காவேரியும் இல்லத்தரசியும்

என் தேசத்தில் எனது பக்கத்து மாநிலத்தில் நான் தைரியமாக நடமாட முடியவில்லை என்பது எத்தனை துக்ககரமான விஷயம்! என் தாய்மொழியை நான் இங்கு பேசுவதற்கு யோசிக்க வேண்டுமா? எனது பேரன் பேத்திகளுக்கு காவிரி என்பது வெறும் வரைபடத்தில் மட்டுமே காண்பிக்கப்பட வேண்டுமா? தென்பண்ணை, பாலாறு போல இந்த ஜீவநதியும் என் மாநிலத்தில் காணாமல் போய்விடுமோ?