கருக்கலைப்பு உரிமை- அமெரிக்க அரசியலின் வினோதங்கள்

இவர்களில் கணிசமானோர் வறுமைக் கோட்டுக்கு கீழே வாழ்பவர்கள். வேலை இழப்பு, குடும்ப வன்முறை காரணமாக தனித்து விடப்பட்டவர்கள், ஆதரவற்றவர்கள், பொருளாதார பின்னடைவில் சிக்கியவர்கள் என பட்டியல் நீளுகிறது. இந்த தீர்ப்பின் மூலமாக இனி இவர்கள் கருக்கலைப்பு செய்து கொள்ள முடியாதவர்களாகி விடுவர். இந்த வருடத்தில் மட்டும் 100,000 பெண்கள் கருக்கலைப்பு செய்ய முடியாதவர்களாகி விடுவர் என்றொரு ஆய்வறிக்கை கூறுகிறது. இதனால் இந்தப் பெண்கள் பல்வேறு இன்னல்களை எதிர்கொள்ள வேண்டிவரும். இவர்களின் மனநிலை மற்றும் உடல்நிலை பாதிப்புகள், பொருளாதார சிக்கல்கள், விருப்பமில்லாத உறவில் நீடிக்க வேண்டிய கட்டாயம், குழந்தைகள் பிறந்த பின்னர் அவர்களை வளர்க்க போதுமான ஆதரவில்லாத நிலமை என பெண்களுக்கான பாதிப்புகளுக்கான தீர்வுகள் அல்லது மாற்றுத் திட்டங்கள் எதனையும் இந்த தீர்ப்பு பேசவே இல்லை.இச்சட்டம் பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களைக் கூட கருத்தில் கொள்ளவில்லை என்பதே பெண்களின் மீதான வன்முறை தான். மேலும், கருத்தடை செய்து கொள்பவர்களுக்கும் கருவைக் கொன்ற குற்றவாளியாக கருதி தண்டனைகள் வழங்குவதும் பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதி.

600 மில்லியன் டாலர் செலவு! அதே பழைய முடிவு!!

அரசியலில் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெறும் கட்சியே நிலைத்த ஆட்சியைத் தர முடியும் என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபணமாக்கியுள்ளது கனடாவில் நடந்த சமீபத்திய தேர்தல். உலகிலேயே பரப்பளவில் இரண்டாவது பெரிய நாடும் மக்கள் தொகையில் அதிகமுள்ள நாடுகளில் 38வது இடத்தை வகிக்கும் கனடாவில் 38 million மக்கள் வசிக்கிறார்கள். “600 மில்லியன் டாலர் செலவு! அதே பழைய முடிவு!!”

”ஆசிய அமெரிக்கர்கள்” – அமெரிக்காவில் மிகையாகும் வெறுப்பரசியல்

இன்று அமெரிக்க மக்கள் தொகையில் ஒரு சதவிகிதம் மட்டுமே உள்ள இந்திய வம்சாவளியினர் அமெரிக்காவின் துணை ஜனாதிபதி பதவி வரை எட்டியிருப்பது மற்ற அனைவரின் கண்களை உறுத்திக் கொண்டேதான் இருக்கிறது. தற்போது அமைந்திருக்கும் பைடன் அரசில் பல்வேறு உயர் பதவிகள் இந்தியர்களுக்குத் தாரை வார்க்கப்பட்டிருப்பதாக பலரும் வெளிப்படையாகவே புலம்பி வருவதையும் மறந்துவிடக் கூடாது.
சீனர்களிடம் காட்டப்படும் வெளிப்படையான வெறுப்புணர்வு, இந்தியர்களிடம் இலைமறையாக காட்டப்படுகிறது என்பதுதான் தற்போதைய நிதர்சனம்.

அமெரிக்காவில் இந்தியர்களின் கை அரசாங்க பதவிகளிலும் ஓங்குகிறதா?

இந்தியர்கள் என்றால் மருத்துவம், கணிணி சார்ந்த துறைகளில் மட்டுமே கோலோச்சுகிறவர்கள் என்கிற பொதுக்கருத்து இந்த நியமனங்களின் மூலமாக உடைபட்டிருக்கிறது. பைடனின் ஆட்சி அதிகாரத்தில், துணை அதிபரில் துவங்கி நிர்வாகத்தின் அனைத்து மட்டங்களிலும் பரவலாக இந்திய முகங்கள் தென்பட ஆரம்பித்திருப்பது நம்பிக்கை தரும் நல்ல மாற்றம்.

