ஒளிர்நிழல் – கரிப்பின் விசாரணை

This entry is part 30 of 72 in the series நூறு நூல்கள்

வெறுப்பின் பலவித அலகுகளைச் சோதித்துப்பார்க்கும் களமாக இந்த நாவலை நான் காண்கிறேன். தனிப்பட்ட உறவுகள் மீதான கசப்பும், தன் சமூகம் மீதான சுய எள்ளலும் (இது அடுத்த கட்டத்துக்கு நகர்த்த உந்தும் விமர்சனமாக அமையவில்லை. பள்ளர் சமூகம் எட்டிப்பிடிக்க வேண்டிய காலத்தைப் பற்றி உரையாற்றிய சக்தி, காரில் ஏறியதும் தாங்கமாட்டாது சிரிக்கிறான்; அதனால் இது கரிப்பாகவே மிஞ்சுகிறது), ஒழுங்கில்லாத எளிய வரலாற்றின் மீதான கோபமும் ஆகிய மூன்றும் நாவலின் அடியோட்டமாக மிஞ்சுகின்றன.

இந்திய டிஜிட்டல் புரட்சி

இந்திய அரசாங்கத்தின் நோக்கு, நாளொன்றிற்கு, 100 மில்லியன் ஆதார் அடையாளக் கோரிக்கைகளை 5 நொடிகளுக்குள் பதிலளிக்கும் சேவை. இத்தனைக்கும், இந்த 5 நொடிக்குள் நடக்கும் விஷயங்கள் மிகவும் நவீனமான ஒரு தொழில்நுட்பப் புரட்சி… முதலில், UDAI செய்த வேலை – முதல் ஆதார் எண் ஒதுக்குவதற்கு முன், ஆதாருடன் மின்னணு முறையில் எப்படித் தொடர்பு கொள்ள வேண்டும் என்பதை வெளியிட்டதுதான். பல்லாயிரம், சேவை நிறுவனங்கள் ஆப்பிள் ஆப்ஸ்டோர், மற்றும் கூகிள் ப்ளேஸ்டோரில் ஒரு சின்ன நிரலை உருவாக்கினால், போதும். அந்த நிறுவனத்தின் நுகர்வோர் இந்த நிரல் மூலம் தங்களின் அடையாளத்தை எளிதில் நிறுவனத்துடன் சரி பார்த்துக் கொள்ளலாம்.

எம். எல். – அத்தியாயம் 14

“கச்சியிலே சேந்து என்ன பண்ணப்போற?”
“ஜனங்களுக்கு ஏதாவது செய்யணும்னு தோணுதப்பா…”
“அரசியல்லாம் ஒனக்குச் சரிப்பட்டு வராது… நம்ம கையில யாவாரம் இருக்கு… அதக் கவனிக்கத விட்டுட்டு அரசியல் அது இதுங்கறியே?…”
“அதுக்குத்தான் அண்ணன் இருக்கானே…”
சுப்பிரமணிய பிள்ளைக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. “அரசியல்ல எல்லாம் சம்பாத்தியம் பண்ணத் தெரியாதுடா ஒனக்கு.”
“நான் சம்பாதிக்கிறதுக்காக அரசியலுக்குப் போகலை…”

செவித் திறனிழப்பு

தமிழகத் திருமணங்களில் காதைப் பிளக்குமளவில் ஒலிபெருக்கிப் பெட்டிகளை அமைப்பது சம்பிரதாயமாகிவிட்டது. இதனால் செவித்திறனிழப்பை அடைந்தவர்களின் எண்ணிக்கை லட்சக்கணக்கில் இருக்கும் என்று நினைக்கிறேன். சென்னையின் தெருக்களில் வாகனங்களின் ஹார்ன் சத்தம் ஓய்வதேயில்லை. சினிமா கொட்டகைகளிலும், கலையரங்குகளிலும், சில சமயம் வீடுகளிலுமே காதை மந்தப்படுத்தும் அளவு சத்தம் நிரம்பியுள்ளது. தொழிற்சாலை ஊழியர்களும் மணிக்கணக்கில் இயந்திரங்களின் சத்தத்தில் இயங்க வேண்டியுள்ளது. தீது விளைவிக்கும் சத்தம் உரோம உயிரணுக்களை நேரடியாகவும் வேறு வழிகளிலும் தாக்குகிறது.

