பேரா. பசுபதி சென்னை கிண்டி பொறியியல் கல்லூரியில் (தற்பொழுதைய அண்ணா பல்கலைக் கழகம்) BE பட்டமும், சென்னை ஐஐடியில் M.Tech பட்டமும் பெற்றார். தொடர்ந்து அமெரிக்காவில் யேல் பல்கலைக்கழத்தில் M.Phil, Ph.D ஆய்வுப் பட்டங்களைப் பெற்றார். அதன்பின் கனடாவில் டொராண்டோ பல்கலைக்கழகத்திற்கு வந்த பசுபதி, 35 வருடங்களுக்கு டொராண்டோ பல்கலைக்கழகத்தில் அரும்பணி ஆற்றியிருக்கிறார். மூன்று தலைமுறைக்கு மேற்பட்ட அர்ப்பணிப்பு மிக்க ஆராய்ச்சிக் காலத்தில் அவர் தகவல் நுட்பத்துறை பேராளுமைகளான க்ளாட் ஷாணன், ஹாரி நைக்வ்ஸ்ட் போன்றவர்களின் ஆராய்சிகளை நேரடியாக முன்னெடுத்துச் சென்றிருக்கிறார்.
Category: அஞ்சலி
விளையாட்டு வர்ணனையாளர் இராமமூர்த்தி
பொங்கல் சென்னை டெஸ்களும் தமிழ் வர்ணனையும் வருடம் முழுவதற்குமான எதிர்பார்ப்பை உண்டாக்கும். ஆனந்த விகடனில் பொங்கலுக்கு ஒரு வாரம் முன்னால், வருகைதரும் மற்றும் இந்திய அணி வீரர்களின் போட்டோக்கள் வரும். வீட்டில் வாங்கக் காசு தரமாட்டார்கள். ஆனாலும் அதை அடைவதற்கு வேறு வழிகள் இருந்தன. கிரிக்கெட் ஆர்வமில்லாத, விகடன் தொடர்ந்து வாங்கும் யாரவது ஒரு அக்காவை நச்சரித்து அதைக் கைப்பற்றிவிடுவேன் (அக்கா, சிவசங்கரி,லக்ஷ்மி, சுஜாதா, போன்றவர்களின் தொடர்கதைகளைக் கிழித்தெடுத்துக்கொண்டு, ‘ஒழிந்துபோ’ என்று கொடுப்பாள் ). முழுத் தொடர் (ஐந்து டெஸ்ட் மேட்சுகள்) ஸ்கோர் கார்ட்டை நோட்டுப்புத்தகத்தில் எழுதிவைப்பேன். அந்தக் காலங்களில் எங்கள் ஊரில் நான்தான் ஸ்கோரர், புள்ளிவிபர நிபுணன், கிரிக்கெட் வரலாற்றாளன், எல்லாம் (விளையாடுவது?? ஓரளவிற்கு ஆஃப் ஸிபின் பௌலிங்கும், சந்தீப் பாட்டிலைப் போன்ற ஸ்கொயர் ட்ரைவும் வரும்). தமிழ்நாட்டுச் சிற்றூர்களின் எல்லா சிறுவர்களையும் போலவே பந்துவீச்சுக்கு வெங்கட்ராகவனும், மட்டையாளர்களில் விஸ்வநாத்தும் ஆதர்சம்.
பெருங்கரடி: கிரெக் பேர் பற்றிய நினைவுகள்
கிரெக் பேரை நான் முதன் முதலில் எப்போது சந்தித்தேன் என்று நினைவில்லை, ஆனால் எங்கள் ஆரம்பகால சந்திப்புகளில் ஒன்று இருபது ஆண்டுகளுக்கு முன், மெதினா நகரிலிருந்த ஒரு கோடீஸ்வரரின் அடக்கமான ஆனால் உச்ச நிலை தொழில் நுட்பம் கொண்டிருந்த வீட்டில் (இதற்கான பாராட்டுகள் அவர் மனைவிக்கே சேரும்) நேர்ந்தது. (அந்தக் கோடீஸ்வரரின் பெயர் இங்கு தேவையில்லை.) கிரெக்கும் நானும் புத்தகங்களைப் பற்றி உரையாடினோம்.
கி. ரா. – அஞ்சலி
தமிழ் எழுத்தாளர்களில், நான் முதன் முதல் எனது ஆதர்சமாகக் கருதியது கி.ராஜ நாராயணன் அவர்களைத்தான். ஒரு விவசாயியாக இருந்துகொண்டு தமிழ் எழுத்தில் சாதனையை செய்த அவரையே ஒரு விவசாயி மகனான நான், எனது கதாநாயகனாக அவரை வரித்துக்கொண்டேன். அவர் எழுதிய புனைவுகள் என்று இல்லை, அவர் தொகுத்த நாட்டுப்புறக் கதைகள், நாட்டார் விளையாட்டு, கரிசல் அகராதி என அன்னம் பதிப்பகம் வெளியிடுவதை ஒன்று விடாமல் வாசிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தேன். நான் முதுகலை இரண்டாம் வருடத்தில் (1986-1987) இருந்தேன். அவரை புதுவைக் கல்லூரியில் நாட்டாரியல் நடத்தும் பேராசிரியராக பதவி கொடுத்து அமர்த்துவதாக சொன்ன செய்தி, வளரும் வயதில் ஊக்கம் கொடுத்த முக்கியமான விஷயங்களில் ஒன்றாக அமைந்தது.
ராம் என்றொரு நண்பன்
எழுபதுகளில் இலக்கிய உலகில் இருந்த அனைவரும் வெங்கட் சாமினாதன் மூலம்தான் எனக்கு அறிமுகம். ராமும் அப்படித்தான். கசடதபற பத்திரிகையில் நான் எழுதிய “அம்மா ஒரு கொலை செய்தாள்” கதை வெளிவந்தபின் நான் சென்னை வந்தபோதெல்லாம் அலைந்து திரிந்து வருபவர்களுக்கு தன் வீட்டைத் திறந்து வைத்திருந்தார்கள் ராமும் அவர் தோழி “ராம் என்றொரு நண்பன்”
பூப்போலே உன் புன்னகையில்…
மரணத்தை வெல்லும் உரிமம் மானுடத்திற்கு இல்லை. இருப்பினும், மரணத்தின் கண்ணில் மண்ணைத் தூவிவிட்டு மாற்றுப்பாதையில், மாற்றுருவில் பயணிக்கும் வித்தையை இயற்கை இவ்வுலகிற்கு வரமாக்கியிருக்கிறது. ஆம். கலையின் ஏதேனும் ஒரு வடிவத்தை கற்றறிந்து அதை மற்ற உயிர்களின் உணர்வுகளுக்கு உணவாக அளிக்கும் ஆற்றல் பெற்ற எவரும் காலத்தின் மீதேறி கணக்கற்ற “பூப்போலே உன் புன்னகையில்…”
விமர்சனத்தின் நிலைத்த தரிசனம்: ஹெரால்ட் ப்ளூம்
இலக்கியத் துறை எனும் போர்வையில் “அரசியல் பொருத்தப்பாட்டையே” முன்மொழிந்து கொண்டிருப்பவை எல்லாம் காலாவதியாகி புறந்தள்ளப்படும் என்றே தோன்றுகிறது. இவையெல்லாமே சிற்றலைகள்தான். மிஞ்சிப் போனால் ஐந்து வருடங்களுக்குத் தாக்குப் பிடிக்கும். இலக்கியத் துறையில் காலடி வைத்த நாளிலிருந்து பல நவீனப் பகட்டுகள் தோன்றி மறைவதைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். நாற்பது வருடங்களுக்குப் பிறகு தற்காலிகமான மேம்போக்குச் சிற்றலையை ஆழ்ந்த நீரோட்டத்திடமிருந்தும், அசலான மாற்றத்திடமிருந்தும் இனம் பிரிக்க முடிகிறது.
