இரண்டு கவிதைகள் – எம்.ராஜா

மழைக்குப் பிந்தைய இரவு

க்ரோக் க்ரோக்frog
க்ரோக் க்ரோக்
இன்னுமென்ன சத்தம்?
ஊரைக்கூட்டி
உரக்கக் கத்தினாலும்
விழவா போகிறது காதுகளில் ?
இன்றைக்கு இவ்வளவுதான்
பேஞ்சு ஓஞ்சுவிட்டதாம் வானம்.
போய்த் தூங்கு போ
நானும் தூங்கணும்.
 
கோட்டைவிட்ட காவலாளி
park-in-dark-after-rain
மருத்துவமனை வளாகத்தில்
ரோந்து போகிறார்
இரவுநேரக் காவலாளி.
கறாரானவர்.
லேசில் விடமாட்டார்
அகப்பட்டவர்களை.
இன்னும் கொஞ்சம்
கறாராய் இருந்திருக்கலாம்.
எப்படியோ தப்பியோடி
என்செவிகளில் வந்துவிழுகிறது
அவர்கைவசமிருக்கும் அலைபேசியிலிருந்து
வழியும் இசை.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.