எரியும் காட்டுக்குள் ஆழப் போனேன். என்னைச் சுற்றி எங்கும் மஞ்சள்- ஆரஞ்சு நிறமாக ஆகும்வரை, தீய்ப்பதாக இருந்தது. நான் அப்போது காட்டின் தரையில் அமர்ந்தேன், ஜ்வலிக்கும் கங்குகள் கருத்த ஆகாயத்திலிருந்து புரண்டு விழுவதைப் பார்த்திருந்தேன்.
துப்பாக்கி ரவை நம் மூளைக்குள் குடைந்து போவது போகும்போது எப்படி உணர்வோமோ அப்படித்தான் எரியும் மரங்களும் தெரிந்தன. மரங்களில் வலியை உணரும் திசுக்கள் இல்லை அதனால் நெருப்பு அந்த மாதிரி வலியாகக் கொணராது. அது தூலமானதல்ல. அது எல்லாவற்றின் இறுதியிலும் இருக்கும் நியாயத்தின் நெருப்பு. நிரந்தரமான, மாற்ற முடியாத தவறுகளையெல்லாம் எரிப்பது, உலகின் விளிம்பிலிருந்து பறந்து போவதைப் போன்றது. அது கடைசி ஒலியின் தாக்கும் எதிரொலி….
Category: அதிபுனைவு
தேர்ந்த வாசகருக்கான ஒப்பீட்டு அறிமுறை பற்றிய படப் புத்தகம்
இரண்டு ஈஸோப்ட்ரான்கள் சந்திக்கும்போது, அவர்கள் ஒன்றாக இணையலாம், அவர்களின் ஜவ்வுகளிடையே ஒரு சுரங்கப் பாதை போல உருவாகும். இந்த முத்தமிடும் இணைப்பு மணிக்கணக்காகவோ, பல நாட்களாகவோ, வருடங்களாகவோ நீடிக்கக் கூடும்.
கத்திகளின் மொழி
உடலின் சுத்தம் மிகவும் முக்கியமானது. ஒரு சிறு கண்ணீர்ச் சொட்டு அந்தப் படையலைக் கெடுக்கக்கூடும். ஒற்றை முடிகூட கடவுள்களுக்கு அர்ப்பணிக்கப்படும் அந்த ஆத்மாவைக் குலைக்கக்கூடும்.…
இயந்திரச் சிக்கல்கள் – விளாதிமிர் அலெக்ஸீவ்
விளாதிமிர் அலெக்ஸீவ் என்ற தரவிதழாளருக்கும் OpenAI என்ற செயற்கை நுண்ணறிவு ஆய்வகத்தால் உருவாக்கப்பட்ட GPT-3 எனப்படும் மொழி உருவாக்கிக்கும் இடையே நடந்த ஓர் உரையாடலிலிருந்து சில பகுதிகள். இணையத்தில் உள்ள தரவுகளை அலசுவதன் வழியாக GPT-3 தனது செயற்கை நுண்ணறிவை வளர்த்துக் கேள்விகளுக்குப் பதில் சொல்லப் பழகியுள்ளது.
காதல்
அப்படி இல்லை. திமிர்த்தனம் மீதான என் பார்வை வேறு. அறிவு இருக்கும் இடத்தில் செருக்கு இருக்கும். ஆனால், இந்த செருக்கு தான் ஒரு கடிவாளம் போல செயல்படும். உன் விஷயத்திலும் அதுதான் நடந்திருக்கிறது. நீ இத்தனை காலமும் கைபடாத ரோஜாவாக இருக்கிறாயெனில் அதற்குக் காரணம் அந்தக் கடிவாளம் தான். எனக்கு விர்ஜின் பயல்களைப் பிடிக்கும். தவிரவும், உன் போன்ற அதிபுத்திசாலிகளைக் கண்டால் இப்படியெல்லாம் நடந்து கொள்ளும் அளவிற்குப் பிடிக்கும். விளைவுகளைப் பற்றி கிஞ்சித்தும் கவலை இல்லை. தவிரவும், இன்னும் முப்பது வருடம் நாம் ஒன்றாக பயணிக்க இருக்கிறோம். உனக்கும் என்னை விட்டால் வேறு மார்க்கமில்லை. பேசாமல் காதலிக்கலாமே?” என்றாள் காமினி தொடர்ந்து
சுடோகுயி
”வீ வாண்ட் சுடோகுயி!
