அன்புள்ள நண்பர்களுக்கு,
ஏற்கனவே அறிவித்தபடி, இந்த புத்தகக் கண்காட்சியையொட்டி ‘சொல்வனம் பதிப்பகம்’ மூலம் இரண்டு புத்தகங்கள் வெளியாகியிருக்கின்றன என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறோம். சென்ற சனிக்கிழமையன்று (08-01-2011) இவ்விரு புத்தகங்களும் ‘உடுமலை.காம்’ அரங்குக்கு வந்தன. ஞாயிற்றுக்கிழமை ஒரு நட்பார்ந்த புத்தகவெளியீடு நடந்தது. சொல்வனம் இதழிலும், வார்த்தை சிற்றிதழிலும் சுகா எழுதிய கட்டுரைகள் தொகுக்கப்பட்டு ‘தாயார் சன்னதி’ என்ற பெயரில் புத்தகமாக வெளியாகியிருக்கிறது. சொல்வனம் இதழில் ராமன் ராஜா எழுதிய கட்டுரைகள் ‘சிலிக்கான் கடவுள்’ என்ற பெயரில் புத்தகமாக வெளியாகிருக்கிறது. புத்தகங்கள் உடுமலை.காம் அரங்கில் கிடைக்கின்றன. தாயார் சன்னதி புத்தகங்கள் விற்றுத்தீர்ந்து புதிய பதிப்புகள் வந்திருக்கின்றன. சொல்வனம் இதழைத் தொடர்ந்து ஆதரித்து, இதழை நாங்கள் உற்சாகமாக நடத்தக் காரணமாயிருக்கும் நண்பர்களுக்கும், வாசகர்களுக்கும், எழுத்தாளர்களுக்கும் எங்கள் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். எங்களுடைய இந்தப் புதிய முயற்சிக்கும் உங்கள் ஆதரவை வேண்டுகிறோம்.
புத்தகங்கள் புத்தகக் கண்காட்சியில் “உடுமலை.காம்” அரங்கில் (அரங்க எண்: 302) விற்பனைக்குக் கிடைக்கின்றன.
தாயார் சன்னதி – சுகா – 256 பக்கங்கள் – ரூ.150
சிலிக்கான் கடவுள் – ராமன் ராஜா – 160 பக்கங்கள் -ரூ 100
மிக்க அன்புடன்,
ஆசிரியர் குழு.

— வண்ணதாசன்
சுகாவின் பிறந்த மண் பற்றிய துல்லியமான பதிவுகளும், வசீகரமான வட்டார வழக்குப் பிரயோகமும், ஹாஸ்ய உணர்வும், படித்து முடித்த பின்பும் மனசை விட்டகலாத இனிய விஷயங்கள். இந்தக் கட்டுரைகள் மூலம் தெரியவந்த சுகாவின் இசைஞானம் எனக்கு இன்ப அதிர்ச்சி. என்னோடு இருந்த 8 வருடங்களில் எனக்குத் தெரியாமல் போன விஷயம் அது.
— பாலுமகேந்திரா
— கோபால் ராஜாராம்

’சிலிக்கான் கடவுள்’ புத்தகத்துக்கு சேதுபதி அருணாசலம் எழுதியிருக்கும் நன்றியுரையை இங்கே படிக்கலாம்.