Beatles – காலத்தில் சிறிது பின்னோக்கி….

1960-70 களில் உலகத்தை தங்கள் இசையால் மயக்கிய Beatles இசைக்குழுவினரின் புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு. மக்களிடையே அவர்களுக்கு பெற்றிருந்த செல்வாக்கை பறைசாற்றும் படங்கள் இவை. குழு உறுப்பினர்களின் சில சுவரசியமான புகைப்படங்களைக் கொண்ட நல்லதொரு தொகுப்பை இங்கே பார்க்கலாம். கீழே உள்ள புகைப்படத்தை பாருங்கள். Beatles குழுவின் பின்னால் “Beatles – காலத்தில் சிறிது பின்னோக்கி….”

பின்னணி இசை – தேசிய அங்கீகாரம்

இந்தியத் திரைப்படங்களுக்கான தேசியவிருதுப் பட்டியலில் இந்த வருடத்தில் புதியதாக சிறந்த பின்னணி இசைக்கான விருதும் சேர்க்கப்பட்டுள்ளது. உலகெங்கும் திரைப்படங்களில் இசை என்றாலே பின்னணி இசை என்றிருக்கையில் இத்தனை வருடங்களாக தேசியவிருதுக்குழுவினர் வெறும் பாடல்களை மட்டுமே முன்வைத்து இசைக்காக விருது அளித்து வந்துள்ளனர். இப்போதாவது இதை அறிமுகப்படுத்தி முக்கியத்துவம் தருகிறார்களே “பின்னணி இசை – தேசிய அங்கீகாரம்”

பனிப்போரின் இரகசிய பரிசோதனைகள்

ஆனால் பனிப்போர் யுகத்திலோ அதி-உளவியல் மற்றும் ஆழ-உளவியல் பரிசோதனைகள் என்கிற பெயரில் பல மூர்க்கத்தனமான மற்றும் முட்டாள்தனமான பரிசோதனைகளில் வல்லரசுகள் பணத்தை செலவிட்டன. சில நேரங்களில் எதிரியை இப்படி வீணாக செலவழிக்க வைக்க தம் பக்கத்து முட்டாள்தனங்களுக்கு உண்மை முலாம் பூசி பெரிதுபடுத்தி மறு முகாம்களில் பரவ்விடவும் இரு வல்லரசுகளும் தயங்கவில்லை.

அனிமேஷன் திரைப்பயணம்: 05 – கல்வி வாய்ப்புகள் மற்றும் எதிர்காலம்

இளைஞர்களுக்கு ஒரு சின்ன யோசனை. வெறும் 3DS Max தெரியும், Maya தெரியும். ஆகவே தன்னை அனிமேஷன் வித்தகர் என்று நினைக்க வேண்டாம். பொதுவாக, நம் இளைஞர்கள், மேல் வாரியாக மேலைநாட்டுத் (அதனால் தான் மேல்வாரி என்ற சொல் வந்ததோ?) தொழில்நுட்பங்களை அறிந்து கொள்வதிலேயே காலத்தை செலவழிக்கிறார்கள். மென்பொருள் உபயோகத்திறன் மிகவும் முக்கியம் – ஆனால் அதுவே குறிக்கோளாகக் கூடாது. மென்பொருள் அம்சங்களுக்கு (feature/function) பின்னால் உள்ள நுட்பத்தையும் முறையாகக் கற்க வேண்டும்.

தரிசனம்

இப்போது மண்டபத்தின் மத்தியில் சன்னதியை நோக்கியவாறு கூப்பிய கரங்களோடு ராஜா நின்றார். இரண்டு படி கீழே ராஜாவைப் பார்த்தவாறு பூசாரிகள் இருவரும் நின்றனர். இன்னும் சன்னதி திறக்கவில்லை. சில சடங்குகள் முடிந்ததும்தான் திறப்பார்கள் போலும். ஒரு பூசாரியின் கையில் இருந்த தட்டில் பன்முக விளக்கும் கற்பூரமும் எரிந்தன. மற்றொருவர் தட்டில் என்ன இருந்தது என்று தெரியவில்லை. எதிர் பிரகாரத்தில் இருந்தவர்கள் தாமே ஒருவர் பின் ஒருவராக சீரான வரிசையில் முற்றத்தில் இறங்கி மண்டபம் நோக்கி நகர்ந்தனர்.

