அவர் காட்டிய இடத்தில் சுவரின் மேல்பூச்சு இடிந்து விழுந்திருந்தது. உள் சுவரில் சில சித்திரங்கள் காணப்பட்டன. அப்ஸர ஸ்திரீகள் இருவர் நடனமாடிக் கொண்டிருந்தார்கள். அவர்களுடைய சலங்கை சப்தம் என் காதில் ஒலித்தது. (சிறிது சந்தேகப்பட்டுத் திரும்பிப் பார்த்தபோது, எங்களுடன் வந்தவர்களில் ஒருவர் தமது பையில் பணம் இருக்கிறதா என்று குலுக்கிப் பார்த்துக் கொண்டார் என்று தெரிந்தது.) நடன மாதர்களுக்கு எதிரில் சிவபெருமான் புலித்தோல் மீது யோகாசனத்தில் வீற்றிருந்தார். அவருக்குப் பின்னால் பூதகணங்கள். அருகில் படுத்திருக்கும் நந்தி. சற்றுத் தூரத்தில் ரிஷிகள் பக்திபரவசமாய் நிற்கும் காட்சி.
Category: அனுபவம்
பானுகூல் சமையலறை ராகங்கள்
இசையுலகின் கந்தர்வன் ஆன குமார் கந்தர்வ் அவர்களின் இல்லத்தில் சுருதியும் லயமும் ஒன்றிணைந்து இனிய இசையை வழங்குவது போல், பல்வேறு கலாச்சார ருசிகளும் பல வகை செய்முறைகளும் சேர்ந்து நாவுக்கினிய, ருசியும் மணமுமான உணவும் செய்யப்பட்டது. செவிக்கினிய இசையும் வயிற்றுக்கான அறுசுவை உணவும் ஊடும் பாவும் போல இணைந்து உறவாடின. இதோ, குமார் கந்தர்வ் அவர்களின் மகள் கலாபினீ அதைப் பற்றி சுவைபடக் கூறுகிறார்:
கலாஸ்ஸோவை வாசித்தல் – பாகம் I
எழுத்தாளன் முடிக்கும் இடத்தில் வாசகன் துவங்குகிறான். வெளிப்படையான விஷயத்தைப் பெரிதுபடுத்துகிறாய் என்று ஒருவர் முரண்படலாம், ஆனால் இந்த விஷயத்தில் இப்படிச் சொல்வது ஒன்றும் அவ்வளவு மோசமான தேய்வழக்கல்ல.
ஓய்வுக் காலச் சேமிப்பும் அதை அபகரிக்க அரசாங்கம் நடத்தும் போரும்
ஒரு சேமிப்புத் திட்டத்தை ஆரம்பித்து அமெரிக்க மக்களை வலுக்கட்டாயமாக வேலைக் காலத்தில் சேமிக்க வைத்துப்பின் அவர்களது ஒய்வுக் காலத்தில் வட்டியுடன் அச்சேமிப்பைத் திருப்பாமல், பிற்பாடு பங்கேற்பவர்கள் பணத்தை ஒய்வு பெற்றவர்களுக்கு அளிக்கும் ஒரு பான்சி (ponzi) திட்டத்தை அரசாங்கம் நிறுவியது. இத்திட்டம் மற்ற பான்சி திட்டங்களைபோலவே, பங்கேற்பவர்களிடமிருந்து வரும் தொகை ஒய்வு பெற்றவர்களுக்குக் கொடுக்கப்படும் தொகையைவிட அதிகமாக இருக்கும் வரைதான் நடைபெறும்.
பிபூதிபூஷணின் மின்னல்
பஞ்சத்தை எப்படியாவது சமாளித்துவிடலாம் என்று நினைத்திருந்த கிராமத்தினர், பட்டினி கிடந்து ஒருவர் செத்தும் போகக்கூடும் என்ற அதிர்ச்சியான உண்மையை நேருக்கு நேர் பார்க்கிறார்கள். அந்தச் சாவுதான் பின் நிகழப்போகவிருக்கும், பெருமழைக்கான, பிரளயத்துக்கான முதல் மின்னல் அறிகுறி.
காந்தியை நேசித்தவர்! காந்தியை சுவாசித்தவர்!!
கல்யாணம் அவர்கள் இறப்பதற்கு சுமார் 10, 15 நாட்களுக்கு முன்பு என்னை தொலைபேசியில் அழைத்து ”இன்னும் இரண்டு நாட்களில் நான் இறந்து விடுவேன். நீங்கள் எப்போ வீட்டிற்கு வருவேள்?” என்று கேட்ட போது ”நான் நிச்சயம் வருகிறேன். நீங்கள் அப்படி ஒன்றும் இறக்க மாட்டீர்கள். ஒரு வாரம் கழித்து “காந்தியை நேசித்தவர்! காந்தியை சுவாசித்தவர்!!”
காருகுறிச்சியைத் தேடி… (2)
காருகுறிச்சியார் வளர்ந்து வரும் காலத்தில் அவரை ஆடி அமாவசைக்கு வாசிக்க ஏற்பாடு செய்துள்ளனர். அவர் தன் நாட்குறிப்பில் தவறாக ஆனி மாதத்தில் குறித்துக் கொண்டு ஒரு மாதம் முன்பே ஏரலுக்குச் செல்கிறார். சென்றபின்தான் நடந்த குளறுபடி தெரிய வருகிறது. ஆடி அமாவாசைக்கோ வேறு ஓர் இடத்தில் வாசிக்கக் காருகுறிச்சியார் ஒப்புக் கொண்டுள்ள நிலையில், “கவலைப்படாதீர்கள். நான் பொறுப்பெடுத்து சிறப்பான மாற்றுக் கச்சேரியை ஏற்பாடு செய்து தருகிறேன்,” என்று வாக்களிக்கிறார். சொன்னபடி தன் குருநாதர் டி.என்.ராஜரத்தினம் பிள்ளையின் கச்சேரியை ஏற்படுத்திக் கொடுக்கிறார். அப்போது ஏற்பட்டப் பழக்கம் …
சருமம், டாக்டர் மற்றும் முனைவர்
பின்னர் மருத்துவர் தகுந்த பாதுகாப்புடன் உடற்கவசம், முகக்கவசம், முகத்தின் மேல் மற்றுமொரு வெல்டிங் செய்பவர்கள் அணிவது போன்ற பாதுகாப்புக் கவசமென்று அணிந்து உயிரி ஆயுதங்கள் பயன்படுத்தப்படும் போரில் கலந்துகொள்ளும் வீராங்கனையைப்போலவும், தமிழ் சினிமாக்களில் வெடிகுண்டை செயலிழக்க வைக்கும் நிபுணரைப்போலவும் வந்து இருக்கையில் அமர்ந்தார்.
