எல்லைக் கோட்டைத் தாண்டி- இந்திய வெளியுறவு செயல்பாடு

90களில் இருந்து ஏற்பட்ட இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி. பாகிஸ்தான் தேங்கிச் செல்கையில் ஒப்பீட்டில் இந்தியாவின் பொருளாதாரம் இரண்டு மடங்கிற்கு மேலாக வளர்ந்தது. இந்தியா என்னும் சந்தையை அமெரிக்க மற்றும் பிற மேலை நாடுகளால் இழக்க இயலாது என்ற நிலை ஏற்பட்டது. இரண்டாவது, தீவிரவாதம் குறித்த அமெரிக்க, மேலை நாடுகளின் புத்தியில் ஏற்பட்ட மாற்றம். இரட்டை கோபுர தாக்குதலுக்குப் பின் சோவியத்தை வெல்ல உதவிய பாகிஸ்தான் என்ற நிலையிலிருந்து தன்னைத் தாக்கிய தீவிரவாதிகளை வளரவிட்ட பாகிஸ்தான் என்று அமெரிக்கா காண ஆரம்பித்தது. ஆஃப்கனிஸ்தானில் தீவிரவாதத்திற்கான போரை ஆரம்பித்துவிட்டு இந்தியாவில் நடைபெறும் தீவிரவாதத்தைப் பாரமுகமாக இருக்க அமெரிக்காவிற்குச் சாத்தியமில்லை. தாலிபானுக்கு எதிரான அமெரிக்கப் போரிற்கு பாகிஸ்தான் தன்னை இன்றியமையாததாக ஆக்கிக் கொண்டாலும், இந்தியாவிற்கு தீவிரவாதத்தை ஏற்றுமதி செய்வதை அமெரிக்கா அனுமதிக்கவில்லை. இந்த இரண்டு காரணிகள் மூலம் இந்தியா 2000களில் பாகிஸ்தான் உருவாக்கி வைத்திருந்த பல அனுகூலங்களை உடைத்து மீண்டும் சமநிலையில் தன்னை உலக அரங்கில் மாற்றிக் கொண்டது.

கார்ல் சேகனின் கட்டுமரங்கள்

பன்னிரண்டு வயதில் கார்ல் ஸேகனின் தாத்தா “நீ பெரியவனானதும் என்னவாக வேண்டும்?” எனக் கேட்ட போது விண்வெளி ஆராய்ச்சியாளராக வேண்டும் எனப் பதிலளித்தார். அதையே தன் லட்சியமாக கொண்டு கார்ல் ஸேகன் புகழ் பெற்ற விண்வெளி ஆராய்ச்சியாளராகவும், மக்களிடத்தில் அறிவியலை எடுத்துச் செல்லும் மிகச் சிறந்த தொடர்பாளராகவும் வாழ்ந்தார். 1960 – 70களில் அமெரிக்காவில் வேற்று கிரக உயிர்கள் பற்றிய ஆர்வம் அறிவியலாளர்கள் மற்றும் மக்களிடையே மேலோங்கி இருந்தது. வேற்று கிரகவாசிகள் இங்கே தரையிறங்கி மனிதர்களைப் பிடித்துக் கொண்டு போய் ஆராய்ச்சி செய்கிறார்கள் என்று “பிடிபட்டவர்கள்” பலர் வாக்குமூலம் கொடுத்தனர். வானில் அடையாளம் கண்டுகொள்ள இயலாத பறக்கும் பொருட்களைப் (UFO) பற்றிய செய்திகள் தினமும் வந்து கொண்டேயிருந்தன.

முப்பரிமாண நகலி – எதிர்காலத்தின் ஊடறுக்கும் தொழில்நுட்பம்

நம்மை சுற்றிக் காணப்படும் எல்லா பொருட்களும் ஏதோ ஒரு தனி வடிவமைப்பாளரின் அல்லது வடிவமைப்புக் குழுவின் கற்பனையில்தான் முதலில் உருவாக்கப்பட்டவை. இயந்திர வழி உற்பத்தியின் காலத்திற்கு முன்னால் வடிவமைப்பாளனே ஒரு பொருளை உருவாக்கினான். இயந்திர உற்பத்தியின் அறிமுகத்திற்கு பின் வடிவமைப்பாளனின் பொறுப்பு மாதிரிகளை உருவாக்குவதில்தான் கோரப்பட்டது.