விமர்சனத்தின் நிலைத்த தரிசனம்: ஹெரால்ட் ப்ளூம்
ஐந்தாறு வயது குழந்தைக்கு உரித்தான வகையில், ஹார்வர்டிலோ யேலிலோ கவிதை பேராசிரியராகப் போகிறேன் என்று பதிலளித்தேன். இதில் என்ன வேடிக்கை என்றால் மூன்று வருடங்களுக்கு முன் ஒரே சமயத்தில் ஹார்வர்டில் சார்ல்ஸ் எலியட் நார்ட்டன் கவிதை பேராசிரியராகவும் யேலில் மனித கலைகளுக்கான ஸ்டெர்லிங் பேராசிரியராகவும் பணியாற்றினேன் என்பதுதான். இந்தக் கண்ணோட்டத்தில் பார்த்தால் என் துறை பெருமளவில் முன்கூட்டியே நிர்ணயிக்கப்பட்ட ஒன்றாகவே இருந்திருக்கிறது.
கயாம்: இசையமைப்பாளர்களில் ஒரு கவிஞர்
கயாம் இசையமைத்த படங்களில் மாபெரும் வெற்றி பெற்ற படத்தை கடைசியில் சொல்லலாம் என்று வைத்திருந்தேன். கயாம் பெயர் சொல்லும் சிறந்த படங்கள் பல, மெலடி பாடல்கள் அதைவிட அதிகம். ஆனால் கயாம் ஸாப் பெயர் சொன்னதும் நினைவுக்கு வரும் படம், ‘is Umrao Jaan’. அது இந்தி திரையுலகில் ஒரு திருப்புமுனை படம், அதில் பங்களிப்பு செய்திருந்த அத்தனை பேருக்கும் அது புகழ் ஈட்டித் தந்தது. முஜாஃபர் அலி, ரேகா, ஆஷா, கயாம், இந்த நால்வரும் தேசீய விருது பெற்றனர். அசாத்திய இசைக்காக இந்தப் படத்தை கயாம் பெயர் சொல்லி என்றென்றும் இருக்கும். ஒவ்வொரு பாடலும் விலைமதிப்பில்லாத வைரமணி.
அஞ்சலி: ஆனியெஸ் வர்தா
நேற்று என் நண்பர் ஒருவரின் முகநூல் பதிவு என்னைத் துயரிலாழ்த்தியது. ஃபிரெஞ்சு சினிமாவின் முதுபெரும் மேதை ஆனியெஸ் வர்தா மறைந்த செய்தி குறித்த தன் வருத்தத்தை அவர் எழுதியிருந்தார். இந்த மேதையின் திரைப்படங்களில் எனக்குப் பிடித்த படங்கள் குறித்த நினைவுகள் கிளர்ந்தெழுந்தன என்பதை நான் சொல்ல வேண்டியதில்லை. இந்தப் “அஞ்சலி: ஆனியெஸ் வர்தா”
காயப்படுத்துவோரும் காயமுற்றோரும் – வி.எஸ். நைபாலின் சாம்ராஜ்யம்
இந்திய சமூகவியல் கோட்பாட்டாளரான அஷீஸ் நந்தி கிப்லிங்கிற்கு இரண்டு குரல்களிருப்பதைப் பற்றி எழுதியிருக்கிறார். ஸாக்சோஃபோன் குரல், ஓபோ குரல் என்று அவர் வகைப்படுத்தியதாக நினைவு. முதலாவதானது கடுமையான, இராணுவத் தொனி கொண்ட ஏகாதிபத்திய எழுத்தாளருடையது. இரண்டாவது, துணைகண்டத்தின் கலாச்சாரங்களை வியக்கும் இந்தியத்தனம் ஊடுருவும் கிப்லிங்கின் குரல். நைபாலிற்கும் ஒரு ஸாக்சோஃபோனும் ஒரு ஓபோவும் இருக்கிறது: ஒரு கடுங்குரலும், ஒரு மென்குரலும். இவற்றை நாம் காயப்படுத்துபவர் மற்றும் காயமுற்றவரின் குரல்கள் என்றும் அழைக்கலாம். காயப்படுத்துபவரின் குரல் நாம் நன்கறிந்ததே – பின்காலனித்துவ ஆய்வுகளையும் இலக்கியவுலகையும் வசீகரிக்கும் வெறுப்பின் மூலம்
படைத்தோன் மன்ற அப்பண்பிலாளன்: வி.எஸ். நைபால்
தன்னை தொடர்ந்து மீண்டும் புதிதாய்ப் படைத்துக் கொள்ளும் தேவை தீக்கங்கு விரல்களாய் அவரைத் தீண்டுவது நிற்கவில்லை, அவரது சுடர்மிகு அறிவு, “தன் திறமைகள் அனைத்தையும் பயன்படுத்துவது,” அதுவொன்று மட்டுமே அவருள்ளத்தில் தன்னைச் சூழ்ந்திருந்த வேடிக்கை மனிதர்களிடமிருந்து அவரைப் பிரித்துக் காட்டியது. நம் இளைஞன் ஒரு துயர் தன் இதயத்தில் கவிவதை உணர்கிறான், ஆயினும் அலையொன்று அவனைச் சாடி நனைக்கிறது, ஏதோ ஒரு உன்னதம் தன்னைத் தொட்டாற்போல் இருக்கிறது. நைபாலின் பிஸ்வாஸ் போல், அவரும், மார்க்குஸ் அவுரேலியஸின் மெடிடேஷன்களை ஸ்லம்பர்கிங் மெத்தையில் படுத்திருந்தபடி வாசித்து ஓய்வெடுக்கலாம், என்று அவன் ஆறுதல் சொல்ல விரும்புகிறான், உறவினர் விஷயத்தில் அந்தப் புத்தகம் ஃபைன்மேனின் ‘லெக்சர்ஸ் ஆன் பிசிக்ஸ்’ ஆக இருக்கக்கூடும். ஆனால் இது அத்தனையிலும் தன்னிரக்கத்தின் நெடி சிறிதளவு வீசுவதையும் உணர்ந்து, “உள்ளபடியே உள்ளது இவ்வுலகம்,” என்ற மாபெரும் துவக்கத்துக்குப் பின் ‘பெண்ட் இன் தி ரிவர்’ நாவலில் வருவது, “ஒன்றுமில்லாதவர்கள், தாம் ஒன்றுமில்லாமல் ஆக அனுமதித்தவர்கள், அவர்களுக்கு அங்கு இடமில்லை,” என்ற சொற்கள் என்பதை நினைவுகூர்கிறான். அதையொட்டியே அவனும் தன் உறவினரிடம், “கனவு காண்பது போதாது, செயல் புரிய வேண்டும்,” என்று அறிவுறுத்துகிறான்
நய்பாலும் நோபலும்
அக்காலத்தில் நைபாலை வாசிப்பதன் மாயம் இதுதான். அவரது பார்வைகள் மற்றும் கருத்துகளுடனும் நான் எப்போதும் மாறுபட்டேன்: ஒப்புக்கொள்ள முடியாத அளவு வலிக்கிறது என்று சொல்லத்தக்க உண்மைகளின் அடிப்படையில் அமைந்தவை என்பதால் சில; கண்டனத்துக்குரியவை என்று சில; குறிப்பாய், இஸ்லாமிய உலகு குறித்த அவரது எழுத்தில். ஆனால், வேறு யாரும் பொருட்படுத்தத் தக்கது என்று கருதாத விஷயங்களை அவர் எழுதிக் கொண்டிருந்தார்; அனுபவத்தின் புதிய பரிமாணங்களை அகழ்ந்தெடுப்பதற்கான சொற்களை அவர் கண்டடைந்திருந்தார்.
சுற்றுச்சூழல் ஆர்வலர், பெண்ணியவாதி, அறிவியல் புனைவு எழுத்தாளர் – ஷெரி எஸ். டெப்பரை நினைவுகூரல்
டெப்பர் நாவல்களில் அடிக்கடி, மக்கள் தொகை மிகுந்திருப்பது ஒரு பிரச்சினையாகிறது. கொள்ளை நோய் தாக்குகிறது. …புத்திசாலி பெண்கள் சமூகத்தாலும் சூழ்நிலையாலும் தோற்கடிக்கப்படுவார்கள். ஒடுக்குமுறை மதம் அரசை ஆட்டுவிக்கும். பாத்திரங்களின்பார்வைகளாக அரை டஜன் இருக்கும். அந்தரங்கத்துக்கு துரோகம் இழைக்கும் தொழில்நுட்பம், பாதுகாப்புக் கவசம் என்று சந்தைப்படுத்தப்படும். .. இனப் பிரச்சினைகள் முழுக்க முழுக்க வேற்று கிரகத்துக்கு உரியவை, அல்லது, கொஞ்சம் கூட இல்லாதவை. பூச்சிக்கடி போல் அரிக்கும் காதல், பாத்திரங்கள் அதைவிட முக்கியமானவற்றில் ஈடுபட்டிருப்பார்கள். பாலினப் பிரிவு அடிப்படையாகக் காட்டப்பட முடியுமென்றால், அது செய்யப்படும். தாவர இனங்கள் திருப்பித் தாக்க முடியுமென்றால், அதைச் செய்யும்.
தகடூர் கோபி அஞ்சலி
நாமக்கல்லிலும், மதுரையிலும் சகாயம், ஐ.ஏ.எஸ். மாவட்ட ஆட்சியராக இருந்த போது அவரால் கொண்டு வரப்பட்ட தொடுவானம் என்ற இணைய வழி புகார் பதிவுத் திட்டத்தினை வெற்றிகரமாகச் செயல்படுத்திய தன்னார்வலர்கள் குழுவில் மிக முக்கிய இடம் வகித்தவர் கோபி.
பிருந்தாவனமும் தகடூர் குமாரனும்
சொந்த ஊர் மீது மாறாத பற்றும், பாசமும் கொண்ட கோபி, தகடூர் என்னும் தர்மபுரியின் பழைய பெயரோடு இணைத்து தன்னை வெளிப்படுத்திக் கொள்வார். குமாரசாமிப்பேட்டையில் அனைவருக்கும் பரிச்சயமான குடும்பம் அவருடையது. கோபியின் தந்தை தணிகாசலம், ஓய்வுபெற்ற ஆசிரியர். திருவள்ளூவர் அறிவகம், அண்ணா அறிவகம் போன்ற பள்ளிகளில் பணியாற்றியிருக்கிறார்.
அப்பா அன்புள்ள அப்பா…
சென்னையில் வசித்தபோதும் சரி, இங்கிலாந்து வசிக்கச் சென்ற போதும் சரி, விடுமுறைக்கு ஈரோடு வரும் போதெல்லாம் இரவுகளில் கால் பாதங்களில் காயத்திருமேனி எண்ணையை நன்கு அழுத்தித் தடவி விடுவேன். முதலில் முட்டி, பின் படம். தேய்க்க தேய்க்க அப்பா, கால் எரிச்சல் அடங்க, சுகமாக தூங்க ஆரம்பிப்பார். நான் டிவியைப் பார்த்துக்கொண்டே தேய்த்துக்கொண்டிருப்பேன். சில சமயங்களில் “ம், போதும், நீ போய் தூங்கு” என்று மெல்ல கண் திறக்காமல் சொல்வார். சில சமயங்களில் நானாக நிறுத்தியதும் ஓர் தலையசைப்பு. காலையில், “நேற்றிரவு நன்கு தூங்கினேன்” என்று புன்னகை போதுமானதாக இருந்தது. பாதங்களை பார்க்க முடியவில்லை. வேஷ்டியைக் கொண்டு கால்கள் மூடப்பட்டிருந்தன.
டாம் ஆல்ட்டர் என்றொரு கலைஞர்
ஹிந்தியின் பல ஜனரஞ்சக வெற்றிப்படங்களோடு, சத்யஜித் ராய், மஹேஷ் பட், ஷ்யாம் பெனகல் போன்ற தரமான இயக்குனர்களின் படைப்புகளிலும் குறிப்பிடத்தக்க பங்களிப்பு செய்தவர் ஆல்ட்டர். அஸ்ஸாமியா, தெலுங்கு, குமாவூன் மொழிப்படங்களிலும் நடித்திருக்கிறார் டாம் ஆல்ட்டர். 300 திரைப்படங்கள், நாடகங்கள் என இந்தியக் கலை உலகில் பலவருடங்களாகப் பிரகாசித்த ஆளுமை. … இந்தியா தனது முதல் கிரிக்கெட் உலகக்கோப்பையை 1983-ல் வென்றபின், அமெரிக்கா சென்றது. அதில் டாம் ஆல்ட்டரும் இடம்பெற்றிருந்ததோடு அந்த ஆட்டத்தில் ஆடவும் செய்தார் அவர்! ஆர்வமாக, விஷய ஞானத்துடன் கிரிக்கெட் பத்திகள் எழுதிய அவர், எண்பது, தொண்ணூறுகளில் மதிக்கப்பட்ட கிரிக்கெட் பத்தியாளர் என்கிற நிலைக்கு உயர்ந்திருக்கிறார். அப்போது வந்துகொண்டிருந்த ஸ்போர்ட்ஸ்வீக், டெபொனேர் (Debonair) ஆங்கில இதழ்களிலும், அவுட்லுக்(Outlook) வார இதழிலும் வெளியான இவரது கிரிக்கெட் விமரிசனக்கட்டுரைகள், விளையாட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தன.
இறுதி வரை உறுதி குலையாத லியு ஷியாவ்போ
சீனாவில் சட்டபூர்வமாய் உறுதியளிக்கப்பட்ட உரிமைகளை நடைமுறைப்படுத்தக் கோரி போராடிய லி ஷியாபோ சிறைக்காவலில் மரித்தார். அவர் புதைக்கப்பட்ட இடம் ஒரு நினைவகமாய் மாறலாம் என்று அஞ்சி சீன அரசு அவரது உடலை எரித்து அதன் சாம்பலைக் கடலில் வீசியது- இத்தனைக்கும் லி ஷியாபோ சீன மக்களில் வேறு சிலருக்கே அறிமுகமானவர். அவரது மரணத்தைத் தொடர்ந்து நியூ யார்க்கர் இதழில் எவென் ஆஸ்நோஸ் எழுதியுள்ள அஞ்சலியின் தமிழாக்கம் அளிக்கப்படுகிறது.
அசோகமித்திரன் அஞ்சலி
மொழி மயக்கத்தில் கட்டுண்டு, பண்பாட்டுப் பெருமிதங்களில் சிறைப்பட்டு, ஆதாரமற்ற- அதனால் சந்தர்ப்ப சூழ்நிலைகளுக்கேற்ப கைக்கொள்ளவும் கைவிடவும் தக்க கருவியாய் பயன்படும் தன்மை கொண்ட – பகைமைகளால் பிளவுபட்டு, இயல்பு நிலை என்னவென்பதை அறியாத காரணத்தால் இலக்கற்ற திசையில் தமிழகம் சென்று கொண்டிருந்த காலகட்டத்தில் சாதாரண மொழியில் சாதாரண மனிதர்களின் சாதாரண வாழ்க்கையை உள்ளபடியே எழுத முற்பட்டவர் அசோகமித்திரன். பெருங்கூட்டமாய் உரத்து ஒலித்த ஆரவார கோஷங்களுக்கு இடையில் சன்னமாய், தனித்து ஒலித்த அவரது குரல் முகமற்ற, நாவற்ற தனி மனிதர்களுக்காக பரிந்துரைத்த குரல், அவர்களுக்குரிய நியாயத்தை எடுத்துரைத்த குரல். எவ்வளவு மென்மையானதாக இருந்தாலும் அவர் முன்வைக்கும் விமரிசனத்தை தமிழகம் எதிர்கொண்டாக வேண்டும் – நீதிக்கான தேவை இருக்கும்வரை அவரது குரல் ஒலித்துக் கொண்டிருக்கும்.
எளிய மனிதர்களின் எளிய வாழ்வை அகலாது உற்று நோக்கிய அசோகமித்திரனின் பார்வைக்குரிய தீர்க்கம் அவர் தலைமுறையில் மிகச் சிலருக்கே இருந்திருக்கிறது. இன்று அவரை நாம் இழந்திருக்கிறோம், ஆனால் இனி அவரது அக்கறைகள் நம்மோடிருக்கும், அவரது எழுத்துக்கும் பொருளிருக்கும்.
சொல்வனம் அசோகமித்திரனின் பங்களிப்பை தொடர்ந்து பேசி வந்திருக்கிறது. அதன் நூறாவது இதழை ‘அசோகமித்திரன் சிறப்பிதழ்‘ என்றே கொண்டாடியிருக்கிறது. தொடர்ந்து அவரையும் அவரது பங்களிப்பையும் நினைவுகூர்ந்து சொல்வனம் ஊக்கம் பெறும்.
சக் பெரி: ராக் இசையின் வித்தகர்
செய்தி: Chuck Berry Dies at 90; Helped Define Rock ’n’ Roll – The New York Times
2016இல் மறைந்த இலக்கியவாதிகள்
தமிழ் இலக்கிய உலகின் குறிப்பிடத்தக்க ஆளுமைகளில் கடந்த வருடத்தில் யாரெல்லாம் மறைந்தார்கள்? ஞானக்கூத்தன், வே.சபாநாயகம், குமரகுருபரன், கே.ஏ.குணசேகரன்… இங்கே மேற்கத்திய உலகின் ஜாம்பவான்களைப் பட்டியலிடுகிறார்கள். 2016ல் சொல்வனம் இதழில் அஞ்சலி செலுத்தப்பட்டவர்கள்: எழுத்தாளர் உம்பர்த்தோ எக்கோ நாடகாசிரியர் சோ கவிஞர் ஞானக் கூத்தன்
சோ
அரசியல் தலைவர்கள், ஆன்மீகத் தலைவர்கள், துறை வல்லுனர்கள் முதலியவர்களுக்கு இடையில் சாதாரண மக்கள் மத்தியில் இருந்து கருத்துருவாக்குகிறவர்களாக, அவர்களை வழிநடத்துபவர்களாக சிலர் தோன்றுகிறார்கள். அவர்கள் பின்னால் இயக்கங்களோ, ஸ்தாபனங்களோ, பண/ஜாதி/இன பலங்களோ இருப்பதில்லை . எனக்கு முந்தைய தலைமுறையிலிருந்து, இன்றைய தலைமுறை வரை அரசியல் சமுதாய நிலைப்பாடுகளில் எவை நல்லவை என்று உடனடியாகவும், தெளிவாகவும் சுட்டி வழி நடத்திய, பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியவர்களில் சோ முதன்மையானவர்
சோ – ஒரு தன்னிகரற்ற நிகழ்வு
தன் அபத்த நாடகங்களை மீறி உண்மையான நாடகக் கலைகளை எல்லாம் அவர் தன் வாசகர்களுக்கு அறிமுகப் படுத்தத் தவறியதில்லை. உடையப்பா தேவரின் தெருக்கூத்து பாணி நாடகங்களை பலரிடமும் கொண்டு சேர்த்தவர் சோ. … சோவின் நாடகங்களை கிரேக்க நாட்டின் பண்டைய நாடக ஆசிரியரான அரிஸ்டோ ஃபனோசுடன் ஒப்பிடுகிறார் எழுத்தாளர், விமர்சகர் ஆர் வி சுப்ரமணியன். நாடகத்தை தன் எண்ணங்களை மக்களிடம் கொண்டு சேர்க்கும் ஒரு கருவியாகக் கருதினாரே ஒழிய அவற்றை கலையம்சம் உடைய ஒரு கலையாக அவர் கருதியதில்லை. அது ஒரு வேடிக்கையான உத்தி என்ற விதத்தில் மட்டுமே கையாண்டார். நடிப்பு, மேடை உத்திகள், பெரிய செட்டுகள், படாபடோபமான ஒப்பனைகள் உடைகள் மாயா ஜாலங்கள் என்று எதையும் அவர் பொருட்படுத்தியதில்லை.
மகரந்தம்
புகைப்படங்களில் வேண்டிய பலவிதமான மாற்றங்களை செய்ய மென்பொருட்களுக்குக் குறைவில்லை. அதேபோல காணொளிகளில் எடிட்டிங் செய்து மாற்றங்களை உருவாக்க முடியும். கைப்பேசியில் கூட இந்த மாற்றங்களைச் செய்ய முடிவதால் பொழுதுபோக்குக்காக பலரும் படங்களை எடிட் செய்து வலைத்தளங்களில் பகிர்வதை பார்த்து வருகிறோம். ஆனால், ஒலித் துண்டுகளை எடிட் செய்து கொலாஜ் போல ஒன்று உருவாக்குவது சவாலாகவே இருந்துவந்தது. இப்போது இருக்கும் தொழில்நுட்பத்தைக் கொண்டு சில ஒலித்துண்டுகளை மாற்றம் செய்யலாம் ஆனால் மொழிக்கும் ஒலிக்கும் இருக்கும் தொடர்பை எடிட் செய்யமுடியாது. அடோபி எனும் மென்பொருள் தொழில்நுட்ப நிறுவனம் பிராஜெக்ட் வோக்கோ எனும் மென்பொருள் வழியில் ஒலிக்கும் மொழிக்கும் …
நிழல்களிடையில் மணக்கும் தாழை மடல்
கவிஞர் ஞானக் கூத்தன் சென்ற வாரம் காலமானார். . . 50 ஆண்டு காலத்துக்கும் மேல் தமிழில் கவிதைகளும், இலக்கிய விமர்சனமும் எழுதி வந்த ஞானக் கூத்தன் தமிழ் இலக்கியத்தை உறுதியான நவீனப் பாதைக்கு அழைத்து வந்த சில இலக்கிய கர்த்தாக்களில் முக்கியமானவர். . . 60களில் பெரும் பாய்ச்சலை நிகழ்த்திய தமிழ்க் கவிதை … சமகாலத்தை சமகால மதிப்பீடுகளுடன் பார்க்கத் துவங்கிய நிலை, புத்தித் தெளிவு ஏற்படக் காரணமானவர்களில் ஞானக் கூத்தன் ஓர் அசாதாரணமான சக்தி. . . அவரது கவிதைகளையே பலரும் சிலாகித்துக் கட்டுரைகள் எழுதி வருகிறார்கள். ஒரு விமர்சகராக ஞானக் கூத்தன் அறியப்படவில்லை என்று தோன்றுகிறது. குறிப்பிட்ட சிலரின் வட்டத்தைத் தாண்டி அவர் இந்த வகையில் அறியப்படாததற்குக் காரணங்கள் என்னவென்று புலப்படவில்லை. பெரும்பாலும் சிறு பத்திரிகைகளில் எழுதியது ஒரு காரணமாகாது. ஏனெனில், அவருடைய கவிதைகளே பெருமளவும் சில நூறு பேருக்கு மேல் படித்திராத சிறு பத்திரிகைகளில் வந்தவைதான். ஆனால், அவற்றின் தாக்கம் அன்றாடச் செய்தித்தாளில் இவர் மறைவுக்கு ஒரு தலையங்கம் எழுதுமளவு விரிந்திருக்கிறது என்று தெரிகிறபோது நமக்கு வியப்புதான் எழ வேண்டும். ஆனால், எல்லா செய்தித்தாள்களிலும் தலையங்கங்கள் வரவில்லை என்பதையும் கவனிக்கலாம்.
