சிறையிலிருந்து/சீர்திருத்தப் பள்ளியிலிருந்து வெளி வந்தவனை சமூகத்தில் அனுமதிக்கலாமா? அவன் திருந்திவிட்டான் என்பது என்ன நிச்சயம் என்ற ஆரம்பக்கேள்விகளிலிருந்து அவனது இந்த நிலைக்கு, இளம் வயதில், கொடூரனாக, கொலைகாரனாக மாறியதற்கு யார் முதற் காரணம் என்ற அடிப்படை கேள்விகளுக்கான முகாந்திரங்களும் இருக்கின்றன.
கடைசி அத்தியாயத்தின் ஆரம்பத்தில், க்ரேய்க், எடி ஜே டர்னர் அல்ல என்று அன்னாவின் நம்பகமான நபர் தெரிவித்தவுடன் அவள் அதிர்ந்து போகிறாள்.
Category: இதழ்-202
மரகத நிலா
எண்கள் 100,121,144,169,196 ஆகியோர் உடனடியாக நிர்வாகத் தலைமையகத்திலிருக்கும் காணொலி அறைக்கு வருமாறு கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள்.தலைமை நிர்வாக இயக்குனர் உங்கள் அனைவரிடமும் பேச விழைகிறார் என்று எசோடிகா என்ற மனிதப் பெண் ரோபோ அறிவித்த போது எண்களால் குறிப்பிடப்பட்ட மனிதர்களாகிய அனைவரும் கட்டுப்படுத்தப்பட்ட உணர்வுகளையும் மீறி கண்களால் புன்னகைத்துக் கொண்டார்கள்.அவர்கள் “மரகத நிலா”
குருடு
“சந்தேகி. சந்தேகித்தலே அறிதலெனும் தேரின் வடம். தேர் நகர்வது சக்கரத்தினால். நகர்த்தப்படுவது அதன் வடத்தினால் தான்” என்றார் கிழவர்.
அவன் உச்சிவானில் எழுந்த கதிரவனின் அலைகள் ஆற்று நீரில் நெளிவதைச் சற்று நேரம் பார்த்தான். பின்னர் கேட்டான். “நான் இப்போது உங்களைக் காண்கிறேன். நீங்கள் என்முன் அழிந்தழிந்து தோன்றுகிறீர்களா என்ன?’
“ஆம்” என்றார் குரு. “‘உனக்கு தெரியும் நான்’ என்பது, உன் புலன்களின் வழியே உன் அறிதலாகி நீ உருவகிப்பது. ‘உனக்கு தெரியும் நானும்’, ‘உலகிற்குத் தெரியும் நானும்’ வேறுவேறானவை. உன் அறிதலை வைத்து இவ்வுலகிற்கும் அதுவே ‘நான்’ என என்னைப் பொதுமைப்படுத்துவது உன் வறட்டு ஆணவம் மட்டுமே” என்றார் குரு.
வரலாறு குறித்து ஹேகல்
ஹேகல் இவ்வளர்ச்சியை மேலும் பல விவரங்களுடன் நான்கு வகையாக வகுத்துக்காட்டுகிறார். கிழக்கத்திய உலகில் அரசனே விடுதலையுடையவன் என்று அறிந்திருந்தனர். விடுதலையின் ஆன்மா ஒரே ஒரு மனிதனில் தோற்றம் பெற்றிருப்பதால், அம்மனிதனின் விடுதலையானது பிறப்பெனும் ஒர் எதர்ச்சை நிகழ்வால் நிர்ணயிக்கபட்டதால், அவ்வகை விடுதலையானது முற்றிலும் தற்செயலானது. மேலும், மக்கள் தங்களுக்குள் இருக்கும் அகவய விடுதலையை அறியாதிருந்தனர். அதனால் ஹேகல் இதை ஆன்மாவின் வளர்ச்சியின் பிள்ளைபருவம் எனக் கருதினார்.
பெரும் மௌனம்
அலெக்ஸ் என்ற ஆஃப்ரிக்க சாம்பல் நிறக் கிளி இருந்தது. அந்தக் கிளி அதன் அறிவுத் திறனால் புகழ் பெற்றதாக இருந்தது. அதாவது, மனிதர்களிடையே புகழ்.
ஐரீன் பெப்பர்பெர்க் என்ற மனித ஆய்வாளர் அலைக்ஸை முப்பதாண்டுகள் கவனித்து ஆராய்ந்தவர். அவர் அலெக்ஸுக்கு வடிவங்களுக்கும், நிறங்களுக்கும் உள்ள சொற்கள் தெரிந்திருந்தன என்பதோடு, அவனுக்கு வடிவுகள், நிறங்கள் ஆகியவற்றின் கருத்துருக்களும் புரிந்திருந்தன என்றும் கண்டறிந்திருந்தார்.
ஒரு பறவையால் அரூபமான கருதுகோள்களைப் புரிந்து கொள்ள முடியும் என்பது பற்றிப் பல அறிவியலாளர்கள் ஐயம் கொண்டிருந்தனர். மனிதர்களுக்குத் தாம் ஏதோ தனிச் சிறப்புள்ள உயிரினம் என்று நினைக்கப் பிடிக்கும். ஆனால் இறுதியில் பெப்பர்பர்க் அவர்களை அலெக்ஸ் வெறுமனே சொற்களைத் திருப்பிச் சொல்லவில்லை, அவனுக்குத் தான் என்ன சொல்கிறோம் என்பது புரிந்திருந்தது என்று ஏற்க வைத்தார்.
அன்னியன்
எல்லாருடைய கண்களும் அந்த குழந்தையின் மேல்தான். அழகும்ஆனந்தமும் வடிவெடுத்ததுபோல் இருக்கிறது அந்த குழந்தை. அந்த கொழு கொழு கன்னத்தை, கைகளை தொடையை முத்தமிட வேண்டும் போல் இருக்கிறது. பெரிய மூக்கும் , தலையில் காந்தி குல்லாவுமாக இருக்கிற மராட்டி கிழவர் மேல் உட்கார்ந்து கொண்டு அவர் பெரிய மூக்கை கிள்ளுகிறது, அதை தடுத்தால் குல்லாயை உருவுகிறது. பக்கத்தில் உட்கார்ந்திருக்கிற மராட்டி கட்டு புடவை கட்டிக்கொண்டு கத்திரிப்பூ நிறத்தில் பெரிய குங்குமப்பொட்டு வைத்துக்கொண்டிருக்கிற கிழவிக்கு ஒரே பெருமை. அது அவள் பார்வையிலேயே தெரிகிறது. கி ழவரிடம் இருந்து குழந்தை கிழவியிடம் தாவி அவள் குங்குமப் பொட்டை நோண்டுகிறது. கிழவி சிரித்துகொண்டே “விஷமக்காரன்! எப்படி படுத்துகிறான் பாருங்கள்”
ஆட்டத்தின் ஐந்து விதிகள் – மூன்றாம் விதி
பத்து நிமிடங்களுக்கு நண்பனின் அப்பா பயன்படுத்திய கடுஞ்சொற்கள்தாம் விஷயத்தை விபரீதமாக்கின – “உன் முகத்தில் ஏமாளி என எழுதி ஒட்டியிருக்கிறது , உனக்கு பணத்தின் அருமை தெரியவில்லை, நீ சம்பாதித்திருந்தால் தெரியும் அதன் அருமை, ஒரு சட்டை வாங்கத் துப்பில்லாத நீ எப்படி வேலைக்குப்போய் குடும்பத்தைக் காப்பாற்றப் போகிறாய்? கல்லூரிக்குப் போகப்போகிறாயா , கூத்தாடப் போகிறாயா ? “ – இன்னும் எழுத முடியாத அளவுக்கு வார்த்தைகள்.
காலம் தோறும் முரலும் குரல்கள்
பல யுகங்களாக ஆண்களின் கட்டளைகளுக்கு உட்பட்டு உலகின் அத்தனைச் செயல்களையும் செய்யும் பெயரில்லாத பெண்குலம் ஒரு சிறு நன்றிக்குக்கூட உரித்தாகாமல் போவது பெரும் துயர்.‘மறந்து விடு’ என்பது அவளுக்குச் சொல்லப்பட்டாலும், ‘நினைவில் இருத்து‘ என அவள் அதைப் புரிந்து கொள்கிறாள். கூடடையப் பறவைகள் சிறகெழுப்பி பறந்து உல்லாசமாக வருகையில் அவை வலையில் அகப்பட்டு காற்றில் ஊசலாடும் கால்களில், கழுத்தில் இறுகும் முடிச்சில் பெயரற்று, புகழற்று, இருந்த நினப்பற்றும் போவதைப் போல் உலகில் பெண்களின் நிலையிருக்கிறது என்பது அந்த மூவரின் பார்வையின் மையச் சரடு.
பொது யுகம் 2050-ல் நாமறிந்த உலகு அழியுமா? –
இன்று நாம் காணும் உலகம், 2050க்குள் அழிவதற்கான பாதையை 49% தேர்ந்தெடுத்துள்ளது; நான் உயிரோடு இருப்பது துர்லபம், ஆனால் என் குழந்தைகள்?இது நடைமுறை சார்ந்த என் ஈடுபாடு. சிக்கலான, கலவையான சமூகத்திற்க்குத் தேவையான உறு பொருட்களை, அதன் தக்க வைக்கும் விதங்களைக் கருதாமல் நாம் இன்று நுகர்ந்து கொண்டிருக்கிறோம். கடல் சார் உயிரினங்களை நாம் அதிகமாக நுகர்ந்தும், அழித்தும், அவ்வளங்களைத் தக்க வைத்துக்கொள்ளும் படிப்பினையற்றும் இருக்கிறோம். வளங்கள் குறைகின்றன, பண்ணைகளும், காடுகளும் குறைகின்றன. மண் வளம், நீர்வளம், விளை நிலம் ஆகியவற்றைத் திறமையாகப் பயன்படுத்தி பாதுகாக்கத் தவறிவிட்டோம். 2050க்குள் ஒரு நல்ல வழியினை நாம் கண்டறியாமல் இப்படியே தொடர்ந்தால் அழிவினை நோக்கி சிலப் பத்தாண்டுகளில் சென்றுவிடுவோம்.