என் குட்டன் என்னைப் புறம்புல்குவான்!
சரியான சொல்லால் கூறவேண்டுமெனில் பாரதியாரின் பாடலைத்தான் துணைகாணவேண்டும். ‘சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா,’ எனும் பாடலில் ‘உன்னைத்தழுவிடிலோ கண்ணம்மா உன்மத்தமாகுதடீ,’ என்று கூறுவார். ‘உன்மத்தம்’ என்பதற்கு மதிமயக்கம் – அல்லது ஊமத்தம்பூவை உண்டநிலை போன்ற அனுபவம் எனலாம். குழந்தையைத் தழுவிக்கொண்ட அந்தத்தருணங்களில், உலகினையும், நம்மையும் மறந்து, நமது நிலையையும் இடம், ஏவல், பொருள் அனைத்தையுமே மறந்து தன்வயமிழந்து விடுகிறோம். இதனால்தான் குழந்தைகளை ‘மயக்குறு மழலை’ என்றார் புறநானூற்று…
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed