ஐந்து விதிகளும் அலிபாபா குகையைத் திறக்கும் மந்திரம் இல்லை. விற்பனையைப் பொறுத்தவரை அப்படி ஒரு மந்திரத்தைக் கண்டுபிடித்தவர் எவருமில்லை. பிறகு இந்த ஐந்து விதிகளும் என்ன செய்யும்? எதற்குப் பயன்படும்?
இந்த விதிகள் விற்பனையை ஒரு வழமைச் செயல் எனும் நிலையிலிருந்து சிந்தனைச் செயல்பாடாக மாற்ற முயல்கின்றன. திறன் சார்ந்த பணிகளைப் போலவே விற்பனையிலும் பணியின்போது திறன் மேலும் மேலும் மெருகேறி கூர்மை கொள்கிறது. ஒவ்வொரு பணியும் திறனின் வெவ்வேறு பரிமாணங்களைக் கோருகிறது.
Category: இதழ்-208
நம்ம கையில என்ன இருக்கு?
“ஒரு உதாரணம் சொன்றேன் உதய். உங்களது நாள்தோறும் போகிற பாதையில் ஏகமான நெரிசல்னு வைத்துக் கொள்வோம். வேஸ் வைத்திருக்கும் அனைவரையும் புதிய வழியில் அனுப்பினால், புதிய வழியில் நெரிசலாகிவிடும். சரி, பாதி வேஸ் பயன்பாட்டாளர்களை அங்கேயே இருக்கச் செய்து, மற்ற பாதி பயன்பாட்டாளர்களை புதிய வழியில் அனுப்பினால், இரு சாராரும் தங்களுடைய இலக்கை விரைவில் அடைய முடியும், இல்லையா? இதில் உங்களுக்குப் பழைய வழியா அல்லது புது வழியா என்று வேஸ் எப்படி முடிவு செய்கிறது? நீ மெச்சிய வேஸ் எப்படி உன்னை அழைத்துச் செல்லும்?”
புத்துருவாக்கமும் பிறழ் மைய நடத்தைகளும்!
மனச் சிதைவுக்கு ஆளான தாய்மார்களது குழந்தைகளிடம் ஸ்கிட்ஸோடைப்பல் இயல்பும் காணப்பட்டது அதே சமையம் மற்றவர்களைவிடவும் மிக உயர்ந்த கற்பனை வளமும், படைப்பாக்க சிந்தனையும் இணைந்திருந்தது.
இது போன்ற கற்பனை வளமும், படைப்பாக்கத் திறனும் கொண்டவர்களிடையே எதிர்காலத்தைப் புலப்படுத்தும் கனவுகள், ரெலிபதி, கடந்த காலம் பற்றிய உணர்வு என்பன குறித்த நம்பிக்கைகள் ஆழமாக இருப்பதையும் ஆய்வுகள் புலப்படுத்தின.
இது போன்ற விபரீத எண்ணப்போக்கினுக்கும், புத்துருவாக்கத் திறனுக்கும் இடையே காணப்படும் தொடர்பு, பல ஆய்வாளர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளன.
மனதை விட்டு அகல மறுக்கும் தாய் மொழி
ஒலியின் விதத்தை அடிப்படையாகக் கொண்ட மாண்டரின் போன்ற மொழிகளைப் பேசுபவர்களுக்கு மூளையின் இடதுபுறம் அதிகமாக வேலை செய்யுமாம். ஒலி வேறுபாட்டில்லாத ஆங்கிலம் போன்ற மொழிகளைப் பேசுபவர்களுக்கு வலது மூளை அதிகமாக வேலை செய்கிறதாம், ஏனெனில் இத்தகைய மொழிகளில் வார்த்தைகளின் வேறுபாடு உச்சரிப்பைப் பொறுத்துத் தீர்மானிக்கப்படுவதில்லை.
