மண்ணுக்கடியில்

அன்று
காய்ந்த நிலமும்
களவாடப்பட்டது
அரசால்.
அனுமதியில்லா
கையகப்படுத்தல்
களவன்றி
வேறென்ன?
இன்று
சாலைகள் என் மண்மீது
நிரவப்பட்டு விரைவாய்
அதன் மீது வாகனங்கள்
இரையாய் நான்
மண்ணுக்கடியில்
பிணமானது
தெரியாமல்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.