புகைப்படக் கலைஞர் நீல்ஸ் (Nils-Udo) குளத்தில் வெகு பொறுமையாக போதிய இடைவெளி விட்டு இலைகளைத் தூவுகிறார். அதன் ஓட்டத்தை படம் எடுக்கிறார். வேறு இடத்தில் கிளைகள், பழங்கள், காய்கள் எனக் கொத்து கொத்தாக இருப்பதை ஒருங்கிணைத்து கலையாக மிளிர வைக்கிறார். காலப்போக்கில் மாறும் சூழலையும் மரங்களின் அணிவகுப்பும் தாவரங்களின் வண்ணமயமான ஆடைகளும் முழுக்க முழுக்க காட்டில் இருக்கும் விஷயங்களை வைத்தே உருவாக்கி இருக்கிறார்.