ஆத்மஜன்

சிற்றுண்டி நேரத்தில் நான் கேரம் ஆடிக்கொண்டிருந்தேன். இப்போதெல்லாம் ஆபீஸ் நேரத்துக்குப்பின் பொழுதுபோக்கு அறைக்குள் நுழைவது சாத்தியமில்லாமல் போயிருந்தது. சற்றே தாமதமாய் வீடு சென்றாலும் சுப்தி நச்சரிப்பாள்- நான் இந்த வீட்டில் ஒரு கைதி போலிருக்கிறேன், நீங்கள் கும்மாளம் போட்டுக் கொண்டிருக்கிறீர்கள்…