பிரிவு

வெயில் நம்மள சுட்டெரிக்குது. நாம மெல்ல நடக்கிறோம். நம்ம வாழ்க்கையோட சாரம் இந்த ஷணத்துல நாம உணர்ர வெக்கையும் தாகமும் தானாங்கற கேள்வி நம்மள துக்கப்படுத்துது. அப்ப ஒரு பெரிய அரச மரத்தோட நிழலைப் பாக்கறோம். அதுக்கடியில ஒரு தண்ணீர்ப் பந்தல் இருக்கு. ஒரு பானை நிறைய தண்ணீரும் அதோட மூடிமேல ஒரு பிளாஸ்டிக் டம்ளரும் இருக்கு. நாம அந்த நிழல்ல நிக்கறோம். ரெண்டு டம்ளர் மூணு டம்ளர் தண்ணீர் குடிக்கறோம். அப்ப தீர்ரது நம்ம தாகம் மட்டும் இல்ல. நம்மோட துக்கமும்தான். அந்த மரத்தை நட்டவருக்கு இந்த நாள்ல இந்த நிமிஷத்துல நாம வரப் போறோம்னு தெரியாது.