
‘சிறி’ என்பது நாம் அனைவரும் அறிந்த ஆப்பிளின் ஒரு பிரபலமான பயன்பாடு. நாம் கேட்கும் கேள்விகளுக்கு இணையத்திலிருந்து பதில்களைத் தேடி எடுத்து வழங்கவும், நம் சிறு ஏவல்களைப் புரிந்து கொண்டு அதனை இணைய சேவைகள் மூலம் செயல்படுத்துவதற்கும் பயன்படுகிறது. இயல்பான மொழி வடிவங்களை புரிந்து கொண்டு, மீண்டும் மீண்டும் சேகரிக்கப்படும் தகவல்களையும் வைத்து, உபயோகிப்பவரின் விருப்பத்திற்கேற்ப ஒரு உதவியாளரைப் போல் செயல்படுகிறது. இந்த ‘சிறி’ பயன்பாட்டை உருவாக்கி 2010ல் வெளியிட்ட போது, முதலில் சிறி நிறுவனம் (Siri Inc.) ப்ளாக்பெர்ரி மற்றும் ஆண்ட்ரா
1945ல் தொடங்கப்பட்டு ,கலிபோர்னியாவின் எல் செகாண்டோவைத் (El Segundo) தலைமை இடமாக கொண்ட பிரபல மட்டேல் (Mattel Inc.) என்ற விளையாட்டுப் பொருள்கள் தயாரிக்கும் அமெரிக்க நிறுவனம், ‘ஹலோ பார்பி’ என்ற இந்த வகை பேசும் பொம்மைகளை, டாய்டாக் (ToyTalk Inc.) என்ற நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கிக் கொண்டிருக்கிறது. மட்டேலின் பிஷேர்ப்ரைஸ் (FisherPrice), ஹாட்வீல்ஸ் (HotWheels) போன்ற விளையாட்டு சாதனங்கள் குறிப்பிடத்தக்கவை. 150க்கும் மேற்பட்ட நாடுகளில் இவர்களின் தயாரிப்புகள் விற்பனை செய்யப்படுகின்றன. 2011ல் பிக்ஸர் நிறுவனத்தின் முன்னாள் ஊழியர்களால் தொடங்கப்
இது போன்ற தொழில்நுட்பத்தை பார்பி பொம்மைகளில் பொருத்தி உருவாக்கப்படும் ‘Hello Barbie’ பொம்மைகள், Wi-fi மூலம் இணைய இணைப்பை மையமாக வைத்தும், குரல் அங்கீகார மென்பொருள் முறையைக் கொண்டும்
சமீபத்தில் நியூயார்க் மாநகரத்தில் நடந்த ஒரு பொம்மைக் கண்காட்சியில், இந்த ஹலோ பார்பி பொம்மைகள் அறிமுகப்படுத்தப்பட்டன. இதனுடன் உரையாடிய பெண்மணி, இதன் வயிற்றுப் பகுதியில் இருக்கும் ஒரு பொத்தான் மூலம் இதனை இயக்கி நியூயார்க் நகரத்திற்கு வரவேற்றார். அதன்பின் சில கேள்விகளும் உரையாடல்களும் இவ்விருவரிடையே பரிமாறப்பட்டன. பொம்மையிடமிருந்து பெண்மணியின் பேச்சை நினைவில் கொண்டதை நிரூபிக்கும் வகையில் பதில்களும் கிடைத்தன.
இவ்வாறான சிறப்பம்சங்கள் ஒருபுறமிருக்க பாதகங்கள் என முக்கியமாக நாம் கருதுவது, வழக்கம் போலவே, பெறப்படும் தகவல் எவ்வளவு பாதுகாப்பாக கையாளப்படுகிறது என்பது தான். “என்ன மாதிரியான தகவல் பதிவு செய்யபடுகின்றன? அவை எவ்வளவு நாட்கள் பாதுகாக்கப்படுகின்றன? இதை வேறு யாரெல்லாம் அறிய முடியும்?” என்பன போன்ற கேள்விகளும் எழுகின்றன.
