மார்ச், மா மற்றும் சகுரா: கீதாஞ்சலி ஸ்ரீ

 கொஞ்ச நாட்களிலேயே, கடலில் பேரலைகள் எழும்புவது போல சகுரா  நகரம் முழுவதும் மலர ஆரம்பித்திருந்தது. அம்மாவும் மற்ற டோக்கியோ நகர வாசிகளும் தலையை பின்புறம் சாய்த்து வானத்தை நோக்கி  பார்த்தவாறு நடக்க ஆரம்பித்தார்கள். ஆனால் வானத்துக்கு பதிலாக  வானம் முழுவதும்  கண்ணுக்கட்டிய தூரம் வரை முடிவற்ற வெள்ளை மலர்கள்  அலை போல துள்ளி ஆடிக்கொண்டிருந்தன.  நீண்டு விரிந்து கொண்டே இருந்தன.