பட்டாவளி

இப்போதும் ஒன்றும் தாமதமாகவில்லை. கைவசம் அவர்களைத் தொகுத்துக் கொண்டால், இந்த இதழில் எவரெவரைத் தவற விட்டோமோ, அவர்களை வரும் வெளியீடுகளில் கவனிக்கலாம். வரும் வாரங்களில் வாசிக்க எடுத்து வைக்கலாம். குறைந்த பட்சம் மற்றவர்களையாவது படிக்குமாறு தூண்டலாம்.இதுதான் இந்த பட்டியல் பதிவின் குறிக்கோள்

ஒளிக்கும் இருளுக்கும் ஒன்றே இடம்

சதுரங்க ஆட்டம் விதிகளுக்கு உட்பட்டது. அதே போல் இஸ்லாமிய மதம் புத்தகத்தில் எழுதப்பட்ட சட்டதிட்டங்களுக்கு உட்பட்டது. கடவுளின் பேச்சை மொகமது நூலாக மொழிகிறார். குரான் என்றால் “ஒப்பித்தல்”. இந்தப் படத்தில் குருவின் வித்தையை சீடன் எப்படி புரிந்து கொள்கிறான் என்று காண்பிக்கிறார்கள். குருவின் குருவான மாயி எனப்படும் சரஸ்வதி கடாட்சம் பெற்ற மகாமேதையின் எண்ணங்களை “பாராயணம்” செய்கிறார் சீடர்.

ஏன் ஐ.பி.எம். வாட்ஸன் ஹெல்த் பின்னடைவு பெற்றுத் தோற்றுப் போனது?

வாட்சன் ஹெல்த் நிறுவனத்தை ஐபிஎம் விற்கப்போகிறது. ஏன் இது தோற்றுப் போனது? மக்கள் தங்கள் செயற்கை நுண்ணறிவு (ஆர்டிஃபிஷியல் இண்டெல்லிஜென்ஸ்) கனவுகளிலிருந்து எழுந்திருக்க வேண்டுமா? இந்தத் தோல்வியிலிருந்து என்ன பாடங்களைக் கற்றுக் கொள்ளலாம்? ஐபிஎம் நிறுவனம் தன்னுடைய சிகிச்சை (ஹெல்கேர்) பிரிவைக் கைவிட்டுவிட்டது. இவர்கள் இரு முக்கிய சந்தைகளில் “ஏன் ஐ.பி.எம். வாட்ஸன் ஹெல்த் பின்னடைவு பெற்றுத் தோற்றுப் போனது?”

தமிழில் கருத்துருவக (allegory) நாவல்கள் உண்டா?

வாசகர்களிடம் ஒரு கேள்வி. நீங்கள் படித்ததில் எந்த ஆக்கத்தை நவீன உருவகக் கதையாக கருதுகிறீர்கள்? எவை படிமத்தை தன்னுள்ளே கொண்டே நாவலின் தன்மையையும் தன்னுள்ளே வைத்திருக்கிறது? வெ.சா. ஆர்தர் கெஸ்லர் கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து விரக்தியும் ஏமாற்றமும் அடைந்து விலகினார். அது பற்றி ஒரு குறியீட்டு (allegorical) நாவlலும் எழுதினார். “தமிழில் கருத்துருவக (allegory) நாவல்கள் உண்டா?”

பார்லர் மூடுவிழா – ஏன்? எதற்கு? எப்படி?

பேச்சுரிமை அது சடாரென்றுதான் எனக்கு நிகழ்ந்தது. ஒரு வார காலம் அவகாசம் கொடுத்திருப்பார்கள். சொல்வனம் இயங்கும் வோர்ட்பிரெஸ் தளத்தில் என் வலைப்பதிவை வைத்திருந்தேன். அந்த வலைப்பதிவில், ஆங்கிலத்தில் பல இடங்களில் வரும் விஷயங்களைச் சுட்டு, மறுபதிப்பாக என் தனி வலையாகச் சேமிப்பது வழக்கம். ஹார்வார்டு பிஸினெஸ் ரிவ்யூ போன்ற “பார்லர் மூடுவிழா – ஏன்? எதற்கு? எப்படி?”

தேகயாத்திரை

Soul – Movie Review வாழ விருப்பமில்லாத ஆன்மாவும் சாக விருப்பமில்லாத உயிரும் சந்தித்துக் கொண்டால்? இறுவாய் குறித்த செவ்விந்தியர்களின் கர்ண பரம்பரைக் கதைகள் எல்லாமே இருவரின் உரையாடலாக அமைந்திருக்கும். அவர்கள் இருவருக்கும் நடுவே வாக்குவாதம் நடக்கும். அதன் வழியே இறுவாயின் எழுபவத்தைச் சொல்வார்கள். கீழே வரும் சம்பவம் “தேகயாத்திரை”

கைச்சிட்டா – 8

This entry is part 8 of 8 in the series கைச்சிட்டா

இசை பாம்பே நகரத்தில், பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியிலும் இருபதாம் நூற்றாண்டிலும் ஹிந்துஸ்தானி இசை எவ்வாறு உருமாறியது என்பதைத் தேஜஸ்வினி நிரஞ்சனா, “மும்பையில் மியுசிகோஃபிலியா” நூலில் தடம் பின்பற்றிப் பதிந்திருக்கிறார். 1950கள் வரைக்கும் பிரிட்டிஷ் ராஜ்ஜியத்தின்கீழ் இருந்தபோதும்; அதன்பின் சுதந்திர, பின்-காலனித்துவ பெருநகரமாக உருமாறியபோதும் – இந்துஸ்தானி இசை குறித்த “கைச்சிட்டா – 8”

கைச்சிட்டா – 7

This entry is part 7 of 8 in the series கைச்சிட்டா

கதையில் வரும் அத்தைகளும் மாமாக்களும் அமெரிக்க முதலியத்தில் திளைந்துக் கொழிக்கும் சித்தப்பா / பெரியப்பாகளும் இஸ்லாம் மீண்டும் தலைதூக்கும் என்று தீவிரமாக நம்புகிறார்கள். அக்தரின் பெற்றோர்களைப் பார்த்தால் பரிதாபமாக இருக்கிறது.

ஆகாரசமிதை

This entry is part 23 of 72 in the series நூறு நூல்கள்

ஹரன்பிரசன்னாவின் மாயப் பெரு நதி நாவலை முன்வைத்து: முதல் பாகத்தை மின்சார ரயில் பகுதி எனலாம். தெரிந்த விஷயங்கள். அதே குப்பை நாற்றங்கள். பழகிய முகங்கள். இருப்பிடம் வந்தாலும் நாளையும் இதே பயணம் என்னும் எதிர்பார்ப்பில்லாத திக்கில் முடிவு. அடுத்த பகுதி சென்னை முதல் டெல்லி செல்லும் ராஜதானி வண்டி. அவசரகதியில் எக்ஸ்பிரெஸ் ரயிலாக சேரிடத்தில் முடிந்தாலும், அந்தப் பயணம் சுவாரசியம் மிக்கது. தெரியாத, புதிய விஷயங்களை உணர்த்துவது. தூங்கி எழுந்தவுடன் கடைசி ஸ்டேஷன் வந்து விடுவது போல் …

கைச்சிட்டா – 5

This entry is part 5 of 8 in the series கைச்சிட்டா

“பிரபு காளிதாசின் வாழ்வில் நடந்த வெவ்வேறு சம்பவங்களைத் தொகுத்து இருக்கிறார். இதற்குள் குறைந்தது நூறு கதாபாத்திரங்கள் ஆவது உலாவுகின்றன. அவர்களின் மன வெளிப்பாடுகளும் நூறு தருணங்களும் அதற்கு ஃபேஸ்புக் பதிவரின் எண்ண பதில்களும் தொகுக்கப்பட்டிருக்கின்றன. இந்த நாவலில் வரக்கூடிய சம்பவங்களைப் பார்த்தீர்கள் என்றால், அனைத்துமே முகத்தில் அறைவதுபோல் இருக்கிறது…

தோயும் மது நீ எனக்குத் தும்பியடி நானுனக்கு

ஓசையற்ற வாக்கியங்களை நினைவுகள் சன்னமாக ஒலிக்கிறது-பொலான்யோ குத்தெதிர் கோணங்கள் இது புத்தகம் வெளியான போது வந்த அறிமுக விமர்சனம்: “பொலான்யோவின் எல்லாவிதமான கிறுக்கல்களும் அச்சாகிறது. எனவே, ஜிகினா தோரணம் போன்ற இந்த 56 ஒட்டுகளை, ஒன்றாகக் கோர்த்து “வெளிறிய நீலம்” என்னும் தலைப்பில் பிரதியாக்கி இருக்கிறார்கள். 1980களின் பார்சிலோனாவில் “தோயும் மது நீ எனக்குத் தும்பியடி நானுனக்கு”

பார்செலோனாவில் பொலான்யோ

பார்செலோனாவில் உள்ள நவீன கலாசார அருங்காட்சியகத்தில் (CCCB in Barcelona), ரொபெர்த்தோ பொலான்யோ பயன்படுத்திய பொருட்கள், எழுதிய நோட்டுப் புத்தகங்கள், உபயோகித்த தட்டச்சுக் கருவி என சகல விஷயங்களையும் BOLAÑO ARCHIVE. 1977-2003 என்னும் தலைப்பிட்டுச் சிறப்பு ஆவணக்காட்சி நடத்தியிருக்கிறார்கள். 2013ஆம் ஆண்டின் மார்ச் ஐந்தாம் தேதி முதல் ஜூன் “பார்செலோனாவில் பொலான்யோ”

கிரவுட் ஸ்ட்ரைக் – உக்ரெயின் நாடும் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப்பும்

உக்ரெயின் நாட்டு அதிபரும் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பும் பேசிக் கொண்டார்கள். அமெரிக்காவின் உளவுப்பிரிவைச் சேர்ந்த ஒருவர், அதிபர் டிரம்ப் உக்ரேன் நாட்டை சேர்ந்த அரசியல் தலைவரான ஜெலன்ஸ்கியுடன் தொலைப்பேசி உரையாடல் மேற்கொண்டதாக முறையாகப் புகார் வைத்தார். அதிபர் டிரம்ப் முன்னாள் அமெரிக்கத் துணை அதிபரான ஜோ பிடென் “கிரவுட் ஸ்ட்ரைக் – உக்ரெயின் நாடும் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப்பும்”

ஆஸ்டர்லிட்ஸ் நாவலை முன்வைத்து

இக்கட்டுரை இதழ்-198 இலிருந்து இங்கு மீள்பிரசுரம் செய்யப்படுகிறது.
…வாசகர்களும் விமர்சகளும் ஸேபால்டை தூக்கிப் பிடித்துக் கொண்டாடுவது இருக்கட்டும். நான் ஏன் இன்று அவரை ரசிக்கிறேன்? அவரின் கதை எவ்வாறு என்னோடு மறக்கமுடியாதவாறு உறைக்கவைக்குமாறு உரையாடுகிறது?….

அம்பை – குறிப்புகள்

தமிழ் இனி 2000 கருத்தரங்கின் தன்னிச்சையான ஒரு நிகழ்வாகக் கடைசி நாளன்று இரவு ஒன்பது மணிக்குப் பெண்கள் அமர்வு ஒன்று நடந்தது. இலங்கையிலிருந்து வந்திருந்த பெண்களும், சென்னைப் பெண்களும் வேறு இடத்திலிருந்து வந்த பெண்களுமாய்க் கூடினோம். எதைப் பேசுவது அது பற்றிப் பேசுவது என்று திட்டம் ஏதுமில்லை. ஒரு சிறு அறையில் உட்கார்ந்து கொண்டும் சாய்ந்து கொண்டும் படுத்துக் கொண்டும் பக்கத்தில் உள்ள தோளில் தலை வைத்தும் இருந்தபடி பேசுவது ஒரு இதமான அனுபவம்.

ஜோசியம் – ஜோலி – சீலம்

இஸ்ரேலின் யூரி கெல்லர் (Uri Geller) தென்பட்டார்; அவர் கரண்டிகளை கண்ணாலே வளைத்தார்; மாற்றுகிரகவாசிகளுடன் உரையாடினார். மேற்கத்தியர்கள் அவரை அபரிமிதமாக நம்பினர். காற்றில் இருந்து பெட்ரோல் கிடைக்கும் இடங்களை கண்டுபிடிக்கலாம் என நம்பி, ஃப்ரெஞ்சு நாட்டின் முன்னாள் ஜனாதிபதி பல மில்லியன் டாலர்களை எல்ப் அக்விடேன் (Elf Aquitaine) ஆருடத்தில் கரைக்கிறார். புற்று நோய் உருவாகுவதற்கு காரணமாக இருக்கும் “பூமிக் கதிர்”களை, அறிவியல்பூர்வமாக இல்லாமல் முள்கரண்டி குச்சிகளால் நீரோட்ட கணிப்பாளர்களைக் கொண்டு ஜெர்மனியில் தேடுகிறார்கள். ஃபிலிப்பைன்ஸில் ஆவியின் துணை கொண்டு அறுவை சிகிச்சை நடக்கிறது. ராணி எலிசபெத் முதற்கொண்டு கடைநிலை குடிமகன் வரை எல்லோரும் பேய், பிசாசு பைத்தியமாக இங்கிலாந்தில் திரிகிறார்கள்.இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு எக்கச்சக்கமான மதங்களை ஜப்பான் கண்டுபிடித்திருக்கின்றது. ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட குறி சொல்வோரை ஜப்பான் மட்டுமே தழைக்கவைக்கின்றது.

கஞ்சனம்

நய்பாலின் தனிமை என் எண்ணங்களுக்கு ஏற்றதாக இருந்தது. எல்லாவற்றிலும் ஒழுங்கை எதிர்பார்ப்பதும், நேர்த்தியோடு செயல்படுவதும், முடிவை நோக்கி பயணித்து எடுத்த காரியத்தை சாதிப்பதும் எனக்கு அவரிடம் சிறப்பு ஈடுபாட்டைக் கொணர்ந்தது. “இந்த கொடூர உலகத்தில் எவ்வாறு நம் குழந்தைகளை நாம் பெற்றுக் கொள்ள நினைக்கிறோம்?” என்பது போன்ற கேள்விகள், என்னை துணுக்குற வைத்தாலும், வேறு எவருக்கும் இப்படி வெளிப்படையாக கேட்பதில்லையே என்றும் யோசிக்க வைத்தது.

பொய் ⇒ புளுகு மூட்டை ⇒ புள்ளிவிவரம்

“அனேகமாக எவ்வளவு முறை இவ்வாறு நிகழ்ந்திருக்கிறது?” என வினவுங்கள்: டானியல் கானெமான் சொல்லும் கதையைப் பார்ப்போம். தாங்கள் எழுதும் இந்தப் புத்தகத்தை எழுத எத்தனை நாள் ஆகும் என சக நூலாசிரியர்களிடம் வினாத் தொடுக்கிறார் கானெமான். எல்லோரும் பதினெட்டு மாதங்களிலிருந்து இரண்டரை வருடத்திற்குள் புத்தகத்தை எழுதி முடித்துவிடலாம் என்கிறார்கள். அதன் பிறகு, இதற்கு முன்பு பல்வேறு நூல்களை எழுதிய ஒருவரிடம், “உங்களின் போன புத்தகங்களை எழுத எவ்வளவு நாள் ஆனது?” எனக் கேட்கிறார்.
– பத்தில் நாலு புத்தகம் முற்றுப் பெறவேயில்லை

ஆரிடைச் சென்று கொள்ள ஒண்கிலா அறிவு

குழந்தைகளுக்கு எதை வேண்டுமானாலும் புரிய வைத்து விடலாம். ஆனால், கணினிகள் அவ்வாறு எளிதில் நம் சூட்சுமங்களைப் புரிந்து கொள்ளாது. எந்த விஷயத்தையும் குழந்தைக்குக் கூட புரிகிற மாதிரி விளக்க வேண்டியது திறன்மிக்க, பண்பட்ட மனிதர்களின் மாண்பு. நெருப்பென்றால் சிவப்பு வண்ணத்தில் இருக்கும். அதைத் தொட்டால் சுடும் என்பதை விளக்கலாம். தொலைக்காட்சித் திரையில் தீ தகதகவென்று எர்ந்தால் தொட்டுப் பார்த்தாலும் ஒன்றும் ஆகாது என்பதையும் புரிய வைக்கலாம். இந்த வித்தியாசத்தை, கணினிக்கு தானாகவே விளங்கிக் கொள்ளுமாறு எப்படி புரிய வைப்பது? எந்தக் காரணத்தால் கையைச் சுட்டுக் கொள்வது மனிதருக்குத் தீங்கு விளைவிக்கும் செயலாக உள்ளது என்பதை பல வகையிலும் ஆராய்ந்து, இறுதி முடிவிற்கான அடிப்படை நியாயத்தை விளக்கச் சொல்லலாம்?

விதி, கர்மவினை மற்றும் கிரியா = ஞானசக்தி?

ஏன் இவ்வாறு நடந்தது? எப்படி இந்த நிலை உருவானது? உண்மையான ஆதார நிமித்தன் எது? இவ்வாறு நிழந்ததற்கான மூலப் பொறுப்பை எங்ஙனம் கண்டு கொள்வது?
தூண்டு காரணம் என்ன என்பதையும், எப்படி ஒரு வினை நடந்தது என்பதையும் The Book of Why: The New Science of Cause and Effect புத்தகத்தில் ஜூடேயா பெர்ல் என்பவரும் & டானா மாக்கென்ஸி என்பவரும் விரிவாக அலசுகிறார்கள். மனித சிந்தனையில் மூலாதாரத்தை கணினிக்குப் புரியுமாறு விளக்குவது எப்படி என்பதற்கு பாதை போடுகிறார்கள்.

சிங்கக் குருளைக்கு இடு தீம் சுவை ஊன்

சொக்குப் பொடி போட்டு கணித்திரை சிறைக்குள் நம்மை அடிமையாக்கி வைத்திருக்கின்றன; ஒரேவிதமான தகவல்களைக் கொடுத்து பொய்களைக்கூட நிஜமென்று நம்ப வைக்கின்றன; நம்மிடையே பிரிவினையை உருவாக்கி, பிழையான சங்கதிகளின் மூலம் வெறுப்பை உருவாக்குகின்றன; வெறும் இதழியல் செய்தித்தாள் அமைப்பை மட்டும், கபளீகரம் செய்தது என்றில்லாமல், தனிமனிதரின் அந்தரங்கம், சுதந்திரம், குடும்பத்தின் நான்கு சுவருக்குள் நடக்கும் பிக்கல்/பிடுங்கல் போன்றவற்றையும் உலகிற்கு வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன; அரசியலில் மூக்கை நுழைத்து சுதந்திர தேசங்களின் அதிபர் தேர்தல்களில் தகிடுதத்தம் நடக்க வைக்கின்றன; எந்நேரமும் கைபேசிகளின் கறுப்புத் திரையினைப் பார்க்க வைத்து வேறெதிலும் கவனம் செலுத்தவிடாமல் திறன்பேசிகளின் தாசானுதாசர் ஆக்கி வைக்கின்றன…

கரவினில் வந்துயிர்க் குலத்தினை அழிக்கும் காலன்

படத்தின் நாயகன் “கே” ஒரு நகலர் பொம்மையை தன் வீட்டில் வைத்திருக்கிறான். அந்த பொம்மையின் பெயர் “மகிழ்ச்சி” (Joi). அது “கே” என்ன விரும்புகிறானோ அந்த ஆடையை அணிகிறது. “கே” செத்தால் தானும் உடனே மரிக்க நினைக்கிறது. “கே” என்னும் நகலனை உயிருக்கு உயிராகக் காதலிக்கிறது. “கே” என்ன நினைக்கிறானோ, அதை அப்படியே கிளிப்பிள்ளை போல் திரும்பி உறுதி செய்து அவன் முன்மொழிந்த எண்ணங்களை மறுமொழிகிறது. இது அத்தனையையும் சொந்தமாக சிந்தித்து நிதானமாக யோசித்து தன்னுள்ளே விவாதித்த பின் தீர்மானித்தது போல் நம்பகமாக “கே”யின் முடிவுகளை ஆதரித்து அவனை குஷியாக்குகிறது. கடையில் இந்த “மகிழ்ச்சி”யை “காதல்” கொன்றுவிடுகிறது.

குரங்கில் இருந்து பிறந்து…

படத்தின் துவக்கக் காட்சியில் “விவேகம்” அஜீத் போல் சீஸர் அறிமுகம் செய்யப்படுகிறார். போரில் வெற்றியை அடைகிறார். அதன் பின் ஒவ்வொரு விதமான குரங்கும் அவர் வரும் வழிவிட்டு விலகி, வணக்கம் செலுத்தி, மரியாதையையும் தலைவன் என்னும் மதிப்பையும் உணர்த்துகின்றன. அதன்பின் வரும் இரண்டரை மணி நேரமும் சீஸரின் பார்வையிலேயே கதை சொல்லப்படுகிறது. சீஸர் எவ்வாறு தன் குடும்பத்தை இழக்கிறது என்பதில் துவங்கி, மனிதன் போல் கோபம் தலைக்கேறி பழிவாங்கும் வெறி தலைதூக்குவதிற்குச் சென்று, கடைசியில் சிறைபிடிக்கப்பட்டு, தப்பிக்க யோசிப்பது வரை எல்லாம் சீஸர். ”அபாயம் தவிர்த்துத் தடுத்தாட் கொண்டருள்வாய்; நிழல் வெயில் நீர் நெருப்பு மண் காற்று வானதிலும் பகைமையை அகற்றி அபயமளித்திடுவீர் உணர்விலே ஒன்றி என்னை நிர்மலமாக்கிடுவாய்; யான்/எனது அற்ற மெய்ஞ்ஞானமது அருள்வாய் நீ” என சீஸர் குரு கவசம்…

பியானோ ஆசிரியரின் கண்மணி

என்னுடைய கதைகளில் கொள்ளை கொள்ளையாக உணர்வுகள் வரும். எல்லாவித உணர்ச்சிகளும் சத்தியமானவை. ஒவ்வொரு விநோதமாக ஆராய்ந்து விதந்து கூறுகிறேன். மற்ற நிஜங்களுக்கு கதையில் ரொம்ப இடம் தர மாட்டேன். உண்மை சம்பவங்களை விட விசித்திரங்களை குடைந்து எழுத்தில் கொணர்கிறேன். அதனால்தான் பெண்களைக் குறித்து எழுதுகிறேன். நான் பெண் இல்லை. அவர்கள் எண்ணங்கள் எப்படிப்பட்டவை என்பது தெரியாது. இது என்னை உற்சாகம் கொள்ளவைக்கிறது. அவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்று சிந்திக்கிறேன். என்னால் அவர்களாக முடியாது. அதனால் ஆர்வத்துடன் அந்த அனுபவத்திற்குள் நுழைந்து ஆராய்கிறேன்.

இந்திய அமெரிக்கரின் விதூஷக ராஜாங்கம்

9/11க்குப் பிறகு இஸ்லாமியர்களை ‘ஒசாமா’ என்று அழைப்பது; பைபிள் பெல்ட் என்று அழைக்கப்படும் நடுப்பகுதியில் உள்ள தெற்கு மாகாணங்களில் இன்றைக்கும் நிலவும் வெள்ளையின உயர் பெருமிதத்தின் எச்சங்கள்; பள்ளியில் பெரும்பான்மையினர் இடையே சிறுபான்மையினராக உலா வரும்போது தோன்றும் இருப்பியல் அபிலாஷைகள் – என்று கலந்து கட்டி தன் வரலாற்றைச் சொல்கிறார் ஹஸன். நடுநடுவே இந்தியக் குடும்பங்களின் பண்பு; படிப்பில் காட்டும் சிரத்தை; திறந்த வெளியாக எதைப் பற்றியும் பேசாத இந்தியக் குடும்பங்களின் சூழல்; சமூகமும் சமயமும் சாராமல் திருமணம் செய்து கொள்வதில் இந்தியர்களுக்கு நிலவும் சிக்கல்கள் என்று பல இடங்களில் கோர்வையாகத் தாவுகிறார்… நகைச்சுவையாகவும் பேசி சிரிக்க வைக்க வேண்டும். வெறுமனே கேலியாக இல்லாமல் அந்தப் பேச்சில் வாதத் திறனும் இருக்க வேண்டும். வெறும் வாதமாக இருந்துவிடாமல் சொந்த வாழ்க்கையின் அனுபவங்களையும் கோர்க்க வேண்டும். சமூகப் பிரச்சினைகளாக இருக்கட்டும்; அரசியல் சிக்கல்களாக இருக்கட்டும் – ஏன் இந்த முடிவிற்கு நீங்கள் வர வேண்டும் என்பதை சுயவரலாற்றுடனும் சிரிப்புடனும் சொல்ல ஹஸன் மினாஜிற்கு தெரிந்திருக்கிறது.

உடன்வரும் நிழல்

ஒப்புதல் வாக்குமூலம் கொடுப்பது ஒரு வகை. உங்களை நம்பகமானவராக நினைத்து என்னுடைய அத்யந்த ரகசியங்களை தனிமையில் சொல்வது என்பது விசுவாசம் கலந்த துறவுநிலை. இந்த இரண்டு நிலைகளும் வெவ்வேறாகத் தோன்றினாலும் சொல்லும் விதத்திலும் நிபந்தனையற்ற விதிகளில்லா திறந்தவெளிகளை உருவாக்கிக் கொடுப்பதிலும் நேரெதிர் நிலைப்பாடுகளை உருவாக்குபவை. முத்துலிங்கத்தின் ‘அமெரிக்காகாரி’ கதை இதில் இரண்டாம் வகையைச் சேர்ந்த வகை. உங்களிடம் நம்பிக்கை வைத்து சினேக மனோபாவத்தோடு விஷயத்தைச் சொல்கிறார்.

