கொரோனா – இன்னொரு பிணி நுண்ணி

அமெரிக்காவோடு ஒப்பிடுகையில் இந்தியாவின் மருத்துவ கட்டமைப்புகள் மோசமான நிலையில் இருப்பது மிகவும் வருத்தமான நிதர்சனம். இந்தியாவில் எந்த மூலையில் ஒருவர் பாதிப்புக்குள்ளானாலும் அதை உறுதி செய்யும் பரிசோதனையைப் பூனாவில் இருக்கும் ஓர் ஆய்வகத்தில்தான் செய்ய முடியும் என்கிறார்கள். மத்திய அரசும், மாநில அரசுகளும் நிலமையைச் சமாளிக்க முழுவீச்சில் தயாராகிக் கொண்டிருப்பதாக கூறிக் கொண்டிருக்கின்றனர்.