வாசகங்கள் ஒளிரும் மின்பலகைகளை உயர்த்தி ஆட்டியபடி பலர் உரக்க கத்திக்கொண்டிருந்தார்கள்.
பிரதமரை நோக்கி ஓடிவர முயன்றவர்களை ரோபோக்களின் சைகையை கவனித்து ஸ்டாமினாக்கள் தடுத்து நிறுத்தின.
ரகசியம்
ஆனால் நான் கடந்து போக நேர்ந்த ஆண்கள் தங்களின் கடன்களை அடைப்பதற்காய் பெண் தேடுபவர்கள். தினசரி செலவுகளுக்காய் பெண் தேடுபவர்கள். அழகான ஆண்கள் அறிவாய் இருப்பதில்லை. அறிவான ஆண்களிடம் அதீத அறிவே பிரச்சனையாக இருக்கிறது. அழகான ஆண்கள் முட்டாள்தனமாக இருக்கிறார்கள். விளையாட்டில் இருப்பவர்கள் விளையாட்டிலேயே தீவிரமாக இருக்கிறார்கள். பணக்கார இளைஞர்கள் பெரும்பாலும் சோம்பேறிகளாக இருக்கிறார்கள். பணக்காரனாக இருந்து கடினமாக உழைக்கும் ஆண்கள் பெரும்பாலும் பேராசைக்காரர்களாக இருக்கிறார்கள்.
நோயாளி எண் பூஜ்யம் -1
“நீங்கள் நம்பாத மூலப்பொருள் எது?”
“சிலிக்கான் தான், வேறென்ன! பிராணவாயுவிற்கு அடுத்தபடியாக அதிக அளவில் இருப்பதும் அதுதான்; அது இல்லையெனில் ட்ரான்ஸிஸ்டர்களோ, ட்ரான்ஸ்ஃபார்மர்களோ இருக்காது. அது புதுவகைக் களிமண், செயல்பாட்டுக்குத் தக்கபடி உரு மாற்றப்படக் கூடிய பொருள். இன்று ஒரு மதம் கொண்டுவரப்பட்டால், அதில் கடவுள் சிலிக்கானிலிருந்து மனிதர்களைப் படைத்தார் என்று சொல்வார்கள்.”
டெட் சியாங்கின் பேட்டி- டொச்சி ஒனெய்பச்சி – எலெக்ட்ரிக் லிட்
ஒரு அதிபுத்திசாலி செயற்கை நுண்ணறிவு உருப்பெற்று வந்தால்- அது நடக்கும் என்பதில் எனக்குச் சிறிதும் நம்பிக்கை இல்லை- அத்தகைய நுண்ணறிவு பிரபஞ்சத்தைக் கைப்பற்றி ஆள விரும்பும் என்று இத்தனை மனிதர்கள் ஏன் நினைக்கிறார்கள்? இந்த எண்ணம் ஸிலிகான் பள்ளத்தாக்குடைய முதலியத்தைப் பார்த்து எழுகிறது என்று எனக்குத் தோன்றுகிறது: தொழில்நுட்ப முன்னோடிகள் தாம் அறிவு பூர்வமாக யோசிப்பவர்கள் என்று நம்புகிறார்கள், வளர்ச்சியை மற்றெதற்கும் மேலே வைக்கிறார்கள், அதனால் அதிபுத்திசாலி ஜீவராசியும் அதையேதான் செய்யப் போகிறது என்ற கருத்து இது.
