அடைக்கும் தாழ்

பாட்டி சற்று மங்குவது தெரிந்தது. ப்ரியாவைப் பார்த்து, “குழந்தை பேர் என்ன?” என்றாள் மறுபடி.
“கிளம்பிடுங்கோ,” என்றார் தாத்தா. “கொஞ்ச நேரத்துல லங்கிணி ஆயிடுவள்.”
எனக்கு அவர் பேசுவது இன்னும் முழுக்கப் புரியவில்லை. லங்கிணி என்றால் என்ன? கீழ் வீட்டில் கேட்டேன்.
“ராமாயணத்துல அனுமார் தலையில குட்டுவரே, லங்கையோட காவல் தெய்வம்,” என்றாள் காயத்ரி.
எனக்கு இன்னும் புரியாததால், “பாட்டி சாமியாடுவாள்னு அர்த்தம்,” என்றாள்.