இணையவழி: கற்றலும் கற்பித்தலும்
பல வண்ண உடைகளில் கிளர்ந்து ஒளிரும் இளமையுடன் இருக்கும் மாணவர்களைக் கண்ணுக்கு கண் சந்தித்துப் பாடமெடுத்ததற்கும் மாற்றாக, நான் யாரை நோக்கிப் பேசிக்கொண்டிருக்கிறேன் என்பதே தெரியாமல், நான் பேசிக்கொண்டிருப்பதை யாரேனும் கவனிக்கிறார்களா இல்லையா என்றும் தெரியாமல் 40 / 50 நிமிடங்கள் பேசுவதென்பது பெரிய கொடுமையாக இருந்தது.
ராம் என்றொரு நண்பன்
எழுபதுகளில் இலக்கிய உலகில் இருந்த அனைவரும் வெங்கட் சாமினாதன் மூலம்தான் எனக்கு அறிமுகம். ராமும் அப்படித்தான். கசடதபற பத்திரிகையில் நான் எழுதிய “அம்மா ஒரு கொலை செய்தாள்” கதை வெளிவந்தபின் நான் சென்னை வந்தபோதெல்லாம் அலைந்து திரிந்து வருபவர்களுக்கு தன் வீட்டைத் திறந்து வைத்திருந்தார்கள் ராமும் அவர் தோழி “ராம் என்றொரு நண்பன்”
அந்தக்காலத்து தீபாவளி
Any sufficiently advanced technology is indistinguishable from magic. – Arthur C. Clarke தீபாவளி சமயத்தில் ஒவ்வொரு வருடமும் அந்தக்காலத்தில் இந்தப் பண்டிகையை எப்படிக் கொண்டாடுவோம் என்று விவரித்து ஒரு சிறுகதையோ கட்டுரையோ வந்து சேரும். அந்தக்காலம் என்று கருதப்படுவது ஒரு நாற்பது ஐம்பது வருடங்களுக்கு “அந்தக்காலத்து தீபாவளி”
பெயரில் என்ன இருக்கு?
நான் கல்லூரியில் பயின்று கொண்டிருந்த நேரத்தில், சுமார் ஆயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள் படித்த அக் கல்லூரியில் ‘செல்லப்பா’ என்ற பெயர் கொண்டவன் நான் ஒருவனாகத் தான் இருந்தேன் என்று மங்கலாக ஒரு நினைவு. சுப்பிரமணியன்களும் ஸ்ரீநிவாசன்களும் கோலோச்சிக் கொண்டிருந்த அந்த வேளையில், ஒரு வித்தியாசமான பெயருடன் இருந்ததால் சிறிது “பெயரில் என்ன இருக்கு?”
கருவாய் உயிராய்
என்னைப் பயமுறுத்த வேண்டாம் என்று ஒரு சிற்றுந்தில் என் கணவர் சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்குக் கொண்டுவந்தார். நாங்கள் இறங்கும் நேரம் ஐந்து தாதிகள் வாசலில் நின்று கொண்டிருந்தார்கள். என் தலையைத் தடவி அணைத்த அவர்கள் யாரும் தமிழ் பேசுபவர்கள் அல்லர். அரசு மருத்துமனை பற்றிய என் பிம்பம் முற்றிலும் உடைந்தது.
எஸ்.பி.பி. என்னும் H2O
இசையறிவும் திரையிசையின் நுணுக்கங்களும் அறிந்த எத்தனையோ திறமையான எழுத்தாளர்கள் இருக்க, எஸ்.பி.பி குறித்து சொல்வனத்திற்காக எழுத என்னை அழைத்திருக்கிறார்கள். என்றாலும் ஒரு பாமர ரசிகனாக சமீபத்தில் மறைந்த எஸ்.பி.பி குறித்த என் மனப்பதிவுகளை எழுத முயல்கிறேன். என்னைப் போன்ற பல பாமர ரசிகர்களின் பிரதிநிதித்துவப் பதிவாகவும் இது அமையக்கூடும் “எஸ்.பி.பி. என்னும் H2O”
1965ல் ஒரு பஸ் பயணம்
இப்போ நிலைமை எப்பிடின்னு தெரியலை. அந்த நாட்களிலே டிரைவரோட வேலை வண்டி ஓட்டுறது மட்டும் இல்லை. அவர் ஒரு ஆடிட்டராகவும் மாத்து ஜோலி பார்ப்பார். கண்டக்டருக்கு ஒரு கவுண்டர்-பாலன்ஸ் மாதிரி. இது ஒரு பிரமாதமான, தனித்துவமான செயல்முறை எல்லாரையும் நேர்மையாய் வைத்திருப்பதற்கு. தூத்துக்குடி பஸ் ஸ்டாண்டைவிட்டு வெளியே வந்து, ஏறக்குறைய மூணாம் மைல் பக்கம் முதல் நிர்வாக நிறுத்தம் செய்யப்படும், டிரைவரும் கண்டக்டரும் கலந்து தீவிர ஆலோசனை செய்தபிறகு. இந்தச் சின்ன தூரத்தில் ஒரு நாலு தடவை அண்ணாச்சிகள், பாட்டையாக்கள், ஆச்சிகள், குஞ்சுகள், குளுவான்கள் பஸ்ஸை இஷ்டப்படி நட்ட நடு ரோட்டில் நிறுத்தி, தங்கள் மூட்டை முடிச்சுகளுடன் சாகவசமாக ஏறுவார்கள். அப்படி என்ன அவசரம் என்ற தங்கள் வாழ்க்கைக்கு ஏற்ற நோக்கைக் கடைப்பிடிப்பவர்கள் என்பதை எல்லோருக்கும் நிதர்சனமாகத் தெரியப்படுத்திவிடுவார்கள்.
தீராத விளையாட்டுப் பிள்ளை
இந்த வீட்டில் கிருஷ்ணன் வரும் வழி நீளம். வாசலில் இருந்து ஒரு 20 அடி நடை, பிறகு ஃபர்ஸ்ட் லெஃப்ட் எடுத்து , டைனிங் டேபிள் பக்கம் ஒரு 15 அடி நடக்க வேண்டும். அங்கேதான் பூஜை அலமாரி. கிருஷ்ணனை அடி மேல் அடி வைத்து கூட்டிக்கொண்டு போவதற்குள் எனக்கு மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கியது. லாக்டௌன் போது ஏறிய வெய்ட் வேறு! பாதம் போடப் போட நீளம் குறைந்த பாடில்லை. ஒரு ஐந்து நிமிடம் உட்கார்ந்து கொண்டேன்.
இரண்டு வடையும் இளையராஜாவும்
ஒரு முறை மருத்துவமனையில் இருந்து திரும்பி வந்த தந்தையிடம், அவருக்கு வாழ்க்கையில் நிறைவேறாத ஆசை ஏதாவது இருக்குமோ என்று பலவிதமாகக் கேட்டுப் பார்த்தேன். அவர் ஏதும் பிடி கொடுப்பதாக இல்லை.