துவக்கம்

‘’ஆள்றவன் நினைச்சா சட்டம் அப்படியே மாறி நிக்கும் தம்பி. ஆனா மனுஷனுக்கு மனுஷன் பேசின பேச்சுக்கும் கொடுத்த வாக்குக்கும் அர்த்தம் இல்லன்னா நம்ம வாழ்க்கை மனுஷ வாழ்க்கையாவே இருக்காது. தேர்தல் வரும் போது ரெண்டு கிலோமீட்டர் போய் ஓட்டுப் போடறோம். கொள்ளிடக் கரையில நடந்து தான் பிள்ளைங்க ஸ்கூலுக்கு போவுது. ஆனா இந்த பிரதேசத்துல நம்ம வாழ்க்கைதான் நல்லா இருக்கு. பட்டா நிலத்துல பண்ணையம் பாக்கறவங்களை விட நாமதான் நல்லா இருக்கோம். நமக்குள்ள ஒற்றுமை இருக்கு. அதுதான் நம்மளோட பலம். அதை எக்காரணம் கொண்டும் இழந்திரக் கூடாது.’’

அமெரிக்காவில் மட்டும் இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட குறை வயது கல்யாணங்கள்

தன் பதினொன்றாம் வயதில் ஷெரி ஜான்ஸன் என்பவர் வன்கொடுமைக்கு உள்ளானார். அதனால் கருவுற்றார். அதன் பின் தன்னை வல்லுறவு செய்தவனுக்கே மணம் முடித்து வைக்கப்பட்டார். இந்தப் பழக்கத்தை மாற்ற இப்போது தன் கதையை சொல்லி போராடி வருகிறார் ஷெரி ஜான்ஸன். அமெரிக்காவில் எந்த வயதில் வேண்டுமானாலும் திருமணம் செய்து “அமெரிக்காவில் மட்டும் இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட குறை வயது கல்யாணங்கள்”

குளக்கரை

இந்தக் கைதிகளைப் பயன்படுத்தி பல தொழில்கள் நடைபெறுகின்றன, அவற்றிலிருந்து லாபமும் ஈட்டப்படுகிறது. இந்தச் சிறைகளில் அடைப்பட்டுக்கிடப்பவர்கள், பெரும்பாலும் ஒரு குறிப்பிட்ட இனத்தவராகவே இருக்கின்றனர். இதுவும் அரசு பாரபட்சமாக ஒரு இனத்தவர்களுக்குக் கொடுமைகள் இழைத்து, அவர்கள் மூலம் லாபம் ஈட்டும் வழிமுறையாக உள்ளது.  இப்படிக் கறுப்பினத்தவர்களுக்கு அநீதி இழைப்பதுபோல் செயல்படும் அரசு, அவர்களைப் பொருளாதார ரீதியில் மட்டுமின்றி, சமூக ரீதியாகவும் தனிமைப்படுத்தவே விழைகிறது என்று குற்றம் சாட்டுகிறார்.

சு. வேணுகோபாலின் ‘வலசை’ நாவல் பற்றி

This entry is part 31 of 72 in the series நூறு நூல்கள்

 வேணுகோபாலின் சொந்த  ஊர் போடி பக்கம் என்றாலும் தற்போது பல ஆண்டுகளாக கோவையில் வசித்துவரும் அவர் தன் வசிப்பிடத்துக்கு மிக அருகே நடைபெறும் இந்த மனித மிருக மோதல்களை, குறிப்பாக, மனிதனுக்கும் யானைகளுக்கும் இடையே மேற்கு தொடர்ச்சி மலைகளின் அடிவாரத்தில் தற்போது ஏற்பட்டுள்ள பெரும் மாற்றங்கள் காரணமாக நடந்து வரும் மோதல்களை மையமாக்கி இந்த நாவலை படைத்திருக்கிறார்.

மகரந்தம்

நாம் படிப்பது அல்லது தொலைக்காட்சியில் பார்ப்பது அனைத்தையும் நினைவில் வைத்திருப்போமா? சிலருக்கு முடியலாம். ஏன் அவர்களால் முடிகிறது எனும் ஆய்வில் ஈடுபட்டவர்கள், நினைவுக்கும் மனித இயல்புக்கும் இடையேயான இடைவெளியைப் புரிந்துகொள்ளத் தொடங்கியுள்ளனர். தொடர்ச்சியாகத் தொலைக்காட்சி பார்ப்பவரால் சில நாட்கள் இடைவெளிக்குப் பிறகு என்ன பார்த்தோம் என நினைவுபடுத்த முடியாதாம். சிலர் அடுத்தடுத்து படிக்கும் புத்தகங்களுக்கு இடையே குழப்பிக்கொள்வதும், மீண்டும் படித்ததை அலசுவதற்கு நேரமில்லாமல் இருப்பதும் படித்ததை மறப்பதற்குக் காரணமாக அமைந்துள்ளன. மனப்பாடமாகப் படித்தால் மட்டும் போதாது அதை எழுதிப்பார்க்க வேண்டும் எனச் சொல்லி வளர்க்கப்பட்டவரா நீங்கள்?

சாவித்திரியின் சுயராச்சியம்

கு.ப.ரா. எழுதிய ‘சிறிது வெளிச்சம்’ கதை தமிழின் சிறந்த சிறுகதைகளில் ஒன்று என்று நியாயமாகவே போற்றப்படுகிறது. இந்தக் கதையில் நாம் காணும் மௌன இடைவெளிகள், கச்சிதமான வடிவம், இயல்பான உரையாடல், துவக்கம் முதல் முடிவு வரை உள்ள சுவாரசியம் முதலியவை இன்று எழுதப்படும் எந்த ஒரு நவீன சிறுகதைக்கும் இணையானவை. இன்னும் ஒரு படி மேலே போய், டிசம்பர் 1942ல், ‘கலாமோகினி’ இதழில் பதிப்பிக்கப்பட்ட இந்தச் சிறுகதையின் நாயகி சாவித்திரி வேதனையில் வெளிப்படுத்தும் விடுதலை வேட்கை பெண்ணிய குரல்கள் ஓங்கி ஒலிக்கும் இன்றும்கூட மெய்ப்பிக்கப்படவில்லை என்றே சொல்லலாம்.
எழுத்தாளனே கதைசொல்லியாய் உள்ள இந்தக் கதையின் துவக்கத்திலேயே ஒரு பெண் இறந்து விட்டாள் என்பதை அறிந்து கொள்கிறோம். அவள் துன்பம் தீர்ந்தது என்ற ஆசுவாசமும், அவளைக் காப்பாற்ற முடியவில்லை என்ற துக்கமும் கதைசொல்லியின் முதல் இரு வாக்கியங்களில் வெளிப்படுகின்றன. தான் காப்பாற்றப்பட வேண்டியதில்லை என்பது அவளே தேர்ந்தெடுத்துக் கொண்ட முடிவு என்பதையும் பல முறை முயற்சி செய்தும் கதைசொல்லியால்

டார்ச்லைட் வெளிச்சத்தில் சிறுகதை வாசித்தல்

குழுமத்தில் சில சிறுகதைகள் பற்றி கதைத்துக் கொண்டிருந்தோம். அப்போது பேசப்பட்ட சிறுகதை குறித்து நண்பர் ஒருவர், “இந்தக் கதையின் மையம் எதுவென்று வைத்துக் கொள்வது?” என்று கேட்டார். “பெண்கள் வைத்துக் கொள்ள வேண்டுவது கிடைப்பதேயில்லை,” அல்லது, “வைத்துக் கொள்ள வேண்டிய அளவு கிடைப்பதில்லை,” அல்லது, “வைத்துக் கொள்வது விரும்பிய வகையில் வாய்ப்பதில்லை,” என்ற ஒன்றை, அல்லது இது எல்லாவற்றையும் சொல்ல வரும் கதை அது, என்று எனக்கு நானே சொல்லிக் கொண்டேன். அப்போது, சிறுகதைகள் குறித்து யோசிப்பதில் நிறைவு காண்பது விட்டுப்போய் பல காலம் ஆகிவிட்டதையும் உணர்ந்தேன்.

