வெரோனிகாவின் இரட்டை வாழ்க்கை

இருவரும் மிகச்சிறந்த பாடகிகள். இருவருக்கும் இதயக்கோளாறு இருக்கிறது. ஒருவர் இதயக்கோளாறுடனே தொடர்ந்து பாட முயற்சிக்கும்போது மாரடைப்பு ஏற்பட்டு இறக்கிறார். இன்னொருவர் அதே சமயத்தில் இதயநோயின் காரணமாகப் பாடுவதைக் கைவிட்டு ஒரு இசைப்பள்ளியின் ஆசிரியராகப் போகிறார்.

பேரரசின் தொலைந்த தொடுவானங்கள்

மத்திய அரசுடைய நிதிப்பற்றாக்குறை நாட்டு வருமானத்தில் 10 சதவீதத்துக்கு மேலாகும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. இதைச் சமாளிக்க வேகம் வேகமாக அரசுடைய கடன் பத்திரங்களையும், பண நோட்டுகளையும் அச்சடித்துத் தள்ளுவார்கள். இதனால் ஏற்படும் பணவீக்கம் சமூகத்தைக் குதறி எடுத்து விடும். கடந்த மூன்று மாதங்களில் அதிகமாக விற்ற பொருள் என்ன தெரியுமா? கைத்துப்பாக்கிகளும், ரைஃபிள்களும்தான்.

கல்லா நீள்மொழிக் கதநாய்

ஒருவர் செய்வதைப் பார்த்து அதேபோலச் செய்யமுயலும் திறனுள்ள சில மிருகங்களுக்குப் பேசும் சக்தி உண்டு என்று தாங்கள் நிரூபித்திருப்பதாக விஞ்ஞானிகளிலேயே ஒரு பிரிவினர் அறிவிக்கக்கூடும். அப்படி நடந்தால், அது பற்றி நாம் வியப்படையக்கூடாது என்றும் அவர் எச்சரித்தார்.

அரசியலாக்கப்பட்ட அறிவியல்- குளோபல் வார்மிங் – பகுதி 2

அரசியல் கலப்பற்ற அறிவியலாக இந்த விவாதம் இருந்திருந்தால் டாக்டர். மான் குழுவினரின் MBH98 வரைபடம் அடுத்த சில ஆண்டுகளிலேயே தவறான வழிமுறைகளை அடிப்படையாக்கியது என்று தள்ளுபடி செய்யப்பட்டிருக்கும்தான். ஆனால் குளோபல் வார்மிங் 1970லிருந்தே படிப்படியாக அரசியலாக்கப்பட்டு, 1988இல் IPCC மூலம் நிறுவனப்படுத்தப்பட்டு இருந்தது.

ஏக்கத்திலாழ்த்தும் சிவரஞ்சனியும், இளையராஜாவின் வால்ட்ஸும்

இந்த கார்ட் ப்ராக்ரஷனை அதன் ட்யூனோடு சேர்த்து கீபோர்டில் வாசிப்பதற்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. ஏனென்றால் ஒரு மேற்கத்திய செவ்வியல் வடிவமைப்பைப் போலவே இப்பாடலின் ஒவ்வொரு ஸ்வரத்துக்கும் முழுமையான ஹார்மோனி துணையை (Harmonic Accompaniment) உருவாக்கியிருக்கிறார் இளையராஜா.

முன் செல்லும் பெண்ணின் தோளில் பூத்த மழலைச் சிரிப்பில்

ராஜ மார்த்தாண்டனுக்கு பிடித்தமான உலகம், அவருக்கு அமைதியும் மகிழ்ச்சியும் தரும் உலகம், மரங்களின், பறவைகளின், பூக்களின், குழந்தைகளின் உலகம் தான். அவரது சிறந்த கவிதைகள் இவற்றைப் பற்றியன தான். இந்த உலகில் அவர் ஆழ்ந்து விடும் போது அவரிடமிருந்து பிறக்கும் கவிதைகள் ஒரு ஜென் ஞானியின் உலகிற்கு நம்மை இட்டுச் செல்லும்.

வன்முறையின் வித்து – ஓர் உரையாடல் – பகுதி 2

தன் மூத்த மகன், கொரிய போரில் இறந்தபோது கூட மாஓ எந்த வருத்தமும் கொள்ளவில்லை. தன்னுடன் வார இறுதிகளையும், விடுமுறைகளையும் கழித்த தன் மகனின் விதைவையிடம் கூட இந்த செய்தியை இரண்டரை வருடங்களுக்கு பிறகுதான் தெரிவித்தார். கம்யூனிஸ ரகசிய நடவடிக்கைகளுக்கு பழகிபோயிருந்த அவரது மருமகளும், தன் கணவனிடமிருந்து தனக்கு எந்த கடிதமும் வராததை குறித்து எந்த கேள்வியும் எழுப்பவில்லை.

மகரந்தம்

சில ஆங்கில வலைத்தளங்களின் முக்கியமான, சுவாரசியமான, பல்துறை சார்ந்த படைப்புகளின் தொகுப்பு இப்பகுதி. இந்த இதழில் இடம்பெறும் பகுதிகள்: சீனாவின் மன நோயாளிகள், ஈரான் தேர்தல், சந்திரயான் புகைப்படங்கள், மரபணு வித்தியாசங்கள் – இன்னும் பல.

பெயரிலென்ன இருக்கிறது?

‘புதுமைப் பித்தன்’, ‘மௌனி’ போன்றவர்களது கதைகளைப் படிக்காமல் அந்தப் பெயர்களைக் கேட்கையில் கொஞ்சம் கூச்சம் ஏற்படுகிற மாதிரி இருக்கும் என்றே நினைக்கிறேன். அவர்கள் பெயராக அவை இருந்ததனால் அவை சாதாரணமாக ஏன் பொருத்தமாகக் கூட ஒலிக்கின்றன. ‘ஜெயகாந்தன்’ வெற்றியை ஈர்ப்பவர் என்றும் ‘ஜெயமொகன்’ வெற்றியை நேசிப்பவர் என்றும் பொருள் ஆகின்றன. ‘

‘ஒளி வரும் வரை’ – கவிதைகள்

….கோயில் தூண்களில் சேரும் உடல்கள்
காலத்தின் வாசனை கோயிலுக்குள் மணக்கிறது
கற்பூரம்போல…..