“அப்பா, உனக்கு மகிழ்வாக என்னால் இப்பொழுது ஏதாவது செய்ய முடியுமா?” என்றேன்.
“சுடச்சுட ரெண்டு வடை கிடைக்குமா?” என்றார்!
பொலான்யோவை வாசித்தல் அல்லது மடையுடைத்த மலப்புயல்
“என் புத்தகங்களும் குழந்தைகளும் மட்டுமே என் தேசம்” – ரொபெர்த்தோ பொலான்யோ “கவிதைகள் படிப்பதற்கு ஒரு காலம், முஷ்டி மடக்குவதற்கு ஒரு காலம் உண்டு,” – சாவெஜ் டிடெக்டிவ்ஸ் நாவலில் ரொபெர்த்தோ பொலான்யோ “ஆக, அறிந்து கொள்ளும் ஆர்வமும் நேர்மையும் நாம் மிகவும் நேசிப்பவையும், எல்லாம் நம்மைக் கைவிடுகின்றன. “பொலான்யோவை வாசித்தல் அல்லது மடையுடைத்த மலப்புயல்”
காணாமல் போனவர்கள்
உரல் இடிக்க, முறுக்கு சுத்த, அதிரசம் சுட என்று பண்டிகைகளின் போது அம்மாக்களுக்கு உதவ வரும் பெண்கள் அத்தைகளாகவும், ஆச்சிகளாகவும் மாறி இருக்கின்றனர். எங்கள் வீட்டில் சுத்து வேலை பார்க்கும் அத்தையிடம் வீட்டையே ஒப்படைத்து விட்டு நாங்கள் நாள்கணக்கில் ஊருக்குச் சென்று இருக்கிறோம். அப்போது பெரிய விஷயமாகத் தெரியாதது, இப்போது வியப்பின் உச்சிக்கே கொண்டு செல்கிறது.
வண்டல் படிய ஓடும் நதி
அன்று சிறு பத்திரிகைகளுடைய மிகச் சிறு தொகை சந்தாவைக் கட்ட ஓராயிரம் தமிழர்கள் கூடத் தயாராக இல்லை. இன்று திரும்பிப் பார்க்கையில், நாங்கள் என்ன செய்யவென்று அதைத் துவங்கி நடத்தினோம் என்ற வியப்புதான் எஞ்சுகிறது.
அதை நடத்தியதில் எங்களுக்குக் கிட்டிய நன்மைகளில் தமிழ் நாட்டின் பல இலக்கியகர்த்தாக்களை எங்களுக்குத் தனிப்பட்ட முறையில் தெரிய வந்ததைச் சொல்லலாம். நாங்கள் ஒவ்வொருவரும் எங்களின் தன்மைகளை இந்தப் பத்திரிகையின் மூலம் தெரிந்து கொண்டோம் என்று சொல்ல எனக்கு ஆசைதான். ஆனால் அப்படி ஏதும் அற்புதமாக நடக்கவில்லை.
என்ன இயலாது என்று வேண்டுமானால் தெரிந்து கொண்டோம். என்ன கைவசம் இல்லை என்பதையும் தெரிந்து கொண்டோம். அவற்றை எப்படி அடைவது என்பதற்கு அப்பத்திரிகை அனுபவம் உதவவில்லை. ஒரு சிலருக்கு இங்கிருந்து தம் வாழ்வின் அடுத்த கட்டத்துக்கு நகர அந்த அனுபவம் உதவி இருக்கலாம். அது பற்றி அவர்கள் சொல்வதுதான் முறையாக, நம்பகமானதாக இருக்கும்.
மனத்துக்கினியவள்
நான் சென்னைக் கிறித்துவக் கல்லூரியில் எம். ஏ. படிக்க வந்தபோது பாலப்ரியா என்ற எழுத்தாளர் மூலம் சூடாமணி எனக்கு அறிமுகமானாள். பத்தொம்பது வயதிலிருந்து அவள் மரணம் நேரும் காலம் வரை என் இலக்கிய முயற்சிகளுக்கும் என் வாழ்க்கையின் பல்வேறு போக்குகளுக்கும் ஏற்ற இறக்கங்களுக்கும் என் உற்ற துணையாய் இருந்தவள் சூடாமணி. நான் எம்.ஏ படிக்க வரும் முன்பே சூடாமணியின் கதைகளைப் படித்திருந்தேன். மனத்துக்கினியவள் நாவல் முதல் பல கதைகளைப் படித்திருந்தேன். சூடாமணியின் இருவர் கண்டனர் ஆனந்தவிகடனில் 1961இல் வெளிவந்துகொண்டிருந்தது…
சங்கல்பமும் சம்பவமும் : அம்பையின் இரு நூல்களை முன்னிட்டு தமிழ்ப் பெண்ணெழுத்து – ஒரு பார்வை
இக்கதை எழுதப்பட்டது 1913-ஆம் ஆண்டு. எழுதியவர் பெயர் அம்மணி அம்மாள். “சங்கல்பமும் சம்பவமும்” என்ற பெயரில் இச்சிறுகதை விவேகபோதினி என்ற பத்திரிக்கையில் அவ்வாண்டு வெளியானது. தமிழின் முதல் சிறுகதை என்று கருதப்படும் 1915-ல் வெளியாகிய வ.வே.சு. ஐயரின் ‘குளத்தங்கரை அரசமரம்’ கதைக்கு இரண்டு வருடங்களுக்கு முன்னால் வெளியான கதை இது. சிறுகதையின் வடிவமும் படைப்புக்கணங்களும் கொண்ட ஆக்கம். ஆக இதுவே தமிழின் முதல் சிறுகதையாக இருக்கலாம் …
இன்று இந்தக்கதையை ஒரு ஆரம்ப கட்ட இலக்கிய முயற்சியின் பிரதியாக, ஒரு நவீனத்துவப் பிரதியாக வாசிக்க முடிகிறது. அதே நேரத்தில், எனக்கு இக்கதையை வாசிக்கும்போது, அந்த யுகத்தில் வெளியுலகுக்கு முதன்முதலாக வந்து எழுதிய பெண் எழுத்தாளர் ஒருவரின் இலட்சியவாதத்தைப் பிரதிபலிக்கும் கதையாகவும் பொருள் படுகிறது.
தோற்காத கடவுள்
அம்பையைப் பற்றி இந்திரா பார்த்தசாரதி எழுதிய குறிப்பு
மொழியும் மௌனமும் வாழ்க்கையும்
குறிப்பான்கள், குறிக்கப்படுபவை என எத்தனையோ விரிவான தளங்களில் மொழி பற்றியும் மொழியியல் பற்றியும் ஆராய்ச்சிகளும், நூல்களும் உள்ளன. ஆனால் அன்று மனத்தில் தோன்றியது எல்லாவற்றையும் விட முக்கியமானது மொழி என்பது தொடர்பை ஏற்படுத்த வேண்டும். இன்னும் ஒரே ஒரு நபரையாவது அது எட்ட வேண்டும். அப்படியானால் நமக்கான மொழியை, நாம் தொடர்பு கொள்ள நினைக்கும் மொழியை எவ்வாறு, எப்படித் தேர்வு செய்ய வேண்டும்? மொழி என்றால் அது தாய்மொழியாகத்தான் இருக்க வேண்டுமா? மற்ற எந்த மொழியின் கலப்பும் அற்றத் தூய்மையான மொழியாகத்தான் அது இருக்க வேண்டுமா? அந்த மொழியை மட்டும்தான் பாவிக்க வேண்டுமா? மேலும், மொழி என்பது சொற்களால் மட்டுமே ஆனதா? அது சைகையாகவும், சொற்களற்ற இசையாகவும், ஓவியமாகவும், உடலசைவாகவும், காட்சியாகவும் இருக்கக் கூடாதா? இதுபோன்ற கேள்விகளுக்குக் கொண்டுபோய்விட்டது அந்த மொட்டைமாடி உலாத்தல்.
ஊர் வேண்டேன்…
வஞ்சிக்கோட்டை வாலிபன் படத்தில் ’எத்தனை கேள்வி எப்படிச் சொல்வேன், பதில் எப்படிச் சொல்வேன்’ என்று ஒரு பாட்டு வரும். பி சுசீலா பாடியது. ’நீ எந்த ஊரு, என்ன பேரு, எந்த தேசம், எங்கிருந்து இங்க வந்தே?’ என்று அதில் ஒரு வரி வரும். அப்போதே நான் நினைப்பேன், இப்படி ஒரு கேள்விக்கு நான் பதில் சொல்ல முடியுமா என்று. பலருக்கு ஓர் ஊர் இருக்கும். அதில் ஓர் ஆறு ஓடும். அந்த ஊர் மண் அவர்களை நெகிழ்த்தும். தொடர்ந்து அவர்களை ஈர்த்துத் தன்னுடன் தக்க வைத்துக்கொள்ள அந்த ஊரில் மனிதர்களும் விஷயங்களும் இருக்கும். ஆனால் என்னைப் போன்ற நாடோடிகளுக்கு ஏது ஊர்?
‘அம்மா ஒரு கொலை செய்தாள்’ : மூவகை முரண்கள்
‘அம்மா ஒரு கொலை செய்தாள்’ கதை முழுக்கவும் முரணால் கட்டப்பட்டிருக்கிறது. இக்கதை சிறுமி ஒருத்தியின் நோக்கில் தன்மைக் கூற்றில் அமைந்திருக்கிறது. சிறுமியின் மனத்தில் பதிந்திருக்கும் அம்மாவைப் பற்றிய பிம்பமே கதை முழுக்கவும் விவரிக்கப்படுகிறது. அப்பிம்பத்தை உருவாக்க அம்மாவின் இயல்புகளுக்கும் பிறரது இயல்புகளுக்குமான முரண்கள் நேரடியாகக் கூறப்படுகின்றன.
ஆட்டத்தின் ஐந்து விதிகள் – 2
நேரடியாக பேசுவோம். விற்பனை என்பது அடிப்படையில் ஒரு பரிமாற்றச் செயல்பாடு. விற்பனையாளரும், வாங்குபவரும் இணைந்து அவர்களுக்கிடையே நிகழ்த்தும் பரிமாற்றச் செயல். இதில் வாய்ப்புகள் அதிகம் இருப்பது வாங்குபவரிடமே. ஏனெனில் ஏற்பு, மறுப்பு ஆகியவற்றில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கும் முடிவு வாங்குபவரிடம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதில் விற்பனையாளர் என்ன செய்துவிட முடியும்? வாங்குபவரை ஏற்பினை நோக்கி உந்துவதே அடிப்படையில் விற்பனையாளரின் செயல். இந்த உந்துதலைச் செய்வதில்தான் விற்பனையாளருக்கு எண்ணற்ற வழிமுறைகள் போதிக்கப்படுகின்றன.
ஏட்டுச் சுரைக்காயைக் கறியாக்குவது எப்படி?
2004 ஆம் ஆண்டின் ஒரு மதியப்பொழுதில் இருந்து மாலை வரை 6 விதமான மரணங்கள் எனக்கு தொடர்ந்து நிகழ்ந்தன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்தில் நிகழ்ந்திருந்தாலும் அனைத்து மரணங்களிலும் ஒரு ஒற்றுமை இருந்தது. அது நான் என் குடும்பத்தை ஒவ்வொரு மரணத்திலும் ஆதரவின்றி நிறுத்தியிருந்ததுதான். ஆறு முறை மரணித்த பின் அன்றிரவு உறங்கப் போகையில் என் மரணத்திற்குப் பின் என் மனைவி, குழந்தைகளின் நிலைமையினை எண்ணி இன்னும் திருமணம் ஆகியிராத நான் கண்ணீர் சிந்தும்படி ஆனது.
பர்மா வழிநடைப் பயணம் – வெ. சாமிநாத சர்மா
பல்வேறு காரணங்களினால் தாய் மண்ணை விட்டு விலகி வெளிநாடுகளில் தங்கி இருப்பவர்களின் மனநிலை, வாழ்வியல் நிதர்சனங்கள்,சொந்தங்களை விட்டு விலகியிருந்துவிட்டு தாய்நாடு திரும்பி தனக்கான புதிய அடையாளத்தை தேடிக் கொள்வதில் இருக்கும் சிரமம் அதன் வலி என பலவகையிலும் இந்த நூல் எனக்கு நெருக்கமாய் இருந்தது.
