
(1)
ஒலி
ஓய்வெடுக்கிறது
மவுனத்தில்.
(2)
எப்படி செத்தது
அந் நொடி
அகாலத்தில்?
(3)
எவ்வளவோ சாதுவாய் என்னை நான் உணர்கிறேன்
என்னோடு நான் உருட்டிக் கொண்டு வரும் சைக்கிள்
என்னை உருட்டிக் கொண்டு வரும் போது-
(4)
முடிவு செய்ய
முடியவில்லையாய், அதனால்
முழு வசீகரமாய்த் தொடுவானம்.
(5)
தன் சொல்லைத்தேடிக் கொள்ளாத அர்த்தமாய்-
வியாபகமாகி வெளி-
(6)
தொடங்க அவரவர்க்கு தொடங்குகிறது
முடிய அவரவர்க்கு முடிகிறது
அதே தெரு ஆயாசமில்லாமல்-
(7)
பாதி திறந்த கதவு-
உள்ளேயும் வெளியேயும்
இல்லாத சங்கடத்தில் வீடு-
(8)
உன் தைரியம்-
உன் பயம் எறிந்து
திரும்பிய பந்து.
(9)
மரங்களிடை மரங்கள் அடர்ந்து-
மறைக்க அல்ல, உண்மை
தெரியக் காடாய்.
(10)
கிலி தீரத்
துன்பக் கலி
தீரும்.
(11)
முற்றத்தில் அலையும் அச்சுறுத்தி
முகம் தெரியா அரவம் என்
மனம் உருவாக்கிக் கொள்ள உருவம்-
(12)
வானளந்து பறவை விடும்
நிழற் பட்டம் தரையில் பறக்கும் –
வெயில் விடு நூலில்லா நூலில்.
(13)
எதிர்பார்க்கவில்லை நான்-
திருப்பத்தில் தெரு தான் திரும்பும் வரை,
தான் திரும்புவதை எதிர்பாராததை.
(14)
இராவைச் சமாளிக்கிறது காகம்-
கரையாமல் சமாளிக்கும் வரை-
உறக்கமென்று.
(15)
அந்திவானில் வியூகமாய்ப் பறக்கின்றன வெண்பறவைகள்-
வழிமறித்து காலத்தில் என்னை மட்டும் சாலையில்.