ஆராதனை- புத்தக அறிமுகம்

சரஸ்வதி பாயின் ஹரிகதா அனுபவங்கள், சமுதாயத்தில் நிலவிய/நிலவுகின்ற ஆண் பெண் இருவரின் திறமையைப் பற்றி அந்தந்த துறையைச் சேர்ந்தவர்களே, பெண்ணை தவறாக எடை போட்டு ஒதுக்கி இருக்கிறார்கள்/இன்றும் ஒதுக்கிக் கொண்டு இருக்கிறார்கள் எனபதைக் காட்டுகிறது. எல்லாவற்றையும் மீறி அவர் சாதித்துக் காட்டியதும், அவரது திறமையை அடையாளம் கண்டு கொண்ட பிரம்மஸ்ரீ திருவாதி கிருஷ்ணாசார் அவர்களும் நம் போற்றுதலுக்கு உரியவர்கள்.