ரம்மியமான கதைகள்: நைபால் பற்றி டயனா அடில்
அடிக்கடி இம்மாதிரியான சந்தர்ப்பங்களில் அவர் வெளிநடப்பு செய்வது வாடிக்கை. அன்று நல்லவிதமாக நடந்துகொண்டார். எதற்காகவும் மற்றவர்களுக்கு அவர் நன்றி சொல்லி நான் இதுவரை கண்டதில்லை. புலம்பியபடியே விருது விழாவுக்குச் சென்று தனது காசோலையைப் பெற்றுக்கொண்டார். அவர் நல்லவிதமாகவே நடந்துகொண்டதாகவே எனக்குப் பட்டது. அந்த காலகட்டத்தில் நான் மிக சிரமத்துடனேயே அவர் மீதான என் அன்பை தக்க வைத்துக்கொண்டிருந்தேன். அதீத புத்தி கூர்மை மற்றும் நகைச்சுவை உணர்வு கொண்டவரான அச்சிறுவயதுக்காரரை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. என் அலுவலகம் இருந்த சோஹோ பகுதியின் காபி கடையில் நடந்த எங்கள் முதல் சந்திப்பு எனக்கு நினைவிலிருக்கிறது. ரொம்ப சிறியவனாகத் தெரிந்தார். மிகவும் சங்கோஜியாக …
வேற்றிடவேர் படியும் கிரணத்தின் நிறப்பிரிகை
அரட்டையாக ஆரம்பித்த பேச்சு இந்திய கவிஞர்களைப்பற்றி சுற்றி வந்து தமிழ்க் கவிஞர்கள்கள், எழுத்தாளர்கள் பற்றிய உரையாடலாக நிலைபெற்றது. தமிழின் முன்னோடியான எழுத்தாளர்கள் அமெரிக்காவைப்போல பெருவாரியான இதழியல், பதிப்பக வெற்றியின் வழி அறியப்படுபவர்கள் அல்ல என்கிற விஷயம் தமிழ் எழுத்தாளர்களை வேறுபடுத்திக் காட்டுவது. பெரும்பாலோர் வாசிக்கும் பரப்பிலக்கியம் இலக்கிய தகுதிகளுக்கு உரிய செவ்விலக்கியம் என்ற வேறுபாடு அமெரிக்காவில் அநேகமாக இல்லை. ஆனால் தமிழில் அதைப்போன்ற இருமை இருப்பதன் காரணம் என்ன என்ற திசையில் உரையாடல் சென்றது. சிறிய வாசகர் வட்டம் காரணமாக பதிப்பகத்துறை பெரும் ஆற்றலுடன் இயங்கும்படியான சூழல் அமையாதது என்பதுடன் தமிழ் எழுத்தாளர்கள் என்றுமே பதிப்பக வெற்றியை ஒரு பொருட்டாக எண்ணி அதை நோக்கி பாய்பவர்கள் அல்ல, கவிஞனாக எழுத்தாளனாக இருப்பதையே ஒரு வாழ்க்கை முறையாக …
ஏதிலி வாழ்வது எப்படி?
இப்படிதான் வளர்கிறது வாழ்க்கை. குடும்பங்கள் விரிகின்றன, பிறரது ஆசிகளும் பொறுப்புகளும் நம்மை நாடி வருகின்றன. நமக்கு வசதியான பிரதேசத்தை விட்டு வெளியேறும்போது, நாம் வளர்ந்த காலத்தில் உண்ட ரொட்டிக்கு மாறாய் வேறொன்றை உண்ணும்போது, பகுத்துணரும் மனப்பான்மை வளர்கிறது. சல்லா, சப்பாத்தி, வெந்நீர் கார்ன்பிரெட், பிடா, இன்ஜெரா, பாகெட்- வேறொரு ரொட்டியை, வேறு வகையில் காரம் சேர்ந்த உணவை உண்பது என்பது எவ்வளவு அற்புதமானது. உன் மொழிக்கு மாறாய் வேறொரு மொழியில் கனவு கண்டு கொண்டிருப்பவன் அருகில் உறங்குவது என்பது எவ்வளவு அற்புதமானது. இந்த திருமண நாள் புகைப்படத்தை நினைத்துப் பாருங்கள்
யானையைச் சுடுதல்
அங்கு ஐரோப்பியர்களுக்கு எதிரான சல்லித்தனமான காழ்ப்புணர்வு நிலவி இருந்தது. கலவரம் செய்யும் அளவிற்கு எவருக்கும் துணிவில்லை என்றாலும் ஐரோப்பிய பெண்மணியொருவர் தனியே பஜார் வீதிகளில் நடந்து சென்றால் அவர் மீது வெற்றிலைச் சாறு உமிழப்படும் என்பதென்னவோ நிச்சயம். நான் போலீஸ் அதிகாரியாக இருந்ததால் அவர்களது காழ்ப்பிற்கான இலக்காக இருந்தேன் என்பது வெளிப்படை. தங்களுக்கு பாதிப்பில்லை என்பதை ஊர்ஜிதம் செய்து கொண்டபின் அவர்கள் என்னை வம்பிழுத்தார்கள். கால்பந்தாட்ட மைதானத்தில் சுறுசுறுப்பான பர்மிய குடிம்பனொருவன் என்னை வேண்டுமென்றே தடுக்கிவிழச் செய்தபோது ஆட்ட நடுவர், அதைக் கண்டும் காணாதது போல் வேறுபக்கம் திரும்பிக் கொள்வார். பார்வையிட்டுக் கொண்டிருக்கும் கூட்டமோ கோரமான பலத்த சிரிப்பொலியொன்றை எழுப்பும். ஒற்றை நிகழ்வாக அல்லாது பலமுறை இவ்வாறே நிகழும். இறுதியில் ஏளனத்தோடு ‘மஞ்சள்’ முகத்துடன் என்னை எங்கும் எதிர்கொண்ட இளைஞர்களும், நான் கடந்து சென்றுவிட்டேன் என்பதை அறிந்துகொண்டபின் அவர்கள் என்மீதெரிந்த வசைகளும் என்னை மிகவும் எரிச்சலூட்டின. இவ்விஷயத்தில் இளம் பௌத்த பிட்சுகளே மோசமானவர்கள். ஆயிரக்கணக்கில் இருந்தாலும் அவர்களில் ஒருவருக்குக்கூட தெருக்கோடியில் நின்றுகொண்டு ஐரோப்பியர்களை கேலி செய்வதைத் தவிர வேறு வேலையேதும்…
வாசகர் மறுவினை
இசை/ நாட்டியம்/ இலக்கியம்/ நாடகம்/ சினிமா/ விளையாட்டுத் தொழில் (ஸ்பொர்ட்ஸ்) போன்றன எல்லாம் நிகழ்த்தல் துறைகள். இவற்றில் சமத்துவம் என்ற கருத்து மிக மிகப் பெயரளவில்தான் இருக்கும். அது இயங்கு களத்தை எல்லாருக்கும் சமமாக அமைக்க வேண்டும் என்ற நன்னடத்தை பற்றிய மதிப்பீடுகளால் உருவானது. இவற்றில் எல்லாவற்றிலும் மேன்மையான வழிமுறையையும் மனிதக் குரங்கு அவ்வப்போது தேர்ந்தெடுக்கிறது. அதைப் பாராட்டியே இலக்கியம், தர்ம சாஸ்திரங்கள், விவிலிய நூல்கள், ஒழுக்கப் பாடங்கள், வாய்வழிப் போதனைகள், பாட்டி/ தாத்தா கதைகள், உபந்நியாசங்கள், சர்ச்சியப் பிரசங்கங்கள், கல்லூரிகளில்/ பள்ளிகளில் அற போதனைகள், ‘ஆசான்’களின் அறக் கதைகள் எல்லாம் எழுகின்றன. மனிதக் குரங்குக்கு அதன் சிறப்பான நடத்தையை இலக்காகத் தொடர்ந்து முன்வைத்தால் அது ஒரு இலட்சிய புருஷனின் குணங்களை அடைந்து விடும் என்ற உடோப்பிய நோக்கம் இது.
ஒரு CIT மாணவனின் சிற்பம்
இன்று மாலை CIT வளாகத்திற்குள் நுழைந்தபோது எனக்கு ஒரு வினோதமான ஆசை எழுந்தது. CIT-யிலிருந்து நான் வெளியேறி 37 ஆண்டுகள் ஆகிவிட்டன. ‘இந்த 37 ஆண்டுகளையும் ஒரு Back Space விசையால் பின்னோக்கி அழித்துவிட்டு மீண்டும் ஒரு CIT மாணவனாக ஆக முடியுமா?’ என்று. அது முடியாது. கால இயந்திரங்கள் கதைகளில் மட்டுமே இயங்கக் கூடியவை. காலம் முன்னோக்கி மட்டுமே செல்லும். பாரதி சொன்னான்: ‘சென்றதினி மீளாது’. இந்தக் குகைக் கோயிலை உருவாக்கிய சிற்பிகளுக்கு முன்னால் இருந்த சவாலும் அதுதான்.
பிப்பல மரம்…
அண்டவெடிப்பின் ஆதி நொடி துவங்கி, யாதொரு இயக்க நேர்தலின் நிமித்தம் நிலைகுலைவா ஒழுங்கமைவா என்று ஆராய்வது அறிவியல். அதையும் கடந்து உயிர்களின் உருபுகளில் மேல் காலத்தின் திரிபுகளால் ஊழ் வந்தமர்ந்து உலா போவதன் ரகசியம் உணர முயல்வது ஆன்மீகம். ஆன்மீக ஊஞ்சலில் முன்னும் பின்னுமாய் ஊனை இயக்குகிறது வயது. அந்த ஆட்டத்தில் அனுபவம் பெறுகிறது மனது. அனுபவங்களை ஒன்றன் மீது ஒன்றாய் அகத்தின் மீது அடுக்கி வைத்துக் கொண்டே போவதனால் தான் வயதுக்கு அகவை என்ற சொல் ஏற்பட்டதோ?
தொல்வெளியிலிருந்து தொடரும் இசை – பாகம்-12
குருநாதர்கள் எல்லோரும் தியாகராஜ ஸ்வாமிகள் என்று தம்மைப் பற்றி நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். தியாகராஜ ஸ்வாமி லோகாயதமாகப் பணம் சம்பாதிக்காமல் உஞ்சவிருத்தி எடுத்து ஜீவனம் செய்து வந்தவர். சரபோஜி மகாராஜா தனம் சமர்ப்பித்துச் சபையில் வந்து பாட அழைத்த போது ‘நிதி சால சுகமா’ என்று பாடியவர். இவருடைய மேன்மையை இன்றிருக்கும் குருநாதர்களுடன் எந்த வகையில் ஒப்பிட முடியும்? மனமெல்லாம் பணம் புகழ் செல்வாக்கு; வாயில் மட்டும் ஆன்மீகம் தெய்வீகம்! ஜானகி ராமன் எழுதுவாரே ‘நடன் விடன் காயகன்’ என்று அது போல் தான் பெரும்பாலானவர்கள் நடந்து கொள்கிறார்கள். இதனால் தானோ என்னவோ காந்தர்வ வேதம் என்று புகழப் பட்டாலும் சங்கீதத்தை வேத அத்யயனத்துக்கு ஒரு படி தாழ்த்தித் தான் வைத்திருக்கிறார்கள்.
தொல்வெளியிலிருந்து தொடரும் இசை – பாகம்-11
மழை விட்டும் தூவானம் விடவில்லை என்கிற கதையாக முகநூல் வாட்ஸப்பும் பெரிய தொல்லையாகத் தொடர்ந்தன. என் மனைவி போடுகிற படங்களை சூசகமாக எடுத்துக் கொண்டு ஏதாவது செய்வது என்று ஆரம்பித்திருந்தார்கள். திருவள்ளுவர் படம் போட்டால் திருக்குறளைப் பாடுவது, தஞ்சாவூர்க் கோயில் படம் போட்டால் தஞ்சாவூரில் போய்க் கச்சேரி செய்வது என்று ஆரம்பித்திருந்தார்கள். ஒரு முறை என் மனைவி மண்டை ஓட்டு மாலையுடன் கையில் அசுரனின் கொய்த தலையைப் பிடித்தவாறு நிற்கும் பத்ர காளியின் படத்தைப் போட்டிருந்தாள். உடனே அங்கிருந்து ‘தாயே! நான் என்ன குற்றம் செய்தேன்?’ என்று பொருள் படும் படியாக பதில்.
தொல்வெளியிலிருந்து தொடரும் இசை – பாகம் 10
என் மனைவி அத்துடன் இதை விடுவதாக இல்லை. அவளுக்கு பொங்கிப் பொங்கி வந்தது. அப்போது ஆதித்யாவிற்கு வாய்ப் பாட்டிற்காக ஒரு வித்வாம்ஸினியிடம் ஏற்பாடு செய்திருந்தோம். இசை ஆசிரியை ஓய்வு பெறும் தருவாயில் இருந்தார். ஏற்கெனவே தந்தி வாத்யக்கார தூரத்து உறவினரிடம் கிடார் வகுப்புகளுக்காகச் சென்று கொண்டிருந்தான் ஆதித்யா. அது போதாது என்று வாய்ப்பாட்டிற்கு இந்தப் பெண்மணியிடம் போய்க் கொண்டிருந்தான். நல்ல தாட்டியான உடல்வாகு. பாடிப் பாடிப் பண்பட்ட காத்ரமான குரல். பதவியில் இருந்ததாலும் வித்வத்தாலும் இயல்பில் வந்த அதிகார தோரணை. அவரே சங்கீதத்தில் இரண்டாம் மூன்றாம் பரம்பரையைச் சேர்ந்தவர்.
இருப்பது, அல்லது இல்லாதிருப்பது
இந்த தேசத்தில் பத்து ஆண்டுகள் வாழ்ந்தபின் நான் ஒரு பத்திரிகையாளராக மாஸ்கோ திரும்பினேன், பணி நிமித்தம். நான் அன்னியமாக இருக்கும் என்று நினைத்த ஒரு தேசத்தில் எதிர்பாராதவிதமாக இயல்பாய் உணர்ந்தேன்- தனக்கென்று திறந்திருந்த வெளியொன்றில் என் உடல் தளர்ந்து கொடுத்துக் கொண்டது போல்-, வெளியேறுவது என்ற முடிவில் எனக்கு எந்த தேர்வும் அளிக்கப்படவில்லை என்பது குறித்து எனக்கு அதனால் கோபமும் இருந்தது. நான் மீண்டும் மீண்டும் திரும்பிச் சென்றேன், கடைசியில் என்னை ஒரு ருஷ்ய மொழி பத்திரிக்கையாளராக மாற்றிக் கொண்டு அங்கேயே தங்கி விட்டேன். வெளியேறியிருக்காவிட்டால் இப்படிப்பட்ட வாழ்க்கைதான் வாழ்ந்திருப்பேன் என்று என்னை நானே ஏமாற்றிக் கொண்டேன்.
டோக்கியோவின் இளையநிலா…
கலைமகள் எப்போதும் தமிழகத்தில் தாமரை மீதமர்ந்து வீணை மீட்டிக் கொண்டிருக்க வேண்டியதில்லை. அவள் அகியாபாராவில் அமர்ந்து கோடோவும் வாசிப்பாள் என்பதை புரிய வைத்தது போல் புன்னகைத்து வந்தனம் கூறி அகன்றாள் அந்த ஓமோய்கானே*. அவர் ஒரு தேர்ந்த கோடோ கலைஞர் என்பதையும், ஆர்வம் காரணமாக அந்தக் கடையில் பகுதி நேரம் பணியாற்றுகிறார் என்பதையும் நாங்கள் அறிந்த போது நம்புவதற்கு சற்று அவகாசம் தேவைப்பட்டது.
தொல்வெளியிலிருந்து தொடரும் இசை- பாகம் 7
“ஆதித்யா எங்களுக்கெல்லாம் மேலே” என்று சொல்லிக் கொண்டிருந்தவர்! அவர் எங்களிடம் என்ன எதிர்பார்த்தார் நாங்கள் எதைப் பூர்த்தி செய்யவில்லை என்று இன்று வரை புரிந்து கொள்ள முடியவில்லை. பணம் என்றால் இயன்ற அளவு செலவழிக்கத் தயாராகவே இருந்தோம். விஜயதசமி என்றால் நாங்களே உபயோகிக்காத சாமானாக வெள்ளியில் நாதள்ளாவில் வாங்கிக் கொடுப்போம். “பையனை இஞ்சினீரிங் படிக்க வெச்சா செலவழிப்பேளா இல்லியா? அந்த மாதிரி நினைச்சுக்க வேண்டியது தான்” என்பார்.
தொல்வெளியிலிருந்து தொடரும் இசை- பாகம் 6
இசைவாணருக்கும் பெரிய இசை வாணருக்கும் ஒப்புமை நோக்கும் போது பெரிய இசைவாணரை இன்னமும் சாத்வீகமானவர் என்று தான் சொல்ல வேண்டும். மழலை மேதை என்று அறியப் பட்டிருந்ததாலோ என்னவோ இசைவாணரிடம் இருந்த வித்தை போதாமை உணர்வு இவரிடம் கிடையாது. பெரிய சங்கீத விற்பன்னர் என்றும், வாக்கேயக்காரர் என்றும் அறியப்படுபவர் ஆதலால் தன் வித்தையைப் பற்றிய தன்னம்பிக்கையின்மையோ தாழ்வு மனப்பான்மையோ இவரிடம் கிடையாது என்பதே உண்மை. ஆரம்ப நாட்களில் இவர் ஆதித்யாவைத் தன் பிள்ளை போலவே நடத்தி வந்தார்.
தொல்வெளியிலிருந்து தொடரும் இசை- பாகம் 5
என் எண்ணம் என்னவாக இருந்ததென்றால் அவனுடைய திறமையின் மேன்மை எப்படியாவது உலகம் அறியும் படிச் செய்து விட்டால் அவன் நடத்தையின் விநோதங்களை உலகம் பொருட்படுத்தாமல் இருக்கப் பழகிக் கொள்ளும் என்று நம்பினேன். புல்லாங்குழல் கலைஞர் டி ஆர் மகாலிங்கம் விஷயத்தில் உலகம் முதலில் அவர் வாசிப்பில் இருந்த மேன்மையை அங்கீகரித்தது. பின்னர் தான் அவர் குணாதிசயங்களில் இருந்த விநோதங்களை உள் வாங்கிக் கொண்டது. அப்போதெல்லாம் அவர் மேதைமையின் காரணமாக உலகம் அவர் குணாதிசயக் கூறுகளை சகிக்கக் கற்றுக்கொண்டது. இதே போல் ஆதித்யா விஷயத்திலும் நடந்தால் தேவலை என்று நான் நினைத்தேன். இதில் இன்னொரு விஷயமும் அடங்கி இருந்தது. அவன் பாடல்களைக் கேட்டுக் கேட்டு தனக்கென்று ஒரு பாணியை உருவாக்கி வருகிறான். இதைப் போய் நான்கு சுவர் உள்ள ஒரு கட்டுமானத்தில் போட்டோம் என்றால் இதனால் அவன் இயற்கையான இசை மேதைமை அதில் தீய்ந்து விட்டால் என்ன செய்வது?
குளக்கரை
நம் உடலை சற்றே உற்று கவனித்தாலே தெரியும், அது எத்தனையோ ஆச்சரியங்களை இயற்கை என்ற பெயரில் பொதித்து வைத்திருக்கிறது என்று. ஓர் ஆரோக்கியரின் ரத்தத்தில், சோடியத்தின் அளவு ஓர் லிட்டருக்கு 135லிருந்து 145 milliequivalents (mEq/L). இந்த அளவுகளிலிருந்து சற்றே மீறினாலும் உடல் சீர்கேட்டிற்கு கொண்டு செல்லும். அவ்வாறு செல்ல விடாமல் உயிரினங்கள் உடல், தன்னளவிலேயே சம நிலைக்கு கொண்டு வந்துவிடும். இத்தனை கட்டுக்கோப்பாக உயிரனங்களின் உடல் சுயமாக சமநிலை பேணுவதை மருத்துவ துறையில் homeostasis என்ற சொற்றொடரில் குறிக்கப்படுகிறது. தன் தகப்பனார் உடல் நிலை சரியில்லை என அறிந்தவுடன் சித்தார்த் முகர்ஜி அமெரிக்காவிலிருந்து டெல்லிக்கு விரைவதில் தொடங்குகிறது, இந்தக் கட்டுரை.
அப்பா அன்புள்ள அப்பா…
சென்னையில் வசித்தபோதும் சரி, இங்கிலாந்து வசிக்கச் சென்ற போதும் சரி, விடுமுறைக்கு ஈரோடு வரும் போதெல்லாம் இரவுகளில் கால் பாதங்களில் காயத்திருமேனி எண்ணையை நன்கு அழுத்தித் தடவி விடுவேன். முதலில் முட்டி, பின் படம். தேய்க்க தேய்க்க அப்பா, கால் எரிச்சல் அடங்க, சுகமாக தூங்க ஆரம்பிப்பார். நான் டிவியைப் பார்த்துக்கொண்டே தேய்த்துக்கொண்டிருப்பேன். சில சமயங்களில் “ம், போதும், நீ போய் தூங்கு” என்று மெல்ல கண் திறக்காமல் சொல்வார். சில சமயங்களில் நானாக நிறுத்தியதும் ஓர் தலையசைப்பு. காலையில், “நேற்றிரவு நன்கு தூங்கினேன்” என்று புன்னகை போதுமானதாக இருந்தது. பாதங்களை பார்க்க முடியவில்லை. வேஷ்டியைக் கொண்டு கால்கள் மூடப்பட்டிருந்தன.
தொல்வெளியிலிருந்து தொடரும் இசை- பாகம் 4
‘மூதுரை, நன்னெறி, ஆத்திச்சூடி, கொன்றை வேந்தன்’ போதாதென்று ஆளாளுக்குத் தயார் செய்து வரும் அறிவுரைகள் கொட்டிக் கிடக்கின்றன நம் நாட்டில். யாராவது அடுத்தவன் நிலையில் தன்னைப் பொருத்திப் பார்த்து அதைப் பரிவுடன் சொல்கிறார்களா என்றால் அது சொற்பமே. ஜெயகாந்தன் சொல்வாரே ‘சஹ்ருதயர்கள்’ என்று அது போன்ற சஹ்ருதயர்கள் உலகில் சொற்பமே என்று தோன்றுகிறது. குறிப்பாக ஒரு மனிதன் கஷ்டத்தில் இருக்கிறான் என்று அடுத்தவன் உணரும் போது எதையாவது தெளித்து விட்டு ஓடத்தான் நினைக்கிறானே ஒழிய, அதில் பங்கெடுப்போம் என்று முனைவோர் நிறைய பேர் கிடையாது.
அவரவர்க்கு அவரவர் கவலை. அவ்வளவுதான் பொருளாதார சமூக சூழல் காரணிகளும் காரணம். மற்றவர் படும் அவதிகளை உலகம் வேடிக்கை பார்த்துக் கொண்டு நகர்ந்து விடுகிறது. இதற்கு நானும் விதிவிலக்கன்று.
தீமை, சட்டங்களுக்குள்
தீமை என்றால் என்னவென்பதும் அது எப்படி இருக்கும் என்பதும் நமக்கு தெரியும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். போதுமான முன்னுதாரணங்களை வரலாறு, அண்மைய வரலாறும் இன்றைய வரலாறும்கூட, அளிக்கிறது. ஆனால் இன்று நாம் எதைப் பற்றி பேசிக் கொண்டிருக்கிறோம் என்பதைச் சித்தரிக்க, அதன் மீது மீண்டும் ஒரு முறை நாம் நம் பார்வையைச் செலுத்துவது பயனுள்ளதாய் இருக்கும் என்று எனக்குத் தோன்றுகிறது- பார்ப்பது என்ற சொல்லை உள்ளபடியே அதன் நேரடிப் பொருளில் இங்கு பயன்படுத்துகிறேன்.
தீமை என்பது குறித்த சிந்தனை தொன்மையானது, சமயங்கள் எல்லாவற்றின் முதல் சில அடிப்படை விதிகளில் தீமையை எவ்வாறு எதிர்ப்பது என்பது அடக்கம்.
இங்கு நாம் ரான் ஹவீவ் எடுத்துள்ள இந்த ஒளிப்படத்தைப் பார்க்கலாம்: நாம் எதைக் காண்கிறோம்?
தொல்வெளியிலிருந்து தொடரும் இசை- பாகம் 3
“எங்க குடும்பமே இசைக் குடும்பம் தான். நாங்க எல்லோரும் ‘ப்ராடிஜீஸ்’. ஆனா இவ்வளவு தூரம் முன்னுக்குக் கொண்டு வரதுக்கு எவ்வளவு பாடுபட்டிருக்கேன் தெரியுமா? என் கம்பெனியோட டர்ன் ஓவர் இப்போ ஃபைவ் க்ரோர்ஸ். நான் ஆரம்ப நாள்ல அவ்வளவு கஷ்டப் பட்டேன். அப்ப ஒரு முடிவு பண்ணேன். இந்த மாதிரி டாலண்ட் உள்ள பசங்களுக்குத் தான் முன்னுரிமை. இங்க டாலண்ட் ப்ரமோஷன்னு ஒரு ப்ரோக்கிராம் இருக்கு. உங்க பையனைப் பொறுத்த மட்டில ஆரம்பப் பாடம்லாம் தேவையில்லை. அந்தப் ப்ரோக்ராம்ல போட்டுடுங்கோ. பத்தாயிரம் ரூபா. பீஸைக் கட்டிடுங்கோ” என்று கூறி விட்டு நகர்ந்து விட்டார்.
“பையன் இன்னும் வளரலியே சார். இன்னும் கொஞ்சம் மெச்சூரிடி இருந்தாத் தேவலயில்லையா. . . . . . ” என்று நான் இழுத்தேன்.
“அதெல்லாம் ஒண்ணும் தேவையில்லை. சங்கீதத்திலேயே மூழ்கியிருக்கறவா அப்படித்தானிருப்பா. அவன் வயசுக்குத் தேவையான மெச்சூரிடி நிறைய இருக்கு. மத்ததெல்லாம் தானா வந்துரும் என்றார்.
வாசகர் மறுவினை
உணர்வுத் திறன்கள் நம் உடலில் இயங்கும்போது கலவையாக இயங்குகின்றன. ஆனால் மனித உடலில் வேறு சில பிரச்சினைகள் உண்டு. அது எந்திரத் தயாரிப்பு இல்லை. எந்திரத் தயாரிப்பிலும் தயாரிப்புப் பிழைகள் என்று எழும். அதற்குப் பல காரணங்கள் உண்டு. உலோகப் பொருள் தயாரிப்பில் கூட, உலோகத் துண்டுகள் எல்லாம் ஒரே போல இரா. எங்கோ ஒரு இழை ஒரு புள்ளி ஒரு கூறில் மாறுதல் இருக்கும்/ அது தேவைக்கு மேலான வலுவோடு இருக்கலாம், குறைவான வலுவோடு இருக்கலாம், அல்லது மேல் பூச்சு (க்ரோமியம், வெள்ளி, அலுமினம் ஏதோ ஒரு பூச்சு) இரு மில்லிகிராம் கூடுதலாகக் குறைவாக இருக்கலாம். பலன் இறுதிப் பொருளில் குறை எழும். அந்தக் குறை பயன்பாட்டின் இயல்பைப் பொறுத்து பிரச்சினை இல்லாத குறையாக இருக்கலாம்.