நெஞ்சில் துயில்கொள்ளும் ஒரு கவிதை – ஜமீலா நிஷாத்
ஜமீலா நிஷாத் ஒரு கவிஞர். பல வண்ணங்களிலும் வேறுபட்ட வடிவங்களிலும் கனவுப்படிமங்களாகக் கவிதைகள் தன்னிடம் உருக்கொள்வதாக அவர் கூறுகிறார். அவரது கவிதைகளில் காணப்படும் கனவுத்தன்மை இது சாத்தியம்தான் என்று நமக்கு உணர்த்துகிறது. தன்மீது 1992க்குப் பிறகு திணிக்கப்பட்டதாக அவர் கருதும் முஸ்லிம் அடையாளத்தை பரிசீலனை செய்யும் முயற்சியில் கடந்த சில ஆண்டுகளாக அவர் இறங்கியுள்ளார். கோயில்களுக்குச் செல்வது, தர்கா விழாக்களில் கலந்து மகிழ்வது என்ற தோழமையும் பகிர்வுணர்வும் நிறைந்த சூழலில் வளர்ந்த அவரால் ஹைதராபாதில் இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்குமிடையே நிலவிவரும் வெறுப்பையும் பகைமையுணர்வையும் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை.
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed