வாழ்வென்பது
தள தளவென
திறந்து
அழைக்கும்
ஒரு குவளை
மட்டுமே
போதுமா என்ன?
பொன் சிவக்கும்
ஒரு அந்தி
தோழர்களின்
உதிரிப்பூ சிரிப்புகள்
போதுமென தடுக்காத
காதலியின் கரங்கள்
வற்றாது ஊறும்
ஒரு பிரபஞ்ச கானம்
இத்தனையும்
இணைசேர்ந்து
நிறையும் போதே
பொங்க பொங்க
நுரைக்கத் தொடங்குகிறது
ஒரு மதுக்கோப்பை
நொடி நொடியாய்
நீ
முதல் முறை
தொட்ட
என்னுடைய
அதே முலைகள்
அல்ல
இரண்டாம் முறை
தொட்டது
கணம் கணமாய்
நதி பாய்கிறது
இந்த முலைகள்
நீ
ஒருகரை
மூழ்கி
மறுகரை
எழுகையில்
நூறு நதி
கடந்து
முடிகிறது
கள்வனே
மிகவும் இனிய கவிதைகள் இரண்டும் வாழ்த்துக்கள்.
அன்புள்ள கவிதா அவர்களுக்கு தங்களின் வாழ்த்திற்கு மிக்க நன்றி
Nice poem
அன்புள்ள சாரா அவர்களுக்கு தங்களின் உற்சாகத்திற்கு என் தீரா நன்றிகள்
தீரா அன்புடன்
வ. அதியமான்
Wow super kavithi
அன்புள்ள சாரோன் அவர்களுக்கு தங்களின் தேர்ந்த ரசனைக்கு என் இனிய வாழத்தும் நன்றியும்
தீரா அன்புடன்
வ. அதியமான்