காலங்காலமாக மனிதர்கள் தங்களின் சுதந்திரத்தினை நிலைநாட்ட யார் யாரையோ எதிர்த்தவண்ணமே இருக்கின்றனர். இன்னமும் இதன் எதிரொலிகள் உலகின் பல்வேறு இடத்தில் நடந்து கொண்டுதான் இருக்கிறது. அவர்கள் யாருக்கும் தெரியாது இந்த நான் என்னும் விஷயத்தில் இருக்கும் நுண்ணதிகார மையம். அதனை எப்படி உடைப்பது என்பதையும் இப்பிரதியிலேயே சொல்லியிருக்கிறேன்.