ஓனிடா டி வியின் விளம்பர வாசகம் ‘அக்கம் பக்கத்தோர் பொறாமை கொள்வார்கள்; உடமையாளருக்கோ மகிழ்ச்சி’ நம் அருமை நண்பன் சீனா நேரடியாகவும், மறைமுகமாகவும் நமக்குத் தொல்லை தந்து கொண்டேயிருக்கிறது. அதனுடைய வேவுக் கப்பல் இந்தியப்பெருங்கடலில், நமது கால் சுண்டு விரலான ஸ்ரீலங்காவை கடன்களாலும், வணிகத்தாலும் கட்டுப்படுத்தி, நயவஞ்சகமாக அதன் “மாற்றாரை மாற்றழிக்க”
Category: அரசியல்
எமக்கென்ன
பேரூராட்சி நகராட்சி மாநகராட்சி
மகிமைத் தேர்தல்!
ஆளும் ஆசை அற்றுப் போகுமோ?
பரோபகாரம் – நாட்டுக்கு நாடு
தனி குடிமக்கள், நிறுவனங்கள், மஹா கோடீஸ்வரர்கள் போன்றவர்களை எல்லாம் தாண்டி, ஒரு நாடு இன்னொரு நாட்டிற்கு உதவுவது உருப்படியான செயல்முறையா? அந்த உதவிகளால் நாடுகள் பெரிதாக முன்னேறுகின்றனவா அல்லது அந்த உதவும் கரங்களையே நம்பி உருப்படாமல் போகின்றனவா என்றொரு பூதாகாரமான கேள்வி பரோபகார திட்டங்களை அலசும் வட்டங்களில் உலாவிக்கொண்டே இருக்கும்.
பரோபகாரம் – மஹா உதவல்கள்
அமேசான் நிறுவனத்தின் ஊழியர்களின் எண்ணிக்கை 5.75 லட்சம். நிறுவனத்தின் CEO ஜெஃப் பெஸோஸ் அவர்கள் அத்தனை பேருக்கும் தன் சொந்தப் பணத்திலிருந்து இந்த வருடம் தலா ஒரு லட்சம் டாலர் (சுமார் எழுபது லட்சம் ரூபாய்) பொங்கல் போனஸ் கொடுத்தாலும்கூட, அவரது சொத்து 2020 ஆரம்பத்தில் இருந்ததைவிட இன்று அதிகமாக இருக்கும்! காரணம் கொரொனா தாண்டவத்தால் உலகமே தடுமாறிக்கொண்டிருந்த போன வருடம் மட்டும் அவரது சொத்து மதிப்பு அவ்வளவு உயர்ந்திருக்கிறது!
அமெரிக்கா உண்மையில் உலகில் எவ்வளவு நல்லது செய்திருக்கிறது?
கத்தோலிக்கக் கிறித்தவர்களும், கத்தோலிக்கக் கொள்கையை மறுத்துப் பிரிந்துசென்று போப்பாண்டவரின் ஆட்சிக்கு எதிரான கொள்கையைப் பின்பற்றுகிற பிராடஸ்டன்டுகளும் உடன்படிக்கையில் கையெழுத்திடுகிறார்கள். குண்டு வெடிப்புகளும் தீவிரவாத அச்சுறுத்தல்களும் மறைந்து அரசியல் போட்டி உருவாகிறது.
சகுனியின் சொக்கட்டான்
P4 என்பது மிகவும் அதிகமான மக்களைக் கொல்லக்கூடிய நோய்க் கிருமிகளைப் பற்றி ஆராய்ச்சி செய்யும் மையம். இந்த ஆராய்ச்சி மையத்தில்தான் 2015ஆம் ஆண்டு சைபீரியாவில் இருந்து எடுத்து வரப்பட்ட மண்ணின் மாதிரி ஆராய்ச்சி செய்யப்பட்டது. அதனால் வைரஸ் இங்கிருந்துதான் வெளியே போயிருக்க வேண்டும் என்று ஒரு சாரார் நம்புகின்றனர்.
அன்று க்ளிண்ட்ன்! இன்று ட்ரம்ப் – அமெரிக்க நாடகங்கள்
அதிபர் பதவியிலிருக்கும் ஒருவர் தன்னுடைய பதவிக்கோ நாட்டு மக்களுக்கோ குந்தகம் விளைவிக்கும் வகையில் நடந்து கொண்டாலோ, லஞ்சம், ஊழல், பெருங்குற்றங்கள் அல்லது தவறான நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தாலோ அவரை அப்பதவியிலிருந்து நீக்கும் குற்றச்சாட்டுக்களையும் அதன் தொடர்பான விசாரணைகளையும் மேற்கொள்ளும் உரிமை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களவைப் பிரதிநிதிகளுக்கு உண்டு. செனட் விசாரணையும் முடிந்து குற்றங்கள் நிரூபணம் ஆகும் வரை அதிபர் பதவியிலிருப்பவர் ஆட்சியில் தொடர முடியும்.
கிரவுட் ஸ்ட்ரைக் – உக்ரெயின் நாடும் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப்பும்
உக்ரெயின் நாட்டு அதிபரும் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பும் பேசிக் கொண்டார்கள். அமெரிக்காவின் உளவுப்பிரிவைச் சேர்ந்த ஒருவர், அதிபர் டிரம்ப் உக்ரேன் நாட்டை சேர்ந்த அரசியல் தலைவரான ஜெலன்ஸ்கியுடன் தொலைப்பேசி உரையாடல் மேற்கொண்டதாக முறையாகப் புகார் வைத்தார். அதிபர் டிரம்ப் முன்னாள் அமெரிக்கத் துணை அதிபரான ஜோ பிடென் “கிரவுட் ஸ்ட்ரைக் – உக்ரெயின் நாடும் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப்பும்”
ஜனநாயகத்தின் வழிகள்
இன்று தமிழகம்தான் இந்தியாவிலேயே அதிக போராட்டங்கள் நடைபெறும் மாநிலம். 2015ஆம் ஆண்டு தமிழகத்தில் 20,450 கண்டன ஆர்ப்பாட்டங்களும் அடுத்தபடியாக பஞ்சாப் மற்றும் உத்தரகண்ட் மாநிலங்களில் முறையே 13,059 மற்றும் 10,477 ஆர்ப்பாட்டங்களும் நடந்தது. இவற்றில் கணிசமான அளவிலான போராட்டங்கள், அரசு கொண்டு வரும் திட்டங்களை எதிர்த்தே இங்கு நடத்தப்படுகின்றன. தமிழக அரசும் மத்திய அரசும் தமிழக மக்களை கேட்காமலேயே திட்டங்களை அமல்படுத்திடுகின்றன என்றும், அவை தமிழக நலன்களுக்கு எதிரானவை… இப்போது எட்டுவழிச் சாலை, கோவையின் குடிநீர் விநியோகம் தனியார்ப்படுத்துதல் போன்ற திட்டங்கள் மக்களிடம் எந்த கருத்தும் கேட்காமல், மக்களுக்கே தெரியாமல் கொண்டு வரப்படுகின்றன என்றும், இதற்கு முன்கூடங்குளம், மீத்தேன் எரிவாயுத் திட்டம், கெய்ல் குழாய்கள் பதிக்கும் திட்டம், ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத் திட்டம், நீட் நுழைவுத் தேர்வு முதலிய பிற திட்டங்களும்…
பாசிசத்தை நிறுத்த முடியாமல் போவது எப்போது?
ஹிட்லரின் முக்கியத்துவத்தை துவக்கத்திலேயே கணக்கில் கொள்ளத் தவறிய தன்னையும் தன் சமகால அறிவுஜீவிகளையும் ஸ்வைக் தன் சுயசரிதையில் மன்னிக்கவில்லை. “எழுத்தாளர்களில் சிலர் ஹிட்லரின் புத்தகத்தை சிரத்தையெடுத்து வாசித்திருந்தாலும் அவர்கள் அவரது செயல்திட்டத்தை எதிர்கொள்வதற்கு மாறாய் அதன் உயிரற்ற உரைநடையின் பகட்டைக் கேலி செய்தனர்,” என்று அவர் எழுதினர். அவர்கள் அவரையும் பொருட்படுத்தவில்லை, அவர் சொல்லின் நேர்ப்பொருளையும் எதிர்கொள்ளவில்லை. 1930களிலும்கூட, “முக்கியமான ஜனநாயக செய்தித்தாள்கள், தம் வாசகர்களுக்கு எச்சரிக்கை விடுப்பதற்கு மாறாய், ஒவ்வொரு நாளும் அந்த இயக்கம்… கணப்பொழுதில் அழிந்து விடுவது தவிர்க்க முடியாதது,” என்று உறுதியளித்தன. தம் ரசனை மற்றும் உயர்கல்வி அளித்த ஆணவத்தால், அறிவுஜீவி வர்க்கங்கள் “கண்ணுக்குத் தெரியாத சூத்ரதாரிகள்” தயவால் – தன்னலமிக்க குழுக்களும், தனி மனிதர்களும், தனித்து நிற்கும் கவர்ச்சி மிகுந்த இந்தத் தலைமையைத் தம் விருப்பத்துக்குப் பயன்படுத்திக் கொள்ள முடியும் என்ற நம்பிக்கை கொண்டிருந்ததால் – கல்வியறிவற்ற இந்த “சாராயக்கடை கலவரக்காரன்”, அதற்குள் மிகப்பெரிய அளவில் ஆதரவு பெற்றுவிட்டதை சீரணித்துக் கொள்ள முடியாதவர்களாய் இருந்தார்கள்.
தமிழக அரசியலும் ரஜினிகாந்தின் முடிவும்
தமிழகத்தில் பிற துறைகளில் மக்களுக்காக உழைத்த, வெற்றி பெற்ற சாதனையாளர்கள் ஏராளமாக உள்ளனர். அப்துல் கலாம், கேன்சர் மருத்துவர் டாக்டர் சாந்தா, ராக்கெட் சயிண்டிஸ்டுகள், பொறியாளர்கள், மக்களிடம் சிந்தனை மாற்றத்தை எற்படுத்த விரும்பிய எம்.எஸ்.உதயமூர்த்தி போன்ற சிந்தனையாளர்கள், நீர் ஆதாரத்தை இணைக்கத் திட்டமிடும் ஏ.சி.காமராஜ் போன்ற பொறியாளர்கள் இன்னும் பல நூறு திறமையான நிர்வாகிகள் சமூக சேவகர்கள் எவருமே மக்களிடம் ஓரளவுக்கு பிரபலமடைந்திருந்த போதிலும் தேர்தல் என்று வரும் பொழுது அவர்களை எந்நாளும் மதித்துத் தமிழர்கள் ஓட்டுப் போட்டதில்லை. எம்.எஸ்.உதயமூர்த்தி ஒரு சோதனை முயற்சியாக…
குளக்கரை
ஆர் கே நகர் தேர்தல் முடிவுகள் பற்றி பல காட்டமான விமரிசனங்கள் எழுகின்றன. அவற்றில் முக்கியமானது, ஆர் கே நகர் மக்கள் பணம் வாங்கிக் கொண்டு வாக்களித்து விட்டார்கள், இதனால் ஜனநாயகம் தோற்றுப் போய் விட்டது என்பது. குறிப்பிட்ட சாதிகளைக் குறி வைத்து, கல்வியிலும் வேலையிலும் அரசு ஒதுக்கீடு பெற்றுத் தருகிறோம், என்று வாக்குறுதி அளித்து சில கட்சிகள் வெற்றி பெற்றபோது தோற்காத ஜனநாயகம் இப்போது தோற்றுப் போய் விட்டதா? அடுத்த நாள் சாப்பாட்டுக்கு கஷ்டப்படுபவர்கள், ஏழ்மையை அறியாதவர்கள், இவர்களால்தான் …
எண்பதுகளின் சீனா
ஆயினும் இந்தப் புரட்சியை அடக்கியது அதன் உள்ளிருந்த முரண்களல்ல, முரட்டுத்தனமான ராணுவ நடவடிக்கைதான். சீனாவின் சந்தைச் சீர்திருத்தங்களையும், அதிகரித்து வரும் பன்னாட்டு நல்லுறவுகளையும் பாதிப்பதற்குப் பதிலாக, இந்த கொடுமையான வன்முறை, அதைத் தூண்டிவிட்டதில் கட்சி ஆற்றிய பங்கிற்கு அங்கீகாரத்தை அளித்தது. சீனாவின் வளர்ந்துவரும் சந்தைப் பொருளாதாரத்திற்கு எதிராக இந்தப் போராட்டம் பார்க்கப்பட்டது. நிலைத்தன்மை எல்லாவற்றிலும் உயர்ந்தது என்று டெங் குறிப்பிட்டிருந்தார்.
குளக்கரை
”என்னுடைய முந்தைய வாழ்க்கை எனக்கு மிகவும் பிடித்து இருந்தது. அதில் பல விஷயங்களை சாதிக்க முடிந்தது. இப்பொழுது முந்தைய பிஸினெஸைக் காட்டிலும் நிறைய உழைக்க வேண்டியிருக்கிறது. இந்த ஜனாதிபதி வாழ்வு கொஞ்சம் சுளுவாக இருக்கும் என்று நினைத்தேன். ஏதோவொரு கூண்டில், பட்டுப்பூச்சியின் கூட்டினுள் அடைபட்ட மாதிரி உணர்வு கிடைக்கிறது. எனக்கு காரோட்டப் பிடிக்கும். அது முடியவில்லை. எனக்கு மேற்சென்று சாதிக்கப் பிடிக்கும். அதுவும் இடைஞ்சலாக இருக்கிறது.” என்கிறார் டிரம்ப்
திபெத் எப்படி நசுக்கப்படுகிறது?
திபெத்திய தேச அடையாளத்திற்கு மையமாக இருக்கும் மொழி மற்றும் பௌத்தம் ஆகியன, சீனாவின் பாதுகாப்பு, மேலும் அரசு முன்னின்று செலுத்தும் தேசியத்துக்கும், பரவலாக ஏற்கப்பட்டுள்ள ஹான் இன உயர்வு சார்ந்த தேசியத்துக்கும் சிறிதும் ஏற்க முடியாததாக உள்ளதால், மாநில மற்றும் நாட்டு அதிகாரிகள் நடுவேயும், சாதாரணச் சீனரிடையேயும் இவற்றுக்கு எதிரான காழ்ப்புணர்வு அதிகமாக உள்ளது… சீன ஆட்சியாளர்கள் பயன்படுத்தும் ‘கரைத்து விடுதல்’ என்ற அணுகல் முறைப்படி, 1950 இலிருந்து திபெத்தின் மீது சுமத்தப்பட்ட கம்யூனிஸ்ட் ஆட்சியும், அதிலும் 1989க்குப் பிறகு வந்த கால கட்டத்தில் கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கிற கடும் ஒடுக்கு முறைகளும் பண்டை நாளில் இருந்த நல்லுறவை நொறுக்கி விட்டன.
அலுவல் மொழி என்னும் பிதற்றல்
மொழிகள் தனித்து இயங்குபவை அல்ல. அவை கலாசாரத்தின் உறுப்புகள். உண்மையில், ஒவ்வொரு கலாசாரமும் அதன் மொழியில் தன்னை நேரடியாய் வெளிப்படுத்திக் கொள்கிறது. இந்தியாவுக்கு உரிய மொழிகள் 1500க்கும் மேற்பட்டவை என்று சொல்லும்போது அத்தனை கலாசாரங்கள் நமக்கு உரியவை என்று சொல்கிறோம். பல்வகைப்பட்ட மொழி மரபுகள் இத்தனை இந்தியாவில் உள்ள நிலையில் அரசுப்பணிகளையும் அதன் அதிகாரபூர்வ நடவடிக்கைகளையும் ஒருங்கிணைத்து தேசமெங்கும் மேற்கொள்வது கடினம். மிக எளிமையாய்ச் சொல்ல வேண்டுமென்றால், பொதுப்பண்புகளும் தொடர்புகளும் இல்லாமல் சாதாரண மனிதர்களும்கூட உரையாடிக் கொள்ள முடியாது. குழப்பமே நிலவும். அதிகாரபூர்வ அலுவல் மொழி ஒன்று வேண்டும்…
ட்ரம்பியம் ஆளத் துவங்குகிறது
பருவநிலை மாற்றம் மனிதர்களால் ஏற்படுகிறதா என்று தனக்குத் தெரியாது ஆனால் அதில் தனக்கு நம்பிக்கை இருப்பதாகவும் அதன் விளைவுகள் தீவிரமாகவே இருக்க வாய்ப்பிருப்பதால் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று சொன்னவர், பருவநிலை மாற்றம் குறித்த தவறான கருத்துக்களை எக்ஸான் மொபில் பரப்புவதாக டிம் கெயின் கேட்ட கேள்விக்குப்பதிலளிக்க முடியாமல் தடுமாறவும் செய்தார்!
உலகம் இன்று நம் கையில்
ஒரு சாதுரியத் தொலை பேசி இருந்தால் ஏதாவது நாட்டில் நடக்கும் ஏதோ ஒரு வினோத சம்பவத்தையாவது பார்த்துக் கொண்டிருக்கலாம். ஓய்வாக அமர்ந்து யோசிப்பது என்பது இல்லாததாக, செய்ய முடியாததாகக் கூட ஆகி விட்டது. சிகரெட் குடிப்பவர்களுக்குக் கையில் அது இல்லாது நிற்கக்கூடத் தெரியாது என்று கிண்டல் செய்வார்கள், அதே போலக் கையில் ஏதோ ஒரு காட்சிக்கருவி இல்லாது நடக்க, இருக்க முடியாத மக்களாகிக் கொண்டிருக்கின்றனர் உலக மக்கள். அடுத்து மூச்சு விடக் கூட ஏதேனும் கருவி தேவைப்படும் நிலைக்கு வருவார்களோ என்னவோ. இப்படிப்பட்ட கருவிகளில் நாம் எல்லாரும் பார்க்கக் கூடிய உலக சம்பவங்களில், அமெரிக்காவில் நடந்த ஒரு சம்பவம் நேற்றைய வினோதம். அங்கு ஒரு புது அதிபர் நாடாளும் பதவியை நேற்று ஏற்றார். அவர் வழக்கமான அரசியல்வாதி இல்லை. திடீர் மழையில் முளைத்த காளானா என்றால் அத்தனை புது நபர் இல்லை, … டானல்ட் ட்ரம்ப் என்கிற ரியல் எஸ்டேட் அதிபர்.
சினிமா நடிகர் சோ
அவர் நடித்த மேடை நாடகம் ஒன்று சிவாஜிகணேசன் நடிக்க சினிமாவான பொழுது அவர் நாடகத்தில் நடித்த வேடத்தில் நடிப்பதற்காக சினிமாவுக்கு அழைக்கப் பட்டார். தன் வீட்டுக்குத் தெரியாமலும் தயக்கத்துடனுமேயே சினிமாவுக்குள் நுழைந்த சோ கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் தொடர்ந்து சினிமாவில் புகழ் பெற்ற ஒரு நடிகராகவே தொடர்ந்தார். கணீரென்று தனித்துவமான குரல், சமயோதிடமான நையாண்டி, போகிற போக்கில் செய்யும் கேலிகள் தவிர்த்து அவர் ஒரு நல்ல ஸ்லாப்ஸ்டிக் காமெடியனாகவும் தமிழ் சினிமாவில் நிலை பெற்றார். கிட்டத்தட்ட அனைத்து முன்னணி நடிகர்களுடனும் நூற்றுக்கணக்கான சினிமாக்களில் தொடர்ந்து இடம் பெற்று வந்தார். எம் ஜி ஆரின் கட்சியான தி மு க வை அவர் கடுமையாக விமர்சனம் செய்த போதிலும் கூட எம் ஜி ஆரின் பல படங்களில் தொடர்ந்து காமெடி ரோல்களை சோ செய்து வந்தார்.
சிரியாவே தன் துயரத்தைச் சொல்லும் கவிதை
புதுச்சேரியில் பிப்ரவரி 2016-ல் நடைபெற்ற பன்னாட்டு ஆவணக் குறும்பட விழாவில் திரையிடப்பட்ட அலெப்போவை அலைக்கழிக்கும் கொலைப் போரையும் பேரழிவையும் பேசும் Young Syrian Lenses என்ற ஆவணப்படத்தைப் பார்த்த யாரும் அதிர்ந்து போகாமல் இல்லை. மக்கள் வாழும் பகுதிகளில் வீழும் குண்டுகளின் பொழிவு, தரைமட்டமாகும் கட்டிடங்கள், அழிவின் அச்சுறுத்தலிலும் மரணத்தோடு விளையாடுவது போல் விளையாடும் சிறார்கள், அமர்ந்து மரணத்தை ஒரு மிடக்கு அருந்துவது போல் தேநீர் அருந்தும் மனிதர்களரென்று அலெப்போவின் போர்த் துயரத்தைப் பதிவு செய்கிறது இந்த ஆவணப் படம்.
அமுதசுரபியும் சத்துணவுத் திட்டமும் மலிவு விலை உணவகங்களும்
நமது தமிழ்க் காப்பியங்கள் பசிப்பிணி பற்றி என்ன கூறியிருக்கிறது என்று பார்த்தால் முதலில் நமக்குக் கிடைக்கும் பாடலின் காலம் சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகும். கிமு மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த வடமோதங்கிழார் என்ற புலவர் நாட்டில் நிலவிய பசிப்பிணியை இரண்டு பாணர்கள் வாயிலாக வெளிப்படுத்துகிறார். புறநானூற்றில் இடம் பெறும் பாடல் இது.
குளக்கரை
நமது வண்டியை அளவிட்ட வேகத்தைவிட அதிகமாக ஓட்டி மாட்டிக்கொண்டு ஃபைன் கட்டுகிறோம்; வருடாந்திர வரியைத் தாமதமாகக் கட்டுவதால் கூடுதலாகக் கட்டுகிறோம்; தவறுதலாக மகனின் ரயில் கார்டைக்கொண்டு பயணம் செய்து மாட்டிக்கொள்கிறோம்; இணையம் வழியாக நிறைய தடைசெய்யப்பட்ட/புரட்சியாளர்களின் புத்தகங்களை வாங்குகிறோம் – இவை ஒவ்வொன்றுக்கும் தனித்தனியாக தண்டனை பெற்றாலும், இந்த பலதரப்பட்ட தகவல்களை ஒருங்கிணைத்து உங்களது ‘குற்றப்பட்டியல்’ தயார் செய்யப்பட்டு அதன் மூலம் சமூகத்தில் நீங்கள் எந்தளவு கெட்டவர் எனக் கணக்கிட முடியுமானால் அது எத்தனை …
க்யூபா: ஒரு லத்தீன் அமெரிக்க விசித்திரம் (பகுதி – 2)
அடுத்த நாள் எங்களோடு ஹோட்டலில் உட்கார்ந்து காலைஉணவு சாப்பிட, எங்களோடு வந்திருந்த க்யூப மொழிபெயர்ப்பாளரை அழைத்தோம். அவரும் ஹோட்டலுக்கு வந்தார். ஆனால் ஹோட்டல் அதிகாரிகள் அவர் க்யூபன் என அறிந்ததும் உள்ளே அனுமதிக்க மறுத்துவிட்டார்கள்! நாங்கள் குறுக்கிட்டுப் பேசியும் பிரயோஜனமில்லை. அவர் வெளியேறி வேறெங்கோ போய் சாப்பிடுமாறு ஆயிற்று. க்யூபாவின் வெளிஉலகுக்குத் தெரியாத ரகசி்ய முகங்களில் இதுவும் ஒன்று. ஹோல்கின் நகரில் அநேக சிறு பூங்காக்கள், அறிவியல், சரித்திர மியூசியங்கள் உள்ளன. சிறிய விமான நிலையமும் இந்நகரில் இருக்கிறது.
அசிங்க அரசியலின் வெற்றி
ஆரம்பித்ததிலிருந்து ட்ரம்ப் ஒரு கோமாளியாகத்தான் பார்க்கப்பட்டார். அவர் வாயிலிருந்து வரும் வார்த்தைகளும், எதிராளியைத் தாக்கும் முறைகளும், அரசியல் பண்பாடு அறவே அற்ற, முன்யோசனை இல்லாத கருத்துக்களும் இந்தியாவுக்குப் புதிது அல்ல. நம் அரசியல்வாதிகள் நம்மை அதற்குப் பழக்கியிருக்கிறார்கள். ஆனால் மேற்குலகில் அரசியல் சாக்கடை இருந்தாலும் பொதுவில் நாகரீகம் இருக்கும். ஆனால் ட்ரம்ப் அதைப் பறக்கவிட்டு தீப்பொறி ஆறுமுகம், வெற்றிகொண்டான் பாணியில் பிரச்சாரம் செய்தார். அவர் கடசியினரே அவரை ஓரம் கட்டினர். ஆனால் மர்மமான முறையில் எல்லா முக்கியமான கட்சி உள்தேர்தல்களில் ட்ரம்ப் முதலிடம் வந்தார். வேறு வழியே இல்லாமல் குடியரசுக் கட்சி அவரை அதிபர் வேட்பாளராக்கியது. எப்படி இந்த வெற்றி சாத்தியமானது?
விவாதங்களின் அரசியல் ; இரண்டாம் பட்சமான தகுதியும் தரமும்
முப்பது வருடங்களுக்கும் மேலாக அரசியலில் தன் கணவருக்கு பக்கபலமாய் இருந்த அனுபவம், பில் கிளிண்ட்டனின் பதவிக்காலம் முடிவடைந்த பிறகு நேரடி அரசியலில் இறங்கி செனட்டராக, வெளியுறவுத்துறை செயலராக பணியாற்றிய நிர்வாக அனுபவம் பெற்றவர். அமெரிக்க வரலாற்றில் முதல் பெண் ஜனாதிபதி வேட்பாளர் என்கிற கூடுதல் சிறப்புத்தகுதியுடையவர் என்பதால் அவரை சரியான வகையில் எதிர்கொள்ளும் ஒரு வலுவான வேட்பாளரை தாங்கள் தேர்ந்தெடுக்கவில்லையோ என்கிற ஏமாற்றமும், ஆதங்கமும் தற்போது குடியரசு கட்சியினரிடையே வெளிப்படையாகவே எதிரொலிக்கத் துவங்கிய சூழலில் ஹிலரி-ட்ரம்ப் இடையேயான இரண்டாவது விவாதம் செயிண்ட் லூயிஸில் நடந்தேறியது.
அகதிக் கடத்தல்
மேற்காசியாவிலும் ஆப்பிரிக்காவின் வட பகுதியில் உள்ள நாடுகளில் இருந்தும் யூரோப்பில் குடியேறும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்த படியே இருக்கிறது என்றும் அதன் விளைவுகளைப் பற்றியும் சொல்வனத்தின் முந்தைய இதழ்களில் படித்திருக்கிறோம். யூரோப் வளமிக்க வாழ்க்கையை உருவாக்கும் என்ற நம்பிக்கையில் கூட்டம் கூட்டமாக அகதிகளாக இம்மக்கள் குடியேறுகின்றனர். பிரிட்டன் போன்ற சில நாடுகள் யூரோப்பிய யூனியனிலிருந்து தனியாக செல்லும் நிலைமைக்கும் இந்த அகதிகள் பிரச்சனை பெரும் காரணமாக இருந்ததைப் பற்றி நாம் ஏற்கனவே பார்த்திருக்கிறோம். எல்லாவற்றையும் காசாக்கி ஆதாயம் தேடும் சிலர் இந்த ‘வாய்ப்பையும்’ பயன்படுத்தி இந்த நாடோடிகளுக்கு உதவுகின்றனர். போதைப் பொருள் கடத்தல், ஆயுதங்கள் கடத்தல் போன்று பெரிய அளவில் வளர்ந்து வரும்…
ஹிலரி Vs ட்ரம்ப், விவாதங்களின் அரசியல் , ஒரு பார்வை
இது போன்ற விவாதங்களில் முதலில் கவனிக்கப்படும் அம்சம் போட்டியாளர்கள் தங்களை எப்படி வெளிக்காட்டிக் கொள்கின்றனர் அவர்களின் உடல்மொழி எத்தகையது என்பதுதான். இந்த சுற்றில் நிச்சயமாக ஹிலரிதான் வெற்றியாளர். ஆரம்பம் முதல் இறுதிவரை அமைதியான தன்னம்பிக்கை கூடிய புன்னகையுடன் கேள்விகளை, தாக்குதல்களை எதிர்கொண்டார். தன்னுடைய பதில்களை தெளிவாகவும், அதே நேரத்தில் சரியான சந்தர்ப்பங்களில் ட்ரம்ப்பை மட்டம் தட்டுவதிலும் வெற்றிகண்டார். மாறாக ட்ரம்ப் ஆரம்பம் முதலே கடுகடுப்பு முகத்துடனும், பதட்டம் நிறைந்த குரலுடனும் இருந்தார். எதிராளியை பேசவிடாமல் இடைமறித்து பேசியதை யாருமே ரசிக்கவில்லை. இந்தப் போக்கினை ட்ரம்ப் அடுத்த இரண்டு விவாதங்களில் திருத்திக் கொள்வார் என எதிர்பார்க்கின்றனர்.
