பருவத் தொடக்கம்

சூழ்ந்தவையெல்லாம்
தெளிவின்றி தெரியும்

வேறந்த ஓசையும்
செவியுள் புகாது

காண்பதெல்லாமே
அழகோவியமாய் தோன்றும்

உள்ளும் புறமும்
மென்குளுமை படரும்

வானெங்கும் மின்னொளி விட்டுவிட்டுச் சுடரும்

காத்திருப்பு வீணல்லவென்ற
எக்களிப்பு பொங்கும்

வருவதற்கான
அறிகுறிகளெல்லாம் அமைகிறது இனியதாகவே
பொழிந்தபின்தான்
தெளியும் …
வாழவைக்கிறதா அன்றி
அழித்துக் கடக்கிறதா என

காதலுக்கும் மழைக்கும்
வேறுபாடு ஏதுமில்லை
பருவம் தொடங்குவதில்

One Reply to “பருவத் தொடக்கம்”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.