பைடனின் மந்திரி சபை

அமெரிக்காவில் அதிபர் தேர்தல் முடிவடைந்து ஒரு மாத காலம் ஆகிவிட்டது. இன்று வரை அதிபர் ட்ரம்ப் தான் தேர்தலில் தோற்றுவிட்டதை ஒப்புக்கொள்ளவும் இல்லை, தேர்தலில் வெற்றிபெற்ற பைடனை புதிய அதிபராக அவர் அங்கீகரிக்கவும் இல்லை.  நடந்து முடிந்த தேர்தலில் ஏகப்பட்ட முறைகேடுகள் நடந்திருப்பதாகவும், பைடன் தரப்பினர் மோசடி செய்து “பைடனின் மந்திரி சபை”

ட்ரம்ப் விட்டுச் செல்லும் எச்சங்கள்

பழமை விரும்பும் நீதிமன்றத்தை அமைத்துச் சென்ற டிரம்ப் பரபரப்புக்கு பஞ்சமில்லாத அமெரிக்க அதிபர் தேர்தலுக்குச் சில தினங்களே இருந்த நிலையில் உச்ச நீதிமன்ற நீதிபதி நியமனத்தில் ட்ரம்ப் அரசு காட்டிய ஆர்வமும் அவசரமும் ஜனநாயக கட்சியினரிடையே பல கேள்விகளை எழுப்பியது. மறைந்த உச்ச நீதிமன்ற நீதிபதி ரூத் கின்ஸ்பெர்க்கின் “ட்ரம்ப் விட்டுச் செல்லும் எச்சங்கள்”

அமெரிக்கா உண்மையில் உலகில் எவ்வளவு நல்லது செய்திருக்கிறது?

கத்தோலிக்கக் கிறித்தவர்களும், கத்தோலிக்கக் கொள்கையை மறுத்துப் பிரிந்துசென்று போப்பாண்டவரின் ஆட்சிக்கு எதிரான கொள்கையைப் பின்பற்றுகிற பிராடஸ்டன்டுகளும் உடன்படிக்கையில் கையெழுத்திடுகிறார்கள். குண்டு வெடிப்புகளும் தீவிரவாத அச்சுறுத்தல்களும் மறைந்து அரசியல் போட்டி உருவாகிறது.

ஃப்ளோரிடா மாநிலத்தில் வாக்காளர் பிரச்சனை

1960-1970களில் ‘ஜிம் க்ரோ சட்டங்கள்’ நீக்கப்பட்ட பிறகு, குற்றம் புரிந்தவர்களாக அறியப்படுபவர்கள், தண்டனைக் காலம் முடிவடைந்தவுடன் , பல மாநிலங்களில் வாக்களிக்க அனுமதிக்கும்போது, ஃப்ளோரிடாவும் வேறு சில மாநிலங்களும் அந்த தடையை மாற்றிக் கொள்ளவே இல்லை. மேலும் இம்மாநிலங்களில் போதை மருந்து குற்றங்களுக்காக அதிக அளவில் கறுப்பர்கள் சிறைத் தண்டனை பெறுகிறார்கள். இதனால் ஐந்தில் ஒரு கறுப்பர் வாக்களிக்கும் உரிமையை இழக்கிறார்.

அமெரிக்க ஜனநாயகக் கட்சி மாநாடு-2020

மூன்றாம் நாள் மாநாட்டில் முன்னாள் அதிபர் வேட்பாளர் ஹில்லரி கிளிண்டன், சபாநாயகர் நான்சி பெலோசி, செனட்டர் எலிசபெத் வாரன், முன்னாள் காங்கிரஸ் உறுப்பினர் கேபி கிப்பர்ட்ஸ், துணை அதிபர் வேட்பாளர் கமலா ஹாரிஸ் எனப் பெண்களின் குரலே ஓங்கி ஒலித்தது.

அன்றைய தினம் அனைவரும் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்தது முன்னாள் அதிபர் ஒபாமாவின் பேச்சுதான்……கடந்த நான்கு வருடங்களில் அதிபர் ட்ரம்ப் மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்தியதோடு, தன்னுடைய முதிர்ச்சியற்ற, அடாவடித்தனமான பல அரசியல் நிர்வாக முடிவுகளினால் நாடு பலவகையிலும் தன் மதிப்பை இழந்து எல்லாத்தரப்பிலும் பாதிக்கப்பட்ட, அமைதியற்ற ஒரு தேசமாக மாறியிருப்பதாகக் குற்றம் சாட்டினார். இந்த அவலத்தில் இருந்து அடுத்த நான்கு ஆண்டுகளில் நாட்டை மீட்டெடுக்க, அனைவரையும் அரவணைத்துச் செல்லக்கூடிய பண்பான, மனிதநேயம்கொண்ட பைடனே பொறுத்தமான நபராக இருப்பார் – என்பதாகப் பேசினார் ஒபாமா.

அமெரிக்க அதிபர் தேர்தல் 2020

தமிழகத்து ஷ்யாமளாவிற்கும், ஜமைக்காவின் ஹாரிஸுக்கும் அமெரிக்க மண்ணில் பிறந்தவர் தான் கமலா ஹாரிஸ். தன் பெயரைத் தவிர வேறெந்த இந்திய அடையாளங்களையும் முன்னிருத்தாதவர் கமலா. அவரின் சிறுவயதிலேயே பெற்றோர்கள் பிரிந்து தாயிடம் வளர்ந்திருந்தாலும் தந்தையின் வழியில் தன்னை கறுப்பின கிறிஸ்தவ பெண்ணாக, ஆஃப்ரிக்கன் அமெரிக்கனாகவே அடையாளப்படுத்திக் கொள்கிறவர். கறுப்பின அமெரிக்கர்களுக்காக, தனியாரால் நடத்தப்படும் ‘ஹாவர்ட் பல்கலை’ யில் படித்துப் பட்டம் பெற்றிருக்கிறார்.

குறைந்த தண்டனை, அதிக நீதி

தற்போது நடந்து கொண்டிருப்பது கருப்பர்களுக்கும் வெள்ளை அமெரிக்கர்களுக்குமான போராட்டம் மட்டுமல்ல. அனைத்து சிறுபான்மையினரும் இணைந்து ஆதிக்க மனோபாவ வெள்ளையினத்தவரை எதிர்த்து நடத்த வேண்டிய போராட்டம். “Black Lives Matter” இயக்கம் பற்றிப் பேசவே அஞ்சும் இந்தியர்கள் ஏராளம். அது கருப்பர்களுக்கானபிரச்னை என்று எளிதில் கடந்து விடுவதும் முறையானதல்ல.

விழித்தெழுந்த அமெரிக்க மக்கள்!

வரலாற்றில் முதல் முறையாக நாடு முழுவதும் காவல் துறையின் அடாவடித்தனத்தையும் நிற பேதத்தையும் மக்கள் உணர்ந்து கருப்பு அமெரிக்கர்களுக்கு அதிக அளவில் வெள்ளை அமெரிக்கர்கள் மற்றும் புலம் பெயர்ந்தவர்களின் ஆதரவு பெருகியதும் இப்போராட்டத்தை வழிநடத்திய “Black Lives Matter” இயக்கத்திற்கு கிடைத்திருக்கும் மாபெரும் வெற்றியாகும்.

இரண்டாவது பணக்கார மாநிலத்தில் – இலவச உணவுக்கு ஒரு மைல் நீள வரிசையில் கார்கள்

உணவு வங்கிகள் பெருகி, அமெரிக்காவுக்கு உணவளிப்பு (Feeding America ) என்ற புது அடையாளம் பெற்று, 200 க்கும் அதிகமான உணவு வங்கிகள் இணைந்த நாடு தழுவிய பிணையமாக வளர்ந்து, உணவு வங்கிகளை சார்ந்துள்ள பொட்டண உணவறைகள் (food pantries), சிற்றுணவகம் (soup kitchens), மற்றும் பிற சமுதாய முகமைகள் வழியாக 46 மில்லியன் மக்களுக்கு உணவளிக்கக் கூடிய லாப நோக்கில்லா பசியாற்று (hunger relief) நிறுவனமாக வளர்ந்திருக்கிறது. இது வருவாய் நோக்கில் அமெரிக்கத் தொண்டு நிறுவனங்களில் இரண்டாமிடம் வகிப்பதாக ஃபோர்ப்ஸ் கம்பெனியின் மதிப்பீடு கூறுகிறது.

தேர்தல் சடுகுடு…இது அமெரிக்க ஸ்டைல்

நியூ ஹாம்ப்ஷயர் மாநிலத்தில் 24 மக்கள் பிரதிநிதிகளும், 9 கட்சிப் பிரதிநிதிகளும் இருக்கின்றனர். இந்தத் தேர்தலில் வெற்றி பெறும் வேட்பாளர்கள் மக்கள் பிரதிநிதிகளின் ஆதரவை முழுமையாகப் பெறுவார்கள். அதிபர் தேர்தலுக்கு ஒன்பது மாதங்கள் இருக்கும் நிலையில் இந்த ஆரம்ப கட்ட ப்ரைமரியில் நம்பிக்கையான வேட்பாளர்கள் அடையாளம் காட்டப்படுவார்கள் என்பதாலும், அடுத்தடுத்து நடைபெறும் ப்ரைமரிகளில் அவர்கள் எவ்வாறு செயல் படுகிறார்கள் என்பதைப் பொறுத்துதான் இறுதி நிலவரம் தெரியவரும்.