்பாட்டிலில்லை. ஐந்து கி.மீ நடந்து நடந்து பதிவிட வேண்டும்.ஒலியின் அதிர்வலைகள் சன்னமானவை; மேலும், ஒரு குறிப்பிட்ட திசையில் 1.337 வினாடிகள் மட்டுமே பதிவிடமுடியும்.