குழந்தைகள், இதை ஒரு பொம்மை என்பதைத் தாண்டி உயிருள்ள உற்ற தோழியாகவே பாவித்து, தங்கள் அடிமனதில் உருவாகும் உணர்ச்சிகளை வேறு எவரும் கேட்கவில்லை என்ற நம்பிக்கையுடன் பகிர்ந்து கொள்வர். இந்த உணர்ச்சிபூர்வமான பகிர்தல் அடுத்த நொடியில் வலைதளத்தில் எங்கோ சேமிக்கப்படுகின்றன.
ஆனால் குழந்தைகளின் தனிமையையும் அந்தரங்கத்தையும் பாதுகாக்கும் வகையில் தகவல் சேகரிப்பு நடக்கிறதா? ஒருவேளை பாதுகாக்கப்பட்ட இந்த தகவல் திருடப்பட்டு, தவறான முறையில் இணையத்தளத்தில் அவை வெளியிடப்பட்டால் என்னவாகும்? இதனால் மனதளவில் குழந்தைகளுக்கு நேரும் பாதகங்கள் என்ன? மேலும் குழந்தைகளின் கற்பனை சக்தியும், தனித்துவமும், சுயசிந்தனையும் இதனால் பாதிக்கப்படுமா என்பதும் கேள்விக்குறியே.
இவை தவிர ஒருவேளை புதிதாக ஒரு நிறுவனத்திடம் இத்தகவலை கையாளும் உரிமை கைமாறினால், அந்த நிறுவனமும் இதே நிலையில் நிற்பார்களா என்பதும் அச்சுறுத்தலாகவே உள்ளது. மேலும் குழந்தைகள் என்ன மாதிரியான விஷயங்களில் ஆர்வம் காட்டுகிறார்கள் , இவர்கள் அதிகம் விரும்பி பயன்படுத்தும் வார்த்தைகள், சொற்றொடர்கள் மற்றும் இந்த பொம்மைகளுடன் அன்றாடம் செலவிடும் நேர அளவு என்பன போன்ற தகவல் விற்கப்பட்டால், அதை எவ்வாறு தடுப்பது?
இக்கேள்விகளுக்கு பதிலளிக்கும் விதமாக “இந்த தகவல் பரிமாற்றத்தைக் கட்டுபடுத்துவதில் பெற்றோர் பங்கேற்க முடியும். சேகரிக்கப்படும் தகவலை அனுமதியின்றி பயன்படுத்த முடியாது , தகவல் பாதுகாப்பே பிரதானமானதாக கருதப்படுகிறது” என்பது மட்டேல் தரப்பு வாதம். இதன்படி 13 வயதுக்குட்பட்ட குழந்தைகள் இதனைப் பயன்படுத்த, பெற்றோர் அனுமதியை மின்னஞ்சல் மூலம் பெற இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் தேவைப்பட்டால் சேகரிக்கப்பட்ட தகவலை பெற்றோரால் நீக்கவும் மு
மனித வாழ்க்கையின் ஒவ்வொரு நிமிடத்திலும், நொடியிலும் தொழில்நுட்பத்தின் ஊடுருவல் அதிகரித்துக்கொண்டேப் போகிறது. நாம் உலகின் எந்த இடத்தில் இருக்கிறோம், என்ன செய்து கொண்டிருக்கிறோம், எதை தேடி விரும்பிப் படிக்கிறோம், என்ன உணவை விரும்பி உண்கிறோம், என்ன பொருள்கள் வாங்குகிறோம் என தொடங்கி அனைத்தும் பதிவு செய்யப்பட்டு, ஆப்பிளின் மூலமும் கூகுளின் மூலமும் நம் கட்டுப்பாடின்றியே நம் விஷயங்கள் பிறரால் அறியப்படும் நிலை எந்த அளவில் ஏற்றுக்கொள்ளப்படுவதாய் உள்ளது. இனி இந்நிலை பெரியவர்கள் மட்டுமல்லாது குழந்தைகளையும் விட்டு வைக்கப் போவதில்லை எனும் போது நம்மால் யோசிக்காமல் இருந்து விட முடியாது.