பேத்திகள் – பாகம் 2
காலினாவின் முதல் படம் திரையரங்குக்கு வந்த போது, நாங்கள் அதைப் பார்க்க எங்கள் குழந்தைகளுடனும், அவர்களின் பாட்டிகளோடும் போனோம். காலினா இரண்டு மாடி உயரத்துக்கு நீட்டப்பட்டுத் தெரிந்த போது இன்னமும் கூடுதலாகவே அற்புதமாகவிருந்தாள். மர்மமும், சதிகளும் நிறைந்த ஒரு வலையில் சிக்கிய கதாநாயகியாக நடித்திருந்தாள். சி ஐ ஏ அமைப்பால் பிணைக் கைதியாகப் பிடிக்கப்பட்டிருந்தவள், தப்பிக்கிறாள். புத்தியிலும், உடலிலும் தனக்கு உள்ள வேகத்தை அவள் சாதகமாகக் கொண்டாள். கலக்கமில்லாது தந்திரபுத்தியோடு செயல்பட்டு, பெரும் ஆபத்து நேரவிருக்கும் கணங்களிலும் அவள் வாட்டும் ஒற்றை வரி வசனங்களை வீசினாள். விமர்சகர்கள் ‘வஞ்ச வலை’ படத்தைச் சிறிதும் நம்பகமற்ற கதை என்று வறுத்தெடுத்தாலும், நாங்கள் அதைச் சட்டை செய்யவில்லை. எங்களுடைய முன்னாள் பள்ளிக் கூடத் தோழி, எங்களுடைய சிறந்த தோழி, ஒரு திரைப்படத்தில் நடித்திருக்கிறாள், நாங்கள் இங்கே வந்து அதைப் பார்க்காமல் இருப்போமா?
அழியாத கோலங்கள்
ஹார்லிக்ஸ் பாட்டிலுக்குள்ளிருந்த தவளை – சயின்ஸ் சார் ஜீரண உறுப்பு விளக்கத்திற்காக அறுத்துக் காண்பிக்க பிடித்து வரச் சொல்லி இவன் பிடித்துவந்ததுதான்.இன்னைக்கு சயின்ஸ் சார் லீவு – செல்லப்பாண்டியையும் கணக்கு சாரையும் மாறி மாறிப் பார்த்துக்கொண்டிருந்தது. திங்கட்கிழமை அப்பாவைக் கூட்டிக்கொண்டு வரவேண்டும். இல்லையேல் டி .சி கொடுக்கப்படும். ஆனால் ஸ்கூலுக்கே டி சி கொடுத்துவிட்டான் செல்லப்பாண்டி.
2013 – இன்றே, இப்பொழுதே
“முதல்ல ஆணும் பெண்ணுமா ரெண்டு இளவட்டங்கள். தங்கற இடம், சாப்பிடற இடம், தினப்படிக்கு மூணுவேளை முழுசாப்பாடு, இரண்டு காப்பியோட நொறுதீனி, எல்லாம் காட்டினாங்க. அந்த இடத்திலயே அவசரம்னா ஒரு வயசானவங்க டாக்டர். இருபத்திநாலு மணி நேரமும் இரண்டு நர்ஸ்கள். ஹார்ட் அட்டாக் மாதிரி எமர்ஜென்ஸிக்கு உடனே ஏபெக்ஸ் மெடிகல் காம்ப்ளெக்ஸுக்கு எடுத்துட்டுப்போக தயாரா ஒரு வேன்.”
எல்லா சௌகரியங்களையும் சேர்த்துப் பார்த்தபோது பணக்காரர்களுக்கான காப்பகம் போல சாமிக்குத் தோன்றியது.
ஹேங் ஓவர்
மயக்கமென்ன என்ற வார்த்தையை உச்சரிக்கும்போது சைக்கிள் வலது பக்கம் திரும்புவதற்குப் பதில் இடது பக்கமே திரும்பியது. மறுபடியும் மதுரைக்காரங்க வளவு இருந்த சந்து வழியாக அன்னமக்கா வீடு , கட்டிலில் படுத்திருந்த சுப்புத்தாத்தா தலையை மட்டும் தூக்கும் நாய், என்று சுழன்றது. அவன் சைக்கிளை வீட்டுக்கு முன்னால் நிறுத்தினான். போதையினால் தான் இப்படி ஒரே இடத்தைச் சுற்றிக் கொண்டிருக்கிறோமா.
நீலப்பறவை
என் இதயத்துள் இருக்கிறது
வெளியேற விரும்பும் நீலப்பறவையொன்று
ஆனால் அவனால் சமாளிக்க முடியாத அளவுக்கு
கடுமையானவனாக இருக்கிறேன்,
நான் சொல்கிறேன்,
உள்ளேயே கிட, நீ எனக்குக் குழப்பம்
விளைவிக்க விரும்புகிறாயா?
மேப்பிள் மரத்திற்கு ஆயிரமாயிரம் கைகள்
கழுத்தை சுற்றி
படமெடுத்து நிற்கும்
நாகத்துடன்
நீலநிறத்தில்
தியானிக்கும்
பரமேஸ்வரனின் படம்
படபடக்கும்
கிராமத்து சலூன் நாற்காலியின்
நினைவு
மலையின் நினைவுகளில்
எதையும் தேடாதிருக்க, தவம்
தேடி வந்த காற் தடங்கள் புதைந்திருக்கின்றன
கற்பாறைகளுக்குள்.
அவர்கள் விட்டுப் போன மூச்சு
விட்டுப் போகாமல் கலந்து வீசும் மென்காற்றில்
பேரமைதியின் சுகந்தம் மணக்கிறது.
காட்டு முல்லைகளும் கசக்கிய எலுமிச்சைப் புற்களும் மணக்கின்றன.
காண்பவை எல்லாம் கருத்துகளே
பெர்க்லியின் தத்துவமே முதலாவதும் முழுமையானதுமான கருத்து முதல்வாதப் பார்வை கொண்டது என்று கருதப்படுகிறது. இவர் புறத்தில் காண்பது எல்லாமே நம்மில் எழும் கருத்துக்களையே என்கிறார். இப்படிச் சொல்வதினால் ஐயவாதிகளால் நாம் காணும் காட்சியை ஐயத்திற்குள்ளாக்க முடியாது என்கிறார். காணும் காட்சி நம்மைத் தாண்டிய பொருளாக இருக்கும்போதே அதன் மீது ஐயம் எழுப்பமுடியும். காணும் காட்சி நம்முடைய கருத்துக்களாக இருக்கும்பட்சத்தில் அவற்றின் உண்மை நிலையைப் பற்றியும் அவற்றின் இருப்பைப் பற்றியும் ஐயப்படவே முடியாது என்கிறார். இருப்பதால் தான் காண்கிறோம். இருப்பு உடையது காண்பதற்குரியது – Esse est percipi என்பது பெர்க்லியின் பிரபல கூற்று.
மகரந்தம்
அகிலம் ஒரு பெட்டிக்குள் இல்லை பெட்டகத்தைத் தாண்டிச் சிந்தித்திருக்கிறார் ஜூலியன் பார்பர்.அவருடன் நடந்த உரையாடலை மேற்குறிப்பிட்ட சுட்டியில் விரிவாகப் பார்க்கலாம். காலம் முன்னோக்கித்தான் நகர்கிறது. குழந்தைகள்தான் பெரியவர்களாக ஆகிறார்கள். காலமும், இயக்கமும் மனித சிந்தனையில் இரசிக்கத்தக்க இடத்தைப் பிடித்துள்ளன. அறிவியல் சட்டங்களின் படி ஒரு நிகழ்வு காலத்தில் திரும்பிப்பார்க்கப்படுகையிலும் “மகரந்தம்”