முகமது அலி
இன்றைக்கு ‘கதம்பத் தற்காப்புக் கலை’களில் (Mixed Martial Art) வீரர்கள் வீசத் துடிக்கும் நங்கூரக் குத்தின் (Anchor punch) பிதாமகன் முகமது அலி. கிட்டத்தட்ட தலையில் கொட்டுவது போன்ற பாவனையில் நேராக வீசப்படும் குத்து. முதன்முதலில் இந்தக் குத்தினை முகமது அலியிடமிருந்து தாடையில் வாங்கி வீழ்ந்தவர் சன்னி லிஸ்டன். ஆண்டு 1965. எந்தவிதமான பாதுகாப்பும் இல்லாமல் இருப்பதான தோற்றத்தை உண்டாக்கி எதிரியை அழைத்து, எதிரி தாக்குவதற்கு வந்தவுடன் அதிவேகமாக எதிரியைத் தாக்கி வீழ்த்தும் வியூகம் இது. இந்த வீச்சில் முகமது அலி, அவரேகூட தனது குத்து இத்தனை வேகத்தில் வீசப்பட்டிருக்கும் என்பதை எதிர்பார்க்கவில்லை, காரணம், தான் குத்தினை வலக்கரத்தால் வீசிய பின் தனது எதிராளி …
வேறு எந்தப் பெயரிலும் அது ஒரு ரோஜா: உம்பர்த்தோ எக்கோ (1932-2016)
ஒரு வரலாற்றாளர் ஒரு ஆவணத்தைப் படிக்கும்போது, அவர் கடந்த காலத்திற்குள் திறக்கும் ஜன்னலுள் பார்க்கவில்லை, முன்பு இருந்த ஒரு சமூக அமைப்பின் ஒரு செய்பொருளைப் பார்க்கவில்லை, ஆனால் தான் அதோடு ஒத்துழைத்தால், ஒப்பேறக் கூடிய ஒரு முடிவைக் கொடுக்க உதவும் ஏதோ ஒரு பொறியமைப்பையே பார்க்கிறார் என்றாகிறது. அந்த முடிவு ஆவணத்தின் படைப்பாளி என்ன சொல்ல விரும்பினாரோ அல்லது விவரிக்க நினைத்தாரோ அதனுடைய சற்றேறக் குறைய ஏற்புள்ள ஒரு பிம்பத்தைக் கொடுக்க வேண்டும் என்றாகிறது. அது ஒரு கூட்டமான மாற்று வாசிப்புகளுக்கும் இடம் தரக்கூடும், சிலவை மற்றவற்றை விட ‘மகிழ்வு’ தரக்கூடியனவாக இருக்கலாம். ஆனால் நாம் பெறும் பொருள் கச்சிதமாகப் பொருந்துவதாகத் தோற்றமளித்தாலும், நாம் எழுத்தாளரின் நோக்கங்களைக் கைப்பற்றி விட்டதாகக் கொண்டு விட்டதாகவோ, அல்லது ஒரு விவரணையாளர் என்ற அளவில் அவருடைய தரத்தைச் சரியாக மதித்து விட்டதாகவோ கொள்ள முடியாது. எனவே கடந்த காலத்தைப் பற்றி உறுதியான எந்த முடிவுகளையும் அடைவது பற்றி நாம் நிச்சயம் கொள்ள முடியாது- அதை விட, அதில் ஒளிந்திருக்கும் இரும்பு விதிகளை அதிலிருந்து கைப்பற்றி விடுவதாக நவீனத்துவர்கள் அடித்துப் பேசுவது சாத்தியமே இல்லை. நாம் செய்யக் கூடியதெல்லாம், நமது அறிவின் விசாலத்தை வைத்துக் கொண்டு அதிலிருந்து சாத்தியமான விவரணைகளைக் கட்டமைப்பதுதான்.
இது வரலாறுக்கும் புனைவுக்கும் இடையே உள்ள எல்லைக் கோட்டைத் தெளிவாகவே ஒழித்து விடுகிறது.
தரிசனம்
சுற்றித் தடுத்து என்னைத் தன்
ஆளாக்கி
என்னுள் படர்ந்து என்னுயிரை
இயக்கிவந்த மாயத் தெய்வத்
திரைப்படலம்
பரிவே ஆதார சுருதியாக வாழ்ந்து மறைந்த சார்வாகன் பற்றி
இந்திய தத்துவம், பண்பாட்டு வரலாறு ஆகியவை குறித்த அவரது ஆழ்ந்த அறிவு இந்திய எதார்த்தத்தின் பல தள இயக்கத்தை எளிதாகக் கைப்பற்றி படைப்புலகக் கருப்பொருளாக அமைக்க உதவியிருந்தது. இதனால் அவரது புனைவுகளில் அவை புராணத் தன்மை கொண்டதாக அமைந்தன, ஆனால் தொன்ம குணம் கொண்டு அமையவில்லை. அவருடைய வாழ்வு நெடுக இருந்த பரிணாமத் தன்மை கொண்ட தேடலை எந்த சக்தி உந்தியது என்று பார்க்க முயன்றோமானால், அது அவருடைய விசாலமான பரிவுணர்வாகத்தான் இருக்க முடியும் என்று தெரிய வரும்.
அறிவிப்புகள்
ப்ரதிலிபியும் அகம் மின்னிதழும் இணைந்து கட்டுரைப்போட்டி ஒன்றினை நடத்தவிருக்கிறோம். தலைப்பு : “இன்றைய தமிழர்களின் வாழ்வில் தாய்மொழிக்குக் கொடுக்கப்படும் முக்கியத்துவம் என்ன? அதனை அதிகரிக்க என்னென்ன வழிமுறைகளைக் கையாளலாம்?” பரிசுத்தொகை : முதல் பரிசு – 15,000, இரண்டாம் பரிசு – 10,000, மூன்றாம் பரிசு – 5,000. கட்டுரைகளை அனுப்பவேண்டிய கடைசி நாள் – 15/01/2016.
தந்தையும் மகளும் போல் – இலக்கிய உறவு
சிங்கப்பூர்த் தமிழ் இலக்கியம் ஆழமும் அகலமும் என்னும் என்னுடைய ஆய்வு நூல் மருதா பதிப்பக வெளியீடாகச் சென்னையில் 2005 இல் வெளிவந்திருந்தது. அவர் அந்த நூலைப் படித்துத் திண்ணையில் ஒரு கட்டுரை எழுதியிருந்தார். அக்கட்டுரையை என்னுடைய மின்னஞ்சலுக்கு அனுப்பியும் இருந்தார். அக்கட்டுரையில் என்னைப் பற்றியும், என்னுடைய நூலின் தேவை பற்றியும், என்னுடைய துணிவையும் பாராட்டியிருந்தார். அப்படியெல்லாம் எளிதில் வெ.சா. பாராட்டிவிட மாட்டார். தகுதியான படைப்புக்கள் அவருடைய கண்களிலிருந்து தப்பியதே இல்லை.
வெ.சா. – குறிப்பு
“உண்மை ஏன் அதிரடியாக இருக்க வேண்டும்? அதிரடியாகத்தான் ஒரு சமூகத்தின் மேல் அது விழுகிறதென்றால் அது எப்படிப்பட்ட சமூகம்? நாம், தமிழர் இது பற்றி யோசிக்க வேண்டும்” என்றும், “தமிழனின் வீட்டு ஜன்னல் காலம் காலமாக திறந்துதான் இருந்தது. தமிழனைத் தட்டி எழுப்பியவர்கள்தான் அவன் வீட்டுக் கதவையும் ஜன்னலையும் “வெ.சா. – குறிப்பு”
வெங்கட் சாமிநாதன் – முழுமையின் தொடக்கம்
சாமிநாதனின் அழகியலில் ஒரு அறிவியலுக்கான கறார் தன்மை இருந்தபடியே உள்ளது. அபிநவ குப்தரின் தொடர்ச்சி என்று கொள்ளலாம் – அல்லது தொல்காப்பியரின். இந்திய மரபில் அழகியல் கோட்பாட்டாளர்கள் எப்போதுமே அழகியலுக்கான ஒரு பொதுமைத்தளத்தை தேடியிருக்கிறார்கள். மேற்கத்திய விமர்சகர்கள் அதை மெல்ல மெதுவாக எட்டினார்கள். அதற்குள் நாம் விக்டோரிய மதிப்பீடுகளுடன் கலை ஆன்மிகம் பக்தி ஒழுக்க விதிகள் எல்லாவற்றையும் இணைத்த ஒரு bastardized நிலைக்கு வந்துவிட்டோம்.
கலைவெளியில் ஒரு தாரகை: வெ.சாவுக்கான இடம்
தமிழின் செவ்விலக்கிய மரபைக் குறித்து வெ.சா அறிந்திருக்கவில்லை, அதை முற்றிலுமாக அவர் புறக்கணித்தார் என்று கூறப் படுகிறது. இது உண்மையல்ல. அகநானூறு முதலான சங்கப் பாடல்களின் அழகியலையும் காதா சப்தசதி என்ற பிராகிருத மொழியின் பழம்பாடல் தொகுப்பையும் ஒப்பிட்டு வெ.சா எழுதியிருக்கிறார். சுவடிகளை மீட்டெடுத்த உ.வே.சாமிநாதையரின் பணியை உயர்வாகவே மதிப்பீடு செய்திருக்கிறார். தமிழின் இரண்டாயிரம் ஆண்டுக்கால மரபிலக்கியம் முழுவதையும் எந்தக் கலாபூர்வமான அளவீடும், ஆழமான நோக்கும் இன்றி சகட்டுமேனிக்குப் புகழ்ந்து தள்ளும் போலித் தனத்தைத் தான் அவர் கண்டித்தார்.
வெ.சா என்ற வெங்கட் சாமிநாதன் –எனது நினைவுகள்
தமிழ் கலாசாரச் சூழலில் நெடுங்காலமாக ஆட்சி செய்து வந்த திராவிட, மார்க்ஸீயக் கலாசாரம் இரண்டையும் எதிர்த்துக் கட்டுரைகள் எழுதி வந்தார். 70-களில்தான் அவர் ‘உள்வட்டம், வெளிவட்டம்’ என்ற கருத்தாக்கத்தை முன்வைத்தார். ‘பிரக்ஞை’, ‘கசடதபற’ போன்ற பத்திரிகைகளில் அவர் எழுதிய அக்காலத்திய கட்டுரைகளில் இந்த உள்வட்டம்- வெளிவட்டத் தியரியின் தாக்கம் இருந்தது. ….அவரது உள்வட்ட-வெளிவட்டத் தியரியை நான் ஏற்கவில்லை. க.நா.சு என்ற க.நா.சுப்ரமணியத்தைப் போலவோ, சி.சு.செல்லப்பாவைப் போலவோ வெங்கட் சாமிநாதன் இலக்கிய விமர்சகரல்ல. வெங்கட் சாமிநாதன் ஒரு கலாசார விமர்சகர். ‘பாலையும் வாழையும்’ என்ற அவரது கட்டுரைத் தொகுப்பு இதைத்தான் வலியுறுத்துகிறது. வெ.சா.விடம் ஒரு உணர்ச்சி வசப்பட்ட, புளகாங்கித மயமான தன்மை அவரது கட்டுரைகளில் தொடர்ந்து துருத்திக் கொண்டிருக்கின்றன.
நானறிந்த வெ.சா
இதழ் வெளியீடு தேதியை கன்ஃபர்ம் செய்துகொண்டு அதற்கு இரண்டு நாட்கள் முன்பு கட்டுரைப்பகுதியை அனுப்புவார். அனுப்பும்போது மறக்காமல் ஒரு வரி இருக்கும். ‘சொன்ன தேதிக்கு முன்பே அனுப்பி விட்டேன். அதை பாராட்டி இரண்டு வார்த்தைகள் சொன்னால் தப்பில்லை’. சொன்ன தேதிக்கு இதழ் வெளிவரவில்லை என்றாலும் கோபப்படுவார். ’யாருடைய கட்டுரைக்கும் காத்திருக்கக் கூடாது. இதழ் வெளியீடு தேதி முடிவு செய்து விட்டால் வெளியிட்டு விடவேண்டும்’ என்பார். படைப்புகள் பற்றி வாசகர்களிடமிருந்து கருத்துப் பரிமாற்றம் இல்லை என்பது அவருடைய குறை. நமது வாசக சூழலே இன்று இப்படித்தான் இருக்கிறது என அங்கலாய்ப்பார். அவர்களுக்கு சொந்தக் கருத்தே இல்லையா. அல்லது சொல்லத்தயக்கமா அல்லது எதற்கு எதையாவது சொல்லி வம்பில் மாட்டிக் கொள்வது என்கிற நினைப்பா எனப் புரியவில்லை என்பார்.
மறந்துவிட்டீர்களா?
வெ.சா ரொறொன்ரோ பல்கலைக்கழக அரங்கில் இயல் விருது ஏற்புரையில் சொன்னது நினைவுக்கு வருகிறது. ஒரு ஞானியிடமிருந்து மட்டுமே அப்படியான வார்த்தைகள் வெளிவரும். நாற்பது வருடங்களுக்கு முன்னர் அவருடைய அலுவலகம் அவருக்கு நாடு நாடாக சுற்றி பணியாற்றும் ஒரு வாய்ப்பை கொடுத்தது. ஆனால் அந்த வாய்ப்பின் பெறுமதி தெரியாத ஒருவர் கொடுத்த நிர்ப்பந்தத்தால் அந்த வேலையை அவர் இழக்க நேரிட்டது. ஆகவே அவருக்கு ஏமாற்றங்களும் இழப்புகளும் பழகிப்போனவை. அவற்றை எதிர்கொள்ளும் மனப்பக்குவம் இருந்தது. அவர் வாழ்க்கையில் ஒன்றையும் பெரிதாக எதிர்பார்க்காமலிருக்கப் பழகிக்கொண்டவர். அவர் யாருக்கும் பணியாமல் உண்மையை எழுதினார். அது அவருக்கு இயல் விருதை பெற்றுத் தந்திருக்கிறது.
வெங்கட் சாமிநாதன்: விமர்சன படைப்பாளி
தமிழனின் கலாச்சார வறுமையை சுட்டிக்காட்டுமுகமாக அதிரடியான விமர்சனங்களையும் செய்தார். தமிழர்களிடம் கலையில்லை எல்லாமே தொழில் திறன் தான் என்றார். தனித்துவமிக்க பார்வை வெளிப்படாததால் சிற்பம், ஓவியம, கட்டடம் போன்றவற்றில் கலை உருவாகவில்லை என்றார். இது ஒப்புக் கொளக் கூடியதல்ல. கூட்டு முயற்சி கலைக்கு எதிரானதல்ல. இசை, நடனம் ,நாடகம், சினிமா, கட்டடம் போன்றவை ஒரு தலைமைக்கு கீழ் செயல்படுபவை….அதே சமயம் கலைத்திறமைக்கும் தொழில் திறனுக்கும் அவர் கொடுத்த விளக்கம் எனக்கு ஏற்புடையதாக இருந்தது. சூழ்ச்சிக்காரனான தச்சன் செய்கிற நாற்காலி நேர்த்தியாக இருக்கும். அங்கே தொழில் திறன் இருந்தால் போதும் ஆனால் ஒரு வன்புணர்வில் இடுபடுபவன் ராமாயணத்தின் சிறப்பை ஓத முடியாது. அவன் சத்திய தரிசனம் அற்றவனாக இருக்கும் பட்சத்தில் அது சிறக்காது என்று எடுத்துக் கூறினார்.
