அ.முத்துலிங்கத்திடம் கவர்ந்தவிடயம் என்று மூன்றைச் சொல்லுவேன். புறவய சித்தரிப்பில் புகுத்தும் கட்டுக்கடங்காத தகவல்களின்/தரவுகளின் எண்ணிக்கை. தேய் வழக்கற்ற, கற்பனையில் அவ்வளவு இலகுவில் எட்டாத உவமைகள். மானுட துன்பத்தை மிக இலகுவாக வேடிக்கையாகச் சொல்லி நகர்ந்துவிடும் வித்தை. இந்த மூன்று விடயங்களும் அவரது அனைத்துச் சிறுகதைகளிலும் இருக்கும். தன்கதைகள் ஊடாக அந்தரங்கமாக அவர்தேடி கண்டடையும் உண்மையென்பது சின்ன தருணத்தின் விரித்தெடுத்த வடிவமாக இருக்கும். அதற்குள் சுழலும் ஏராளமான புறவய சித்தரிப்புகள் கதையை சுவாரசியப் படுத்தும்; வாசிப்பின் இன்பத்தைத் தக்கவைத்துக்கொண்டேயிருக்கும்.
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed