தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள்

வாசக அன்பர்களுக்குப் புத்தாண்டு வாழ்த்துகள். சுபகிருது எனப்படும் இந்த ஆண்டில் இந்திய மக்களும், தமிழகத்து மக்களும் கடந்த ஈராண்டுகளாக அனுபவித்த பெரும் தொல்லைகள் முற்றிலும் நீங்கி, சமூகத்தின் பொதுநலம், அன்றாட வாழ்க்கை, மேலும் பண்பாட்டு இயக்கங்களில் சிறந்த அனுபவங்களையும், மேம்பட்ட வளங்களையும் பெறவேண்டும் என்பது எங்கள் விருப்பம்.

2022

சொல்வனம் வாசகர்களுக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துகள். இந்த வருடமாவது தொற்று நோய்கள் முற்றிலுமாக அகன்று இயல்பு வாழ்க்கை திரும்பும் என்று எதிர்பார்க்கிறோம். இயற்கையின் சீற்றங்களும் தணிந்து உலகெங்கும் மனிதர் நன்னிலைக்குத் திரும்பினால் அது உபரி நன்மை.  *** ஓரிரு தினங்கள் முன்பு எழுத்தாளர் அம்பை அவர்களுக்கு சாஹித்ய அகதமியின் “2022”

சொல்வனம் வழங்கும்… கிண்டில் புத்தக வெளியீடு

சொல்வனம் வெளியீடாக “வீடும் வெளியும்” நூல் கிடைக்கிறது. இது அமேசான் கிண்டில் மூலமாகக் கிடைக்கும் சொல்வனம்.காம்-இன் மூன்றாவது புத்தகம். முந்தைய இரண்டும் சிறப்பிதழ்கள் என்றால், இந்தப் பதிப்பு எங்கள் ஆசிரியர் குழுவில் ஒருவரான ச. அனுகிரஹாவின் படைப்புத் தொகுப்பு.

அன்புள்ள வாசகர்களுக்கு… சிறப்பிதழ் அறிவிப்பு

உங்கள் வாசிப்பில், கவனிப்பில், சிந்தனையில் எந்த எழுத்தாளர்களை நீங்கள் பாராட்டிப் படிக்கிறீர்கள், அவர்களால் உங்களுக்குக் கிட்டிய மேன்மைகள் என்னவென்று நினைக்கிறீர்கள் என்று யோசித்து, ஒரு சுருக்க மின்னஞ்சல் அனுப்புங்கள்.

இந்தச் சிறப்பிதழ் புதுப் புனலாக வந்த எழுத்தாளர்கள் பற்றியது என்பதால் சமீபத்தில் எழுத வந்துள்ளவர்களைப் பற்றி இந்த யோசனைகள் இருக்க வேண்டும்.

2000த்துக்கு அப்புறம் எழுத வந்தவர்களைப் பற்றி இருக்கட்டும் என்று தற்காலிகமாக முடிவு செய்திருக்கிறோம்.

பையப் பையப் பயின்ற நடை

சொல்வனம் பத்திரிகையின் 250 ஆம் இதழைப் பற்றிச் சில எண்ணங்கள்.   சில பத்திரிகைகள்- மேலும் இதர பண்பாட்டு வெளிப்பாடுகள்- எடுத்த எடுப்பிலேயே உசைன் போல்ட் தடகளத்தைக் காற்று வேகத்தில் கடப்பது போல, அசாதாரண லாகவத்துடன், துரிதத்துடன் செயல்படத் துவங்கி விடுகின்றன.  சொல்வனம் துவக்கத்திலிருந்து மதலை போல நடை பழகத் “பையப் பையப் பயின்ற நடை”

பிரான்சில் தமிழ் நவீன இலக்கிய விழா அறிவிப்பு

நவீன தமிழிலக்கியம் பற்றிய இன்றைய நிலை, புதுமைபித்தன், ஜெகயகாந்தன், சு.ரா, பிரபஞ்சன், சா. கந்தசாமி, தி. ஜானகிராமன், கி.ரா , அம்பை, பாமா பற்றிய கட்டுரைகள் வண்ண நிலவன், பிரபஞ்சன், எஸ். ராமகிருஷ்ணன் கி.ரா, சோ.தர்மன், மாலன் ஆகியோரின் சிறுகதை மொழிபெயர்ப்புகள்

சிறப்பிதழ் வரிசை: இந்திய மொழிகள்

இந்த இதழை வங்கமொழிச் சிறப்பிதழின் இரண்டாம் பாகமாகக் கொணர்வதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம்….இந்த இதழில் பல சிறுகதைகளைக் கொடுக்கிறோம். பனபூல், ராம்நாத் ராய், சமரேஷ் மஜும்தார், ஸீர்ஷோ பந்த்யோபாத்யாய், மஹாஸ்வேதா தேவி, ஆஷாபூர்ணா தேவி, சுபிமல் மிஸ்ரா, மோதி நந்தி, ரபீந்த்ரநாத் தாகுர்ஆகியோரின் கதைகள் உள்ளன. பிபூதி பூஷண் பந்த்யோபாத்யாயின் நாவல் ஒன்றின் அடுத்த பாகம் மொழிபெயர்க்கப்பட்டுக் கிட்டுகிறது. ஜாய் கோஸ்வாமி, ஸாங்க்யா கோஷ், புத்ததேவ் போஸ், சக்தி சட்டோபாத்யாயா ஆகியோரின் கவிதைகள் உள்ளன. தவிர நாடக உலகில் உத்வேகத்தைக் கொணர்ந்த பாதல் சர்க்கார் பற்றிய ஓர் அனுபவக் கட்டுரையையும், க்ளைவ் பெல் என்ற ஒரு குழல் இசைக்கலைஞரின் பேட்டியையும் கொடுத்திருக்கிறோம்.

வங்கச் சிறப்பிதழ்: அறிமுகம்

கலைச் செல்வங்கள் எங்கிருப்பினும் அவற்றைக் கொணர்ந்திங்கு சேர்ப்பது என்ற பணியில் சொல்வனம் எடுத்திருக்கும் முக்கிய அடுத்த படி இந்த வங்கமொழிச் சிறப்பிதழ். ….அம்மொழியின் உலகத்தரம் வாய்ந்த இலக்கியம், இசை, கலை சார்ந்த படைப்புகள் இத்தேர்வின் பொருத்தத்தை உறுதிப்படுத்தி உள்ளன.

சிற்றடி: ஏன் இந்த முயற்சி?

பல மொழிகளிலிருந்து நேரடியாகத் தமிழாக்கம் செய்யப்பட்ட புத்தகங்களைப் பெற்று வாசித்துப் பார்த்தபோது அவற்றின் சுகந்தம், நேரடித் தாக்கம், ஸ்பரிசானுபவமே போன்ற வாசிப்பனுபவம், எனக்கு இந்திய மொழிகளிலிருந்து இங்கிலிஷுக்குச் சென்ற புத்தகங்களிலும் கிட்டவில்லை, அதேபோல இந்திய மொழிகளிலிருந்து இங்கிலிஷுக்குப் போய் அங்கிருந்து தமிழாக்கம் பெற்ற புத்தகங்களிலும் கிட்டவில்லை.

அறிவிப்பு: வங்க மொழிச் சிறப்பிதழ்

சொல்வனம் இணையப் பத்திரிகையின் அடுத்த இதழ் (240) வங்க மொழி இலக்கியம், கலை ஆகியவற்றைச் சிறப்பிக்கும் இதழாக அமையும்.

வங்கச் சிறப்பிதழ் அறிவிப்பு

சொல்வனம் தன் 12 ஆண்டுக் கால இயக்கத்தில் பல மொழிபெயர்ப்புகளைக் கொடுத்திருக்கிறது. ஒரு பருந்துப் பார்வையில் கவனித்தால், அவற்றில் பெருமளவும் இங்கிலிஷிலிருந்து பெறப்பட்டவையாகவே இருப்பது தெரியும். இந்தியாவைப் போன்ற முன்னாள் காலனிய நாடுகளின் ஒரு பேரவதி என்ன என்றால், அவற்றின் நெடுங்கால காலனியாதிக்கத்தின் சுவடுகள் வரலாற்றில் துவங்கி சமூகத்தின் “வங்கச் சிறப்பிதழ் அறிவிப்பு”

225: ரொபெர்த்தோ பொலான்யோ சிறப்பிதழ் குறித்து

நம்பி கிருஷ்ணனையே இந்த இதழுக்குச் சிறப்புப் பதிப்பாசிரியராக இருக்கச் சொல்லிக் கேட்டுக் கொண்டிருந்தோம். இந்த இதழில் பிரசுரிக்கப்படும் 30+ கட்டுரை, கதைகள் அனைத்தையும் அவர் கவனித்திருக்கிறார். தவிர அவரே பல கட்டுரைகளை எழுதியுள்ளார்.

Especially on the Bolano Special…

The special or the idea to revive them was an outcome of one of my rants as to how Solvanam lacked the passion of the little magazines of yore. Who better to exemplify that passion than the man whose characters go through extraordinary lengths in search of things literary? I know that we were living in times, where the notion of Little Magazine is passé, that we now have time to do literature only in passing, en passant if you will, an afterthought after work, in between the incessant frog hopping on social media and the perpetual binge watching of very well-made TV shows.

அறிவிப்பு: ரொபெர்டோ பொலான்யோ சிறப்பிதழ்

சொல்வனம் இதழ்-225, “ரொபெர்டோ பொலான்யோ” சிறப்பிதழாக வரவிருக்கிறது. பொலான்யோ-வின் படைப்புகளைப் பற்றிய கட்டுரைகளை வரவேற்கிறோம். ஆர்வமுள்ள வாசகர்கள், தங்கள் கட்டுரைகளை ஜூன் 10 தேதிக்குள் அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம்.

சர்வதேச தமிழ்ச் சிறுகதைப் போட்டி

கதைகள் ஏதேனும் ஒரு சங்க இலக்கியப் பாடலின் செய்தியை மையக் கருத்தாகக் கொண்டு சமகால வாழ்வைச் சித்தரிக்கும் கதைகளாக இருக்க வேண்டும்.