வெ.சாமிநாதன் : நெருங்கி விலகிய ஆளுமை
வெ.சாமிநாதனிடமும் தமிழ்ச் சிற்றிதழ் மரபினரிடம் காணப்படும் முக்கியமான குறைபாடு ஒன்றை இங்கே குறிப்பிட விரும்புகிறேன். தொல்காப்பியம் தொடங்கி வைத்த கவிதையியல் மரபு ஒன்று இருப்பதை இவர்கள் அறிந்திருக்கவே இல்லை. அவர்கள் நவீனக்கவிதையியல் என்று பேசுவதுகூட நவீனக்கவிதையியல் மரபல்ல. சமஸ்க்ருதக் கவிதையியல் மரபு தான். அதனை ஆங்கிலத்தில் வாசித்திருப்பதாலும், சம்ஸ்க்ருதக் கலைச்சொற்களுக்கீடான ஐரோப்பியக் கவிதையியல் கலைச்சொற்களைப் பயன்படுத்த முடிகிறதென்பதாலும் அதுவே நவீனத்திறனாய்வுக்கான சொற்களஞ்சியங்களாக நினைக்கின்றனர். ஆனால் தமிழ்ச் செவ்வியல் கவிமரபையும் சிலப்பதிகாரம், மணிமேகலை முதலான கதை தழுவிய நெடுநிலைத்தொடர் செய்யுளையும் உருவாக்கிய …
வெங்கட் சாமிநாதன் – தொடரும் பயணம்
சில விமர்சகர்கள் போல வெ.சா. எந்த காலத்திலும் தனது கருத்துகளை மாற்றிக்கொள்ளவில்லை என்பது அவரை இறுகிய சட்டகத்துக்குள் அடைக்கும் முயற்சி. மரபார்ந்த அணுமுறையில் சென்றதால் தனது இறுதி காலத்தில் இந்துத்துவத் தரப்பை முன்வைப்பவராக சிலரால் அடையாளம் காணப்படுகிறார். இது ஒரு குறுக்கல்வாதமாகத் தோன்றுகிறது. தனது காலத்தில் வெ.சா. அடையாளப்படுத்திய விழுமியங்களைத் தொடர்ந்து கவனிக்கும்போது இது எத்தனை மேலோட்டமானப் பார்வை என்பது தெளிவாகிறது. தெருக்கூத்து மற்றும் பாவைக்கூத்தின் மாற்றங்களின் கலை அனுபவம் ஐரோப்பிய நவீனத்துவ பாணியில் தொடங்கி பார்ஸி நாடகக் கூறுகளை ஒத்திருப்பதை அவதானித்து ஒரு மரபுத் தொடர்ச்சியைச் சுட்டிக்காட்டுகிறார்
வெங்கட் சாமிநாதன் மறைவைத் தொடர்ந்து – திலீப்குமாருடன் ஓர் உரையாடல்
1990களில் நாம் ஒரு திருப்புமுனையை எதிர்கொண்டோம். சமூக, அரசியல் தளத்தில் நிகழ்ந்த மாற்றங்கள் இலக்கியத்திலும் எதிரொலித்தன. வெங்கட் சாமிநாதன் கலைத்தன்மைக்கு முக்கியத்துவம் அளித்தவர். ஆனால், இலக்கியம் சமூகப் பிரக்ஞையும் அரசியல் விழிப்பும் கொண்டதாக இருக்க வேண்டும் என்ற கருத்து மேலோங்கியது. ஒரு புத்தகத்தைப் பற்றி வெங்கட் சாமிநாதன் என்ன எழுதியிருக்கிறார் என்று கேட்கும் நிலை மாறி, அவர் எழுதினால் நல்லது, எழுதாவிட்டால் ஒன்றும் மோசமில்லை என்ற நிலை உருவானது. அதுவரை சிறுபத்திரிக்கைச் சூழலில் இயங்கி வந்த வெங்கட் சாமிநாதன் முழுமையாக புறக்கணிக்கப்பட்டார்.
என் ப்ரிய வெ.சா…
நான் பழக நேர்ந்த ஆளுமைகளில் படு ரசனையான, குறும்பான ஆசாமிகள் ஒருவர் வெ.சா. அந்தக் கால தில்லி தமிழ் இலக்கிய உலகைக் குறித்து சுவாரசியமாகப் பல விஷயங்கள் சொல்லுவார். குறிப்பாக, தி.ஜானகிராமனைக் குறித்துப் பேசுவதென்றால் பேசும் அவருக்கும் கேட்கும் எனக்கும் அதிவிருப்பம். அவரும், தி.ஜாவும் இன்னபிற நண்பர்களும் காருக்குறிச்சி அருணாசலம், மகாராஜபுரம் விஸ்வநாத ஐயர் இசைத்தட்டுகளின் பின்னணியில் உற்சாகபானத்துடன் பேசியபடி களைகட்டும் கச்சேரிகளைப் பலமுறை வெ.சாவின் வார்த்தைகளில் என் கண் முன்னாலேயே கண்டிருக்கிறேன்…..புத்தகங்களை வாசிப்பதில் அவருக்கு இருந்த உற்சாகம் கடைசிவரை குறையவேயில்லை. அதேபோல அவருக்குப் பிடித்த முக்கியமான புத்தகங்களைக் குறித்துத் தவறாமல் எழுதிவிடவும் செய்வார். அத்தனை வயதுக்கு மேல் கம்ப்யூட்டரில் தமிழில் டைப் அடிக்கக் கற்றுக்கொண்டு அதிலும் ஒரு மென்பொருளில் பிரச்சினை வந்தால் அதை நீக்கி இன்னொரு மென்பொருளைப் பயன்படுத்தி எழுதுவதுவரை கற்றுக்கொண்டார். அவர் வயதில் என்னால் அத்தனை புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்ள முடியும் ஆர்வம் இருந்தால் நான் ஆசிர்வதிக்கப்பட்டவன் என்றே எண்ணிக்கொள்வேன்…..எப்போதுமே உற்சாகமாகப் பேசும் வெ.சாவின் குரலில் தளர்ச்சியை ஒரு சிலமுறைதான் கேட்டிருக்கிறேன். அதில் ஒன்று கவிஞர் ராஜமார்த்தாண்டன் மறைவின்போது. ‘எனக்குப் பிடிச்சவங்கள்லாம் இப்படி ஒவ்வொருத்தரா போய்ட்டே இருக்காங்க’ என்று ஆற்றாமையோடு சொன்னார். …எத்தனையோ எழுத்தாளர்களின் படைப்புகளை மிகக் கறாராக விமர்சித்திருக்கிறார். ஆனால் அவர்களில் பெரும்பாலாரானோடு தனிப்பட்ட முறையில் அவருக்கு நல்ல நட்பு இருந்திருக்கிறது. வாழ்நாள் பூராவும் சண்டை போட்டுக்கொண்டிருந்தாலும் பெரியவர் தி.க.சி அவரைச் சந்திக்க விரும்புகிறார் என்று சுகா மூலம் தெரியவந்ததும் அவரைத் தன் இயலாத உடல்நிலையிலும் இரண்டு வருடங்களுக்கு முன் திருநெல்வேலிக்கே நேரில் சென்று சந்தித்துப் பேசிவிட்டுவந்துவிட்டார். நாஞ்சில்நாடன், பாவண்ணன், பாரதிமணி பாட்டையா என யாரோடு நான் பேச நேரும்போது எங்கள் உரையாடலில் பெரும்பாலும் இடம்பெற்றவர் வெ.சாதான். அதிலும் நாஞ்சில்நாடன் அவர்கள், வெ.சா மீது வைத்திருக்கும் பெருமதிப்பை நான் மிக நன்றாக அறிவேன். நாஞ்சிலுடன் நான் அவர் படைப்புகள், பயணங்களைக் குறித்துப் பேசியதைக் காட்டிலும் வெ.சா குறித்து பேசியதுதான் அதிகம்.
எம்எஸ்வி இசையும் காலமும் – 3
இதுதான் “எங்க வீட்டுப் பிள்ளை”யின் ஆண்டு. இதில் வரும், “நான் ஆணையிட்டால்” என்ற எம்ஜிஆர் பாடல், மிகப் பிரபலமானது என்பது மட்டுமல்ல, மிகவும் பகடி செய்யப்பட்ட பாடலும்கூட. அதன் சக்தி வாய்ந்த, தொடர்ந்து ஒலிக்கும் தாளம், டிஎம்எஸ்சின் குரல், எம்ஜிஆரின் வசீகரத் தோற்றம், பாடல்கள்- அனைத்தும் இந்தப் பாடலில் ஒன்று சேர்ந்து எம்ஜிஆரின் பிம்பத்தை நம் மனங்களில் உயர்ந்தி நிறுத்துகின்றன. இடையிசையில் ஸ்பானிஷ் புல்-பைட்டுகளை நினைவுபடுத்தும் கிடார் இசைப்பது இந்தப் பாடலுக்கு கச்சிதமாகப் பொருந்து வருகிறது.
எனக்கேயுரிய வாழ்க்கை
ஆலிவர் சாக்ஸ் இன்று இறந்த செய்தி எத்தனை பேரை பாதித்திருக்கும் என்று தெரியவில்லை. நரம்பியல் குறித்து பொது வாசகர்களிடையே சுவாரசியமான அறிமுக கட்டுரைகளை எழுதிய அவரது மரணம், மனித குலத்துக்கு ஒரு பேரிழப்பு. கருவிகளையும் தரவுகளையும் புள்ளிவிவரங்களையும் அடிப்படை மருத்துவ முறைமைகளாகக் கொள்ளும் போக்கு மேற்கத்திய மருத்துவத்தில் வலுத்து வரும் காலத்தில், உயிரும் உணர்வும் கொண்ட தனிமனிதனைத் தன் மருத்துவக் கட்டுரைகளைக் கொண்டு அறிமுகப்படுத்திக் கொண்டிருந்தவர் அவர்.
இறுதி அஞ்சலி: திரு. ஆ.ப.ஜெ அப்துல் கலாம்
அவரது இல்லத்திலிருந்து பேக்கரும்பு வரை சென்ற ஊர்வலத்தில் ஹிந்துக்கள்,கிருஸ்தவர்கள்,முஸ்லீம்கள் மற்றும் சீக்கியர்கள் கலந்து கொண்டனர்.அவரது இறுதி ஊர்வலத்தில் பாரத் மாதா கி ஜெய் மற்றும் வந்தே மாதரம் ஆகிய முழக்கங்கள் ஒலித்தன.இந்திய வரலாற்றில் கலாம் அவர்களுக்கு செலுத்தப்பட்ட இறுதி மரியாதை முக்கியமான மிகச் சிறப்பு வாய்ந்த அத்தியாயமாகும்.அவ்விதத்தில் அவர் இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்கு ஆற்றியுள்ள பங்களிப்பு அவர் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறைக்கு அளித்த பங்களிப்புகளை விஞ்சியுள்ளது.
எம்எஸ்வி – ஓர் அஞ்சலி
எழுபதுகளில் நான் மேலே சொன்ன கே பாலச்சந்தர் படங்களின் பாடல்களிலும் சரி, எம்ஜிஆர், சிவாஜி படப்பாடல்களிலும் சரி, எம்எஸ்வியின் இசையமைப்பில் செவ்வியல் தன்மை அதிகரித்து செமி-கிளாசிகல் என்று சொல்லக்கூடியப் பாடல்கள்தான் அதிகம் வந்தன. அபூர்வ ராகங்கள், மன்மத லீலை போன்ற படங்களின் பாடல்களும், எம்ஜிஆர் படங்களின், நீ என்னென்ன சொன்னாலும் கவிதை, இதுதான் முதல் ராத்திரி, என்ன சுகம் என்ன சுகம், கொஞ்ச நேரம் என்னை மறந்தேன் போன்ற பல பாடல்களும் செமி கிளாசிகல் என்ற வகையைச் சேர்ந்தவை. சிவாஜி படங்களிலும், அன்பு நடமாடும் கலைக் கூடமே, அம்மானை அழகு மிகு கண்மானை, செந்தமிழ்ப் பாடும் சந்தனக் காற்று, காதல் ராஜ்ஜியம்,ஆகாயப் பந்தலிலே போன்ற பல பாடல்களை உதாரணமாகச் சொல்லலாம்.
இந்தப் பாடல்கள் எல்லாம் ரசிகர்களிடம் ஓரளவு வரவேற்பு பெற்றாலும் நுட்பமாக விவாதிக்கப்பட்டு ரசிக்கப்படவில்லை என்றே சொல்ல வேண்டும். இதற்கு நான் காணும் காரணம், அறுபதுகளில் தொடங்கி எழுபதுகளின் இறுதிவரை தமிழகத்தில் நிலவி வந்த கர்நாடக இசை மீதான ஒருவகை ஒவ்வாமையும் அலட்சியமும்தான். சற்றுத் துணிந்து சொல்வதானால், அறுபதுகளில் உச்சத்தை அடைந்த பார்ப்பன வெறுப்பின் ஒரு பகுதியாகவே கர்நாடக இசையும் ஒதுக்கி வைக்கப்பட்டது.
கோபுலு – மறக்க முடியாத நினைவுகள்
பெருநகரத்தின் நடைபாதை வாழ்வு சார்ந்த செங்கல்பட்டு, வட ஆற்காடு உழைப்பாளி மக்களை மிக வேகத்துடனும், துல்லியத்துடனும் அவர் வரைந்திருப்பார். ஜார்ஜ் டவுன் ஜனப்பிரவாகத்தில் அவர் வரைந்த பல முகங்களை நான் பல முறை எதிர்கொண்டிருக்கிறேன். செம்புதாஸ் தெரு கார்ப்பரேஷன் பள்ளியில் என்னுடன் படித்த என் பால்யகால சகியும், நடைபாதை வாசியுமான பாஞ்சாலியின் முகச் சாயலை கோபுலுவின் ஏதோ ஒரு கோட்டோவியத்தில் பார்த்து வியந்திருக்கிறேன். பாஞ்சாலி மட்டுமன்று; நடைபாதைகள் சேரிகளின் பல குணச்சித்திரங்கள் அவர் தூரிகையில் உயிர் பெற்று எழுந்தார்கள். பிராமண முகங்களைப் பற்றிக் கேட்கவே வேண்டாம். குறிப்பாக தஞ்சை மாவட்ட பிராமண முகங்களின் அத்தனை வகைகளையும் அவர் வரைந்து தீர்த்திருப்பார் என்று நினைக்கிறேன்.
அன்று விகடனில் அவர் வரைந்த தொடர்கதைகளுக்கு தலைப்பு எழுத்துகளை ஒட்டி சின்னதாக ஒரு முகப்போவியம் வரைந்திருப்பார் பாருங்கள்!
சித்திரக் கலைஞர் கோபுலு
விகடன், குமுதம், கல்கி, தினமணி கதிர், அமுதசுரபி எனத் தமிழின் முன்னணி வார இதழ்கள் அனைத்திலும் கோபுலு வரைந்தார். ஜெகசிற்பியனின் ஆலவாய் அழகன், திருச்சிற்றம்பலம், தேவனின் துப்பறியும் சாம்பு, கொத்தமங்கலம் சுப்புவின் தில்லானா மோகனாம்பாள், ராவ்பகதூர் சிங்காரம், சுந்தாவின் யாருக்கு மாலை, சாவியின் வாஷிங்டனில் திருமணம், நா.பார்த்தசாரதியின் நித்திலவல்லி, “சித்திரக் கலைஞர் கோபுலு”
குந்தர் கிராஸ்
குந்தர் வில்ஹெம் கிராஸ் ஜெர்மன் நாவலாசிரியர், கவிஞர், நாடக ஆசிரியர், ஓவியர், வரைகலைஞர், சிற்பி. 1999ல் இலக்கியத்திற்கு நோபல் பரிசு பெற்றவர். அவருடைய சுய சரிதையான Peeling the Onion (2007) எழுதியபோது எடுத்த பேட்டி: