ஜெயந்தி டீச்சர்

டீச்சராக மாறிய ஜெயந்தி மாரியிடம் நிறைய பேசினாள். பேச்சு வளர்ந்து அந்த’ நாட்கள் பற்றிப் போனது. வீட்டுப்பாடம் எழுதும்போது டீச்சர் ரோல் ஒரே முறை மாரிக்கு போனது. மாரி தன் மாதாந்திரப் பிரச்சனைகளைப் பேசினாள். கிளாசிலிருந்து பேக் எடுத்துக் கொண்டு நாப்கீன் வாங்க போகும் போது மாரியின் டீச்சர் ரோல் தொடர்ந்தது. நைன்த், டென்த் அக்காக்கள் வழி அறிந்தவைகளைப் பகிர்ந்து கொண்டாள். மாரி வழியாக பொம்பளப் பிள்ளைகள் படும் கஷ்டங்களை நிறையவே தெரிந்து கொள்ள முடிந்தது; திகைப்பாகவும், பயமாகவும் இருந்தது.