விதி மாற்றம்தான் என்ன? ஆட்டத்தின் பொழுது ஒரு வீரருக்கு தலையிலோ கழுத்திலோ அடிபட்டால் அணியின் மருத்துவர் அந்த வீரரை சோதித்து அவருக்கு தாற்காலிக மூளை அதிர்ச்சி ஏற்பட்டு இருக்கிறதா எனச் சோதனை செய்ய வேண்டும். அப்படி அதிர்ச்சி உண்டாகி இருக்கும் பட்சத்தில், அவருக்குப் பதிலாக மாற்றாள் ஒருவரை அணியில் சேர்க்க மேட்ச் ரெபரியிடம் வேண்டலாம். அந்த மாற்றாள் அடிபட்ட வீரருக்கு ஒத்த திறமை உள்ளவராக இருக்க வேண்டும்.
Category: இதழ்-207
2024 /எத்தனைகோடி இன்பம் வைத்தாய்!
சரவணப்ரியா கணக்கிட்டபடி மருத்துமனையைச் சுற்றி வாழ்ந்தவர்களின் நிதிநிலமை வேகமாகத் தாழ்ந்துபோனது. தன்னிடம் சிகிச்சைக்கு வரும் இருபதில் இருந்து முப்பத்தைந்து வரையிலான இளைஞர்களை சந்திரா நன்றாக அறிவாள். கல்லூரிக்குப் போனது இல்லை. நிரந்தர வேலை என்று ஒன்றும் கிடையாது. நின்றுபோன தொழிற்சாலையில் இருந்து சாமான்களை பெயர்த்துவந்து விற்பது, பண்ணைகளில் களை பிடுங்குதல் அறுவடை காலத்தில் உதவி, சொந்தவீடு வைத்திருக்கும் ஒருசில அதிருஷ்டசாலிகள் வீடுமாற்றினால் சாமான்களைச் சுமப்பது, சுவர்களுக்கு வர்ணம் பூசுவது. இந்நிலையில், இன்னொரு உயிரைக் கொண்டுவர எப்படி ஆசை இருக்கும்?
தத்வமஸி: புத்தக அறிமுகம்
நடுவுநிலைமையாக இருக்கவேண்டுமானால் வேத காலம் என்பது கி மு 2000 – 2500 என்று கொள்ள வேண்டியிருக்கிறது. பாலகங்காதரத் திலகர் கி மு 4500 என்று கூறுகிறார். அதற்கு முன்பு என்று கூறும் ஆராய்ச்சியாளர்களும் பலர் உள்ளனர்.இந்தியாவில் உருவான அளவு சிந்தனையாளர்களான ஆச்சார்யர்களின் திருக்கூட்டப்பெருக்கம் வேறொரு நாட்டில் இருந்திருக்கவேண்டும் என்று கருதினால், அது கிரேக்கம் மட்டுமே. ஆனால் கிரேக்கத்தில் தேல்ஸ், ஹெராக்ளிட்டஸ் போன்றவர்கள் உண்டாவதற்கு எவ்வளவோ முன்னதாக இந்தியாவில் வாமதேவரும், யாக்ஞவல்கியரும் தோன்றி முடிந்திருந்தார்கள்.
காற்றிலடித்துப் போகப்பட்ட பெண்
தன் செயல்களையும், சிந்தனைகளையும் தன்னாலேயே நிரப்பி இருக்கிறாள்; உள்ளீடு உள்ளதோ, கனமானதோ, அர்த்தமுள்ளதோ எதுவும் அங்கே நுழைய இடமே இல்லை.
பேத்திகள்
ரஷ்யாவின் பதினான்காவது பணக்காரனாக ஆகும் வயதில்லை ஆலியெக் வோரனோவுக்கு. முப்பத்தி ஐந்து வயதுதான் ஆகி இருந்தது. நிக்கல் கூட்டமைப்பு ஏலத்தில் விற்பனைக்கு விடப்பட்ட போது, அவன் வெளிநாட்டு முதலீட்டாளர்கள், விலை போன அதிகாரிகள், குற்றக்கும்பல் தலைவர்கள் போன்றாரிடம் இருந்து திரட்டிய நிதியை வைத்து அதை வாங்கினான். அந்த ஏலம் நான்கரை வினாடிகள்தான் நீடித்தது. 250,100,000 டாலர்கள் கொடுத்து வாங்கினான். ஏலத்தைத் துவக்கப் பயன்படும் முதல் விலையை விட 100 டாலர்கள்தான் கூடுதலாகக் கொடுத்தான். வருடந்தோறும் பல பிலியன் டாலர்கள் வருமானமாகக் காட்டும் ஒரு நிறுவனம் எப்படி இருநூற்றைம்பது மிலியன் டாலர்களுக்கு விற்கப்பட முடியும்?
நதியெனும் மாலை
வானக்கருப்பையில் முட்டி மோதும்
உயிர்ப்பட்டத்தின் வால்
அசைந்து கொண்டே இருக்கிறது
நதியின் ஆழத்துக்குள்.
பாசிகளும் மீன் குஞ்சுகளும்
கருத்தரிக்கும் காலம்
வானத்தின் குரலிலிருந்து கசிகிறது
பருவநிலை மாற்றத்தின் கலங்க வைக்கும் உண்மை
இதுவரை நிகழ்ந்துள்ள உமிழ்வுகள் மட்டுமே உலகளாவிய தட்பவெப்பத்தை தொழில்மயமாவதற்கு முற்பட்ட நிலையோடு ஒப்பிட 1.5°C டிகிரி மேல் உயர்த்த வாய்ப்பில்லை. மனிதனால் ஏற்படும் புவிவெப்ப வாயுக்களின் உமிழ்வு உடனடியாக சூன்யத்தைத் தொட்டால், இதுவரை பதிவு செய்யப்பட்டுள்ள 1°C என்ற அளவுக்கு மேல் தொடர்ந்து வெப்பமடைவதுஎன்பது அடுத்த 20 முதல் 30 ஆண்டுகளில் 0.5°C என்ற அளவே உயரக்கூடும் என்று ஐபிசிசி அறிக்கை கூறுகிறது. அதாவது, நாம் உடனே செயல்பட்டால், நிலைமையைச் சரி செய்யும் தொழில்நுட்பச் சாத்தியம் உண்டு. இதைச் சாதிக்கும் வகையில் வலுவான உலகளாவிய கொள்கைத் திட்டம் எதுவும் இல்லை என்பதே குறை.
கவிதைகள்- இன்பா அ.
பதில் பாராட்டை எதிர்பார்த்தே
ஒவ்வொரு வாழ்த்தும்
கடந்து போகிறது
எல்லாவற்றையும் உதறிவிட்டால்
பிரியத்தின் ஈரம்
காய்ந்துவிடக் கூடும்
ஆடை – குழம்பிய குட்டையில் பிடிக்க நினைக்காத மீன்
இளைஞர்களால் ரசிக்கக்கூடிய ஒரு படம்; முற்போக்கான கருத்தை முன்வைக்க விழையும் ஒரு படம்; அதேநேரம் சமூக ஒழுங்கைச் சீர் குலைக்காத ஒரு படம்; சமுதாயத்திற்கு ஒரு கருத்தைச் சொல்லும் படம்; இன்றைய முதலாளித்துவ அரசியல் மனோபாவத்தை பகடி செய்யும் ஒரு படம்; பொதுவெளியில் ஆபாசம் என்று கருதுபவை பெரும்பாலும் நெருங்கிய வட்டாரங்களில் மிக இயல்பாக எடுத்துக்கொள்ளப் படுபவை. அவற்றை மூடி மறைக்காமல் பொதுவெளியில் போட்டு உடைக்கும் ஒரு படம்; விளிம்புநிலை மக்களை விலக்காத ஒரு படம் என்று ஒரே நேரத்தில் பல கம்பிகள் மேல் நடக்க முயற்சித்திருக்கிறார் கதாசிரியர்.
ஆட்டத்தின் ஐந்தாவது விதி
தன் வஞ்சத்தைத் தீர்த்துக் கொள்ளும் அற்ப மகிழ்வை நொடி நேரம் விற்பனையாளர் காட்டிவிட்டாலும் போதும், அசைக்கப்பட்ட வாடிக்கையாளர் மனம் அதைக் கவனித்து விடும். வாடிக்கையாளர் குறித்த நம் சிந்தனையில் புன்னகை சேர்ந்தால் நம்மால் வாடிக்கையாளரை உணர முடியும்.