உலகம் விரைவில் அழியப்போகிறதென
யார் யாரோ சொன்னபோது
நம்பாதவன் ,
எப்போதாவது கேட்க
வாய்க்கிற
குயிலின் கூவல்
எதிர்க்குரலின்றி
ஒற்றைத் கூவலாய்
என் துயரெனவே ஒலிக்கும்போது
சொல்லிக் கொள்கிறேன்
நிச்சயமாக என …
**
எந்தப்பறவை
என்ன பிரார்தனைக்காக
தன் சிறுஇறகை
உண்டியலின்மேல்
காணிக்கையாக வைத்து
வேண்டிக்கொண்டதோ….
நானும் பிரார்த்திக்கிறேன் அவ்வேண்டுதல் நிறைவேற..