நட்சத்திரங்கள் பொழிந்துகொண்டிருக்கின்றன
மாதுளைப்பழங்களை அணில்கள் கடித்த பிறகே நாம் சாப்பிடலாம் என்று அம்மா சொல்வார். நான் நட்சத்திரங்களை மாதுளைப்பழங்கள் என்று நினைத்துத்தான் பறித்துத் தின்றேன். ஆனால் அணில்களோடு பகிரவில்லை.
முதன்முறை தெரியாத்தனமாகத்தான் தின்றேன். அப்போது பதினைந்து வயதிருக்கும். ஒருநாள் தூக்கம் வரவில்லை. மொட்டைமாடிக்குச் சென்றேன். அன்றிரவு அந்த நட்சத்திரம் மாதுளைப்பழத்தைப்போல் வீங்கி இருட்டில் சிவப்பு ஒளி வீச பழுத்துத் தொங்கியது. அணில் வந்துவிடப்போகிறதே என்ற பயத்தில் யோசிக்காமல் அவசரமாக எம்பிப் பறித்துவிட்டேன்
கோடை ஈசல்
முந்தைய பகுதிகள்:பகுதி – ஒன்றுபகுதி – இரண்டு பீட்டர் வாட்ஸ் + டெரில் மர்ஃபி அந்த அறை காயங்கள் ஏற்படும் வாய்ப்பைக் குறைப்பதற்கென கட்டமைக்கப்பட்டிருந்தது. அங்கு படுப்பதற்கு ஒரு கட்டில் இருந்தது. அதன் ஒரு மூலை கிழக்குப் புறச் சுவருக்குள் பதிந்திருந்தது. அது போதுமானதாக இருந்தது. அவள் ஓடிய “கோடை ஈசல்”
லீலாவதியைத் திருப்பி அனுப்புவது எப்படி?
ப்ரொஃபஸர் “அட அது இல்லப்பா! பாஸ்கராச்சார்யா கேள்விப்பட்டுருக்கயா?”என்றார்….
ப்ரொஃபஸர் ,”இல்லப்பா , கணக்குல பெரிய மேதை, பல புத்தகங்கள் எழுதியிருக்கார். கி.பி 1100கள்ள வாழ்ந்தவர். அல்ஜீப்ரா, தசம கணிதம், கால்குலஸ், ட்ரிக்னொமெட்ரி இதுல எல்லாம் புஸ்தகம் எழுதி இருக்கார்.
அப்புறம் பெல் ஈக்வேஷன்தெரியுமா? X2 =1+PY2. அதை சால்வ் பண்ணியிருக்கார். இருபடி சமன்பாடுன்னு சொல்லப்படற க்வாடராடிக் ஈக்வேஷன்ல எத்தனையோ பண்ணியிருக்கார். π மதிப்பைக் கண்டிபிடிச்சுருக்கார். அவரோட சித்தாந்த சிரோமணிங்கிற மஹாபெரிய புத்தகத்தில நாலு பாகங்களான பீஜ கணிதம், க்ரஹ கணிதம், கோலத்யாயா, லீலாவதி இதெல்லாம் ரொம்ப புகழ் பெற்றவை. பல மொழிகள்ல மொழி பெயர்ந்திருங்காங்க,” கொஞ்சம் மூக்சு விட்டார். தலை கலைந்து, கண்ணாடிக்குப் பின்னால் கண் பெரிதாக இருந்தார்.
கணினி எழுதிய திரைப்படம்
செயற்கை நுண்ணறிவு கொண்ட கணினிகள் சதுரங்கம் விளையாடி கிராண்ட் மாஸ்டர்களை ஜெயிக்கின்றன. நீங்கள் கொங்குத் தமிழில் பேசுவதை ஸ்பானிஷ் மொழியில் மொழிபெயர்த்துக் கொடுக்கின்றன. நீங்கள் அடுத்து என்ன செய்யப் போகிறீர்கள் என்பதை அனுமானிக்கின்றன. அவற்றை சினிமாவுக்கு திரைக்கதை எழுதச் சொன்னால் எப்படி எழுதும்? அதைப் படமாக எடுத்தால் எவ்வாறு “கணினி எழுதிய திரைப்படம்”
சுற்றுச்சூழல் ஆர்வலர், பெண்ணியவாதி, அறிவியல் புனைவு எழுத்தாளர் – ஷெரி எஸ். டெப்பரை நினைவுகூரல்
டெப்பர் நாவல்களில் அடிக்கடி, மக்கள் தொகை மிகுந்திருப்பது ஒரு பிரச்சினையாகிறது. கொள்ளை நோய் தாக்குகிறது. …புத்திசாலி பெண்கள் சமூகத்தாலும் சூழ்நிலையாலும் தோற்கடிக்கப்படுவார்கள். ஒடுக்குமுறை மதம் அரசை ஆட்டுவிக்கும். பாத்திரங்களின்பார்வைகளாக அரை டஜன் இருக்கும். அந்தரங்கத்துக்கு துரோகம் இழைக்கும் தொழில்நுட்பம், பாதுகாப்புக் கவசம் என்று சந்தைப்படுத்தப்படும். .. இனப் பிரச்சினைகள் முழுக்க முழுக்க வேற்று கிரகத்துக்கு உரியவை, அல்லது, கொஞ்சம் கூட இல்லாதவை. பூச்சிக்கடி போல் அரிக்கும் காதல், பாத்திரங்கள் அதைவிட முக்கியமானவற்றில் ஈடுபட்டிருப்பார்கள். பாலினப் பிரிவு அடிப்படையாகக் காட்டப்பட முடியுமென்றால், அது செய்யப்படும். தாவர இனங்கள் திருப்பித் தாக்க முடியுமென்றால், அதைச் செய்யும்.
தேள்
“உன்னுடைய விஷ ஆராய்ச்சிக்கு நீ இங்குத் தேள்களை வைத்திருக்கிறாய் அல்லவா? எனக்கு ஒரு தேளை தொட்டுப்பார்க்கவேண்டும். அதை என் மீது ஏற விட்டுப்பார்க்க வேண்டும்.”
லூசிஃப் திடுக்கிட்டான். “ஏன்?”
“பயத்தை வெல்ல அதுதான் ஒரே வழி. போர்க்களத்தில் நாங்கள் இதைத்தான் செய்வோம். நிணம், குருதி, சித்ரவதை இதை எந்த ஒரு போர் வீரனும் முதல் நாள் காணும் போது அஞ்சத்தான் செய்வான். அதனால் அவனைப் போருக்கு அனுப்புவதற்கு முன்னாலேயே காயத்துக்கும் வலிக்கும் போரின் நிதர்சனங்களுக்கும் முழுவதுமாகப் பழக்கப்படுத்தி விடுவோம்.”
கருந்துளை
அதிபுனை ஒளிப்பட போட்டி
அதிபுனை கதைகள் என்றால் கொஞ்சம் அறிவியலும் நிறைய கற்பனையும் வேண்டும். அதிபுனை புகைப்படங்கள் எப்படி இருக்க வேண்டும்? கொஞ்சம் கற்பனையும் நிறைய வருங்காலமும் கொண்டிருக்க வேண்டும் எனலாமா? போட்டியில் கலந்துகொண்ட ஒருவரின் படம் இங்கே. மற்ற ஆக்கங்களை இங்கே பார்க்கலாம்.
தானாக உய்த்தறியும் எர்க் எப்படி ஒரு வெள்ளையனை ஒழித்தான்
ஹோமோஸ் வெகு சீக்கிரம் அறிவுள்ள பேச்சைக் கற்றுக் கொண்டு விட்டது, எனவே தைரியமாக எலெக்ட்ரீனாவிடம் பேசியது.
ராஜகுமாரி அதனிடம் ஒரு தடவை கேட்டாள், அதன் முகத் துவாரத்தில் மின்னுகிற வெள்ளைப் பொருள் என்னவென்று.
“அதை நான் பல் என்று அழைப்பேன்,” அது சொன்னது.
“ஓ, எனக்கு அதில் ஒன்றைக் கொடேன்!” என்று வேண்டினாள் அரசகுமாரி.
“அதுக்குப் பதிலாக நீ எனக்கு என்ன கொடுப்பாய்?” அது கேட்டது.
“நான் என்னோட சின்ன தங்கச் சாவியைத் தருவேன். ஆனால் ஒரு கணம்தான்.”
“அது என்ன சாவி?”
“என் சொந்தச் சாவி. தினம் மாலையில் அதை வச்சு என் மூளைக்கு நான் சாவி கொடுப்பேன். உனக்கும் ஒண்ணு இருக்கணுமே.”
அறிவியல் புனைவுச் சிறப்பிதழ் பற்றி…
அறிவியல் புனைவிலக்கியம், சில நாடுகளிலிருந்துதான் பெருமளவும் வெளிப்படுகிறது. அவை அனேகமாக யூரோப்பிய, மேலை நாடுகள் என்பது தெளிவு. சமீபத்துப் பத்தாண்டுகளில் சீனா, இந்தியா மற்றும் சில ஆஃப்ரிக்க நாடுகள் இந்த வகை இலக்கிய முயற்சியில் இறங்கி இருக்கின்றன. இந்த விஷயங்களில் அகழ்வாராய்ச்சி செய்பவர்கள் எங்கும் உண்டு. அந்தந்த நாட்டு அறிவியல் புனைவிலக்கியம் பற்றி ஆய்வு செய்பவர்கள் அனேகமாக 18 ஆம் நூற்றாண்டிலிருந்தே இத்தகைய முயற்சிகள் துவங்கி விடுவதைச் சொல்கிறார்கள். பற்பல யூரோப்பிய நாடுகளிலும், சீனாவிலும் இப்படி வேர் மூலம் காட்டும் ஆய்வுகள் உண்டு.
பதனிடப்படாத தோல்
அது அப்போது அவளிடம் பேசியது, அதன் குரல் தாலாட்டை ஒத்திருக்கும் செல்லோ வாத்தியங்களின் ஆழ்ந்த மரமரப்பான நாதத்தைப் போலக் கேட்டது. அது தன் அடர்ந்த முடியடர்ந்த கையால் சைகை செய்தது. அது ஏதோ உறுதி அளித்தது, கொடுத்தது, பின் கேட்டது; அவள் அப்போது செவி கொடுத்துக் கேட்டாள், புரிந்தவளாகவும், புரியாதவளாகவும் இருந்தபடி.
சொற்கள் மெள்ளமாக வந்தன. இது…. …உலகம்.
இங்கே வானம், பூமி, பனிக்கட்டி. அந்த கனத்த கரங்கள் அசைந்தன. கைவிரல்கள் சுட்டின.
குட்டி அடிமையே, நாங்கள் உன்னைக் கண்காணித்து வந்திருக்கிறோம். சுதந்திரமாக நீ என்ன செய்திருக்கிறாய் இன்று? உரிமை எடுத்துக் கொள். உன்னுடைய காலணி உள்ள நான்கு கால்களுக்கான தரை, நட்சத்திரங்களுள்ள வானம், குடிப்பதற்குப் பனிக்கட்டி. இன்று ஏதாவது சுதந்திரமாகச் செய். செய்வாய், செய்வாய்.
அதெல்லாம் மாறியபோது
எங்களை விட உருவில் பெரியவர்கள். பெரிதாக மட்டுமில்லை, அகலம் வேறு. இரண்டு பேர் என்னை விட உயரம், நானே ரொம்பவும் நெட்டை என்று பெயர். காலணி இல்லாமல் என் உயரம் ஒரு மீட்டர், 80 சென்டி மீடர். அவர்களைப் பார்த்ததுமே எங்கள் இனம் என்று தெரிந்தது, ஆனால் எங்களிடமிருந்து வேறுபட்டு இருந்தனர். எளிதில் சொல்லி விட முடியாதபடி மாறிய ஆட்களாகத் தெரிந்தார்கள்.