ஒவ்வொரு நாட்டில் ஒவ்வொரு விதமாய் மரண தண்டனையை நிறைவேற்றுகிறார்கள். முன்னுமொரு காலத்தில் அமெரிக்காவில் சுட்டுத் தள்ளி மரண தண்டனை கொடுத்தார்கள். இப்போது அமெரிக்காவின் சில மாநிலங்களில் விஷ ஊசி போட்டு கொலை செய்கிறார்கள். சவூதி அரேபியாவில் கூரிய வாளை வைத்து தலையைக் கொய்கிறார்கள். அவ்வாறு ஒரேயொரு நாளில் மட்டும் நாற்பத்தியேழு கைதிகளின் உயிர்களைப் பலி கொடுத்த நாட்டிற்கு எவ்வாறு மனித உரிமை மன்றத்தில் முக்கிய இடம் கொடுக்கப்பட்டிருக்கிறது என்று இந்தக் கட்டுரை வினவுகிறது.