லண்டனில் ஒரு தமிழ் புத்தகக் கண்காட்சி

12 மார்ச் 20 (வியாழன்)
மாலை 4 மணி முதல் – மாலை 9 மணி வரை

Kerala House Hall
(Near the manor park Library )
671,Romford Road
Manor Park
E12 5AD
(Near the train Stations- Manor Park, Eastham, Stratford )

ரொன்றன்ரோப் பல்கலைக்கழகத் தமிழ் இருக்கை

ரொறன்ரோ பல்கலைக்கழக தமிழ் இருக்கை தமிழ்மொழி ஆய்வுக்கு இடமளிக்கும். இரண்டு ஆண்டுகளுக்குள் மூன்று மில்லியன் டொலர் பணத்தை சேகரித்து பல்கலைக்கழகத்துக்கு கொடுக்க வேண்டும். இதுவரை தமிழர்களால் $700,000 நிதி சேர்க்கப்பட்டுவிட்டது. இப்பொழுது $2.3 மில்லியன் பணத் தொகையை இரண்டே ஆண்டுகளில் சேர்க்க வேண்டிய கடப்பாடு உள்ளது.

இதழ் 201 பதிப்புக் குறிப்பு

ஜூன் இறுதியில் வரவிருக்கும் சொல்வனத்தின் 204-ஆம் இதழை, நினைவுத்திறனின் போதாமைகளையும் மானுட வரலாற்றில் இடையறாது தொடரும் அழிவைப் பற்றியும் அண்மைக் காலத்தில் வேறெந்த எழுத்தாளரையும் விட நுணுக்கமாக எழுதிய சேபால்டை மையப்படுத்தும் சிறப்பிதழாகக் கொண்டுவரலாம் என்று திட்டமிட்டிருக்கிறோம்.

அறிவிப்புகள்

சொல்வனம் இதழில் 2012 ஆம் ஆண்டு முதல் பல கட்டுரைகளும், சிறுகதைகளும் நரோபா எனும் புனைப்பெயரில் எழுதி வரும் எழுத்தாளர் சுனில் கிருஷ்ணனுக்கு 2018 ஆம் ஆண்டுக்கான யுவ புரஸ்கார் விருது கிடைத்துள்ள செய்தியைப் பகிர்ந்துகொள்வதில் சொல்வனம் பெரு மகிழ்ச்சி கொள்கிறது. 

தமிழ் சிறுகதைப் போட்டி

தமிழ் மொழி வல்லுனர்கள் குழுவால் வெற்றியாளர் தேர்ந்தெடுக்கப்பட்டு, தமிழ் ஆக்ஸ்போர்டு வாழும் அகராதியின் இணையத்தளத்தில் 31/7/2018 அன்று வெற்றியாளரின் பெயர் அறிவிக்கப்படும். வெற்றிபெற்ற கதை தமிழ் ஆக்ஸ்போர்டு வாழும் அகராதியின் இணையத்தளத்தில் வெளியிடப்படும். மேலும் வெற்றியாளருக்கு ஒரு சான்றிதழ் மற்றும் ஒரு சிறிய வியப்பூட்டும் பரிசு வழங்கப்படும்.

அறிவியல் புனைவுச் சிறப்பிதழ் பற்றி…

அறிவியல் புனைவிலக்கியம், சில நாடுகளிலிருந்துதான் பெருமளவும் வெளிப்படுகிறது. அவை அனேகமாக யூரோப்பிய, மேலை நாடுகள் என்பது தெளிவு. சமீபத்துப் பத்தாண்டுகளில் சீனா, இந்தியா மற்றும் சில ஆஃப்ரிக்க நாடுகள் இந்த வகை இலக்கிய முயற்சியில் இறங்கி இருக்கின்றன. இந்த விஷயங்களில் அகழ்வாராய்ச்சி செய்பவர்கள் எங்கும் உண்டு. அந்தந்த நாட்டு அறிவியல் புனைவிலக்கியம் பற்றி ஆய்வு செய்பவர்கள் அனேகமாக 18 ஆம் நூற்றாண்டிலிருந்தே இத்தகைய முயற்சிகள் துவங்கி விடுவதைச் சொல்கிறார்கள். பற்பல யூரோப்பிய நாடுகளிலும், சீனாவிலும் இப்படி வேர் மூலம் காட்டும் ஆய்வுகள் உண்டு.

பதிப்பாசிரியர் குறிப்பு

சொல்வனம் தளம் கடந்த சில வாரங்களாக சரிவரச் செயல்படவில்லை என்பதை நண்பர்கள் சுட்டிக் காட்டியிருந்தனர். அதே போல், இதழ் சீரான இடைவெளியில் பதிப்பிக்கப்படுவதில்லை என்ற குறையையும் தெரிவித்திருந்தனர். இவற்றைச் சரி செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தளத்தில் உள்ள பக்கங்கள் திறப்பதில்லை என்ற மிக முக்கியமான தொழில் நுட்ப “பதிப்பாசிரியர் குறிப்பு”

