இந்தியக் கவிதைகள் – தெலுங்கு, மராத்தி

குரல்

voice_Broken_Heart_Dark_Silent_Flying_Swans_Closedநான் எப்போதும் பேசினேன்
நீ கேட்டாய்
நான் என்ன சொன்னாலும்
ஏனென்றால் நான் சொல்வதற்கு எதுவும் இருந்ததில்லை
இப்போது சொல்வதற்கு என்னிடம் ஏதோ இருக்கிறது
உணர்ச்சிகரமாய்
காதலாய்
தெளிவாய்
நான் பேசும் போது
யாரும் கேட்பதில்லை
அதனாலோ
எதனாலோ
என் குரல் நிசப்தமாகிப் போனது
தன்னை இழக்கும் மயக்கம்
சந்தோஷத்தின் இனிமை
நீ கேட்காதது
என எதுவோ
குரல் நிசப்தமாயிருக்கிறது
ஆனால்
இந்த நிசப்தத்தில்
தூங்கும் இதயத்தின்
மகிழ்ச்சிப் பெருமூச்சு
தனக்குள்ளே..

தெலுங்கில் : ரேவதி தேவி
ஆங்கிலத்தில் : வெல்செரு நாரயண ராவ் மற்றும் ஏ.கே.ராமானுஜம்
1951-1981
ஆந்திர மாநிலம் குண்டூரைச் சேர்ந்தவர். 1981ல் வெளிவந்த கவிதை தொகுப்பான சிலலொலிதா [Stone Tossed ] கவிதைத் தொகுப்பில் இக்கவிதை இடம் பெற்றுள்ளது.

oOo

பெண்

Ocean_Standing_Lighthouse_Waves_Roar_Photos_Cycloneஅவள், ஆறு
அவன் கடல் :
சொன்னாள்
வாழ்க்கை முழுவதும்
என்னை கரைத்துக் கொண்டிருக்கிறேன்
உன்னை நோக்கிப் பாய்கிறேன்
எல்லாம் உனக்காக
கடைசியில் நான்தான்
கடலாகியிருக்கிறேன்
ஒரு பெண்ணின் பரிசு
எப்போதும் வானத்தைப் போல
ஆனால் நீ எப்போதும்
உன்னையே ஆராதித்துக் கொண்டு ..
ஆறாக மாறி
என்னோடு கலக்க
எப்போதும் நீ நினைத்ததில்லை.

மராத்தியில் : ஹீரா பன்சோட்
ஆங்கிலத்தில் : வினய் தர்வாட்கர்
இரண்டு கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டுள்ளார். சவந்தினி தலித் பெண்கள் இலக்கிய அமைப்பின் ஸ்தாபகரும் முன்னாள் தலைவரும் ஆவார். தாழ்த்தப்பட்ட பெண்களின் அவலத்தை வெளிப்படுத்தி போராடியவர்.

oOo

திரும்பும் வழியில்

broken_dark_Road_Bits_Pieces_Life_unfinishedஇந்தச் சாலைகளில் நான் நடந்திருக்கிறேன்
உடைந்திருக்கிறேன் சிதறியிருக்கிறேன் பரவியிருக்கிறேன்
இப்போது நான் மீளும் வழியில்
துண்டுகளாய்ச் சிதைந்து போன என்னை
உதிரிகளை முழுமையாய் திரட்ட
முயற்சிக்கிறேன்
இருட்டு என்னைச் சுற்றி வளர்கிறது

மராத்திய மொழி : சாந்தா செல்கே
ஆங்கிலத்தில் : ஆசா முண்ட்லே மற்றும் அரின் சட்
பூனாவை சேர்ந்த சாந்தா செல்கே எல்லாத் துறைகளிலும் ஈடுபாடுடையவர் என்றாலும் கவிதையின் மீது தனிக் காதல் கொண்டவர். பிற மொழிக் கவிதைகளை மராட்டிய மொழிக்கு கொண்டு சென்ற பெருமை உடையவர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.