எழுத்துக்காரர் வண்ணநிலவனுடன் சில நிமிடங்கள் . . .

இலக்கியவாதிக்கு விசேஷத்தன்மை ஒண்ணும் கெடையாது. அவங்க செஞ்ச சாதனைகளால அப்படி தோணுது. கான்ட்ரிப்யூஷன் நெறைய இருக்கு. ஒருத்தரின் கான்ட்ரிப்யூஷன் நிறைய இருக்கும்போது அவனை பிரம்மாண்டமா பாக்கோம். அது ஒண்ணே ஒண்ணு இல்லாட்டி அவனை யாரும் யோசிக்கப் போறதில்ல. பத்தோட பதினொன்னுன்னு மறந்துருவாங்க. விசேஷம் ஒண்ணும் கெடையாது. இந்தத் தெறமை ஒண்ணும் கெடையாது.
இது ஒரு வேலை மாதிரிதான். டீக்கடைக்காரன் என்ன பண்ணுதான்? அவன் டீ போடுதான். நல்ல டீ போட்டுக் கொடுத்தா அந்தக் கடைக்குத் தேடிப் போறோம். அது மாதிரி நல்லா எளுதுனா, படிப்பீங்க, அவ்வளவுதான். நல்லா இல்லைன்னா நல்லா இல்லைன்னு சொல்லிட்டுப் போயிருவோம், அவ்வளவுதான்.