சென்னை தினத்தை முன்னிட்டு கிழக்கு பதிப்பகம் நடத்தும் சிறுகதைப் போட்டி

சென்னை தினம் (மெட்ராஸ் டே) நிகழ்வை முன்னிட்டு ஒரு சிறுகதைப் போட்டியை நடத்த கிழக்கு பதிப்பகம் முடிவெடுத்துள்ளது. அனைவரும் இந்த சிறுகதைப் போட்டியில் பங்குகொண்டு சிறப்பிக்க வேண்டுகிறோம். கதைகள் சென்னையைப் பின்னணியாகக் கொண்டதாக இருக்கவேண்டும். சென்னையில் நடக்கும் கதையாகவோ அல்லது சென்னையைப் பற்றிய கதையாகவோ அல்லது சென்னையைக் களமாகக் கொண்டு நிகழும் கதையாகவோ இருக்கலாம். சென்னையை மையமாகக் கொள்ளாத கதைகள் நிராகரிக்கப்படும். போட்டிக்கு தங்கள் படைப்புகள் வந்து சேரவேண்டிய கடைசி நாள் ஜூலை 20, 2017.

சொல்வனம் வழங்கும்..

பன்னிரண்டு பகுதிகளாய் சொல்வனத்தில் வெளிவந்த அந்தத்தொடரில் தத்துவம், கணிதம், கணினியியல், இயற்பியல், பெண்ணியம், வணிகவியல் முதலிய பல துறைகளில் இருந்துவரும் பிரச்சினைகளை அலசவும், கருத்துக்களை விளக்கவும் உலகெங்கிலும் உருவாக்கப்பட்ட சிந்தனைச்சோதனைகளை தொகுத்து வழங்கி இருந்தேன். கடந்த ஒரு வருடமாக அந்தத் தொகுப்பை இன்னும் நிறைய பாலிஷ் செய்து, புதிதாக ஜனநாயகம், மருத்துவம் பற்றிய அத்தியாயங்களையும், ஆழ்ந்த அறிதல் (Deep Learning) முதலிய விவாதங்களையும் சேர்த்து ஒரு புதிய மின் புத்தகமாக “சிந்தனைச்சோதனைகள் – பணச்செலவில்லா பிரபஞ்சச்சுற்றுலா” என்ற பெயரில் வெளிக்கொணர்ந்து இருக்கிறோம். சொல்வனம் ஆசிரியர் குழுவின் உதவி/ஆசியுடன் .வெளிவரும் இப்புத்தகம், ஒரு சொல்வனம் பதிப்பாக வெளியிடப்பட்டிருக்கிறது. புத்தகத்தை கீழே கொடுக்கப்பட்டிருக்கும் வலை இணைப்புகளின் மூலமாகவோ அல்லது அருகிலிருக்கும் QR குறியீட்டை உபயோகித்தோ நீங்கள் வாங்கலாம்.

அன்புள்ள வாசகர்களுக்கு…

சொல்வனம் இணைய இதழில் எழுத்தாளர் திரு. அ. முத்துலிங்கம் அவர்களைச் சிறப்பிக்கும் வகையில் சில கட்டுரைகள் வரவிருக்கின்றன. சொல்வனம் அ. முத்துலிங்கம் சிறப்பிதழ் இம்மாத இறுதி அல்லது அடுத்த மாத துவக்கத்தில் வரலாம். அ. முத்துலிங்கம் அவர்களைப் பற்றியும், அவரது எழுத்து பற்றியும் நீங்கள் ஒரு கட்டுரை எழுத முடியுமா?

பதாகை சிறப்பிதழ்

ஆட்டோவுக்கு அருகில் பெரிய அத்தை நின்றிருந்தார். ஒரு கோயில் தூண்போன்ற உறுதியான உருவம். அவரிடம் மாயாண்டி என்னமோ பதில் சொல்லிக்கொண்டிருந்தான். ஆண்டாள் தம் கண்களிலிருந்து கண்ணீர் சரிந்து விழுந்துவிடாதபடி உதடுகளை இறுக்கமாக கடித்துக்கொண்டு பக்கவாட்டில் இருந்த முருங்கைமரத்தைப் பார்த்தபடி நின்றிருந்தார். இரண்டு குருவிகள் நிலைகொள்ளாமல் கிளைகிளையாகத் தாவியபடி இருந்தன. ஆட்டோவுக்கு அருகில் அவர்கள் சென்று நின்றதை பெரிய அத்தை கவனிக்கவே இல்லை. அருவருப்பான பொருளுக்கு அருகில் நிற்பதுபோல முகத்தைச் சுளித்தபடி மாயாண்டியை வாய்க்கு வந்தபடி திட்டினார் அவர்.

அறிவிப்புகள்

ப்ரதிலிபியும் அகம் மின்னிதழும் இணைந்து கட்டுரைப்போட்டி ஒன்றினை நடத்தவிருக்கிறோம். தலைப்பு : “இன்றைய தமிழர்களின் வாழ்வில் தாய்மொழிக்குக் கொடுக்கப்படும் முக்கியத்துவம் என்ன? அதனை அதிகரிக்க என்னென்ன வழிமுறைகளைக் கையாளலாம்?” பரிசுத்தொகை : முதல் பரிசு – 15,000, இரண்டாம் பரிசு – 10,000, மூன்றாம் பரிசு – 5,000. கட்டுரைகளை அனுப்பவேண்டிய கடைசி நாள் – 15/01/2016.

சொல்வனம் – விருட்சம் சேர்ந்து நடத்தும் கூட்டம்

கலந்துரையாடல் பங்கேற்பவர்கள் : ஜெயந்தி சங்கர், சத்தியானந்தன் இவர்களுடன் சொல்வனம் சார்பில் ரவி சங்கரும், நவீன விருட்சம் சார்பில் அழகியசிங்கரும் இடம் : பனுவல் விற்பனை நிலையம் 112 திருவள்ளுவர் சாலை திருவான்மியூர், சென்னை 600 041 தேதி 02.01.2016 (சனிக்கிழமை) நேரம் துவக்கம்: மாலை 5.30 மணி “சொல்வனம் – விருட்சம் சேர்ந்து நடத்தும் கூட்டம்”

அறிவிப்புகள்

“விமுக்தா” என்ற கதைத் தொகுப்பிற்காக திருமதி ஒல்கா சாகித்ய அக்காதமி விருதை பெறுகிறார். இந்தக் கதைத் தொகுப்பில் இருக்கும் கதைகள் ராமாயண இதிகாசத்தின் பின்னணியில் சீதை சூத்ரதாரியாக சொல்லப்பட்டவை.
 
திசைகள் தளம் மின்னூல்களைப் பதிப்பிக்கிறது. சொல் சார்ந்தவை (text based) , ஓவியங்கள், புகைப்படங்கள் கொண்டு மெருக்கூட்டப்பட்டவை (image based), காணொளிக் காட்சிகள் கொண்டவை (video books) என்று எல்லா வகையான நூல்களும் பதிப்பிக்கப்படும்.

இலவச மின்னூல் வெளியீடு- அறிவிப்பு

அணுகுண்டு என்றவுடன், நமது ஊடகங்கள் எப்படியோ ஐன்ஸ்டீனையும் இத்துடன் இணைத்து கதை கட்டி வெற்றி கண்டுள்ளது. ஒருவர் என்னிடம், “ஐன்ஸ்டீன் மிகவும் மோசமானவர். இவர்தான் அணுகுண்டைக் கண்டுபிடித்து விஞ்ஞானத்தையே குட்டிசுவராக்கினார்” என்று சொன்னவரை, ஐன்ஸ்டீனைப் பற்றிச் சரியாகப் புரிய வைக்க, போதும் என்றாகிவிட்டது. இத்தனைக்கும் அவர் கணக்கர். விஞ்ஞானம் என்றால் ஓட்டம் பிடிப்பவர். இப்படி குற்றச்சாட்டை அடுக்காவிட்டாலும் அணு விஞ்ஞானம் பற்றிய பொதுப் புரிதல் மோசமாகவே இன்றும் உள்ளது

உலக இலக்கியத்தின் 2015 ஆம் வருடத்து நோபெல் பரிசு பற்றி

இவர் அளிப்பது உண்மையிலேயே ஒரு உணர்ச்சி ஊறியெழும் உலகம், எனவே இவர் தன் பல புத்தகங்களில் அளிக்கும் வரலாற்று நிகழ்வுகள், உதாரணமாக செர்னோபில் பேரழிவு, ஆஃப்கனிஸ்தானில் சோவியத் யூனியனின் போர், ஆகியன எல்லாம் சோவியத் மற்றும் சோவியத்துக்குப் பின் வந்த காலத்துத் தனி நபர்களைத்தான் ஆழ நோக்குகின்றன. இவர் சிறு குழந்தைகளோடும், பெண்களோடும், ஆண்களோடும் ஆயிரக்கணக்கில் பேட்டிகளை எடுத்திருக்கிறார். நமக்கு அதிகம் தெரிய வராத மனிதத் துயரங்களின் வரலாற்றை அளிக்கிறார். .. அதே நேரம் இவர் நமக்கு உணர்ச்சிகளின் வரலாற்றையும், ஆன்மாவின் வரலாற்றையும் கொடுக்கிறார்

பதாகை சிறுகதை போட்டி

பதாகை இலக்கியத்தளம் 2015க்கான சிறுகதைப் போட்டியை அறிவித்து இருக்கிறது. க. மோகனரங்கனும் பாவண்ணனும் நடுவர் குழுவில் இருக்கிறார்கள். சொல்வனம் வாசகர்களும் எழுத்தாளர்களும் இங்கே சென்று விவரங்களை அறியலாம்…

காசியில் பாரதி நினைவாக…. ஒரு கோரிக்கை, ஒரு கடமை.

எனக்கு கடந்த வாரம் மூன்றாவது முறையாக காசி செல்லும் வாய்ப்புக் கிடைத்தது. ஏற்கனவே முதல் இரு முறைகளிலும் மகாகவி பாரதி காசியில் வாழ்ந்த இடத்தைப் பார்த்து வந்த எனக்கு இம்முறை பாரதியின் அத்தை குப்பம்மாள் (எ )ருக்மணி அம்மாள் அவர்களின் மகன் திரு .கே வி கிருஷ்ணன் அவர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது…

பெண்கள் சிறப்பிதழ்

சிறப்பிதழ் என்றால் இவையெல்லாம், இவர்களெல்லாம் இருக்க வேண்டும் என்கிற Blue Print பற்றியெல்லாம் எண்ணாமல் பல் கலைகளையும், இலக்கியத்தின் பல்வேறு வகைகளையும், பல வயதுப் பகுப்புகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் எழுத்தாளர்களின் தமிழ் எழுத்துகளையும் மற்றும் உலக, அகில இந்திய எழுத்துகளின் மொழி ஆக்கங்களையும் கொண்டிருக்கும் ‘பெண்கள் சிறப்பிதழை’ மிகுந்த மகிழ்ச்சியோடு வெளிக் கொணர்கிறோம்.

மூன்று விருதுகள்

எழுத்தாளர் அம்பை முன்னின்று நடத்தி வரும் ஸ்பாரோ(SPARROW – Sound & Picture Archives for Research on Women) என்ற ஆவணக் காப்பு அமைப்பிற்கு இந்த ஆண்டின் பிரின்ஸ் க்ளௌஸ்(Prince Claus) விருது வழங்கப்படுகிறது.

 

கடந்த நாற்பது வருடங்களாக தமிழ் இலக்கிய உலகில் இயங்கி வரும் எம்.ஜி.சுரேஷ் அவர்களுக்கு இலக்கிய வீதியும், ஸ்ரீகிருஷ்ணா ஸ்வீட்சும் இணைந்து வழங்கும் 2014-ஆண்டுக்கான அன்னம் விருது வழங்கப்பட்டுள்ளது.

எழுத்தாளர் வெ. சுரேஷ் ஊழல் எதிர்ப்பு இயக்கத்தின் கோவை பிரிவினரால், கோவை மாவட்டத்தின் நேர்மையான அலுவலர்களுள் ஒருவர் என்று தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

அறிவிப்பு

இது சொல்வனத்தின் நூறாவது இதழ். இம்மகிழ்ச்சித் தருணத்தில் இதைச் சாத்தியமாக்கிய வாசகர்களுக்கும், எழுத்தாளர்களுக்கும், நண்பர்களுக்கும், நலம் விரும்புவோருக்கும் எங்கள் இதயப் பூர்வமான நன்றி. தமிழ் செம்மொழியாய் இருப்பதற்கு அடிப்படையில் இரண்டு காரணங்கள் உண்டு. ஒன்று அநாதி காலமாக இம்மொழியில் சிந்தித்து, பேசி, எழுதி வரும் கோடிக் கணக்கான சாமான்ய மக்கள். இன்னொன்று இதன் செழுமையையும், வளமையையும், சீரிளமைத் திறனையும் தம் எழுத்துகளின் மூலம் தொடர்ந்து கட்டிக் காத்து வரும் இலக்கிய கர்த்தாக்கள். பாரதியுடன் துவங்கிய நவீன கால தமிழ் இலக்கியத்தின் முதன்மை இடத்தில் இருக்கும் சிகரங்களில் ஒருவரான திரு. அசோகமித்திரன் அவர்களின் சிறப்பிதழாக இந்த நூறாவது இதழை வெளிக் கொணர்வதில் பேருவகையும், பெருமிதமும் கொள்கிறோம்.

பாரத் ரத்னா CNR ராவ் அவர்களுக்கு சொல்வனத்தின் வாழ்த்துக்கள்!

இந்திய வேதியியல் விஞ்ஞானி. முழுப்பெயர் சில வாசனை மூலக்கூறுகள் போல நீண்டது. சிந்தாமணி நாகேஸ ராமசந்திர ராவ். அவர் ஆய்வுக்கூடத்தில் முதன் முதலில் கால்வைத்தே 60 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. இன்னும் ஒரு வருடத்தில் 80 வயது தாத்தா. வேதியியல் என்ற துறைதான் அவரது சுவாசம், தவம் எல்லாம்….

பெண்களின் படைப்புகளுக்கான ஆவணக்காப்பகம்- SPARROW Enters its Silver Jubilee Year

இது இந்தியப் பெண்களின் படைப்புகளைக் காக்கும் ஒரு அரிய கருவூலம். பல மாநிலத்தைச் சேர்ந்த அறிஞர்களும், படைப்பாளிகளும் தன்னார்வலர்களும், கலைஞர்களும் ஆதரித்து, தம் படைப்புகளை நன்கொடையாகக் கொடுத்து, உழைப்பையும் நல்கிக் கட்டமைத்த ஒரு ஆவணக் காப்பகம் இது. அம்பை அவர்களும் இந்த அரிய அமைப்பின் நிறுவனர்களில் ஒருவர். இதன் 25 ஆண்டுகளிலும் அதன் கட்டமைப்புக்கும், பராமரிப்ப்புக்கும் மிக்க பாடுபட்டதோடு, தனது சலியா உழைப்பையும் இதற்கு நல்கியிருக்கிறார்.
இந்த ஆவணக்காப்பகத்தை நிலைநிறுத்தி அதன் தொடர்ந்த பராமரிப்புக்கும், தன் நடவடிக்கைகளை அது விஸ்திகரிக்கவும் தேவையான வசதிகளைச் செய்து கொடுப்பது இந்தியாவின் வரலாற்றை எழுத முற்படுவோருக்கு வருங்காலத்திலாவது நியாயமான ஆழமான முறையில் அதை எழுத, மிகுந்த உதவியாக இருக்கும்.
படிப்பறிவு பெற்ற ஒவ்வொரு இந்தியரும் இத்தகைய முயற்சிகளைத் தம்மால் ஆன வகைகளில் ஆதரிப்பது இந்தியாவின் எதிர்காலம் வளமாக அமைய நாம் செய்யக் கூடிய எளிய ஆனால் உருப்படியான செயலாக இருக்கும்.

தளம் – இலக்கிய காலாண்டிதழ்

தீவிர இலக்கியத்தின் தாய்வீடு என்பது எப்போதுமே சிறுபத்திரிகைகளாகவே இருந்து வருகிறது. வணிகம் சார்ந்த இயக்கமாகவோ, வணிக உதவிகளை நம்ப வேண்டி இருக்கும்போதோ பெரும்பான்மையோரின் ரசனைக்கு தீனி போடவேண்டிய கட்டாயம் சஞ்சிகைகளுக்கு வந்துவிடுகிறது. வணிக நோக்கில் செயல் பட்டு வந்தாலும் ஓரளவிற்கு இலக்கியங்களையும் உடன் சேர்த்துக்கொள்ள முடியுமா என்ற தயக்கத்துடனே பத்திரிகைகள் இயங்கி வருகின்றன. கேள்விகள் கேட்பதும் உடைத்துப் பார்ப்பதும் ஆழமாக செல்வதும் இங்கே சாத்தியமில்லை. சிறுபத்திரிகைகளுக்கு அந்த சுதந்திரமும் பரப்பும் கிடைக்கிறது. தனித்துவத்தை வெளிப்படுத்தும் வகையிலான பல சிற்றிதழ்கள் தோன்றிக் கொண்டே இருக்கின்றன. தங்கள் குரலை எழுப்பி கொண்டே இருக்கின்றன. வெற்றுக் கற்பனைகள் அல்லது கேளிக்கைகளில் முயற்சிகளை செலவிடாமல் வாழ்வின் நிதரிசனங்களை முன்வைத்து நகருபவை சிற்றிதழ்கள். மூடி வைத்தபின் திறந்து கொள்ளும் கதவுகளை உடையவை அவை.

சொல்வனம் ஐந்தாவது ஆண்டில்..

சொல்வனத்தின் துவக்கத்திற்கும், இருப்பிற்கும், தொடர்ந்த வளர்ச்சிக்கும் உறுதுணையாய் இருக்கும் , புதிய வரத்துக் கால்வாய்களைச் சாத்தியமாக்கிக் கொண்டே இருக்கும் எழுத்தாளர்கள், நண்பர்கள், நலம் விரும்பிகள் மற்றும் குறிப்பாக – பல சமயங்களில் தாமதமான வெளியீடு, மேம்படுத்த வேண்டிய பிழை திருத்துதல் போன்ற களையப்பட வேண்டிய குறைகள் இருந்தும் – தொடர்ந்த ஆதரவு தரும் வாசகர்களுக்கு எங்கள் நன்றி.

இரு இலக்கிய விருதுகள் – 2012

மூத்த படைப்பாளிகளான நாஞ்சில் நாடன் அவர்களும், தேவதேவன் அவர்களும் முறையே கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் வழங்கும் 2012-ஆம் ஆண்டுக்கான இயல் விருதும் விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் வழங்கும் 2012ம் ஆண்டிற்கான விஷ்ணுபுரம் விருதும் அளிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டுள்ளனர். நாஞ்சில் நாடன், தேவதேவன் இருவருக்கும் சொல்வனம் தன் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறது. மூத்த படைப்பாளிகளைத் தொடர்ந்து கெளரவித்து வரும் கனடா தமிழ் இலக்கியத் தோட்டம், விஷ்ணுபுரம் வாசகர் வட்டம் இரு அமைப்புகளுக்கும் சொல்வனத்தின் வாழ்த்துகள்.

விழி வழி மொழி, மொழி வழி விழி

திரு.அரவக்கோன் எழுதி சொல்வனத்தில் வெளியாகிய ‘20-ஆம் நூற்றாண்டு ஓவிய நிகழ்வுகள்’ என்ற ஓவியத்தொடர் புத்தக வடிவம் பெறுகிறது. சதுரம் பதிப்பகம் வெளியீடாக விரைவில் வெளியாகவிருக்கும் இப்புத்தகத்துக்கு க்ருஷாங்கினி எழுதியிருக்கும் முன்னுரையை இங்கே வழங்குகிறோம். திரு.அரவக்கோன் அவர்களுக்கு சொல்வனத்தின் வாழ்த்துகள்.

க.நா.சு சிறப்பிதழ்

இலக்கியத்தின் எல்லா வடிவங்களிலும் (விமரிசனம் உட்பட) நவீனத்துவம் துரிதப்படத் துவங்கியதற்குக் கிரியா ஊக்கியாகவும், தாமே பலவற்றில் உதாரணமாக இருந்த ஒருவர் க.நா.சுப்ரமண்யம். அவருடைய தீவிர விமர்சகர்கள் கூட அவரது திறமை, கூர்மை, உழைப்பு ஆகியவற்றையும், தமிழிலக்கியத்துக்கு அவர் கொடுத்த பெரும் கொடைகள் பற்றியும் குறை சொல்வதில்லை.

கருத்தியல் சார்புகளோ, அரசியல் நிலைபாடுகளோ, சமுதாயப் பண்பாட்டு அணிவகுப்புகளில் சாரிகளோ இல்லாத ஒரு நபர் பல பத்தாண்டுகள் தமிழிலக்கியத்தில் தாக்குப் பிடித்து நின்று பல தரப்பினரின் மரியாதையைப் பெறுவதென்பது அத்தனை எளிதான விஷயம் இல்லை. க.நா. சுப்ரமண்யம் என்கிற ஒரு நபர் 20ஆம் நூற்றாண்டின் பெரும்பகுதியில் வாழ்ந்து இதைச் சாதித்திருக்கிறார். இந்த ஆண்டு அவர் தோன்றி நூறாண்டு ஆகிற வருடம்.

சொல்வனத்தின் 75ஆம் இதழை, அவருடைய நூற்றாண்டு நினைவுச் சிறப்பிதழாகக் கொண்டு வரத் தீர்மானித்ததற்கு இந்தப் பொது நிலையை அவர் பெற்றிருப்பது குறித்து எங்களுக்கிருக்கும் வியப்பும் ஒன்று.

வீட்டுக் குருவிகளைக் காப்போம்!

வீட்டுக் குருவிகளைக் காக்கும் இந்த மக்கள் அறிவியல் திட்டத்தில் பங்கேற்க உங்களை அழைக்கிறோம்.. வீட்டுக் குருவிகள் நம் நாடெங்கும் எந்த நிலையில் உள்ளன, எந்தப் பகுதிகளில் பரவலாகவும் எங்கு குறைவாகவும் உள்ளன என்பது குறித்து நீங்கள் பகிரக்கூடிய தகவல்கள் முக்கியமானவை. http://www.citizensparrow.in என்ற தளத்தில் ஒரு ஐந்து நிமிட அளவில் நீங்கள் உங்கள் சுற்றுவட்டாரத்தில் குருவிகளின் இருப்பை ஆவணப்படுத்துவதன் மூலம் இந்தியாவெங்கும் உள்ள வீட்டுக் குருவி ஆர்வலர்களோடு நீங்களும் உங்களை இணைத்துக் கொள்கிறீர்கள்.

அன்புள்ள வாசகர்களுக்கு…

போக வேண்டிய தூரம் வெகு அதிகம் என்பதையும் நாம் அறிவோம். இப்பயணத்தில் தங்கள் உறுதுணையே எங்கள் பேராதரவு. சொல்வனம் தொழில் முறையில் இல்லாத, வியாபார நோக்கு அற்ற, மனிதரிடையே பிரிவினை செய்யும் எதையும் ஏற்காத, எளிமையும், உண்மைத் தேட்டமும் உள்ள, தங்களை முன்னிறுத்த முயலாத வெகு சிலரால் நடத்தப்பட்டு வருகிறது. சொல்வனத்தின் பல வேலைகளையும் இந்த சிலரே செய்கிறோம்.

2012 புத்தகக் கண்காட்சியில் சொல்வனம் வெளியீடுகள்

நண்பர்களுக்கு, இந்த வருடம் சென்னை புத்தகக் கண்காட்சி, ஜனவரி 5 முதல் 17 வரை சென்னை புத்தகக் கண்காட்சி, புனித ஜார்ஜ் பள்ளியில் நடைபெறுகிறது.  இந்தப் பள்ளி பூந்தமல்லி நெடுஞ்சாலையில், பச்சையப்பர் கல்லூரிக்கு எதிரில் உள்ளது. இக்கண்காட்சியில் சொல்வனம் வெளியீடாக வந்திருக்கும் புத்தகங்கள் கிடைக்கும். தாயார் சன்னதி – இரண்டாம் “2012 புத்தகக் கண்காட்சியில் சொல்வனம் வெளியீடுகள்”

‘மூங்கில் மூச்சு’ புத்தக வடிவில்

தமிழ்ச் சமூகத்தில் நடந்த பல்வேறு காலச்சார மாற்றங்களையும் போகிற போக்கில் சுகா பதிவு செய்து கொண்டு போகிறார். இது மூங்கில் விடும் மூச்சு மட்டுமே அல்ல….ஓர் இளைஞனின், காலத்தின், ஒரு தலைமுறையின் சுவாசம்!

‘தாயார் சன்னதி’ இரண்டாம் பதிப்பு – இப்போது விற்பனையில்

எழுத்தாளர் சுகா எழுதிய ‘தாயார் சன்னதி’ புத்தகத்தை சொல்வனம் இரண்டாம் பதிப்பாக வெளியிட்டுள்ளது. இப்புத்தகத்தை இணையம் மூலமாக வாங்க முடியும்.

’பனுவல் போற்றுதும்’ – புத்தக வடிவில்

எழுத்தாளர் நாஞ்சில் நாடன் சொல்வனம் இதழில் ‘பனுவல் போற்றுதும்’ என்ற தொடரில் அரிய புத்தகங்களை அறிமுகப்படுத்தி வந்தார். அந்தத் தொடர் இப்போது புத்தக வடிவில் ‘தமிழினி’ வெளியீடாக வெளிவருகிறது.