வெளியும் உள்ளும்

புராதன வெளியில் வந்திறங்குகின்றன
வலசைப் பறவைகள்.
வரப்புகளில் தேங்கும் நீரில்
சுற்றிலும் புல்வெளியில்
அவை தனித்துப்
பொருத்தமற்று தோன்றுகின்றன.

பறவைகள் ஒன்றை ஒன்று
பார்த்து நிற்கையில்
புல்வெளியின் பரப்பில்
மார்கழி இரவின் பனி
காலைக் கதிரவனின் வெம்மையில்
மெல்லக் கரைந்து கொண்டிருக்கிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.