வாணவெடி

Drones எனப்படும் தொலைவிலிருந்து கட்டுப்படுத்தப்படும் தூரயியங்கி குறித்த கட்டுரைகளைப் படித்திருப்பீர்கள். விமானியில்லாத விமானத்திற்கு ஆயிரம் பயன்கள் ஏற்கனவே இருக்கின்றன; இப்போது மற்றுமொரு பயனாக, பொழுதுபோக்கு இசைக்கேற்ப நடனம் ஆட வைத்திருக்கின்றனர். லாஸ் வேகாஸ் நகரத்தில் இருக்கும் பெலாஜியோ விடுதியுடன் இணைந்து இண்டெல் நிறுவனம் இதை செயலாக்கி இருக்கிறது. காவேரி “வாணவெடி”

சிகப்பு ரோஜாக்கள் – ஒரு வளர்ப்புக் காதல் பயணியின் பயணக் குறிப்புகள்

கொய்மலர் ஏற்றுமதி வணிகத்தில் பன்னாட்டு அன்னையர் தினம், மகளிர் தினம், கிறிஸ்துமஸ் தினம், வருடப் பிறப்புகள், மலர்கள் பயன்படுத்தும் நாடுகளின் சுதந்திர தினங்கள் மற்றும் அந்தந்த நாடுகளின் மலர்களின் உபயோகம் அதிகமிருக்கும் விசேஷ தினங்கள் (உதாரணத்திற்கு ரஷ்யாவில் பள்ளிகளில் கல்வியாண்டு துவங்கும் மாதம் செப்டம்பர்; செப்டம்பரில் முதன்முதலாக பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள் அவர்களின் ஆசிரியர்களுக்கு மலர் கொடுப்பது அங்கு வழக்கம்) எல்லாமே முக்கியமானவை என்றாலும் கொய்மலர் வர்த்தகத்தின் மிக முக்கியமான பருவம் என்றால் பிப்ரவரியில் வரும் காதலர் தினம்தான்.

சஹாராவில் இருந்து அமெரிக்காவிற்கு

ஆப்ரிக்கப் புழுதிக்கும் அமெரிக்கச் செழிப்புக்கும் என்ன சம்பந்தம். நிறைய இருக்கிறது. வடக்கு ஆப்ரிக்காவின் மூன்றில் ஒரு பகுதியை அடைத்திருக்கும் சகாரா பாலைவனம் முழுக்கக் கொட்டிக் கிடப்பது மண். அந்தப் பாலைவனம் ஒரு காலத்தில் மழை தொடர்ச்சியாகப் பொழியும் பகுதியாக இருந்தது. ஒரு காலம் என்றால் உடனே மில்லியன் கணக்கில் எல்லாம் எண்ணாதீர்கள். ஆராய்ச்சிகள் 6000 வருடத்திற்கு முன்னர்தான் சகாரா முழு பாலைவனமாக ஆனதாகச் சொல்கிறார்கள். ஆனால் செத்தும் கொடுத்த சீதக்காதி கதையாய் அது அட்லாண்டிக் தாண்டி அமெரிக்காவிற்கு கொட்டிக் கொடுக்கிறது.

தகடூர் கோபி அஞ்சலி

நாமக்கல்லிலும், மதுரையிலும் சகாயம், ஐ.ஏ.எஸ். மாவட்ட ஆட்சியராக இருந்த போது அவரால் கொண்டு வரப்பட்ட தொடுவானம் என்ற இணைய வழி புகார் பதிவுத் திட்டத்தினை வெற்றிகரமாகச் செயல்படுத்திய தன்னார்வலர்கள் குழுவில் மிக முக்கிய இடம் வகித்தவர் கோபி.

பிருந்தாவனமும் தகடூர் குமாரனும்

சொந்த ஊர் மீது மாறாத பற்றும், பாசமும் கொண்ட கோபி, தகடூர் என்னும் தர்மபுரியின் பழைய பெயரோடு இணைத்து தன்னை வெளிப்படுத்திக் கொள்வார். குமாரசாமிப்பேட்டையில் அனைவருக்கும் பரிச்சயமான குடும்பம் அவருடையது. கோபியின் தந்தை தணிகாசலம், ஓய்வுபெற்ற ஆசிரியர். திருவள்ளூவர் அறிவகம், அண்ணா அறிவகம் போன்ற பள்ளிகளில் பணியாற்றியிருக்கிறார்.

வில்லியம் காஸின் ஐம்பது இலக்கியத் தூண்கள்

ஜெர்மானிய- இட்டாலிய நகைமுரண்களுக்கிடையேதான் எத்தனை வேறுபாடு. உலகை கறாராக எடுத்துக் கொள்ள மறுப்பதனாலேயே அதை ஸ்வேவோ கறாராக வரையறுக்கிறார்; அனைத்தையும் மிக லேசாகவே அவர் கையாளுகிறார். இறுதியில் மிக அபத்தமாக தொனிக்கும் ஒரு விஷயத்தைக் கொண்டு மிக முக்கியமான ஒன்றைப் படைப்பதற்காக மான் உலகை கனத்த கவனிப்புடன் அணுகுகிறார். அவருடைய மிக மென்மையான தொடுதல்கூட கன்றலை விட்டுச் செல்லும் திறன் படைத்தது. ஒரு அடாவடியனின் தாக்குதல் விட்டுச் செல்லும் கன்றல் அல்ல, டாக்டரின் தடுப்பூசியால் உண்டாகும் கன்றலைப் போல. என்னுடன் பணியாற்றும் நவோமி லெபோவிட்ஸ் ஸ்வேவோவைப் பற்றி அற்புதமாக எழுதியிருக்கிறார்.

தொல்வெளியிலிருந்து தொடரும் இசை- பாகம் 6

இசைவாணருக்கும் பெரிய இசை வாணருக்கும் ஒப்புமை நோக்கும் போது பெரிய இசைவாணரை இன்னமும் சாத்வீகமானவர் என்று தான் சொல்ல வேண்டும். மழலை மேதை என்று அறியப் பட்டிருந்ததாலோ என்னவோ இசைவாணரிடம் இருந்த வித்தை போதாமை உணர்வு இவரிடம் கிடையாது. பெரிய சங்கீத விற்பன்னர் என்றும், வாக்கேயக்காரர் என்றும் அறியப்படுபவர் ஆதலால் தன் வித்தையைப் பற்றிய தன்னம்பிக்கையின்மையோ தாழ்வு மனப்பான்மையோ இவரிடம் கிடையாது என்பதே உண்மை. ஆரம்ப நாட்களில் இவர் ஆதித்யாவைத் தன் பிள்ளை போலவே நடத்தி வந்தார்.

வில்லியம் கெல்லி- கலைஞனும் காலமும்

கதையின் துவக்கத்தில், ஆப்பிரிக்கன் என்று அழைக்கப்படும் ஒரு ராட்சத மனிதன், அடிமைக் கப்பலில் வந்திறங்குகிறான். அவன் கையில் ஒரு குழந்தை இருக்கிறது. அவன் கட்டி வைக்கப்பட்டிருக்கும் சங்கிலியை இருபது பேர் பிடித்துக் கொண்டிருக்கிறார்கள். அவன் நகருக்குள் கொண்டு செல்லப்பட்டு விற்கப்படுகிறான். அடிமையான அடுத்த கணமே அவன் தன்னைக் கைப்பற்றியவர்களை தான் பூட்டப்பட்டிருக்கும்  சங்கிலிகளைச் சுழற்றி வீழ்த்துகிறான், அவனை ஏலமிடட்வனைச் சிரச்சேதம் செய்கிறான் (அந்தத் தலை ஒரு பீரங்கிக் குண்டு போல் கால் மைல் காற்றில் பறந்தது, இன்னொரு கால் மைல் தரையில் குதித்தோடி, யாரோ ஒருவன் பயணம் செய்து கொண்டிருந்த ஒரு குதிரையின் காலில் மோதி அதை ஊனமாக்கி நின்றது, என்று இது விவரிக்கப்படுகிறது).