கோரத்தில் மகிழ்ச்சி கொள்பவர் கோர முடிவை அடைவர்

வெஸ்ட் வோர்ல்ட் (தமிழில் மேற்குலகம் என மொழிபெயர்க்கலாம்) என்பது மாயலோகம். அங்கே நீங்கள் அந்தக் கால அமெரிக்காவைப் பார்க்கலாம். பத்தொன்பதாம் நூற்றாண்டில் மேற்கத்திய அமெரிக்கா எப்படி இருந்திருக்கும்? அங்கே தினசரி துப்பாக்கிச் சூடு நடக்கும். சட்டத்தை நீங்கள் கையில் எடுக்கலாம். … ரோபாட்டுகளின் ஆட்சி எப்படி இருக்கும், கோயத் எழுதிய ஃபௌஸ்ட் நாடகத்திற்கும் இந்த தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கும் என்ன சம்பந்தம், செயற்கை நுண்ணறிவு குறித்து ஃபிலிப் கே டிக் எழுதிய புதினங்களில் வரும் தடுமாற்றங்கள் எவ்வாறு வெஸ்ட்வோர்ல்ட்-இல் காட்சியாக்கம் ஆகிறது, நச்சுநிரற்கொல்லிகளைத் தாண்டியும் கணினியில் எவ்வாறு மென்பொருள்கள் இரண்டகநிலைக்கு வந்துசேர்கின்றன, ஜூலியன் ஜேன்ஸ் எழுதிய இருண்மை மூளையும் கடவுளின் குரலும் எப்படி உணர்த்தப்படுகின்றன…

ஓம் மணி பத்மே ஹூம்

இந்தக் கதையில் குரங்குதான் முக்கிய நாயகர். இப்பொழுதெல்லாம் எதற்கெடுத்தாலும் குரங்கின் நினைவு வருகிறது. இந்தப் ஜர்னி டு தி வெஸ்ட் புத்தகமும் குரங்கு ராஜாவும் அவரின் எஜமானன் ‘த்ரிபீடக’ (त्रिपिटक) குறித்த பயணமும் பற்றிய கதை. புத்த மதக் கொள்கைகளில் முரண்பாடுகள் இருந்தததைக் கண்டு, அதன் உண்மைகளைக் கண்டறிய இந்தியாவில் 17 வருடங்கள் பயணம் மேற்கொண்ட பின், தான் கற்றவற்றை, சீன மொழியில் பெயர்த்துக் கொடுத்தவரின் பெயர் த்ரிபீடகா. திரிபீடகா என்பது புத்த மதச் சூத்திரங்களைக் கொண்ட ஏடுகளைக் கொண்டு வருவது. அது சாகசங்களும் அறிவின் ரகசியங்களும் வாழ்க்கையின் விளங்கொண்ணா வினாக்களும் அடங்கிய புத்தகம். கொஞ்சம் கற்பனை, கொஞ்சம் புரியிலி தத்துவம் கொஞ்சம் காமம் என எல்லாமும் கலந்து கட்டி ஊட்டும் புத்தகம்.

உங்கள் வாழ்க்கையின் கதை – வருகை

டாரில் பால்ட்வின் மயாமி (மியாமியா) இன மக்களின் மொழியையும் கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் அறிவாற்றலையும் மீண்டும் கண்டுபிடிக்கவும் ஆவணப்படுத்தவும் சொல்லிக் கொடுக்கவும் செய்கிறார். இவரை போன்ற கலாச்சார பாதுகாவலர் ஒருவரைத்தான் தன் கதாநாயகியாக டெட் சியாங் (Ted Chiang) வைத்துக் கொள்கிறார். பேச்சாளரே இல்லாத மொழியை எவ்வாறு அணுகுவது? அதற்கு நிறைய உந்துதலும் ஊக்கசக்தியும் முனைப்பும் எதையும் முயற்சி செய்து பார்க்கும் மனவுறுதியும் வேண்டும். முன்னவர் நிஜம். அவரின் ஆராய்ச்சி ஏன் முக்கியம் என்பதை எளிமையாக அறிந்துகொள்ள ’Story of Your Life’ கதையும் அந்தக் கதையை திரைப்படமாக்கிய ‘அரைவல்’ (Arrival) சினிமாவும் முக்கியம்.

அமெரிக்கா எனும் பீஷ்மரும் சவுதி எனும் சகுனியும்

நவீன யுகத்தில் மத்திய கிழக்கு என்றுமே அமைதிப் பூங்காவாக இருந்ததில்லை. ஆனால், இன்றைய நிலைமை போல் படு மோசமான நிலை எப்போதுமே இல்லை. ஈராக்கிலும், லிபியாவிலும் சிரியாவிலும், யேமனிலும் உள்நாட்டுப் போர், முழுவீச்சில் கொழுந்துவிட்டெரிகிறது. எகிப்திலும், தெற்கு சூடானிலும், துருக்கியிலும் ஆங்காங்கே கலவரங்களும் கிளர்ச்சிகளும் முளைத்து தழைத்தோங்கி வளர்கின்றன. சென்ற பல ஆண்டுகளில் வந்து போன, உள்நாட்டு கலகங்களின் எச்சங்கள் இன்றைய அள்விலும் அல்ஜீரியாவிலும், ஜோர்டானிலும், லெபனானிலும், சவூதி அரேபியாவிலும், டூனிஸியாவிலும் ஸ்திரமின்மையை நிரூபித்து அஸ்திவாரத்தை ஆட்டிக் கொண்டிருக்கின்றன. ஈரானிற்கும் சவுதி அரேபியாவிற்கும் நடுவில்…

ஆழி, அக்னி, அரவிந்தன் நீலகண்டன்

This entry is part 39 of 72 in the series நூறு நூல்கள்

இன்னாரை நேரில் கண்டு உரையாடப் போகிறோம் என்றால், அவர்களின் எழுத்தில் மூழ்கி அமிழ்தலைத் துவங்குவேன். ஒருவரைக் குறித்து நான் ஆராய ஆரம்பித்தால் ஒரு வாரத்திற்குள் அவரின் பெரும்பாலான புத்தகங்களையும், இணையத்தில் எழுதிக் குவித்ததையும், விமர்சனங்களையும், வம்புகளையும் படித்து முடித்துவிடுவேன். சுந்தர ராமசாமி, ஜெயமோகன் என்று எழுதிக் குவித்த வஸ்தாதுகளைக் கூட இந்த சட்டகத்தினுள் அடக்கி, ஒரு பருந்துப் பார்வை பார்த்து, அந்த ஒரு துளி அரிசியில் இருந்து முழு சோறும் எப்படி வெந்து இருக்கும் என்பதை உணர்ந்தாவது விடுவேன். எல்லோருக்கும் ‘கற்றது கைம்மண்ணளவு’ என்று உணரும் நேரம் வரும். அது அரவிந்தன் நீலகண்டன் அமெரிக்கா வருகிறார் என்றவுடன், அவரின் எல்லா எழுத்துக்களையும் வாசிக்கவும் தேடவும் அவர் கொடுக்கும் மேலதிக விபரங்களுக்குக்கான குறிப்புகளின் …

சவுதி அரேபியாவின் ஏற்றுமதி

கீழ்க்கண்ட காரணங்களினால் சவூதி அரேபியாவில் சதுரங்க ஆட்டத்திற்கு தடை. 1. சதுரங்க ராணி பர்கா போட்டு முகத்தை மறைத்துக் கொள்வதில்லை என்பதால். 2. சதுரங்க ராணி எங்கு வேண்டுமானாலும் செல்லலாம் என்பதால். 3. ராஜாவை விட ராணிக்கு அதிக முக்கியத்துவம் என்பதால். 4. ஆணின் துணையின்றி தன்னந்தனியாக சென்று எதிரியை வீழ்த்தமுடியும் என்பதால். 5. ராஜாவிற்கு ஒரே ஒரு ராணிதான் இருக்கிறார் என்பதால்!

உச்சைசிரவஸும் குரங்கும்

சென்னையின் ஆட்டோ ஒட்டுனர்கள் இருந்தார்கள். ’இந்த இடத்திற்கு வர முடியாது’ என்பார்கள். ‘இங்கே போக வேண்டுமென்றால் டபுள் ரேட்’ என மிரட்டுவார்கள். அவர்களில் சில சந்தேகாஸ்தபமான, சட்டத்திற்கு புறம்பான நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களும் இருக்கிறார்கள். ஓலா முளைத்தது. செல்பேசியில் அவர்களை பார்க்கலாம். எப்படிப்பட்டவர்கள் என்பதை அறியலாம். ஓலா ஓட்டுனர்களுக்கு, நீங்கள் சாவுகிராக்கியா, நல்ல கிராக்கியா என்பதை அறிய முடியும். இது குழப்பவாத குரங்குகளின் செய்கை.

கச்சா எண்ணெய்யும் கசக்கிப் பிழியும் அரேபியாவும்

பத்தாயிரம் இந்தியர்கள் இருநூறு நாள்களாக சம்பளமின்றி வேலை செய்கிறார்கள். அதுவும் இவர்கள் எல்லோரும் கை நிறைய ஊதியம் வாங்கும் கணினி நிரலாளர்களோ, எண்ணெய் நிறுவனங்களை மேய்க்கும் மேலாளர்களோ, வங்கிகளில் வர்த்தகம் நிர்வகிக்கும் கணக்கர்களோ இல்லை. தினக்கூலியாக குப்ப்பை அப்புறப்படுத்துவதில் இருந்து கட்டுமானப்பணியில் (Over 800 Saudi companies are ‘ignoring summer midday work ban’ – Al Arabiya English) சுட்டெரிக்கும் வெயிலில் உடலுழைப்பைக் கடுமையாகக் கோரும் ஊழியர்கள்.
இவர்களின் உண்மை நிலையை அம்பலப்படுத்தினால்,உலகிற்கு தெரியப்படுத்தினால் என்னவாகும்?

வினைத்திட்பம் + மனத்திட்பம் = லெப்ரான் ஜேம்ஸ்

எல்லோரும் கல்லூரி முடித்த பிறகுதான் என்.பி.ஏ. அணிகளுக்கு ஆடப் போவார்கள். ஆனால், பள்ளிக்கூடத்தில் இருந்து நேரடியாக, வெறும் 19 வயதில் அதிரடியாக க்ளீவ்லாந்து கவாலியர் அணிக்கு லெப்ரான் ஜேம்ஸ் தேர்ந்தெடுக்கப்படுகிறார். இவர்தான் ரட்சகர், நமக்குக் கோப்பையைத் தரப் போகும் நாயகர் என்று க்ளீவ்லாந்துக்காரர்கள் உறுதியாக நம்புகிறார்கள். லெப்ரான் ஜேம்ஸும் ஏழாண்டுகளாக க்ளீவ்லாந்து கவாலியர்களுக்காக ஆடிப் பார்த்தார். மற்ற அணிகளின் பணவீச்சுக்கு முன்னால், இவரின் திறமை எடுபடவில்லை. என்னதான் அர்ஜுனன் போல் உயிரைக் கொடுத்து ஆடினாலும், பக்கபலமாக பீமன் தேவை. ரதசாரதியாக கிருஷ்ணர் தேவை. நேரம் பார்த்து நாள் குறிக்க சகாதேவன் வேண்டும். தலைமைப் பொறுப்பெடுத்து வழிகாட்ட தர்மர் வேண்டும்.

உங்களைப் போல் கணினியை யோசிக்க வைப்பது எப்படி?

நிஜ உலகில் தற்சார்பற்ற உண்மை இருக்கிறது; அதற்கு மாற்றாக, எதிர்ப்பதமாக – உங்களுக்கு மட்டுமேயான உண்மைகளும் இருக்கிறது. உதாரணத்தில் இதைப் பார்ப்போம். தமிழில் நூற்றுக்கணக்கான படங்களுக்கு இளையராஜா இசையமைத்திருக்கிறார் என்பது தற்சார்பற்ற உண்மை. உலகிலேயே அதிசிறந்த இசையமைப்பாளர் என்றால் அது இசைஞானி இளையராஜா மட்டும்தான் என்பது எனக்கு மட்டுமே தோன்றும் நிதர்சனமான உண்மை. தோனி இன்றும் நன்றாக, ஆரோக்கியமாக இருக்கிறார் என்பது புறவய அணுகுமுறை.

ஒரு கணிதையின் கதை

இந்த மாதிரி தானியங்கி பேச்சு இயந்திரம் எழுதுவது என்பது ப்ளாகருக்கோ, வோர்ட்ப்ரெஸ் தளத்திற்கோ சென்று வலைப்பதிவு கணக்குத் துவங்குவது போல் ரொம்பவே எளிதானது. வலைப்பதிவை எழுத ஆரம்பிப்பது எப்போதுமே சுளுவான வேலைதான். ஆனால், அதைத் தொடந்து நிர்வகிப்பது, நல்ல தலைப்புகளாகத் தேர்ந்தெடுத்து, அந்தத் தலைப்புகளில் செறிவான கருத்துகளைக் கோர்வையாகக் கொடுப்பது, கொடுக்கும் கருத்துகளால் ஃபாத்வாக்கள் வராமல் பார்த்துக் கொள்ளுதல் போன்றவை கஷ்டமான வேலை.

சினிமாவும் வரலாறும்- சத்யஜித் ராயின் 'சதுரங்க ஆட்டக்காரர்கள்'

”எளிதில் எல்லோராலும் இகழப்படுபவையில் எனக்கு ரசனையில்லை. அறச்சீற்றம் இருக்கிறது; ஆனால், அந்த தார்மீகக் கோபத்தை அடையும் அடையும் பாதை மாறுபட்டிருக்கிறது. இரண்டு எதிர்மறை சக்திகளை சித்தரிக்கிறேன்: காலனியம் மற்றும் நிலக்கிழாரியம் (ஃபியூடலிஸம்). வாஜித் மற்றும் டல்ஹவுஸி – ஆகிய இருவரையும் கண்டனம் செய்யவேண்டும். இதுதான் எனக்கிருக்கும் சவால். அந்த கண்டனம் வெறுமனே கூக்குரலாக இல்லாமல், சுவாரசியமாகவும் புத்திசாலித்தனமாகவும் இருக்கவேண்டும். இரு அணிகளுக்குமே நல்லனவும் உண்டு; அதையும் சுட்ட வேண்டும். இந்தப் படத்தை நேரடியாகப் பார்க்காமல், கொஞ்சம் பூடகமாகப் புரிந்துகொள்ளவேண்டும்.”

அலர்ந்த செந்தாமரையினை வென்றதம்மா

இந்தப் புத்தகத்தின் வாசகரைக் குறித்து, கீழ்க்கண்ட அவதானிப்பை முன்வைக்கிறார்கள்: ‘உங்கள் கொள்கை தாராளமயமானது; அதே சமயம் எக்கச்சக்கமாக இல்லாமல், கட்டுப்பெட்டியாகவும் இல்லாமல், மிகமிகச் சரியாக எவ்வளவு வேண்டுமோ… அவ்வளவுக்கு அவ்வளவு தாராள சிந்தை கொண்டவர் நீங்கள். பெரும்பாலான விஷயங்களில் உங்கள் கொள்கைக்கு இடதுசாரியாக இருப்பவர்களை வெகுளிகளாகவும், அரசியல் சரிநிலைக்காக நிலைப்பாடு எடுப்பவர்களாகவும், எதார்த்தத்தை உணராதவர்களாகவும் கருதுவீர்கள். உங்கள் கொள்கைக்கு வலதுசாரியாக இருப்பவர்களை சுயநலக்காரர்களாகவும், மற்றவர்களுக்கான அக்கறை அற்றவர்களாகவும், இந்த உலகத்தைச் சூழ்ந்திருக்கும் இன்னல்களைப் பற்றி புரிதல் அற்றவர்களாகவும் மதிப்பிடுவீர்கள்.’

அன்னியத்தை அகற்றும் பேராண்மை- பிரெஞ்சு திரைப்படம்: த க்ரேட் மான்

படத்தின் கட்டமைப்பும் உள்ளீடும் ஒன்றையொன்று தாங்கிப் பிடிப்பதோடு ஒன்றை மற்றது விளக்குவதாகவும் அமைந்திருக்கின்றன. பிணைப்பு பளுவாகாமல், ஒன்றிய இயக்கமாகி விடுகிறது. ஒன்று தூக்கலாக அமைந்து கவனத்தைக் கவ்வினால் மற்றது தன் பின் தேங்கிய இருப்பில் ஒன்றாத இயக்கமாகக் காட்சிகள் அமைந்து உறுத்தத் துவங்கும். சில சமயம் சிறந்த இயக்குநர்களிடம் கூட இந்த இணைப்பில் அபசுருதி நுழைந்து நம்மை அன்னியமாக்கும். அண்டோனியானியின் ரெட் டெஸர்ட் படத்தை இன்று பார்த்தால் அதில் கருத்தியலால் நகர்த்தப்படும் காட்சிப்படுத்தலின் செயற்கைத் தன்மை உறுத்தவே செய்கிறது. அன்னியப்படுத்தலைச் சொல்ல வந்த படம் அன்னியமாக்கி வைப்பதால் அந்த ‘அனுபவத்தை’ நமக்குக் கொடுப்பதில்லை. ஒரு வகையில் கலை என்பது ஒரே நேரம் இந்த சாளரத்தன்மையைக் கொண்டதாகவும், அதை மறக்கடித்த ஈடுபாட்டை நம்மிடம் கொடுத்து விடுவதாகவும் இருக்கையில் அது வெற்றி பெறுகிறது. கலையின் நோக்கம் வெற்றி பெறுவதல்ல, மாறாக நம்மை நம்மிடமிருந்து அகற்றி நம்மில் வேறொன்றை நிரப்புவது.

வருக்கத்தொகையும் பின்னபாகாரமும்

கணக்கு என்பது எண்களும் எண்கள் சார்ந்தவையும் என்று நினைப்பது செல்பேசி என்பது நண்பருடன் பேசுவதற்கானது மட்டுமே என்று நம்புவதைப் போல், இந்த நம்பிக்கை முட்டாள்தனமானது. செல்பேசியில் மற்றவரை அழைக்கலாம்; உரையாடலாம். அதில் விளையாடவும் செய்யலாம். கூடவே, மின்னஞ்சல் அனுப்பலாம்; பாட்டு கேட்கலாம். அதே போல் கணிதம் என்பது எண்களை வைத்து கணக்குப் போடுவதற்கும் பயன்படும்; ஆனால், அது தவிர நூற்றுக்கணக்கான மற்ற விஷயங்களையும் கொண்டிருக்கிறது.

மிதுனம்: பண்பாடு – பன்னாடு – பெற்றோர்

மனதிற்கு நெருக்கமான கதை அமைந்திருப்பது நேர்மையான காரணமாக இருக்கும். என்னுடையப் பெற்றோரை இந்தப் படத்தில் பார்த்து இருப்பதால் பிடித்து இருக்கும். அல்லது எங்களையே, இன்னும் சில பத்தாண்டுகள் கழித்து இப்படி பார்ப்பதால் கூட இருக்கலாம். இந்தியாவில் தன்னந்தனியே விடப்பட்டிருக்கும் அனாதைப் பெற்றோருக்கு ஐந்து குழந்தைகள். அந்த மகன்/ள்கள் ஐவரும், சௌக்கியமாக அமெரிக்காவிலும், ஆஸ்திரேலியாவிலும், இன்ன பிற பரதேசங்களிலும் குடிபுகுந்து விட்டார்கள். அப்பாதாஸ் என்னும் தந்தையாக எஸ்.பி.பி. புச்சி லஷ்மி என்னும் தாயாராக லஷ்மி. இந்த இருவரும் சேர்ந்து மிதுனம்.

எமர்ஜென்சியின் கருப்பு தினங்களை நினைவுகூறல்

“இந்திராகாந்தி செய்த ஒப்பந்தத்தினால் ரூ.11 கோடி நஷ்டம் ஏற்பட்டதாகக் கூறப்பட்டது வாதத்துக்காக அதை உண்மை என்றே வைத்துக்கொண்டாலும், அந்த 11 கோடியை இந்திரா தன் வீட்டுக்கா எடுத்துச் சென்று விட்டார்? தற்போதைய அரசாங்கம் எடுத்த ஒரு முடிவினால் (மதுவிலக்கு) அரசாங்கத்துக்கு பல நூறு கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதே, அதற்காக தற்போதைய பிரதமரைக் குற்றவாளி என்று கூறலாமா?” இந்திரா காந்தி சார்பில் ஆஜரான பிராங்க் அந்தோணி இவ்வாறு கேட்டார்.

பிட்காயின் 101

பிட்-காயினால் எதை வேண்டுமானாலும் வாங்க இயலும். ஒரு துண்டு பீட்ஸா முதல் அதிஆடம்பரமான விலையுயர்ந்த மாட மாளிகை வரை என்ன பொருள் வேண்டுமோ, அதை நீங்கள் பிட்காயினை (bitcoin) விலையாகக் கொடுத்துப் பெற்றுக் கொள்ளலாம். பிட்காயினின் மதிப்பு ஒரு சில டாலரில் துவங்கி ஆயிரக்கணக்கான ரூபாய் வரை எதுவாக வேண்டுமானாலும் இருக்கும். சில சமயம் பிட்காயின் பற்றிய தகவல்கள் துப்பறியும் நாவல் போல் இருக்கும்; பல சமயங்களில் பிட்காயின் பற்றிய சாத்தியங்களை அறியும்போது மின்சாரத்தைக் கண்டுபிடித்தபோது ஏற்படும் அதிசயம் உண்டாகும். ’தூணிலும் இருப்பான்! துரும்பிலும் இருப்பான்!!’ என இறைவரைச் சொல்வது போல், எங்கெங்கு காணினும் பிட்காயின் என…

நேரத்தில் – In Time: காலமும் காரல் மார்க்சும்

எல்லோரும் என்றென்றும் வாழ முடியாது. பல்லாயிரக் கோடிப் பேர்களை எங்கே வைத்துக் கொள்வோம்? எதற்காக தடைக்கற்கள் போட்டு ஏழெட்டு அடுக்கு தாண்டி இருக்கும் தூரத்து ஊர்களை உண்டாக்கி அங்கே தங்கி இருக்கோம்? அனுதினமும் சேரியில் வாடகையும் அத்தியாவசியப் பொருளும் விலை உயர்ந்து கொண்டே போகிறதே… ஏன்? யாருமே பட்டினியலோ பற்றாக்குறையினாலோ சாக வேண்டாம். என்னிடம் இருக்கும் இத்தனை ஆண்டுக்காலம் என்னும் அரியபொருள், உன்னிடம் இருந்தால், நீ என்ன செய்வாய்?

ஐ.பி.எம். – ஒரு யானை எலி ஆகிறதா?

தன் மீது தனக்கே நம்பிக்கை இல்லாத நிறுவனங்களும், பங்குதாரரை சுண்டி இழுக்கும் கவர்ச்சியாக பணத்தைத் தூண்டில் போடும் நிறுவனங்களும், பாரம்பரியமான அந்தக் கால பழக்கவழக்கங்களைக் கொண்ட வட்டி போடும் நிதி நிறுவனங்களும் காலாண்டு தோறும் ஈவுத்தொகை கொடுக்கிறது. அந்த வர்க்கத்தில், தொழில் நுட்பம் போன்ற நொடிக்கு நொடிக்கு புது அரிதாரம் கோரும் துறையில் இயங்கும் ஐ.பி.எம். அங்கம் வகிப்பது ஆச்சரியமளிக்கும் விஷயம். ஆண்டுக்கணக்காக, இவ்வாறு கணக்குப்பதிவில் ஆட்டைத் தூக்கி மாட்டில் போட்டு, மாட்டைத் தூக்கி மந்தையில் போட்டு ஒருவாறாக இலாபக் கணக்கைப் பதிந்தாலும், தொலைநோக்கில் தொழில்நுட்பத்தில் முதலீடு செய்பவர்களுக்கு இந்த செய்முறைகள் அவநம்பிக்கையை உருவாக்கியது.

ஏ ஆர் ரெஹ்மானின் 'மில்லியன் டாலர் புஜம்'

தமிழ்ப்பாடல் இடம் பெற்ற படம் என்பதை விட; இந்தியர்களின் சாதனை குறித்த படம் என்பதை விட; கஷ்டப்பட்டு முன்னேறிய திறமைசாலிகளின் படம் என்பதை விட – இந்தப் படத்தை ஏ ஆர் ரஹ்மானின் இசையில் வித்தியாசப்பட்டு நிற்கும் படம் என்றும் பார்க்கலாம். திரைப்பட இசை என்பது சத்தமாக ஒலிக்க வேண்டும் என்பது அந்தக் காலம். அதன் பின் அடக்கி வாசித்து, திரையில் நடக்கும் விஷயங்களை காட்சிப்படுத்துவதை தூக்கலாகக் காண்பிப்பது சமீபத்திய காலம். வருங்காலத்தில் திரை இசை எப்படி இருக்கும்? ’மில்லியன் டாலர் ஆர்ம்’ திரையிசை போல் இருக்கும்.

பந்தமின்றி பரம்பரையின்றி பெண் சி.யீ.ஓ.

என்டர்பிரைஸ் கார் நிறுவனம், முழுக்க முழுக்க தனியார் நிறுவனம். இது வரை குடும்பப் பொறுப்பில் மட்டுமே இயங்கிய நிறுவனம். தாத்தா, பையன், பேரன் என தலைமை பீடத்தில் உட்கார்த்தி வைக்கும் நிறுவனம். அந்த மாதிரி அமைப்பில் நிறுவனரின் குடும்பத்திற்கும் தனக்கும் ஸ்னான ப்ராப்தி கூட இல்லாத ஒருவர் எவ்வாறு முதன்மைப் பொறுப்பை அடைய முடிகிறது?

மேற்கத்திய பெண் ஓவியர்கள்

வார்த்தைகளால் சொல்லி விட முடியுமென்றால், வரைவதற்கான அவசியமே இருக்காதே! – எட்வர்டு ஹாப்பர் [1882-1967] இந்த இருபத்தொன்றாம் நூற்றாண்டிலும் பெண் கலைஞர்கள் என்று தனித்து அறிமுகம் செய்ய வேண்டுமா? தற்கால விஷயங்களை மகளிர் எவ்வாறு கையாளுகிறார்கள்? மில்லியன்கள் புரளும் ஓவியச் சந்தையில் ஆண் ஓவியர்களோடு ஒப்பிட்டால், பெண் ஓவியர்களின் “மேற்கத்திய பெண் ஓவியர்கள்”

தூரயியங்கி – டிரோன்களின் வருங்காலம்

இணையம் வந்த புதிதில் பலரும் கேட்ட கேள்வி. ‘இன்டெர்நெட்டினால் என்ன பயன்? தினசரி இரண்டு ஜோக் மடல் அனுப்பலாம்… அதைத் தவிர என்ன மாறப் போகிறது!’ தூரயியங்கி இன்னும் விடலைப் பருவத்தில் இருக்கும் இந்தக் காலத்திலும் இதே கேள்வி புழக்கத்தில் இருக்கிறது. ‘டிரோன்களினால் என்ன உபயோகம்? அடுத்த வீட்டை எட்டிப் பார்க்கலாம்… சாலையில் கார் ஓட்ட வயதிற்கு வராத பாலகர்கள் வேண்டுமானால் கூரையேறாமல் கோழி பிடிக்கலாம்!’ என்கிறார்கள். நிஜத்தை சொல்லப் போனால், தூரயியங்கிகளால் என்னவெல்லாம் சாதிக்க முடியும் என்பதன் சாத்தியக்கூறுகளுக்கான ஆராய்ச்சிகளையும் அதன் முழுமையான பயன்களையும் நாம் இன்னும் துவங்கக் கூட இல்லை.