மில் – ஒரு பார்வை

முற்போக்கு என்கிற பெயரில் எழுதப்படுகிற நாவலில் அறிவுக்கொலைகள் சர்வ சாதாரணம். மற்ற பக்கத்தின் மீதான அறிவின்மை, சகபுரிதல், ஒட்டுமொத்த புரிதலின்மை போன்றவற்றால் எழும் வெற்றிடத்தை மனித நேயக்குரல், மார்க்கீசியம் என்கிற வெறும் ஓலி அலைகளால் நிரப்புதலே முற்போக்கு இலக்கியம் என்கிற காலகட்டத்தை பின் தள்ளி எழுத்துக்கள் நகர்தல் அவசியம்.

வெடித்துக் கிளம்பும் விக்கிலீக்ஸ் – இறுதிப் பகுதி

விக்கிலீக்ஸின் கசிவினால் அமெரிக்காவின் பாக்கிஸ்தான் கொள்கைகளில் பெருத்த மாற்றமோ விளைவுகளோ ஏற்படாவிட்டாலும் கூட இந்த கசிவு ஒரு புதிய விவாதத்தை குறைந்த அளவிலேனும் துவக்கி உள்ளது ஒரு வரவேற்கத்தகுந்த மாற்றமே. இந்தியா போன்ற ஜனநாயக நாடுகளில் கூட விஸில் ப்ளோயர்கள் பலரும் கொல்லப் படுகிறார்கள் அல்லது அரசாங்கத்தினால் கைது செய்து சித்ரவதை செய்யப் படுகிறார்கள்.

கண்ணாடி அணிந்தவனின் நிலவு

என் பார்வையின் விளிம்புகளில்
படித்த எழுத்துக்கள்
நிரம்பிப் பிராகசிக்கின்றன.
அத்தனை பாவனைகளுக்கும்
அத்தனை விளிம்புகளை
மாற்றிக் கொள்ளலாம்.

உலைகலனாகுமா தமிழகம்? – கோவை நிகழ்வை முன்வைத்து

இன்னும் பத்து ஆண்டுகளில் தமிழகமெங்கும் கோவை நகரச் சம்பவங்கள் நிகழ்ந்து, அதன் பின்விளைவாக தொழில் முடக்கமும், வேலை வாய்ப்பின்மையும் சமூகக் கொந்தளிப்பும் ஏற்படுவதைத் தடுக்க நாம் என்ன செய்யப் போகிறோம்? இப்படி முன்கூட்டி நாசம் ஏற்படவிருப்பதை நமக்கு உணர்த்தும் வகையில் சமூகத்தில், பொருளாதாரத்தில், பண்பாட்டில் என்ன விதமான சக்திகளை நாம் உருவாக்க வேண்டும்?

சின்னஞ்சிறு கிளியே

அப்படிப்பட்ட எம்.எஸ்.விஸ்வநாதன் அப்பாடலின் ஆண் குரலுக்கு, செம்பை வைத்தியநாத பாகவதரின் சிஷ்யரும், கர்நாடக சங்கீதத்தில் தேர்ச்சி பெற்றவருமான கே.ஜே.யேசுதாசைத் தெரிவு செய்கிறார். அதில் எந்த ஆச்சரியமும் இல்லை. ஆனால் அப்பாடல் தொடங்குவதே பெண் குரல்தான். அந்தப் பெண்குரல் பகுதிக்கு பதினான்கு வயதே நிரம்பிய ஒரு புதிய பெண் பாடகியைப் பாடவைக்கிறார். அப்படியென்றால் அவருக்கு அந்தப் பெண் குரல் மீது எத்தனை நம்பிக்கையும், அங்கீகரிப்பும் இருந்திருக்க வேண்டும்! ‘சின்னஞ்சிறு கிளியே’ என்று பல்லவியை அனுபவித்துப் பாடித் துவக்கிய அந்த இளம்பாடகியின் பெயர் ஸ்வர்ணலதா.

எழுதுவதென்பது ஒரு சுய இன்பச்செயல்

அப்பாவின் மெளனம், இயன் மெக்கீவனின் (Ian McEwan) ‘பிராயச்சித்தம்’ (Atonement) நாவலில் வரும் ஒரு பத்தியை நினைவுபடுத்தியது. அக்கதையின் முக்கிய கதாபாத்திரம், தான் ஐம்பது வருடத்திற்கு முன் வசித்த லண்டனிலுள்ள ப்ளூம்ஸ்பரி என்ற இடத்தை ஒரு டாக்சியில் கடப்பாள். அப்போது அவள் மனதில் இந்த சிந்தனைகள் ஓடும், “ஓரு வயதுக்குப் பிறகு நகரத்தினூடே பயணம் செய்தல் துயரமிக்க நினைவுகளை கொண்டு வருகின்றது. இறந்தவர்களின் முகவரிகள் குவிந்துகொண்டே போகின்றன… ஒரு நாள் நானும் ஒரு வழிப்போக்கனின் மனதில் நொடி நேர நினைவைத் தோற்றுவிப்பேன்.”

’கதை என் மீது துள்ளியபடி இருக்கும்’

ஆம் என் தலைக்குள் பல எண்ணங்கள் ஓடியபடி இருக்கும். இருந்தும் எந்த புதிய எண்ணங்களும் இல்லாததைப் போல பல தினங்கள் வெறுமே கழியும். ஆனால் எதையாவது எழுத துவங்கிவிட்டால் பித்து பிடித்ததைப் போல் ஒரு வாரத்தின் ஏழு நாட்களிலும், ஒரு நாளைக்கு பத்து அல்லது பதினைந்து மணிநேரங்கள் உழைப்பேன். இப்படி நடக்கும் நிகழ்வுகளே என் கதைகளை தீர்மானிக்கும்.

மகரந்தம்

ஒரு தனி உயிர் தன்னுடைய நேரத்தை தன் இனப்பெருக்க சாத்தியங்களை ஓரளவாவது துறந்து தன் உயிரினக் கூட்டத்துக்கு நேரத்தையும் தன் சக்தியையும் கொடுப்பதற்கு பின்னால் இயங்கும் ஆதாரமான பரிணாம விதிகள் என்ன? ஈ.ஓ.வில்ஸன் தன் வாழ்க்கையையே இந்த ஆராய்ச்சியில் செலவழித்திருக்கிறார்.

ஆழியிலிருந்து ஆகாயத்துக்கு

இமயமலை மீதிருக்கும் தீராத காதலாலும், தன் முந்தைய பயணங்கள் வழியே இந்தியாவைக் குறித்து நன்கு அறிந்திருந்ததாலும், கங்கை நதி ‘இந்தியாவின் இதயம்’ என்பதையும், அவர் மேற்கொள்ளும் சாகசப் பயணம் ஒருவிதத்தில் ‘கலாசார யாத்திரை’ என்பதும் ஹிலரிக்கு நன்றாகவே தெரிந்திருந்தது. அப்பயணத்தில் யாருக்குமே எளிதாகக் காணக் கிடைக்கும் அழுக்கடைந்த வாழ்க்கையைக் கண்டும் காணாமல் ஒதுங்கிச் செல்லவில்லை அவர். ஆனால் அதே நேரத்தில், பெரும்பாலான மேற்கத்திய எழுத்தாளர்கள் போல இந்த அழுக்கையும், துயரத்தையும் மிகைப்படுத்தாமல், இந்தியாவைக் குறித்து இழிவாகப் பேசுவதில் மகிழ்ச்சியடையாமல், ‘இது இப்படியிருக்கிறது’ என்று தன்னுடைய பார்வையை மட்டுமே பதிவு செய்கிறார் ஹிலரி.