இறவாமை – பகுதி ஒன்று

இந்த நினைவு என்பது விசித்திரமானது. மாறிக்கொண்டே இருப்பது. யாருக்குமே தன்னுடைய முகத்தை பிசகின்றி நினைவு படுத்திக் கொள்ள முடியாது. அது தவிர ஒருவரோடு பழகியவர்கள் நினைவில் அவர் இருப்பதற்கும், அவரை சந்திக்காதவர்கள் நினைப்பில் அவர் இருப்பதற்கும் வித்தியாசம் உள்ளது.