வாடிவாசல் – அதிகாரம் எனும் பகடைக்காய்

மிருகமும் மனிதனும் ஒருவரையொருவர் நிரப்பிக்கொள்ளும் தருணம் தான் வாடிவாசல்.அங்கு ஒரு கணமேனும் மனிதன் மிருகமாகிறான், மிருகம் மனிதனாகிறது. பிச்சிக்கு, அக்காரியின் கொம்புகளில் தன் தந்தையின் ரத்தம் இன்னும் சிவப்பாக இருப்பது போல தோன்றும் போது, அக்காளைக்கும் அவனது கண்களில் அவன் தந்தைக்காக வந்திருக்கும் வஞ்சம் தெரிந்திருக்கலாம். அச்சமயம், தான் ஒரு மனிதனுக்கு முன் நிற்பது போலவே பிச்சி உணர்கிறான்.