தணிக்கைமுறை எப்படி வேலை செய்கிறது

எந்த எதிர்ப்பும் இல்லாமல் தம்மைத் தாமே தணிக்கை செய்து கொள்பவர்கள் பல வகைப்பட்ட அறச்சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. அவர்கள் எப்போதுமே எதற்கும் பலியானதில்லை. அவ்வப்போது கண்ணீரைக் துடைத்துக் கொள்வது போல் நாடகமாடினாலும் எப்போதும் பலியாகவும் மாட்டார்கள். அவர்கள் தம் அடிமைத்தனத்தை ஒவ்வொரு முறை வெளிப்படுத்தும்போதும் சர்வாதிகாரிகளின் இதயத்தைக் குளிர்விக்கிறார்கள். எதிர்த்துப் போராடுபவர்களுக்கு தீமை செய்கிறார்கள். முதுகெலும்பு இல்லாமல் நடந்து கொள்பவர்களின் நிலைப்பாடு காலப்போக்கில் மக்களிடையே பரவுகிறது. இதுவே நம் சமூகம் அற வீழ்ச்சி அடையவும் அடிப்படை காரணமாகிறது.