யுகசந்தியில் இந்தியா
இந்திய மக்கள், தற்போதைய அரசாங்கம் அதிவேக வளர்ச்சியை கொடுக்கவேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். எதிர்பார்ப்பு அதிகம் இருக்கும்போது பொறுமை குறைவாக இருப்பது வழக்கம்தான். அதேவேளையில், எதிர்கட்சிகளும், ஊடகங்களும் இணைந்து குறுகிய காலத்திலேயே மிக அதிக திசைதிருப்பல்களை உருவாக்கிக்கொண்டு இருக்கின்றன. தற்போதைய அரசும் அதன் பெரும்பான்மையான சமூக மற்றும் பராம்பரியப் பெருமையும் கொண்ட தலைவர்களும், இந்தியா உலகுக்கே முன்னோடியாக, வழிகாட்டியாக இருக்க வேண்டும் என்று விரும்புகின்றனர். காலனியாதிக்கத்துக்கு முன்பிருந்த இந்தியாவின் நெடிய பாரம்பரியம் அச்சிந்தனையை உறுதியாக்குகிறது. இந்தியா அத்தகைய ஒரு நிலையை அடைய வழிகாட்டியாக மாற, இந்தியா பெறும் மாற்றத்தைக் கண்டாகவேண்டும். எத்துறையை எடுத்தாலும், பொருளாதாரம் முதல் சமூக வளர்ச்சி வரை இந்தியா ஒரு யுகசந்தியில் நிற்கிறது.
நீளும் சாலைகள், பயணங்களும்தான்…
இந்த நூற்றாண்டின் அமெரிக்கப் பெண்கள் பலரும் நன்கு படித்து ஆண்களுக்கு நிகராக நல்ல பதவியிலும், பொறுப்பிலும் இருக்கிறார்கள். அரசியல், கல்வி, கலை, விளையாட்டுத்துறை, மருத்துவம், நீதித்துறை , விண்வெளி ஆராய்ச்சி, பொறியியல், விவசாயம் என்று அனைத்துத்துறையிலும் பெண்கள் கொடிகட்டிப் பறந்து கொண்டிருந்தாலும் கூட கடந்த நூற்றாண்டுகளின் நாலாம் தரத்திலிருந்து இரண்டாம் தரத்திற்குத்தான் உயர்ந்திருக்கிறார்களோ என எண்ணிடக்கூடிய வகையில்தான் நிதர்சனங்கள் இருக்கின்றன. பாலின சமத்துவத்தை நிலைநாட்ட வேண்டிய பல சட்டங்கள் இன்றும் ஆண்களுக்குச் சாதகமாகவே இருந்து வருவதை இங்கே குறிப்பிட்டாக வேண்டும்.
கச்சா எண்ணெய்யும் கசக்கிப் பிழியும் அரேபியாவும்
பத்தாயிரம் இந்தியர்கள் இருநூறு நாள்களாக சம்பளமின்றி வேலை செய்கிறார்கள். அதுவும் இவர்கள் எல்லோரும் கை நிறைய ஊதியம் வாங்கும் கணினி நிரலாளர்களோ, எண்ணெய் நிறுவனங்களை மேய்க்கும் மேலாளர்களோ, வங்கிகளில் வர்த்தகம் நிர்வகிக்கும் கணக்கர்களோ இல்லை. தினக்கூலியாக குப்ப்பை அப்புறப்படுத்துவதில் இருந்து கட்டுமானப்பணியில் (Over 800 Saudi companies are ‘ignoring summer midday work ban’ – Al Arabiya English) சுட்டெரிக்கும் வெயிலில் உடலுழைப்பைக் கடுமையாகக் கோரும் ஊழியர்கள்.
இவர்களின் உண்மை நிலையை அம்பலப்படுத்தினால்,உலகிற்கு தெரியப்படுத்தினால் என்னவாகும்?
குளக்கரை
அறிவியல் பூர்வ முறைகளை கையாளாமல், விலங்குகளைக் கொன்று குவிக்க இந்திய அரசாங்கம் அனுமதி தந்துவிட்டது என்கிறது இந்தக் கட்டுரை. குறிப்பிட்ட வனவிலங்கானது என் பயிரை பாதிக்கிறது என விவசாயிகள் சொன்னதாகச் சொல்லி, அந்த வனவிலங்கை “பயிர் அழிப்பான்” என்று மாநில அரசு பட்டியல் இட்டு விடுகிறதாம். இந்த பட்டியலுக்குள் வந்த வனவிலங்குகளைக் கொல்வது சட்டப்படி தவறு இல்லையாம். இப்படிப் பட்டியலிடப்பட்ட வனவிலங்குகள் இந்தியாவில் மட்டுமே காணப்படும் நீல்கை மான், காட்டுப் பன்றி, மற்றும் ரூஸஸ் குரங்கு வகைகள். இந்த பிராணிகளின் எண்ணிக்கையையோ, இவற்றின் எண்ணிக்கை குறைந்தால் ஏற்பாடும் சூழல் பாதிப்புகளையோ அரசு கண்டுகொள்ளவில்லை என்கின்றனர் பிராணிகள் நல அமைப்பினர்.
யாரிந்த ட்ரம்ப்? ஏனிந்த கொலைவெறி!!!
ஜார்ஜ்புஷ்ஷின் ஆட்சிக்காலத்தில் தீவிரவாத அச்சுறுத்தல்கள், ஆப்கானிஸ்தான், ஈராக்கில் அமெரிக்கப்படைகளின் போர் நடவடிக்கைகள், இரட்டை கோபுரத்தாக்குதல், விமான நிலயங்களில் திடீர்திடீரென ரெட் அலர்ட், வீண்வதந்திகளினால் பதற்றம் என மக்களிடைய ஒருவித அச்ச உணர்வு மேலோங்கியே இருந்தது. போதாதகுறைக்கு பொருளாதார பின்னடைவுகள், வேலையில்லா திண்டாட்டம்,கேட்ரினா புயலினால் ஏற்பட்ட சேதங்கள் என எல்லாம் சேர்ந்துகொள்ள, மக்கள் புதிய தலைமையை, நம்பிக்கையை எதிர்பார்த்தனர்.
மனிதமையக் கருத்தாக்கமும் சுற்றுச்சூழல் கேடும்
கடற்படை ராணுவத்தினர்களின் ( குறிப்பாக நீர்மூழ்கி கப்பல்களில் ) ரோந்து கப்பல்களில் பயன்படுத்தப்படும் ஒலி அடிப்படையில் இயங்கும் சோனார் எதிரொலிக்கருவிகளின் அதிர்வெண் அலைவரிசை திமிலங்களின் மூளையில் பல குழப்பங்களையும், தடுமாற்றத்தையும் ஏற்படுத்துகிறது என்பது ஒரு முக்கிய காரணம். … எல்லாவற்றும் மேலாக, மனிதர்களைப்போல் விலங்குகளூக்கும் குறிப்பாக கடல்வாழ் உயிரினங்களூக்கும் தற்கொலை எண்ணம் வருவதுண்டு. கூட்டுத்தற்கொலையாகவும் இருக்கலாம். தற்கொலைக்கான காரணங்கள் தெரியவில்லை. ஆனால் ஒன்று சொல்லமுடியும், கடல்வாழ் உயிரினங்களின் இருப்பிடத்தை மாசுப்படுத்தி, நாசம் பண்ணினால், உயிரினங்களும் வேறு வழியின்றி கவுரமாக தன் முடிவை தேர்ந்தெடுத்துக்கொள்கிறது எனப் புரிந்து கொள்ளலாம்.
யஸிதி இனப்பெண்: ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சில் உரை
ஐ எஸ் ஸின் கொடூரம் ஏதோ வாய்ப்பு கிட்டியதால் நடந்த ஒரு நிகழ்வல்ல. . ஐ எஸ் ஸை சேர்ந்தவர்கள் இவ்வாறான கொடூரங்களை அரங்கேற்ற முன் திட்டமிட்டே வந்திருந்தனர். கற்பழிப்புகள், கட்டாயமாகச் சிறுவர்களைத் தம் படையில் சேர்த்தல், அவர்கள் கைப்பற்றிய புனித்தலங்களை தரைமட்டமாக்கி அழித்தல், குறிப்பாக யாஸிதி பெண்களையும், சிறுமிகளையும் கற்பழிப்பு மூலம் சிதைத்து அழித்து அவர்கள் ஒருபோதும் சாதாரணமான, இயல்பான வாழ்வுக்குத் திரும்ப முடியாமல் ஆக்குவது ஆகிய வன்முறைச் செயல்கள் மூலம் யாஸிதி இனமக்களின் அடையாளத்தைச் சுத்தமாக ஒழிப்பதே அவர்கள் திட்டம்.
ஸ்வெட்லானா அலெக்ஸவிச் – என் நாட்குறிப்பிலிருந்து
கிராமப்புறப்பெண்கள் சிலர் அவனருகே சென்று உட்கார்ந்தனர். அவர்களுக்கே உரிய இயல்புடன் புது முகங்கள் யார் எங்கு செல்கிறார்கள் என விசாரித்தனர். ராணுவச்சிறுவனை அவனது வீட்டுக்கு ஆபிஸர் அழைத்துசெல்வதை அறிந்துகொண்டனர். அவனது மனம் பேதலித்துவிட்டது: ‘காபூலிலிருந்து கிளம்பியதியலிருந்து அவன் நோண்டிக்கொண்டே இருக்கிறான். கையில் கிடைத்த அனைத்தையும் கொண்டு நோண்டுகிறான். முள்கரண்டு, மண்வெட்டி, குச்சி, பேனா..எதைக்கொடுத்தாலும் நோண்டுகிறான்’.
குடிமக்களும் ஆட்சியாளர்களும் – 2
இன்றுவரை இடது சாரிகளில் Parti socialisteம், வலதுசாரிகளில் Les Républicains கட்சியும் (இதற்குமுன்பாக RPR என்றும் UMP என்றும் பெயர் வைத்திருந்தவர்கள்) மாறி மாறி ஆட்சியிலிருந்து வருகிறார்கள். கம்யூனிஸ்டுகள் செல்வாக்கிழந்து நாட்கள் பல ஆகின்றன. ஒரு சில நகராட்சிகளைக் கைப்பற்றுவதோடு அவர்கள் திருப்தி அடையவேண்டியிருக்கிறது. அவ்வப்போது சில ஆர்ப்பாட்டங்களை நடத்தத் தொழிற்சங்கங்கள் தற்போதைக்கு ஆறுதல் தருபவையாக உள்ளன. கடந்த காலத்தில் சோஷலிஸ்டுகளின் தலமையின் கீழ் அமைச்சராக முடிந்ததெல்லாம் இனி நாஸ்டால்ஜியாவாக அசைபோடமட்டுமே கம்யூனிஸ்டுகளுக்கு உதவும்.
அமெரிக்க தகவல் நிலையத்திற்கு
இந்த ஃபாஸிஸ்ட் முத்தண்ணா ‘ஜனநாயகம், தனிநபர் சுதந்திரம்’ என்று கோஷங்கள் இடுவதிலிருந்து அதன் வாய் ஓய்வதில்லை. கடந்த நாற்பது வருட கால என் பொதுவாழ்வில் என் சுதந்திரத்தையும் என் நேர்மையையும், என் வழியில் மிகுந்த ஆக்ரோஷத்துடனேயே பாதுகாத்து வந்துள்ளேன். “உன்னுடைய நேர்மையையும் , சுதந்திரத்தையும் காப்பாற்ற வேண்டினால், உன் எழுத்தோடு சம்பந்தப்படாத ஒரு வேலையை, இரவு நடன விடுதியில் பியானோ வாசிப்பது போன்ற ஒரு வேலையைச் செய்” என்று சொன்னது உங்கள் நாட்டவன் ஓர் அமெரிக்கன், வில்லியம் ஃபாக்னர். கடந்த நாற்பது வருடங்களாக இது போன்ற ஒரு காரியத்தைத்தான் நான் செய்து வந்திருக்கிறேன்.
எல்லைக் கோட்டைத் தாண்டி- இந்திய வெளியுறவு செயல்பாடு
90களில் இருந்து ஏற்பட்ட இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி. பாகிஸ்தான் தேங்கிச் செல்கையில் ஒப்பீட்டில் இந்தியாவின் பொருளாதாரம் இரண்டு மடங்கிற்கு மேலாக வளர்ந்தது. இந்தியா என்னும் சந்தையை அமெரிக்க மற்றும் பிற மேலை நாடுகளால் இழக்க இயலாது என்ற நிலை ஏற்பட்டது. இரண்டாவது, தீவிரவாதம் குறித்த அமெரிக்க, மேலை நாடுகளின் புத்தியில் ஏற்பட்ட மாற்றம். இரட்டை கோபுர தாக்குதலுக்குப் பின் சோவியத்தை வெல்ல உதவிய பாகிஸ்தான் என்ற நிலையிலிருந்து தன்னைத் தாக்கிய தீவிரவாதிகளை வளரவிட்ட பாகிஸ்தான் என்று அமெரிக்கா காண ஆரம்பித்தது. ஆஃப்கனிஸ்தானில் தீவிரவாதத்திற்கான போரை ஆரம்பித்துவிட்டு இந்தியாவில் நடைபெறும் தீவிரவாதத்தைப் பாரமுகமாக இருக்க அமெரிக்காவிற்குச் சாத்தியமில்லை. தாலிபானுக்கு எதிரான அமெரிக்கப் போரிற்கு பாகிஸ்தான் தன்னை இன்றியமையாததாக ஆக்கிக் கொண்டாலும், இந்தியாவிற்கு தீவிரவாதத்தை ஏற்றுமதி செய்வதை அமெரிக்கா அனுமதிக்கவில்லை. இந்த இரண்டு காரணிகள் மூலம் இந்தியா 2000களில் பாகிஸ்தான் உருவாக்கி வைத்திருந்த பல அனுகூலங்களை உடைத்து மீண்டும் சமநிலையில் தன்னை உலக அரங்கில் மாற்றிக் கொண்டது.
பிரான்சு நிஜமும் நிழலும் – 7: கனாக் (Kanak) போராளிகள்
மனிதர் சுதந்திரத்திற்குக் கேடு என்கிறபோது, இரட்சகர்களில் ஒருவராக அறிவித்து பிரான்சு தன்னை முன்னிலைப்படுத்துகிறது. அகதிகள் பிரச்சினை எனில் கண்ணீர் வடிக்கிறது, ஓடிச்சென்று உதவிக்கரம் நீட்டுகிறது. சிரியா அதிபரையோ, ரஷ்ய அதிபரையோ கண்டிக்கிறபோது உரத்து கேட்கிற குரல் வளகுடா நாடுகளில், சீனாவில் மனித உரிமைகள் நசுக்கப்படுகிறபோது, நமத்துப் போகிறது. அமெரிக்காவிற்கு விடுதலைச் சிலையை அனுப்பிவைத்த நாடு, ‘சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவத்தை’ நாட்டின் கோட்பாடாக உலகிற்கு அறிவிக்கும் நாடு என்ற பெருமைகளைக்கொண்ட பிரான்சு நாட்டின் சொந்த வரலாறு கொண்டாடக்கூடியதாக இல்லை.
பிரதமர் மோதியின் கலிஃபோர்னிய விஜயமும், டிஜிடல் இந்தியாவும்
ஞாயிறு காலை ஃபேஸ்புக் நிறுவனத்தின் தலைவர் மார்க் ஜக்கர்பெர்க் இந்தியப் பிரதமரை அவரது ஃபேஸ்புக் நிறுவனத்திற்கு அழைத்து அங்கு ….ஒரு டவுன்ஹால் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தார். அந்நிகழ்ச்சியில் 1200 பேர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டிருந்தனர். ஏராளமான இளம் தொழில்நுட்ப பொறியாளர்கள் மிகுந்த உற்சாகத்துடன் பிரதமரை வரவேற்றனர். …அங்கு மோதியிடம் மார்க் பார்வையாளர்களின் கேள்விகளைக் கேட்டார். ..நாற்பதாயிரத்திற்கும் மேலான கேள்விகள் ..வந்திருந்ததாக மார்க் குறிப்பிட்டார்.
(பதிலில் மோதி), இந்தியாவில் இரண்டரை இலட்சம் பஞ்சாயத்துகள் உண்டு. அடுத்த ஐந்து வருடங்களுக்குள் அனைத்து பஞ்சாயத்துக்களையும் இழை ஒளியிய வடம் மூலமாக இணைக்க விரும்புகிறோம். ….
1.எண்ணியல் நுட்பமும் அதன் பயன்பாடுகளும் படித்தவர்களுக்கும் பணக்காரர்களுக்கும் மட்டுமே உதவி செய்யக் கூடிய பயன் படுத்தக் கூடிய ஒரு தொழில்நுட்பம் என்று பலரும் தவறாக நம்புகிறார்கள் –நான் எண்ணியல் நுட்பத்தை சாதாரண மக்களின் பயன்பாட்டுக்கான ஒரு சக்தி வாய்ந்த கருவியாக…. மக்களை வளப்படுத்த.. அவர்களின் கனவுகளுக்கும் நம்பிக்கைகளுக்கும் வாய்ப்புகளுக்குமான இடைவெளிகளைக் குறைக்கும் ஒரு வாய்ப்பாகக் கருதுகிறேன். சமூக ஊடகங்கள் மக்களின் நிதி நிலையைப் பொருட்படுத்தாமல், அவர்களின் மனித மதிப்பீடுகளை மதிக்கும் கருவிகளாக உள்ளன.
2.ஈ-கவர்னன்ஸ்: எண்ணியல் நுட்பம் என்பது ஜனநாயகத்தை வலுப்படுத்துவது. … மின் – ஆளுகை மூலமாக ஊழலில்லாத, நேரடியான, வெளிப்படையான வேகமான, பொறுப்பான பங்களிப்புள்ள எளிமையான நிர்வாகத்தை மக்களுக்கு அளிக்க முடியும்.
பெரியாரும் பாசிசத்தின் கூறுகளும்
இந்தியா ஒரு முழு ஜனநாயக நாடு ஆக வேண்டும் என்று 1928 ம் ஆண்டு வெளிவந்த மோதிலால் நேரு அறிக்கை கூறியது. நாடு முழுவதும் மக்கள் கண்ட கனவும் அதுவாகவே இருந்தது. ஆனால் பெரியாரின் நிலைப்பாடு என்ன? 19 நவம்பர் 1930 குடி அரசு இதழில் இரு கேள்விகளுக்கு பெரியார் இவ்வாறு பதில் அளிக்கிறார்: இந்தியாவிற்கு ஏன் ஜனநாயக ஆட்சி கூடாது? ஜனநாயக ஆட்சி என்றால் என்ன?
அந்த மூன்று மாதங்கள் – ஜெய்ராம் ரமேஷின் "To the Brink and Back"
ஏற்கனவே, ராஜீவ் காந்தி, வி.பி சிங் மற்றும் சந்திரசேகர் அரசுகளில் பொருளாதார ஆலோசகராகவும், திட்டக் கமிஷனின் உறுப்பினராகவும் பணியாற்றியிருந்த ஜெய்ராம் ரமேஷ், அன்று பிரதமராகப் பணியேற்ற பி.வி.நரசிம்ம ராவ் அலுவலகத்தில் ஆஃபிஸர் ஆன் ஸ்பெஷல் ட்யூட்டி என்னும் பொறுப்பில் நியமிக்கப் படுகிறார். 1991 ஜூன் மாதத்தில் பணியில் சேரும் அவர், செப்டம்பர் மாதத் துவக்கத்தில் திட்டக் கமிஷனுக்கு அனுப்பப் படுகிறார். சரியான காரணங்களின்றி. ஆனால், அந்த மூன்று மாதங்களில் இந்தியாவின் பொருளாதாரப் பாதையில் திசையே மாறுகிறது. அந்தக் காலகட்டதைப் பற்றிய இந்தப் புத்தகம் ஜெய்ராமின் பார்வையில் இருந்து எழுதப் பட்டிருக்கிறது.
மல்லிகைப் பூவின் திகட்டாத மகிமை
கோடையின் வரவேற்கத்தக்க அம்சங்களில் ஒன்று, மல்லிகைப்பூ சீசன். சாலைகளில் ஆங்காங்கே ஒரு மரப் பெட்டியைக் கவிழ்த்துப் போட்டு பூத்தொடுத்துக்கொண்டு இருக்கும் பெண்கள் சென்னையின் அடையாளங்களில் ஒன்று. வருடம் முழுவதுமே ஓரளவு கிடைக்கும் மலரென்றாலும், இந்த சீசனில் கிடைக்கும் மல்லிகையின் – அதுவும் குண்டு மல்லிகையின் – அதிலும் மதுரை மல்லியின் வாசனையே அலாதி. தெருவில் “மல்லிகைப் பூவின் திகட்டாத மகிமை”
எமர்ஜென்சியின் கருப்பு தினங்களை நினைவுகூறல்
“இந்திராகாந்தி செய்த ஒப்பந்தத்தினால் ரூ.11 கோடி நஷ்டம் ஏற்பட்டதாகக் கூறப்பட்டது வாதத்துக்காக அதை உண்மை என்றே வைத்துக்கொண்டாலும், அந்த 11 கோடியை இந்திரா தன் வீட்டுக்கா எடுத்துச் சென்று விட்டார்? தற்போதைய அரசாங்கம் எடுத்த ஒரு முடிவினால் (மதுவிலக்கு) அரசாங்கத்துக்கு பல நூறு கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதே, அதற்காக தற்போதைய பிரதமரைக் குற்றவாளி என்று கூறலாமா?” இந்திரா காந்தி சார்பில் ஆஜரான பிராங்க் அந்தோணி இவ்வாறு கேட்டார்.
எமர்ஜென்சி நாட்குறிப்புகள் – பி.என்.டாண்டன்
பிஷன் நாராயண் டாண்டன் எமர்ஜென்சி காலத்தில் இந்திரா காந்தி அலுவலகத்தில் துணை செயலாளராகப் பணியாற்றியவர். அக்காலகட்டத்தில் பிரதமரின் செயலாளர் குழு (Prime Minister’s Secretariat (PMS)) எனும் அமைப்பாக இது இயங்கி வந்தது. அக்குழுவின் துணை செயலாளராகக் கிட்டத்தட்ட ஏழு ஆண்டுகள் அரசியல் துறையில் ஈடுபட்டு வந்தார் டாண்டன். ஆகஸ்ட் 16, 1975 முதல் ஜூலை 24, 1976 வரை கிட்டத்தட்ட அன்றாடம் நாட்குறிப்பு எழுதி வந்திருக்கிறார்.
எண்ணெய்யும் தண்ணீரும்: இயற்கைவள சாபம்
அமெரிக்காவில் எண்ணெய் /எரிவாயு எடுப்பது எல்லாம் முற்றிலும் தனியார் நிறுவனங்கள் சம்பந்தப்பட்ட தொழில். அரசாங்க நிறுவனங்கள் ஏதும் கிடையாது. எனவே, வேண்டும் என்கிறபோது வேலைக்கு ஆட்கள் எடுப்பதும், வேண்டாம் என்கிறபோது உடனே பணியாட்களின் சீட்டைக்கிழித்து வீட்டுக்கு அனுப்புவதும் ரொம்பவும் சகஜம். தனி மனிதர்களுக்கும், அவர்களை சார்ந்த குடும்பங்களுக்கும் இந்த நிரந்தரமில்லா தன்மை பெரிய தலைவேதனைதான் என்றாலும், அவர்களுக்கு இது தெரிந்த/பழகிய விஷயம்தான். வேலை போய்விட்டது என்பதில் தனிமனித அவமானம் எதுவும் கிடையாது.
எண்ணெய்யும் தண்ணீரும்: விடாக்கண்டன்களும், கொடாக்கண்டன்களும்
பக்கத்தில் உள்ள படத்தை நீங்கள் எங்காவது பார்த்திருக்கலாம். அதில் இருப்பது ஒரு இளம் பெண்ணா அல்லது ஒரு வயது முதிர்ந்த பாட்டியா என்பது நீங்கள் படத்தை எப்படி பார்க்கிறீர்கள் என்பதை பொறுத்த விஷயம். பூமியில் எவ்வளவு எண்ணெய்யும் எரிவாயுவும் ஒளிந்திருக்கின்றன என்பதும் நாம் அலசும் விதம், தொழில்நுட்ப முன்னேற்றங்கள் முதலிய விஷயங்களைப் பொறுத்து பாட்டியிலிருந்து இளம்பெண்ணாக மாறிக்கொண்டிருக்கிறது! நாம் ஐந்தாம் வகுப்பில் தெரிந்து கொண்டதுபோல், இருந்து அழிந்த உயிரியல் எச்சங்கள் பூமிக்கடியில் புதைந்து போனபின், பூமியின் உள்ளே நிலவும் வெப்பமும், அழுத்தமும் பல்வேறு ரசாயன மாற்றங்கள் வழியே அவற்றை சமைத்து கச்சா எண்ணெய்யாகவும் எரிவாயுவாகவும் மாற்ற பல்லாயிரக்கணக்கான வருடங்கள் ஆகும் என்ற புரிதலில் மாற்றம் ஏதும் இல்லை.
ஈராக்கில் ஜனநாயகம்
“ஜனநாயகம் வரும்வரை, அதாவது அமெரிக்கா உள்ளே புகும் முன்னர், ஒரு சில உதிரிக்குழுக்கள் தவிர பலருக்கு ஷியா மற்றும் ஸுன்னி பிரிவினர் எதிரிகள் என்பதே தெரியாது. சதாமின் இரும்புப் பிடியில் ஈராக்கியர்களுக்கு மதப்பிரிவுசண்டை போடக்கூட நேரமில்லை. வேறு வார்த்தைகளில் சொல்வதானால் பிழைத்திருக்கவும், குடும்பத்தைப் பட்டினியின்றி வைத்திருக்கவுமே ஓடிக்கொண்டிருந்தபோது பிரிவினைகளை பற்றி சிந்திக்க நேரமிருக்கவில்லை. ஷியா, ஸுன்னிகள், கிறிஸ்தவர்கள், அசிரியர்கள், துர்க்மான்கள் இன்னும் சில பிரிவுகள் என எல்லோரும் ஒற்றுமையாய்த்தான் இருந்தோம். நாட்டில் வளமிருந்தும் எங்கள் கைகளில் காசில்லாமல் இருந்ததாலும், அடிப்படைவாதத்தைத்தான் குரான் சொல்லிக்கொடுக்கிறது என்பதை எங்கிருந்தோ புதிதாய் வந்தவர்கள்…
பங்களாதேஷ் பயணம் – 2
ஏப்ரலில் நான் மீண்டும் டாக்காவும் சிட்டகாங்-கும் போக தீர்மானமாயிருந்தது. தற்போது நடக்கும் வன்முறைகளால், பயணத்தைத் தள்ளிப்போட்டுவிட்டேன். சிட்டகாங் போய் அங்கிருந்து காக்ஸ் பஜார் என்ற கடற்கரை நகரில் விற்பனைத்துறையின் கூட்டம் நடத்த முடிவாயிருந்தது. உலகின் மிக நீளமான, தொடர்ந்து நீண்டிருக்கும் கடற்கரை என்று புகழ் பெற்றது காக்ஸ்பஜார் 120 கிமீ நீளத்திற்கு அழகிய மணல் பரப்பும், பொன்னான சூரியோதய, அஸ்தமன காட்சிகள், அருமையான மக்கள் என்று டாக்காவில் விளம்பரப்படுத்தியிருந்தார்கள். Beautiful Bangladesh என்ற அடைமொழியுடன் அரசு எப்படியும் அதனை தாய்லாந்தின் பட்டாயா, இலங்கையின் கால்லெ போல சுற்றுலா வரும் வெளிநாட்டவர் குவியும் இடமாக்க வேண்டுமென நினைக்கிறது.
பங்களாதேஷ் பயணம்
இந்த அனுபவங்கள், பங்களாதேஷ் குறித்தான என் முன்முடிவுகளை மாற்றியது. கற்றவர்கள், திறமையாளர்கள் என்ற ஒரு தட்டில் போட்டி கடுமையாக இருக்கிறது. ஆனால் திறமைக்கு , பாலின வேறுபாட்டைவிட, மதத்தைவிட மதிப்பிருக்கிறது. ஒருவேளை உலகளாவிய போட்டியை சந்திக்கும் நிறுவனங்கள், வெளிநாடுகளிலிருந்து வந்து பணிபுரியும் மேலாளர்கள் கொண்டு வந்த நல்ல நிர்வாகப் பழக்கங்கள் காரணமாக இவ்விளைவுகள் இருக்கலாம். இதே ஆரோக்கியமான சூழல் மத்திய ரகத் தட்டில், கீழ்த்தட்டில் இருக்குமா என்று தெரியவில்லை.