கு. அழகர்சாமி கவிதைகள்

கு. அழகர்சாமி

(1)

எறும்புகளின் ஊர்வலத்தில்
ஒரே நெரிசல்-

ஓரெறும்பும் நெரிசலில் சிக்கிச்
செத்திருக்கவில்லை-

எறும்புகளின் தோள்கள் மேல்
எங்கோ நெரிசலின்றி சவாரிக்கும்
ஒரு பல்லி தவிர.

(2)

எறும்புகளில்
எது
துரிதம்?
எது
தாமதம்?

எது
முந்தி
எது
பிந்தி?

செல்வதன்றி
வெல்வதில்லாத
எறும்புகளின்
பயணம்

என்று களைத்து
ஊர் போய்ச்
சேராதிருந்தது?

(3)


ரெறும்பு
கடித்து
ஒரு
விநாடி
துடி
துடிக்கும்-

சகாப்தமாய்

(4)

நிரம்பி
எறும்புகள்
நெடுகச் செல்லும் வரைக்கும்
நெடுகச் செல்லும்,

எறும்புகளின்றி
வெறிச்சோடியிருக்கும்
வழியில்லாத
வழி

எங்கே?

(5)

எப்படி
எறும்புகள் கண்ணுறங்கி
புற்றுக்குள் புற்றாய்
கனவுகளின்
புற்றைக்
கட்டும்?

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.